Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"யார் பயங்கரவாதிகள் என்பதை இனியாவது உலகம் தெரிந்து கொள்ள வேண்டும்"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"யார் பயங்கரவாதிகள் என்பதை இனியாவது உலகம் தெரிந்து கொள்ள வேண்டும்"விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் அவர் பயங்கரவாதி எனவும் சிறீலங்காவின் மதிப்பை அனைத்துலக அளவில் சீர்குலைக்க அவர் முயல்கிறார் எனவும், விடுதலைப் புலிகளிடமிருந்து ஹோம்ஸ் கையூட்டு பெற்றிருக்க வேண்டும் எனவும் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே மிகக்காட்டமாக இந்த ஐ.நா அதிகாரியை திட்டியிருக்கிறார்.

ஜோன் ஹோம்ஸ் சிறீலங்காவிற்கு வருகை தருவதற்கு முன்பாகவே அவர் தனது பயணங்களின் முடிவில் கூறப்போகும் கருத்துக்கள் குறித்து அரசதரப்பு கவலை கொள்ளத் தொடாடங்கி விட்டது. அவர் செல்லும் இடங்களில் யார் யாரைச் சந்திக்கவேண்டும் யார் யாரைச்சந்திக்கூடாது என்பதில் ஒரு திட்டமிடலை அரச தரப்பினர் ஒழுங்கு செய்திருந்தனர்.

ஊடங்களுக்கு அவர் தெரிவிக்கும் கருத்துக்கள் தொடர்பாகவும் அரசு கவனம் செலுத்தியது. அதேபோல் அவர் கிழக்குப் பகுதிக்கு சென்றபோது, பாதுகாப்புப் படையினரின் நெறிப்படுத்தல்களுடனேயே நடத்தப்பட்டார்.

வடக்கில் யாழ். குடாநாட்டிற்கு சென்ற போதும், அங்கு படையினரது நெறிப்படுத்தல்களுடனேயே சந்திப்புக்கள் இடம்பெற்றன. பொதுமக்களின் பிரதி நிதிகளையோ, சுயாதீனமாக கருத்து வெளியிடக்கூடிய பொது அமைப்புக்களைச் சார்ந்தவாகளையோ அவர் சந்திக்கவில்லை.

சந்திக்க அனுமதிக்கப் படவில்லை. கொழும்பில் வைத்துக்கூட வடக்கு, கிழக்கிலே தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை கூட அவர் சந்திக்கவில்லை.

நேரமின்மை, பாதுகாப்புப் பிரச்சினை காரணமாக முக்கியமான சிலரை சந்திக்க முடியவில்லை என அவர் தெரிவித்தார். படையினரின் முன்னிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் உண்மைகளை வெளிப்படையாக தெரிவிப்பதுகூட சிக்கலான ஒன்றாகவே இருந்தது.

இந்நிலையில் அவர் ஊடகமொன்றிடம் கூறிய ஒரே ஒரு கருத்துத்தான் சிறீலங்கா அரசிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சிறீலங்கா அனைத்துலக மனிதாபிமானப் பணியாளர்கள் பணிபுரியாற்றுவதற்கு ஆபத்தான இடம் என திரு.ஹோமஸ் கூறினார்.

இதனைத்தான் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக ஹோம்ஸ் கூறிய கருத்தாக அரசு கருதுகிறது. இந்த நாட்டில் நடைபெறும் உண்மைகளை யார் வெளிப்படையாகக் கூறினாலும் அவர் விடுதலைப் புலிகளுக்கு சார்பானவர்கள் என்பது தான் சிறீலங்காவின் நிலைப்பாடு.

ஹோம்ஸ் வந்து சென்றதும் முதலாவதாக அவரைச்சாடியது சிறீலங்காவின் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க. அடுத்தது ஜே.வி.பி.யின் விமல் வீரவன்ச. முதலில் வந்து சென்ற ஐ.நா அதிகாரி அலன்றொக் சிறீலங்காவின் இறைமையைப் பாதிக்கும் விதமாக பல விடயங்களைத் தெரிவித்திருந்தார்.

இப்போது வந்து சென்றிருக்கும் ஹோம்ஸ் அதேபோன்ற கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். எனவே அடுத்து வரவிருப்பதாக கூறப்படும் ஐ.நா சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லுாயி ஆர்பரின் வருகையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

எனினும் லுாயி ஆர்பர் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் சிறீலங்காவிற்கு வருகை தரவுள்ளதாகவே தெரியவருகிறது.

இவ்வாறு அடுத்தடுத்து இலங்கைக்கு வருகை தரும் ஐ.நா அதிகாரிகளாக இருந்தாலும் சரி, வேறு எந்த வெளிநாட்டுப்பிரதிநிதிகளாக இருந்தாலும் சரி அவர்கள் சுயாதீனமாக மக்களின் கருத்துக்களை அறிய சிறீலங்கா அரசாங்கம் அனுமதிப்பதில்லை.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குச் செல்லவோ விடுதலைப் புலிகளைச் சந்திக்கவோ தற்போது சமாதான அனுசரணையாளர்களான நோர்வே பிரதிநிதிகளுக்குக் கூட அனுமதியில்லை.

இந்நிலையில, இலங்கையில் நடைபெறும் உண்மை நிலவரங்களை வெளியிடுகின்ற அனைவரும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாக அரசின் கண்களுக்குத் தெரிகின்றனர்.

இப்போதெல்லாம் இலங்கையில் நடைபெறும் படுகொலைகள், ஆட்கடத்தல்கள் உட்பட்ட சகல மனித உரிமை மீறல்களும் எவ்வகையிலும் மூடிமறைக்க முடியாதபடி வெளியுலகத்திற்கு தெரியவந்து விடுகின்

றன.

அந்த அளவிற்கு அரச பயங்கரவாதம் பொதுமக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. இதனை அரசாங்கமே தனது படைகளைக் கொண்டும், அவற்றோடு சேர்ந்தியங்குகின்ற துணைப்படைகளைக் கொண்டும் மேற்கொள்கிறபோது அதனைத் தடுத்து நிறுத்தவதும், நடந்தவற்றை விசாரணை செய்வதென்பதும், இனிமேல் நடைபெறாது கட்டுப்படுத்துவதன்பதும் முடியாத காரியமாகும்.

எனவே, தான் சிறீலங்காவில் ஐ.நா.வின் மனித உரிமை கண்காணிப்பகம் ஒன்றை அமைக்க வேண்டும் என சர்வதேச சமூகம் விரும்புகிறது. இதனை சிறீலங்காவின் இறைமையை மீறும் செயற்படாக சிறீலங்கா அரசு பரப்புரை செய்கிறது.

உண்மையில் ஒவ்வொருநாளும் வடக்கு கிழக்குப் பகுதிகளில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். கடத்திச் செல்லப்படுகின்றனர். மக்களின் அன்றாட வாழ்வு அச்சத்திலும் துன்பத்திலும் உழல்கிறது. இவை தொடர்பாக கருத்துக்கள் தெரிவிப்பதிலும் பார்க்க மூதுாரில் மனிதாபிமானப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சரியான விசாரணைகளை சிறீலங்கா அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்கிற குற்றச்சாட்டையே ஐ.நா உட்பட்ட மனித உரிமை அமைப்புக்கள் சற்று உரத்தகுரலில் தெரிவித்து வருகின்றமையினையும் நாம் கவனிக்க வேண்டும்.

ஐ.நா. மற்றும் மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கம் அமைப்புக்கள் தொடர்ந்து சிறீலங்கா அரசின் மீது குற்றம்சாட்டி வருகின்ற சூழலில் வெளிநாட்டு உதவிகள் தங்களுக்கு கிடைக்காமல் போகும் சாத்தியமிருப்பதாக தற்போது சிறீலங்கா அஞ்சகிறது.

இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் சிறீலங்கா இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வுத்திட்டத்தினை முன்வைக்கும் வரை எவ்வித உதவிகளையும் வழங்குவதில்லை என மௌனமாக இருக்கின்றன.

இதனால் இம்மாத நடுப்பகுதியில் தீர்வுத்

திட்டம் முன்வைக்கப்படுமென அரசாங்கம் தெரிவித்திருந்த போதிலும் அது இன்னும் தாமதமாகலாம் என சர்வகட்சி பிரநிதிகள் குழுத்தலைவரும் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தற்போது தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் மனித உரிமை அமைப்புக்களின் கருத்துக்களும் சிறீலங்கா அரசாங்கத்துக்கு தலையிடி தருவதாகவே அமைந்துள்ளது. எனினும், தொடரும் படுகொலைகளும், கடத்தல்களும். மக்கள் குடியிருப்புக்கள் மீதான தாக்குதல்களும் அரசாங்கத்தால் நிறுத்தப்படும என்கிற நிலைமையும் இல்லை என்றுதான் கூறவேண்டியுள்ளது.

விடுதலைப் புலிகள் மட்டுமல்ல, முழுத்தமிழ் மக்களும் சிங்கள அரசாங்கத்தின் கண்களுக்கு பயங்கரவாதிகளாகவே தெரிகின்றனர். உண்மைத்தகவல்களை வெளியிடுகின்ற சிங்கள உடகவியலாளர்கள் கூட சிங்களப்புலிகள் என அரசால் அச்சுறுத்

தப்படுகின்றனர்.

தற்போது தாம் நேரில் உண்மைகளை நடுநிலையுடன் வெளிப்படுத்தும் ஐ.நா.வும் பயங்கர வாத அமைப்பாக சிங்களவர்களின் கண்களுக்குத் தெரிகிறது. யார் உண்மையான பயங்கரவாதிகள் என்பதை இனியாவது உலகம் புரிந்து கொள்ளவேண்டும்.

- வேனில் -

- ஈழமுரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.