Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளுக்கு உந்து சக்தியளிப்பதற்க்குஅமைச்சர் திஸ்ஸ வித்தாரண முயற்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்கு உந்து சக்தியளிப்பதற்க்குஅமைச்சர் திஸ்ஸ வித்தாரண முயற்சி

வீரகேசரி நாளேடு

ஹெல உறுமய குற்றச்சாட்டு; மன்னிப்பு கோரவும் வலியுறுத்தல் சர்வகட்சி ஆலோசனைக் குழுவின் தலைவர் திஸ்ஸ விதாரண தொடர்பில் எமக்கு நம்பிக்கையில்லை. மாவட்ட ரீதியாக அதிகாரங்களை பகிர்வதற்கு சர்வ கட்சி ஆலோசனைக் குழுவில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக திஸ்ஸ விதாரண வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் அவர் மன்னிப்புக்கோர வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கை வகுப்பாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். விடுதலைப் புலிகள் தோல்வியடைந்துள்ளனர். இந்த நிலையில் புலிகளுக்கு உந்து சக்தியளிப்பதற்கு அமைச்சர் திஸ்ஸ விதாரணவும் அவர் பின்னணியில் செயற்படும் வெளிநாட்டு சக்தியினரும் முயற்சிக்கின்னர். அதற்கான அரங்கேற்றம்தான் மாவட்ட ரீதியிலான அதிகாரப் பரவலுக்கு இணக்கம் என்ற செய்தியாகும். சர்வ கட்சி ஆலோசனை குழு தொடர்பில் அறிக்கை வெளியிடும் அதிகாரம் திஸ்ஸ விதாரணவுக்கு இல்லை என்றும் அவர் கூறினார்.

நுகேகொடையில் உள்ள கட்சி தலைமையகத்தில் நேற்று முற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு கூறினார்.இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது, மாவட்ட ரீதியில் அதிகாரப் பரவலாக்கலை மேற்கொள்வதற்கு சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்டுள்ள கட்சிகள் அங்கீகாரத்தை வழங்கியுள்ளதாகவும் தனது யோசனைகள் அடங்கிய பொதியை ஐ.நா. கூட்டத்தில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிடுவாரென்றும் தெரிவித்து அமைச்சர் திஸ்ஸ விதாரணவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் உண்மையில்லை. எனவே மக்கள் இச்செய்திகளை கண்டு ஏமாந்துவிடக் கூடாது.

ஒற்றையாட்சியின்கீழ் தீர்வு காண்பதற்கும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கும் சர்வ கட்சி மாநாட்டில் கலந்துகொண்ட கட்சிப் பிரதிநிதிகள் மத்தியில் இணக்கப்பாடு காணப்பட்டு முன்னெடுக்கப்பட்டது. அத்தோடு அரசியல் தீர்வு தொடர்பான இறுதி யோசனையை மக்கள் கருத்துக் கணிப்பிற்கு விட்ட பின்பே முடிவெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

இச் சூழ்நிலையில்தான் வெளிநாட்டு சூழ்ச்சிக்காரர்களினதும் புலிகளின் தேவைக்காகவும் சமஜ்டி முறையிலான தீர்வுப் பொதி அமைச்சர் திஸ்ஸ விதாரணவினால் முன்வைக்கப்பட்டது. நிபுணர் குழு என்ற பெயரில் முன்வைத்த யோசனைகளை ஜனாதிபதியும் நிராகரித்துள்ளார். வெளிநாட்டுத் தூதரகங்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு தயாரிக்கப்பட்டதே அந்த தீர்வு பொதியாகும். திஸ்ஸ விதாரண என்ற மக்கள் அடித்தளமில்லாதவரது தனிப்பட்ட யோசனைகளே வெளியிடப்பட்டுள்ளன. இது சர்வகட்சி பிரதிநிதிகளின் யோசனைகளல்ல. சமஷ்டி முறை பற்றியோ வட, கிழக்கு இணைப்பு தொடர்பிலோ பேச முடியாது. அதனை மக்களே தீர்மானிக்க வேண்டும்.

இன்று கிழக்கு மாகாணத்தில் பின்னடைவை கண்ட புலிகள் பலமிழக்கின்றனர். நவம்பருக்குள் வடமராட்சியை கைப்பற்றித் தருமாறு தனது இறுதி ஆசையை பிரபாகரன் புலி உறுப்பினர்களிடம் கூறி மன்றாடியுள்ளார். சூசை, பொட்டு அம்மானுக்கு இடையில் முரண்பாடுகள் தோன்றியுள்ளன. சூசையின் மச்சான் ரமேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற பல நெருக்கடிக்குள் புலிகள் சிக்கித் தவிக்கின்றனர்.

இந்தச் சூழ்நிலையிலேயே புலிகளை தூக்கி விடுவதற்கு திஸ்ஸ விதாரணவும் அவர் பின்னணியில் செயல்படும் வெளிநாட்டு சக்தியின முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதற்கான அரங்கேற்றம்தான் மாவட்ட ரீதியில் அதிகாரப் பரவலாக்கத்திற்கு இணக்கம் என்ற செய்தியாகும்.எனவே திஸ்ஸ விதாரண தொடர்பில் எமக்கு நம்பிக்கையில்லை. அவர் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக சர்வகட்சி பிரதிநிதிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.ஒற்றையாட்சி முறைமை இல்லாதொழிக்க ஆயுதம் பாவிக்கப்படுமானால் அந்த ஒற்றையாட்சியை பாதுகாக்கவும் ஆயுதங்களை பாவிக்கலாம்.இலங்கையில் இனப்பிரச்சினை இல்லை. அவ்வாறு இனப்பிரச்சினை இருப்பதாக உறுதிபடுத்தக்கூடிய சான்றுகளுடன் நிரூபித்தால் தனித் தமீழீழம் வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராகவிருக்கின்றோம் என்று இங்கு உரையாற்றிய ஜாதிக ஹெல உறுமயவின் சட்ட ஆலோசகர் உதய கம்பன்பில தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்வோம். ஒற்றையாட்சியின் கீழான தீர்வுத் திட்டத்தை வலியுறுத்துவோம். அதைவிடுத்து கலந்து கொள்ளாது அரசியல் இலாபம் தேடுவது எமது நோக்கமல்ல. அமைச்சர் திஸ்ஸ விதாரணவின் யோசனைகள் நாட்டில் இனங்களுக்கிடையே முரண்பாடுகளையும் வர்க்கவாதத்தையும் நீதித்துறையில் இனப்பாகுபாட்டையும் ஏற்படுத்தும். எனவே இதனை எதிர்க்கின்றோம்.

இலங்கையில் இனப்பிரச்சினையென்பது ஒன்றில்லை. அவ்வாறு இருப்பதாக எவராவது உறுதிப்படுத்தக்கூடிய சான்றுகளுடன் நிரூபிப்பார்களானால் தமிழீழம் தொடர்பாகவும் பேச்சவார்த்தை நடத்தவும் தயார்.எமது நோக்கம் புலிகளை நிராயுதபாணிகளாக்குவது, ஜனநாயகத்தை நிலை நிறுத்துவது மற்றும் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வது என்பதாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று கிழக்கு மாகாணத்தில் பின்னடைவை கண்ட புலிகள் பலமிழக்கின்றனர். நவம்பருக்குள் வடமராட்சியை கைப்பற்றித் தருமாறு தனது இறுதி ஆசையை பிரபாகரன் புலி உறுப்பினர்களிடம் கூறி மன்றாடியுள்ளார்.

உப்பிடியே சொல்லிச் சொல்லி உங்களை சந்தோசப் படுத்துங்கோ. முன்பு 2000ல யாழில் இருந்த 40000 இராணுவத்தை காப்பாற்றுங்கோ என்று சந்திரிகா அம்மையார் கதிர்காமர் மூலம் இந்தியாவுக்கு உதவி கேட்டு ஒடினது தெரியும் தானே. வரும் நாடகளில் தமிழர்படைகள் மீண்டும் ஜெயசுக்குறுப் படைக்கு கொடுத்ததினை விட அதிகமாக அடி குடுக்கும் போது உந்த சம்பிக்க ரணவக்க எவ்வாறு கத்தப் போகிறார் என்பதையும் நாங்கள் பார்க்கத்தானே போகிறோம். அதுவரைக்கும் ஆசை தீர உங்களை உங்களை சந்தோசப் படுத்திக் கொண்டு இருங்கோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.