Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாராளுமன்றத் தேர்தல் முறைமை தொடர்பில் தீர்க்கமாக அறிவிக்காவிட்டால் சர்வசன வாக்கெடுப்பு : உள்ளுராட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் - ஜனாதிபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்றத் தேர்தல் முறைமை தொடர்பில் தீர்க்கமாக அறிவிக்காவிட்டால் சர்வசன வாக்கெடுப்பு : உள்ளுராட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் - ஜனாதிபதி

09 OCT, 2022 | 06:51 PM
image

(எம்.மனோசித்ரா)

பாராளுமன்ற தேர்தல் முறைமை தொடர்பில் தீர்மானமொன்றை எடுப்பதற்கு தெரிவுக்குழுவொன்றை பரிந்துரைப்பதாகவும் , அந்த தெரிவுக்குழுவினால் எதிர்வரும் வருடம் ஜூலை மாதத்திற்குள் தீர்மானமொன்று முன்வைக்கப்படாவிட்டால் பொறுத்தமான தேர்தல் முறைமை எதுவென்றை தேர்ந்தெடுப்பதற்கு சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு அடுத்த தேர்தலுக்குள் உள்ளுராட்சிசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 4000 ஆகக் குறைக்கவுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , 'மக்கள் சபை' வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளாhகவும் குறிப்பிட்டுள்ளார்.

தொழிற்சங்கத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை (9 ) நடைபெற்ற கலந்துரையாடலின் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

 

நாட்டில் பெரும்பான்மையானோர் தற்போதுள்ள அரசியல் முறைமையை எதிர்க்கின்றனர். எனவே அவர்கள் எதிர்பார்க்கும் அரசியல் முறைமை உருவாக்கப்பட வேண்டும். 

அதற்கமைய அடுத்த தேர்தலுக்கு முன்னர் உள்ளுராட்சி சபைகளில் (பிரதேசசபை, நகரசபை, மாநகரசபை)  காணப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 8000 இலிருந்து 4000 வரை குறைத்து , 'மக்கள் சபை' வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கின்றேன்.

அத்தோடு பிரதேசசபைகளின் நிறைவேற்று அதிகாரம் தனி தலைவருக்கு பதிலாக தலைவரை பிரதானமாகக் கொண்ட குழுவிற்கு வழங்கப்பட வேண்டும். அடுத்த பிரதேசசபை தேர்தலுக்கு முன்னர் இந்த திருத்தங்களை மேற்கொள்வதற்கான சட்ட வரைபை தயாரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசியல் மோசடிக்கு பிரதான காரணம் விருப்பு வாக்கு முறைமையாகும். எனவே வெகு விரைவில் விருப்பு வாக்கு முறைமை அற்ற பட்டியல் முறைமை அல்லது கலப்பு முறைமையுடன் தேர்தல் முறைமையொன்றுக்குச் செல்ல வேண்டும். தேர்தலுக்காக செலவிடப்படும் நிதிக்காக தேர்தல் சட்டத்தின் ஊடாக வரையரைகளை விதிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இன்று இந்த நாட்டில் இரண்டு பிரதான பிரச்சினைகள் உள்ளன. ஒன்று பொருளாதாரத்தின் வீழ்ச்சி. மற்றையது நாட்டின் பெரும்பான்மையினரால் இந்த நாட்டின் அரசியல் அமைப்பு நிராகரிக்கப்படுகின்றமையாகும். இந்தப் பொருளாதாரச் சரிவு அரசியல் முறைமையினால் ஏற்பட்டது என்று பலர் கூறுகின்றனர்.

பொருளாதாரம் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே பேசியுள்ளோம். அதைப்பற்றி இங்கு மேலும் பேச விரும்பவில்லை. ஆனால் அரசியல் வேலைத்திட்டத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டும். 

இன்று இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்கள் நாட்டின் அரசியல் முறைமை தொடர்பில் கேள்வி எழுப்புகின்றனர். பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களையும் ஆற்றில் கரைக்க வேண்டும் என்று கூறுகின்றனர். மக்களுக்கு இந்த எண்ணம் தோன்றியுள்ளமை தனி நபர்களால் அல்ல, மாறாக நடைமுறையிலுள்ள அரசியல் முறைமையை அவர்கள் ஏற்காமையினாலும்.

கடந்த மார்ச் மாதம் இந்தப் போராட்டங்களை ஆரம்பித்தது அரசியல் கட்சிகள் அல்ல, அரசியல் கட்சிகளின் போராட்டங்களுக்கு மக்கள் தயாராக இல்லை. மக்கள் தனித்தனியாக முன் வந்தனர். 

துரதிர்ஷ்டவசமாக, மே மற்றும் ஜூன் மாதங்களில், ஒவ்வொரு அரசியல் அமைப்புக்களும் எதிர்ப்பு இயக்கத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டன. அதனுடன் வன்முறையும் தோற்றம் பெற்றது. வன்முறைகள் மூலம் ஆட்சியைக் கைப்பற்ற அவை செயற்பட்டன. அதனால் அன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டம் முறியடிக்கப்பட்டது.

இந்த அரசியல் முறைமை மாற்றப்பட வேண்டும் என்று மக்கள் இன்னமும் கூறிக் கொண்டிருக்கின்றனர். வன்முறையை எவரும் விரும்புவதில்லை. இதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த மனோபாவத்தை மாற்றிக்கொண்டு நாம் முன்னேற வேண்டும். கட்சி முறைமை காரணமாக இன்று பாராளுமன்றத்தில் குழுக்கள் உருவாகியுள்ளன. 

நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு ஆளுங்கட்சி எனக்கு ஆதரவளித்தது. இது ஒரு இரகசியம் அல்ல. சிறுபான்மையினர் மற்ற வேட்பாளருக்கு வாக்களித்தனர். மேலும் எதிர்க்கட்சி எம்பிக்களும் எனக்கு வாக்களித்தனர். ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் கட்சிகளின் எம்.பி.க்களும் எனக்கு வாக்களித்தனர். அதனால் எனக்கு இரு தரப்பிலிருந்தும் வாக்குகள் கிடைத்தன.

குறுகிய கட்சி பேதமின்றி மக்கள் தரப்பிலிருந்து நான் பணியாற்றுகிறேன். தற்போது எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு இணங்க, பாராளுமன்றத்தில் தேசிய பேரவை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கண்காணிப்புக் குழுக்கள் போன்ற குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இவற்றை முழுமையடையச் செய்ய முடியவில்லை. 

காரணம் சிலர் தேசிய பேரவைக்கு வருகின்றனர். சிலர் வரவில்லை. அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று நாடு எதிர்பார்க்கிறது. நாம் இங்கே நின்றுவிடுவது சிறந்ததாக இருக்காது.

மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை சிந்தித்து அதன்படி செயல்பட வேண்டும். கிராம மட்ட அரசியலால் மக்கள் சலிப்படைந்து விட்டதால் இன்று ஒரு புதிய கருத்தை வரவேற்கின்றோம். ஆனால் அது அரசாங்கமல்ல. 

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய 'மக்கள் சபை' முறைமையை முன்வைத்துள்ளார். ஒவ்வொரு தொகுதியிலும், அந்த கிராமத்தில் உள்ள பொது அமைப்புகளை ஒருங்கிணைத்து, ஒரு குழுவாக பணிகளை செய்ய வேண்டும். 

அதுவே 'மக்கள் சபை' எனப்படுகிறது. அந்த முறைமை சிறந்ததாகும். இந்த முறைமை முன்பு 'கிராமோதய சபை' என்று காணப்பட்டது. அது அரசாங்கத்துடன் தொடர்புடையது, இது அரசாங்கத்துடன் தொடர்புடையது அல்ல. இந்த மக்கள் சபை திட்டத்தை செயல்படுத்த காத்திருக்கிறோம்.

மக்கள் சபைகள் இயங்கும் போது உள்ளூராட்சி மன்றங்களுடன் ஒருங்கிணைப்பு காணப்பட வேண்டும். எனினும் அவற்றை சபைகளை அகற்ற உள்ளுராட்சி சபைக்கு அனுமதி இல்லை. நாம் எவ்வாறு இணைந்து செயல்பட வேண்டும் என்பதை திட்டமிட வேண்டும். 

உள்ளுராட்சி சபை முறைமை தொடர்பில் பல கேள்விகள் உள்ளன. பல உள்ளூராட்சி சபைகள் இலாபம் ஈட்டவில்லை. வரிப்பணத்தையும் நம்பி இருக்கிறார்கள். பணம் பெறும் நகரசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அவற்றை சம்பளம் வழங்குவதற்கு பயன்படுத்துகின்றன. எனவே இந்த முறையைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

ஆனால் கடந்த முறை உள்ளுராட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை நான்காயிரத்திலிருந்து எட்டாயிரமாக அதிகரித்தோம். நாடு இதனைக் கேட்கவில்லை, கட்சி தலைவர்கள் ஒன்று கூடி இதனை செய்தனர். 

எனவே இப்போது அடுத்த தேர்தலுக்கு முன் இந்த எட்டாயிரத்தை நான்காயிரமாகக் குறைக்க வேண்டும். பிரதேச சபைகளின் நிறைவேற்று அதிகாரம் ஒரு தலைவருக்குப் பதிலாக தலைவரைப் பிரதானமாகக் கொண்ட குழுவிற்கு வழங்கப்பட வேண்டும். அதற்கமைய செயற்குழுவொன்று அமைக்கப்படும். அடுத்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னதாக இந்தத் திருத்தங்களை இணைத்து சட்ட வரைவு தயாரிக்கப்படும்.

மேலும் விருப்பு வாக்கு முறைமையை பலர் விரும்புவதில்லை. இந்த முறைமை பற்றி  யாரும் முதலில் சிந்திக்கவில்லை. மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆழமாக சிந்தித்து 1975 இல் பட்டியல் முறையை முன்மொழிந்தார். அது மற்ற கட்சிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

ஏனென்றால் அதற்கு விகிதங்கள் கிடைத்தன. அதன்படி மாநகர சபை தேர்தலை நடத்தினோம். மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல்கள் நடத்தப்பட்டு, அந்த முறையை வெற்றிகரமாக முன்னெடுத்துச் சென்றோம். ஆனால் 1988ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் இருந்த கட்சிகள் திடீரென பட்டியல் முறைக்குப் பதிலாக விருப்பு வாக்கு முறைமையைக் கொண்டு வர முடிவு செய்தன. அதுவும் ஒன்று அல்ல. 3 விருப்பு வாக்குகளை கோரின. இதே போன்று தான் 196 ஆக இருந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225 ஆக மாற்றப்பட்டது.

இந்நாட்டு அரசியலில் ஊழல் மோசடிகளுக்கு முக்கிய காரணம் விருப்பு வாக்கு  முறையே ஆகும். எனவே புதிய வாக்குப்பதிவு முறையை தயார் செய்ய வேண்டும். விருப்பு வாக்கு முறைமை அற்ற பட்டியல் முறை அல்லது கலப்பு முறை பற்றி கலந்தாலோசித்த பிறகு ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும். எதிர்வரும் தேர்தலுக்கு முன்னர் தீர்மானம் எடுத்து புதிய முறைமையின் கீழ் தேர்தலை நடத்த வேண்டும். 

பின்னர் சரியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இது நாம் செய்ய வேண்டிய ஒன்றாகும். இன்று கட்சிகளிடையே இணக்கப்பாடு இல்லை. பெரிய கட்சிகள் ஒன்றையும்,  சிறிய கட்சிகள் வேறொன்றையும் கூறுகின்றன. இதே போன்று தொடர்ந்தும் பயணிக்க முடியாது. அரசியல் கட்சிகள் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்.

நீதி அமைச்சருடனும் கலந்துரையாடினேன். பாராளுமன்ற வாக்களிப்பு முறை தொடர்பில் தீர்மானிப்பதற்கு தெரிவுக்குழுவொன்றை முன்மொழிகிறோம். அது கூட்டப்பட வேண்டும். அதில் கலந்துரையாடல்களை முன்னெடுக்க வேண்டும். இதனை காலம் தாழ்த்த முடியாது. 

ஏனெனில் ஜூன் அல்லது ஜூலைக்குள் தீர்மானமொன்றை எடுக்க முடியாவிட்டால் , எந்த முறைமை சிறந்தது என்று மக்களின் கருத்துகளைப் பெற சர்வசனவாக்கெடுப்பினை நடத்துவேன்.

இதுபற்றி மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டு , அவர்கள் கலந்தாலோசித்து ஒரு முறைமையை தெரிவு செய்வார்கள். எனவே பாராளுமன்றத்தின் தெரிவுக்குழு அந்த செயற்பாடுகளை முடிக்க வேண்டும். அல்லது பொறுப்பினை மக்களிடம் ஒப்படைத்து விடுவேன். அவர்களிடமிருந்து நாம் விலகிச் செல்ல முடியாது. நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும்.

இன்று தேர்தலுக்காக அதிக பணம் செலவிடப்படுகிறது. நான் 1977 இல் பழைய முறைமையில் தேர்தலை நடத்தினேன். அப்போது செலவுகள் கட்டுப்படுத்தப்பட்டன. இன்று, சிலர் தேர்தலுக்காக 20-30, 50 மில்லியன் வரை செலவிடுகின்றனர். 

இவற்றை எவ்வாறு திருப்பிச் செலுத்துவது? இந்த முறையால் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறெனில் தேர்தல் சட்டத்தில் தேர்தலுக்காக செலவழிக்கக்கூடிய பணத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும். 1977 இல் இந்த வரையறைகள் இருந்தன. எனவே தேர்தலில் செலவிடப்படும் பணத்துக்குக் கட்டுப்பாடுகளை விதிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/137321

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.