Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மினுவாங்கொடையில் துப்பாக்கிச்சூடு – தந்தை மற்றும் இரண்டு மகன்கள் உயிரிழப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு : நால்வர் உயிரிழப்பு!

மினுவாங்கொடையில் துப்பாக்கிச்சூடு – தந்தை மற்றும் இரண்டு மகன்கள் உயிரிழப்பு!

மினுவாங்கொடையில் இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

T56 ரக துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் தந்தை மற்றும் இரண்டு மகன்களே சம்பவத்தில் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதுடன், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இரு மகன்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1303117

  • கருத்துக்கள உறவுகள்

காலையில் வீட்டுக்குள் பயங்கரம் ! தந்தை, 2 மகன்கள் துப்பாக்கிச் சூட்டில் பலி !

06 OCT, 2022 | 09:27 AM
image

 

வீட்டுக்குள் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் தந்தையும் 2 மகன்களும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மினுவாங்கொடையில் உள்ள வீடொன்றுக்குள் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்திலேயே குறித்த மூவரும் உயிரிழழுந்துள்ளனர்.

மினுவாங்கொடை, கமன்கெதர பகுதியில்ல் இன்று காலை 7.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இனந்தெரியாத நபர்கள் வீட்டிற்குள் பிரவேசித்து துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/137077

  • கருத்துக்கள உறவுகள்

மினுவாங்கொடை முக்கொலை : கைதான 6 சந்தேகநபர்களுக்கும் விளக்கமறியல்

By DIGITAL DESK 5

08 OCT, 2022 | 07:44 PM
image

மினுவாங்கொடையில் இடம்பெற்ற முக்கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேகநபர்களும் எதிர்வரும் ஒக்டோபர் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட 6 சந்தேகநபர்கள் இன்று (08) மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

வியாழக்கிழமை (06) காலை 7.00 மணியளவில் மினுவாங்கொடை காமன்கெதர பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் - தந்தை (51) மற்றும் 23 மற்றும் 24 வயதுடைய இரண்டு மகன்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மூன்று கொலைகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மோட்டார் சைக்கிள் மற்றும் காரில் வந்து ரி-56 துப்பாக்கியை பயன்படுத்தி மூவரையும் சுட்டுக்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலைக் குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மரணமடைந்த நபர்கள் சில மாதங்களுக்கு முன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

முதற்கட்ட விசாரணையில், பல ஆண்டுகளுக்கு முன் காத்தாடி தொடர்பாக நடந்த தகராறில், மூன்று கொலைகள் இடம்பெற்றுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பில் மொத்தம் 07 கொலைகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆரம்பத்தில், ஆகஸ்ட் 2017 இல் காத்தாடி தொடர்பான சம்பவத்தின் காரணமாக ஒரு தந்தையும் அவரது மகனும் கொல்லப்பட்டனர்.

மேற்கூறிய கொலையுடன் தொடர்புடைய மற்றொரு தந்தை-மகன் இருவரையும் பொலிஸார் கைது செய்ததாகவும், கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் பின்னர் ஆகஸ்ட் 2018 இல் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பின்னர், இந்தக் கொலையில் முக்கிய குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் ஒருவர் ஜூலை 2021 இல் கொல்லப்பட்டார்.

ஒக்டோபர் 06 அன்று சுட்டுக் கொல்லப்பட்ட 3 பேரும் ஏற்கனவே, இந்த மரணதண்டனைக்கு குற்றம் சாட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

https://www.virakesari.lk/article/137269

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஏராளன் said:

கொலைக் குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மரணமடைந்த நபர்கள் சில மாதங்களுக்கு முன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

முதற்கட்ட விசாரணையில், பல ஆண்டுகளுக்கு முன் காத்தாடி தொடர்பாக நடந்த தகராறில், மூன்று கொலைகள் இடம்பெற்றுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பில் மொத்தம் 07 கொலைகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆரம்பத்தில், ஆகஸ்ட் 2017 இல் காத்தாடி தொடர்பான சம்பவத்தின் காரணமாக ஒரு தந்தையும் அவரது மகனும் கொல்லப்பட்டனர்.

மேற்கூறிய கொலையுடன் தொடர்புடைய மற்றொரு தந்தை-மகன் இருவரையும் பொலிஸார் கைது செய்ததாகவும், கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் பின்னர் ஆகஸ்ட் 2018 இல் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பின்னர், இந்தக் கொலையில் முக்கிய குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் ஒருவர் ஜூலை 2021 இல் கொல்லப்பட்டார்.

ஒக்டோபர் 06 அன்று சுட்டுக் கொல்லப்பட்ட 3 பேரும் ஏற்கனவே, இந்த மரணதண்டனைக்கு குற்றம் சாட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கூட்டிக் கழித்துப் பார்த்தால்… ஏற்கெனவே சிறைவாசத்தை அனுபவித்தவர்கள்தான்,
மீண்டும் இதே குற்றத்தை புரிகின்றார்கள்.
சிறைச்சாலை… ஒரு மனிதனை திருத்தி, நல்ல மனிதனாக்கும் என்பதெல்லாம் புலுடா…  😎

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.