Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மட்டக்களப்பு நிலைமை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு நிலைமை

இலங்கையின் சிறுபான்மையினரான தமிழர்களும் முஸ்லிம்களும் தமக்குள் முறுகலை விடுத்து, உரிமையைப் பெறுவதற்கான எழுச்சியில் ஒன்றுபட்டு நின்றாலேயே இரு தரப்புகளினதும் நியாயமான அபிலாஷைகளும், வேணவாவும், எதிர்பார்ப்பும் நிறைவேறும் என்பது திண்ணம்.

சிறுபான்மை இனங்கள் தமக்குள் முரண்டுபட்டு, மோதிக்கொண்டிருந்தால் அது அவர்களையே அதிகம் பாதிக்கும். சிறுபான்மையினரை அடக்கி, ஒடுக்கி அவர்களின் உரிமைகளை மறுத்து ஆளும் பேரினவாதத்துக்கு அது வாய்ப்பாகியும் விடும். இதன் காரணமாகவே சிறுபான்மை இனங்களிடையே மோதலை ஏற்படுத்துவதைத் தனது ஆட்சித் தந்திரமாகப் பேரினவாதம் பயன்படுத்தி வருகின்றது என்பதும் கண்கூடு.

தமிழர் முஸ்லிம் உறவு கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது மேலும் விரிசல் கண்டு வருவது வேதனைக்குரியது.

ஒரு புறம் சிறுபான்மையினரான தமிழர்களை வடக்கு, கிழக்கு எனப் பிரித்து அவர்களுக்கிடையேயே மோதலை உருவாக்கி அவர்களைப் பலவீனப்படுத்தும் தந்திரோபாயத்தையும், மறுபுறம் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே முரண்பாடுகளை உருவாக்கி, சிறுபான்மை இனங்களைக் கன்னை பிரித்து மோதவிடும் உத்தியையும் இரட்டைத் திட்டமாக அரங்கேற்றுகின்றது ஆட்சிப்பீடம்.

சிறுபான்மை இனத் தலைவர்கள் புல்லுருவிகளாகி அதற்குத் துணைபோவது சிறுபான்மையினரின் தலையெழுத்தாக அமைந்திருப்பது கவலைக்குரியது.

கிழக்கைப் புலிகளிடமிருந்து முழுவதும் மீட்டு விட்டதாக மார் தட்டுகின்றது ஆட்சிப்பீடம். மனம் வெதும்பி, நொந்து போயிருக்கிறார்கள் தமிழர்கள். குறிப்பாகக் கிழக்குத் தமிழர்கள். இந்தச் சந்தர்ப்பத்தில்தான் மட்டக்களப்பில் இன முறுகல் நிலை தீவிரமடையும் போக்கு வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது. மட்டக்களப்பு உட்பட கிழக்கின் முழுப் பிரதேசத்திலிருந்தும் புலிகள் விரட்டியடிக்கப் பட்டுள்ளனர் என்று தென்னிலங்கை குதூகலிக்கும் அதே சமயத்தில்தான் மரத்தில் இருந்து விழுந்தவனை மாடேறி மிதிப்பது போன்ற விதத்தில் தமிழர்களுக்கு எதிரான காய் நகர்த்தல்கள் சில கிழக்கில் மேற்கொள்ளப் படுகின்றன என்ற எண்ணத்தை அங்குள்ள தமிழர்கள் மனங்கொள்ளும் விதத்தில் விடயங்கள் அரங்கேறுகின்றன.

இன்றைய நிலையில் அமைதிப் பேச்சிலாகட்டும் அல்லது வேறு விடயங்களிலாகட்டும் தங்களது பேரம் பேசும் வலு எனக் கருதப்படுகின்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரசன்னத்தைத் தமது பகுதியில் இழந்து நிற்கின்றார்கள் கிழ்குத் தமிழர்கள். அத்தகைய மக்கள் மத்தியில் தமது நடவடிக்கைகளைக் கட்டவிழ்க்கும்போது பிற தரப்பினர் மிக அவதானமாகவும், பொறுப்புடனும் நடக்க வேண்டியது அவசியமானது.

கட்டாயமானது. யுத்த முனையில் எதிர்கொண்ட துன்பியல் அனுபவங்களோடு நிற்கும் மக்கள் கூட்டத்தை, இதுதான் சந்தர்ப்பம் என்று பார்த்து எதிர்த்தரப்பின் வலுவை தோழமையாக்கிக்கொண்டு அவலப்பட வைக்கும் செயற்பாடு மிக மோசமானதாகக் கருதத் தக்கது.

முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரை குறிப்பாக கிழக்கு முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்களின் மனதில் ஆழமான வடுக்களாக , அவர்களின் ஆன்மாவை மோசமாகத் தாக்கிய பல்வேறு துன்பியல் அனுபவங்கள் நிறைந்து கிடக்கின்றன. தாம் நேரடியாகச் சம்பந்தப்படாத ஒரு போருக்காக அவர்கள் கொடுத்த விலையும், உயிர்களும், இழப்புகளும் சொல்லில் அடங்காதவை. காரணத்துடனோ, காரணமின்றியோ, இதற்குள் இழுக்கப்பட்டு அவர்களும் மோசமாக அவலப்பட வைக்கப்பட்டுள்ளார்கள்.

ஆனால், அதற்கான நியாயத்தையும், தீர்வையும் , நிவாரணத்தையும் மற்றொரு சிறுபான்மை இனத்தை ஒடுக்குவதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியாது என்பதை அவர்களும் உணர வேண்டும்.

அது மட்டுமல்ல. தமிழர் தரப்பு நொந்து போயிருக்கும் சமயத்தில் அதை வசமாகப்பயன்படுத்துவதை விடுத்து, பரஸ்பரம் இரு தரப்புகளையும் மேம்படுத்தும் எண்ணத்துடன் விடயங்களை அணுகிக் காய்களை நகர்த்த முன்வரவேண்டும். சர்ச்சைக்குள்ளாகியிருக்கும

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.