Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்காவில்... உளவு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள,  எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு... ரஷ்ய குடியுரிமை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் உளவு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு ரஷ்ய குடியுரிமை!

அமெரிக்காவில்... உளவு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள,  எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு... ரஷ்ய குடியுரிமை!

முன்னாள் அமெரிக்க உளவுத்துறை ஒப்பந்ததாரர் எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு ரஷ்ய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

72 வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் நேற்று (திங்கட்கிழமை) கையெழுத்திட்டு வெளியிட்ட ஆணையில் எட்வர்ட் ஸ்னோவ்டனின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

ஸ்னோவ்டனின் மனைவி, குழந்தை இருவரும் தற்போது நிரந்தர விசா பெற்றுள்ளனர்.

அவர்களுக்கும் விரைவில் ரஷ்யாவின் நிரந்தர குடியுரிமை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, ஸ்னோவ்டனின் வழக்கறிஞர் அனடோலி குச்செரெனா, ஸ்னோவ்டனின் மனைவியும் ரஷ்ய குடியுரிமைக்கு விரைவில் விண்ணபிப்பார் என தெரிவித்தார். இந்த தம்பதியருக்கு 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.

அதேவேளை, ஸ்னோவ்டன் ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றவில்லை எனவும், ஆகவே கடந்த வாரம் ஜனாதிபதி புடின் அறிவித்த ஒரு பகுதி அணிதிரட்டலின் ஒரு பகுதியாக அவர் அழைக்கப்பட மாட்டார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிலையில், ரஷ்ய குடியுரிமை வழங்கப்படுவது குறித்து அவர் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை

அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகவரகத்தின் முன்னாள் ஒப்பந்ததாரரான ஸ்னோவ்டன், அரசாங்க கண்காணிப்பு திட்டங்களை விவரிக்கும் ரகசிய ஆவணங்களை கசியவிட்டதால், அமெரிக்காவில் வழக்குத் தொடரப்படுவதைத் தவிர்ப்பதற்காக 2013ஆம் ஆண்டு முதல் ரஷ்யாவில் வசித்து வருகிறார்.

அவருக்கு 2020ஆம் ஆண்டு நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டது. மேலும் அவர் தனது அமெரிக்க குடியுரிமையை கைவிடாமல் ரஷ்ய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க திட்டமிட்டுள்ளதாக அப்போது கூறினார்.

பிற நாடுகளின் அரசு செயற்பாடுகளையும், சொந்த நாட்டு மக்களையும் அமெரிக்க உளவு அமைப்புகள் தொடர்ந்து இரகசியமாகக் கண்காணித்து வருவதை அவர் உலகுக்கு பகிரங்கப்படுத்தியதால், அமெரிக்காவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஸ்னோவ்டனை தங்களிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்கா, ரஷ்யாவிடம் பலமுறை கோரியது. ஆனாலும் அது மறுக்கப்பட்டது.

ரஷ்யாவில் குறைந்த சுயவிபரத்தை வைத்து, சமூக ஊடகங்களில் ரஷ்ய அரசாங்கத்தின் கொள்கைகளை அவ்வப்போது விமர்சித்த எட்வர்ட் ஸ்னோவ்டன், நியாயமான விசாரணைக்கு உத்தரவாதம் அளித்தால், அமெரிக்காவிற்குத் திரும்பத் தயாராக இருப்பதாக 2019ஆம் ஆண்டு கூறினார்.

https://athavannews.com/2022/1301509

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு ஆரோக்கியமான சுயாதீனமான உலக ஒழுங்கு ஒன்றிற்கான தருணம் உருவாகி வருகின்றது என்பதற்கு எடுத்துகாட்டு.

இதுவரை காலமும் சாதாரண தனிமனித உரிமைகளூக்காக போராடும் சாமானியர்களை ஆதிக்க கரங்கள் கொண்டு அடக்கப்படும் நிலையில், இந்த புதிய உலக ஒழுங்கு அனைத்து விடயங்களையும் சமநிலைபடுத்தும்.

ஜூலியன் அசாஞ்ச் விடுதலைக்காகவும் குரல் கொடுக்க வேண்டும்.

பல நியாயமான போராட்டங்களை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் துணைகொண்டு காலில் போட்டு நசிக்கிய நிலமை இனி மாறும், பல தேசிய இனங்களின் உரிமைகள் பெறப்படுவதற்கு ஏற்ற கீரைக்கடைக்கு எதிர்கடை வேணும் என்ற நிலை உருவாவது மிகவும் சந்தோசமான விடயம்.

இனி எமது பிரச்சினைக்கும் பன்முகம் கொண்ட தீர்வு அணுகுமுறை உருவாக உள்ளது.

Edited by vasee

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

இனி எமது பிரச்சினைக்கும் பன்முகம் கொண்ட தீர்வு அணுகுமுறை உருவாக உள்ளது.

சரியாக சொன்னீர்கள். 👍
ரஷ்யா ஒரு நிலை எடுக்கும் போது... அமெரிக்கா  எதிர் நிலை எடுக்கும்.
அப்போ.... எமக்கான தீர்வுக்கும், சாத்தியம் உள்ளதை மறுப்பதற்கில்லை. 🙂

ஆனால்... எமது அரைகுறை அரசியல்வாதிகள், இந்தியாவை நம்பி...
13 என்று தொங்கிக் கொண்டு இருந்தால், எல்லாம்  நாசமாய் போயிடும். 😎

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

சரியாக சொன்னீர்கள். 👍
ரஷ்யா ஒரு நிலை எடுக்கும் போது... அமெரிக்கா  எதிர் நிலை எடுக்கும்.
அப்போ.... எமக்கான தீர்வுக்கும், சாத்தியம் உள்ளதை மறுப்பதற்கில்லை. 🙂

ஆனால்... எமது அரைகுறை அரசியல்வாதிகள், இந்தியாவை நம்பி...
13 என்று தொங்கிக் கொண்டு இருந்தால், எல்லாம்  நாசமாய் போயிடும். 😎

பனிப்போர் நிலவிய காலம் போல 2009 இல் இருந்திருந்தால் எமது நியாயமான போராட்டம் நசுக்கப்பட்டிருக்காது, அந்த கால கட்டத்தில் ஒரு பலச்சமநிலை நிலவியது.

நீங்கள் கூறுவது போல புலிகள் அற்ற சூழ்நிலையில் எமக்கு இந்தியாவினை தவிர்த்து தீர்வு கிடைக்குமா? என்பது சிந்திக்க்க வைக்கும் கேள்விதான்?

திரும்பவும் எமது மக்கள் போராட முடியாத நிலையில், உலக ஒழுங்கில் ஏற்படும்  மாற்றம் இந்தியாவின் இந்த புதிய உலக ஒழுங்கில், நடுவுநிலை எனும் பம்மாத்து கொள்கையிலிருந்து ஏற்படும் மாற்றமே எமக்கான  தீர்வினை கொண்டுவரும்.

இந்தியாவினை பொறுத்தவரை எமது உரிமை பிரச்சினை அவர்களது துருப்பு சீட்டு, இலங்கையில் தொடர்ச்சியாக பிரச்சினை ஏதோ ஒரு வகையில் இருந்து கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் இந்தியாவின் கொள்கை.

எரிகின்ற இலங்கையில்தான் இந்தியாவினது பாதுகாப்பு தங்கியுள்ளதாக இந்தியா கருதுகிறது.

இலங்கை பொருளாதார தன்னிறைவு அடைந்துவிட்டால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு எப்போதும் அச்சுறுத்தலாக இருக்கும் என்பதற்கு இலங்கை போதுமான உதாரண மாதிரிகளை இந்தியாவிற்கு வரலாற்றில் காட்டியுள்ளது, இனியும் தாராளமாக காட்டும் அது இந்தியாவிற்கும் தெரியும்.

ஆனால் இலங்கையின் நிலை மோசமாக உள்ளதால் அடக்கி வாசிக்கின்றது.

இலங்கையில் ஏதாவது ஒரு பிரச்சினை இல்லாவிட்டால் இலங்கை பொருளாதார மற்றும் ஒரு அரசியல் உறுதித்தன்மை உருவாகி விடும் அதனை தடுப்பதற்கு இலங்கையிலுள்ள அனைத்து சிறுபான்மையினரின் பிரச்சினையை உபயோகித்து கொள்கிறது.

இந்தியாவின் கொள்கை வகுப்பில் மாற்றம் ஏற்படுமா? இல்லை இந்தியாவின் துருப்பிடித்த கொள்கை வகுப்பில் மாற்றம் ஏற்படாது.

அப்படியானால் எப்படி எமக்கு தீர்வு கிடைக்கும்? நடுவுநிலைமை வகிப்பதாக கூறிக்கொண்டுள்ள இந்தியா; இரஸ்சிய, சீன சார்புநிலை எடுத்தாலோ அல்லது முழுக்க அமெரிக்க சார்பு நிலை எடுத்தால்தான் ஏதாவது மாற்றம் நிகழும் என கருதுகிறேன்.

கவலைப்பட வேண்டாம் இந்தியா தானாகப்போய் விரைவில் மாட்டிக்கொள்ளும், நீண்ட காலத்திற்கு இரட்டை தோணியில் பயணம் செய்யமுடியாது என கருதுகிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.