Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

20 அரசாங்க நிறுவனங்களில் 6 ஆயிரம் மில்லியன் ரூபா ஊழல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

20 அரசாங்க நிறுவனங்களில் 6 ஆயிரம் மில்லியன் ரூபா ஊழல்

20 அரசாங்க நிறுவனங்களில் 6 ஆயிரம் மில்லியன் ரூபா ஊழல் மோசடி இடம்பெற்றுள்ளது என்று அரச பொறுப்பு முயற்சிகள் குறித்த பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவரும் எம்.பி.யுமான விஜயதாச ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபை போன்ற நிறுவனங்கள் தொழிலாளர்கள் போராட்டத்தை பயன்படுத்தி சட்டத்திலிருந்து தப்பித்துக்கொள்ளப் பார்க்கின்றன. தெரிவுக்குழுவின் விசாரணைகளின் போது பல அரச நிறுவனங்களின் அதிகாரிகள் பொய்ச்சாட்சிக்கூறியுள்ளனர். இத்தகையவர்களை நீதிமன்றின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

அரச பொறுப்பு முயற்சிகள் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் இரண்டாவது அறிக்கையை சபையில் நேற்றுக்காலை சமர்ப்பித்து உரையாற்றியதன் பின்னர் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவுக்குழுவின் உறுப்பினர்களும் அமைச்சர்களுமான, டிலான் பெரேரா, மஹிந்த அமரவீர , லசந்த அழகியவன்ன, எம்.பி.க்களான ஜோன் அமரதுங்க, பியசிறி விஜயநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது:

கோப் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையிலுள்ளது. இந்த குழு விசாரணைகளை மேற்கொள்கின்ற போது சில அரச நிறுவனங்களின் தலைவர்கள் பொய் சாட்சியமளித்துள்ளனர். அவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

உதாரணமாக இலங்கை மின்சார சபை முகாமையாளர் அல்லது உயர் மட்ட அதிகாரிகள் பதவி விலகுகின்றபோது பயன்படுத்துகின்ற வாகனங்களை தங்களோடு எடுத்துச் சென்று விடுகின்றனர். இலங்கை மின்சார சபையில் மட்டும் இதுவரையிலும் இவ்வாறு 7 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.

கோப் குழுவினர் அரசியல் இலாபம் பெற முயற்சிக்கின்றனர் என்று கூறி ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் தப்பித்துக்கொள்வதற்கு முயற்சிக்கின்றனர். நாம் அரசியல் இலாபம் தேடுவதற்கு முயற்சிக்கவில்லை. எனினும் இலங்கை மின்சார சபை போன்ற அரச நிறுவனங்கள் தொழிலாளர் போராட்டத்தை பயன்படுத்தி சட்டத்திலிருந்து தப்பித்துக்கொள்வதற்கு முயற்சிக்கின்றன என்றார்.

பாராளுமன்றத்தில் உரை இதேவேளை பாராளுமன்றம் நேற்றுக்காலை 9.30 மணிக்கு சபாநாயகர் வி.ஜே.மு. லொக்குபண்டார தலைமையில் கூடியபோது அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய பாராளுமன்ற தெரிவுக்குழுவின் (கோப்) இரண்டாவது அறிக்கையை குழுவின் தலைவர் விஜயதாச ராஜபக்ஷ எம்.பி. சமர்ப்பித்து உரையாற்றும் போது தெரிவித்ததõவது:

தேசிய வீடமைப்பு, அதிகாரசபை, தெற்கு அபிவிருத்தி சபை, மஹõபொல அபிவிருத்தி நிதியம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் உள்ளிட்ட 20 அரச நிறுவனங்களில் மில்லியன் கணக்கான ஊழல் மோசடிகளும் நிர்வாக சீர்கேடுகளும் இடம்பெற்றுள்ளன என்று தெரிவுக்குழு விசாரணைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

-வீரகேசரி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.