Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

டியோகோ கார்சியாவின் சாகோஸ் தீவில் உள்ள இலங்கை தமிழர்களை மூன்றாம் உலக நாடொன்றிற்கு பிரிட்டன் அனுப்பலாம் என அச்சம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டியோகோ கார்சியாவின் சாகோஸ் தீவில் உள்ள இலங்கை தமிழர்களை மூன்றாம் உலக நாடொன்றிற்கு பிரிட்டன் அனுப்பலாம் என அச்சம்

By RAJEEBAN

19 OCT, 2022 | 01:22 PM
image

சாகோஸ் தீவில் தஞ்சமடைந்துள்ள இலங்கை தமிழர்கள் ருவான்டா பாணியில் தாங்கள் நாடு கடத்தப்படலாம் என அச்சம் வெளியிட்டுள்ளனர்.

பிரிட்டன் உரிமை கோரும் சாகோஸ் தீவில் தஞ்சமடைந்து புகலிடம் கோரும் இலங்கை தமிழர்களே பிரிட்டன் தங்களை ருவாண்டா பாணியில் நாடு  கடத்தலாம் என அச்சம் வெளியிட்டுள்ளனர்.

சாகோஸ்தீவில் உள்ள இலங்கையர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பமுடியாவிட்டால் இன்னுமொரு பெயர் தெரியாத  இடத்திற்கு அனுப்பப்படுவார்கள் என  அரசாங்க சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர் ( பிரிட்டன்)

அகதிகளை ஏற்க தயாரான மூன்றாம் உலக நாடுகளுடன் இது குறித்து அமைச்சர்கள் ஆராய்ந்து வருகின்றனர் என வெளிவிவகார அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ருவாண்டாவிற்கு அகதிகள் அனுப்பப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Diegogarcia_main.jpg

ஒரு வருடத்திற்கு முன்னர் இலங்கை தமிழ் அகதிகளின் படகொன்று டியோகோ கார்சியாவின் சாகோஸ் தீவை சென்றடைந்தது,இந்த தீவை பிரிட்டன் பிரிட்டிஸ் இந்து சமுத்திர பகுதி என அழைக்கின்றது.

ஐக்கியநாடுகள் நீதிமன்றம் நிராகரித்துள்ள போதிலும் அந்த தீவிற்கு பிரி;ட்டன் உரிமை கோருகின்றது.

பிரிட்டன் அகதிகளை மூன்றாம் உலக நாடொன்றிற்கு அனுப்ப முயல்கின்றது என்ற தகவல் அகதிகளிற்கு சார்பாக குரல்கொடுப்பவர்களை கவலையடைச்செய்துள்ளது.

பிரிட்டன் சாகோஸ்தீவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளிற்கான உரிமைகளை  கடந்த ஒரு வருடகாலமாக மறுத்துள்ளது என குடியேற்றவாசிகளின் நலன்களிற்கான கூட்டுபேரவையின் பரப்புரை இயக்குநர் ஜெஹ்ரா ஹசன் ஒரு மோசமான நடவடிக்கையாக இந்த அகதிகள் சிலரை பிரிட்டன் மூன்றாம் உலக நாடொன்றிற்கு அனுப்பலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

துன்புறுத்தல்களில் இருந்து தப்பியோடியவர்களின் குரல்கள் செவிமடுக்கப்படவேண்டும்,பாதுகாப்பிற்கான அவர்களின் உரிமையை பிரிட்டன் அங்கீகரிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழர்களின் சட்டத்தரணிகளிற்கு கடந்த வாரம் அனுப்பியுள்ள கடிதத்தில்  பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சு 2004ம் ஆண்டு பிரிட்டனின் இந்து சமுத்திர பிரதேச சட்டங்களில் செய்யப்பட்ட மாற்றங்கள் காரணமாக அவ்வாறான பகுதியில் சாகோஸ்தீவில் உள்ள குடியேற்றவாசிகளை மூன்றாம் உலக நாடுகளிற்கு அனுப்பலாம்  என குறிப்பிட்டுள்ளது.

குடியேற்றவாசிகளி;ல் ஒருவர் அல்லது பலரை இலங்கைக்கு பாதுகாப்பாக திருப்பி அனுப்ப முடியாது என ஆணையாளர் தீர்மானித்தால் அவர்களை பிரிட்டனிற்கு கொண்டு செல்ல முடியாது பாதுகாப்பான மூன்றாம் உலக நாட்டிற்கு கொண்டு செல்லலாம் என்பதே பிரிட்டனின் தீர்மானம் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/137993

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.