Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அவசியமாகத் தேவைப்படும் சமயத்தில் தடுக்கப்படும் மனிதாபிமானப் பணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவசியமாகத் தேவைப்படும் சமயத்தில் தடுக்கப்படும் மனிதாபிமானப் பணி

யுத்தம் காரணமாகவும், ஆழிப்பேரலை அனர்த்தம் போன்ற இயற்கைப் பேரழிவுகள் காரணமாகவும் இடம்பெயர்ந்த மக்களுக்கு ஆற்றப்பட வேண்டிய அவசர அவசிய மனி தாபிமானப் பணிகள் மிக நெருக்கடிக்குள்ளும், இக்கட்டுக் குள்ளும் சிக்கியுள்ளன.

இலங்கையில் இத்தகைய மக்களுக்கான மனித நேயத் தொண்டுப் பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 34 ஊழியர்கள் கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் படுகொலை செய்யப் பட்டிருக்கின்றனர் என்று கூறப்படும் பின்னணியில்

""மனித நேயத் தொண்டுப் பணியாளர்கள் தமது கட மையை ஆற்றுவதற்கு உலகில் மிக மோசமான இடமாக இலங்கை உள்ளது.'' என்று ஐ. நாவின் அவசரகால நிவா ரணப் பணி ஒருங்கிணைப்புப் பிரிவின் உயர் அதிகாரி ஜோன் ஹோம்ஸ் திறந்த மனதோடு கூறிய கருத்து இலங்கை அரசை தென்னிலங்கையை பெரும் சீற்றத்துக்குள் ஆழ்த்த வைத்தது.

ஐ. நா. உயரதிகாரியைப் பார்த்து அவர் புலிகளிடம் பணம் (லஞ்சம்) வாங்கிய பயங்கரவாதி என்றும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசைக் கவிழ்க்கும் சர்வதேச சதியின் ஓர் அங் கமே அவரது கூற்று என்றும் இலங்கை அரசின் மூத்த அமைச்சர்கள் பகிரங்கமாக காட்டமாக குற்றம் சுமத்தும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது.

ஆனால் அது ஒருபுறமிருக்க, மனிதாபிமானத் தொண் டுப் பணியாளர்களின் நிலை இலங்கையில் மிக மோசமான கட்டத்தை அடைந்திருக்கின்றது என்பதை உறுதிப்படுத் தும் நிரூபிக்கும் மற்றும் ஒரு சம்பவம் நேற்று முன்தினம் அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள யாழ்ப்பாணத் தில் இடம்பெற்றிருக்கின்றது.

யாழ்ப்பாணத்தில் கண்ணிவெடியகற்றும் டென்மார்க் நாட்டு நிறுவனத்தின் உள்ளூர்ப் பணியாளர்கள் இருவர், நக ரின் மத்தியில் வைத்து, மோட்டார் சைக்கிளில் கலைத்துக் கலைத்துச் சுடப்பட்டிருக்கின்றனர். இதில் பணியாளர் ஒரு வர் உயிரிழந்து விட்டார். மற்றொருவர் மிக ஆபத்தான கட் டத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட் டிருக்கின்றார். ஏனைய படுகொலைச் சம்பவங்கள் போன்று, இந்தப் படுகொலை தொடர்பாகவும் யாரும் கைதுசெய்யப் படவோ, சட்டத்தின் முன்நிறுத்தப்படவோ, தண்டிக்கப்படவோ போவதில்லை என்பதும் எதிர்பார்க்கப்படும் ஒன்றுதான்.

ஆக, இவ்வளவு காலத்தில், கொழும்பில் வைத்து கடத் தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட இலங்கைச் செஞ்சிலு வைச் சங்கப் பணியாளர்களான தொண்டு ஊழியர்களான இருவர் விடயத்தில் மட்டும், கொலைச் சூத்திரதாரி அடை யாளம் காணப்பட்டுள்ளார், ஆனால் அவர் தப்பிவிட்டார் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டிருக்கின்றது. இந்தப் படு கொலைச் சம்பவம் தொடர்பாக மட்டும் ஒட்டுக் குழு உறுப் பினர் ஒருவரின் பின்னணி கோடி காட்டப்பட்டதோடு சரி. அதுவும் கூட இந்தப் படுகொலை தொடர்பாக எழுந்த கடும் சர்வதேச அழுத்தத்தின் பின்னரே, சூத்திரதாரி பற்றிய தக வல் விக்கி, விழுங்கி, வெளியிடப்பட்டிருக்கின்றது.

இப்போது நேற்றுமுன்தினம் டெனிஷ் தொண்டு நிறுவனப் பணியாளர் படுகொலை செய்யப்பட்ட பின்னணியில் அங்கு தமது பணிகளை இடைநிறுத்தப்போவதாக டெனிஷ் அகதிகள் கவுன்ஸிலும், டெனிஷ் கண்ணி மீட்பு நிறுவனமும் தெரிவித்திருக்கின்றன என்றும் கூறப்படுகின்றது.

இதேசமயம், கிழக்கில் அரசு மேற்கொண்ட இராணுவ நட வடிக்கைகளினால் இடம்பெயர்ந்த அகதிகள் படும் அவலத்தை, முன்னாள் இந்தியப் பிரதமர் இந்தர்குமார் குஜ்ரால் தலைமையிலான மனித உரிமைகளுக்கான தெற்காசியர்கள் அமைப்பு என்ற ஸ்தாபனம் வெளிவெளியாக அம்பலப்படுத்தியிருக் கின்றது.

""பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்து அகதி முகாம் களில் அவல வாழ்வு வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். இந்நிலை யில் பழைய இடங்களுக்கு திரும்பிச்செல்லுமாறு அவர்களது விருப்பத்துக்கு மாறாக அவர்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றார

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.