Jump to content

அமெரிக்க பவர்போல் லொத்தர் ஜக்பொட் பரிசு 160 கோடி டொலர்களாக அதிகரிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க பவர்போல் லொத்தர் ஜக்பொட் பரிசு 160 கோடி டொலர்களாக அதிகரிப்பு

By DIGITAL DESK 3

05 NOV, 2022 | 07:52 PM
image

அமெரிக்காவின் பவர்போல் லொத்தர்சீட்டிழுப்பின் ஜக்பொட் பரிசுதொகை 160 கோடி டொலர்களாக (சுமார் 57,231 கோடி இலங்கை ரூபா, சுமார் 13,117 கோடி இந்திய ரூபா) அதிகரித்துள்ளது. உலகில் லொத்தர் சீட்டிழுப்பு ஒன்றுக்கான மிகப்பெரிய ஜக்பொட் பரிசுத் தொகை இதுவாகும்.

புளோரிடா மாநிலத்தில் இன்று சனிக்கிழமை  இரவு 10.59 மணிக்கு (இலங்கை, இந்திய நேரப்படி ஞாயிறு காலை 8.29 மணிக்கு) இச்சீட்டிழுப்பு நடைபெறும்.

கடந்த ஆகஸ்ட் 3 ஆம்  திகதியின் பின் பவர்போல் (Powerball) லொத்தர் ஜக்பொட் பரிசு வெல்லப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக வெல்லப்பட்ட ஆகக்கூடுதலான பவர்போல் ஜக்பொட் பரிசுத் தொகை 1.186 பில்லியன் டொலர்களாகும்.  கலிபோர்னியா, புளோரிடா, டென்னஸி மாநிலங்களிலிருந்து 3 டிக்கெட்டுகளுக்கு இப்பரிசுத் தொகை கிடைத்தது. 

2 டொலர் விலையுள்ள பவர்போல் லொத்தர் சீட்டுகள் அமெரிக்காவின் 45 மாநிலங்கள், டிஸ்ட்ரிக் ஒவ் கொலம்பியா, புவர்ட்டோ ரிக்கோ, வேர்ஜின் தீவுகள் ஆகியவற்றில் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த டிக்கெட்டுகளை வாங்குபவர்கள் 1 முதல் 59 வரையான 5 வௌ;வேறு இலக்கங்களை தெரிவு செய்வதுடன், பவர்போல் இலக்கமாக 1 முதல் 25 வரையான ஒரு இலக்கத்தை தெரிவு செய்ய வேண்டும்.

இந்த ஜக்பொட் பரிசை வெல்வதற்கான நிகழ்தகவு 292.2 மில்லியனில் ஒன்று என பவர்போல் லொத்தர் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த  1.6 பில்லியன் (160 கோடி)  டொலர் பரிசுத் தொகையை வெல்பவர்கள் அமெரிக்க வரித்துறைக்கு அத்தொகையில் சுமார் 40 சதவீதத்தை வரியாக செலுத்த வேண்டும். மாநில மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கும் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம். 

ஒருவரே இப்பரிசுத் தொகையை வென்றால், அவர் சுமார் 782.4 மில்லியன் டொலர்களை ஒரே தடவையில் பெறலாம். அல்லது 29 வருடங்களுக்கு தவணை அடிப்படையில் பரிசுப்பணத்தைப் பெறலாம்.

https://www.virakesari.lk/article/139222

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13 ஆயிரம் கோடி ரூபாய் பரிசு அறிவித்து அசர வைத்த லாட்டரி: 37 முறை யாரும் வெல்ல முடியாதது ஏன்?

  • சாம் கார்பெல்
  • பிபிசி நியூஸ்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

லாட்டரி

பட மூலாதாரம்,GETTY IMAGES

அமெரிக்காவின் முதன்மையான பவர் பால் லாட்டரியில் மூன்று மாதங்களுக்கும் மேலாக யாரும் வெற்றி பெறாத நிலையில், இந்த வார இறுதி குலுக்கலில் இதுவரை இல்லாத அளவுக்கு உலகிலேயே பெரிய பரிசு தொகை அறிவிக்கப்பட்டது.

இப்போது விற்பனையில் இருக்கும் சனிக்கிழமையன்று வெளியான பவர்பால் ஜாக்பாக்ட் லாட்டரி விளம்பரத்தில் வரிக்கு முந்தைய பரிசானது 1.6 பில்லியன் அமெரிக்க டாலராக (தோராயமாக 13 ஆயிரம் கோடி ரூபாய்) அளவுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு முன்பு 2016ஆம் ஆண்டு பவர் பால் லாட்டரி பரிசாக அதுவரை இல்லாத அளவுக்கு 1.59 பில்லியன் டாலர் பரிசுத் தொகையை மூன்று போட்டியாளர்கள் பகிர்ந்து கொண்டனர்.

292 மில்லியனில் ஒருவருக்குத்தான் லாட்டரியில் வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாக பவர் பால் நிறுவனம் கூறுகிறது.

 

இந்த விளையாட்டு கடந்த 1992ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அமெரிக்காவின் 50 மாநிலங்களில் தலைநகர் வாஷிங்டன், மற்றும் புவேர்ட்டோ ரிக்கோ மற்றும் விர்ஜின் தீவுகள் ஆகிய அமெரிக்க பிரதேசங்கள் உள்ளிட்ட 45 மாநிலங்களில் இது நடத்தப்படுகிறது.

ஒரு டிக்கெட் ஜாக்பாட்டில் வெற்றி பெற ஆறு எண்களுடன் பொருந்திப் போக வேண்டும். தொடர்ச்சியாக நடைபெற்ற 39 குலுக்கல்களில் யாரும் வெற்றி பெறவில்லை.

 

ரொக்க பரிசு தோராயமாக 782.4 மில்லியன் டாலர்

பட மூலாதாரம்,IMAGEDEPOTPRO

பரிசுக்கான golden ticket என்ற டிக்கெட்டை வைத்திருப்பவருக்கு முழு தொகையும் ஆண்டுக்கு ஒருமுறை என்ற முறையில் 30 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

எனினும் அனைத்து வெற்றியாளர்களும் முன் பண விருப்பத்தையும் தேர்வு செய்யலாம். அப்போது அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு குறைந்த தொகை மொத்தமாக வழங்கப்படும்.

சனிக்கிழமை இரவுக்கான குலுக்கல் ரொக்க பரிசு தோராயமாக 782.4 மில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதத்தொடக்கத்தில் நடந்த வெற்றிகரமான ஜாக்பாக்ட்டை விடவும் இது ஒரு பெரிய முன்னெடுப்பாகும். அப்போது பென்சில்வேனியாவில் டிக்கெட் வாங்குபவர் ஒப்பீட்டளவில் மிதமான அளவில் 206.9 மில்லியன் டாலர் வெற்றி பெற வேண்டியிருந்தது.

வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 2016ஆம் ஆண்டு மூன்று வெவ்வேறு அமெரிக்கா மாநிலங்களைச் சேர்ந்த பரிசுக்கான டிக்கெட் வைத்திருந்த மூன்று பேர் பரிசை பகிர்ந்து கொண்டனர்.

வெற்றிபெற்ற டென்னசீ மாநிலத்தை சேர்ந்த ஜான் மற்றும் லிசா ராபின்சன், புளோரிடாவைச் சேர்ந்த மொரீன் ஸ்மித் மற்றும் டேவிட் கால்ட்ஸ்மிட், மற்றும் கலிபோர்னியாவைச் சேர்ந்த மார்வின் மற்றும் மே அகோஸ்டா ஆகியோர் தோராயமாக மொத்த தொகை விருப்பத்தின் பேரில் 327.8மில்லியன் டாலர் பெற்றனர்.

ராபின்சன்கள் இருவரும் பரிசுக்கான கோல்டன் டிக்கெட் மற்றும் இதர மூன்று டிக்கெட்களை உள்ளூர் மளிகைக்கடையில் வாங்கியிருந்தனர். அப்போது அவர்கள் என்பிசி நியூஸ் டுடேவுக்கு அளித்த பேட்டியில், "ரொக்கமாக பரிசை பெற விருப்பம் தெரிவித்தோம். ஏனெனில் நாளை என்ன நடக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை" என்று கூறியிருந்தனர்.

என்பிசியிடம் பேசிய மொரீன் ஸ்மித் மற்றும் டேவிட் கால்ட்ஸ்மிட் ஆகியோர், தாங்கள் சீக்கிரமாக ஓய்வு பெற உள்ளதாகவும், மசாஜ் செய்வதற்கும், பழைய வாகனத்தை மாற்றுவதற்கும் இந்தப் பணத்தை செலவழிக்க இருப்பதாக கூறினர்.

https://www.bbc.com/tamil/global-63533332

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

204 கோடி டொலர் (75,195 கோடி ரூபா) ஜக்பொட் பரிசு வெல்லப்பட்டது! 

By DIGITAL DESK 3

10 NOV, 2022 | 03:30 PM
image

அமெரிக்க லொத்தர் சீட்டிழுப்பு ஒன்றில், 204 கோடி டொலர்கள் (சுமார் 75,195 கோடி இலங்கை ரூபா, சுமார் கோடி இந்திய ரூபா) அதிகமான பெறுமதியுடைய ஜக்பொட் பரிசு வெல்லப்பட்டுள்ளது. 

உலகில் லொத்தர் சீட்டிழுப்பு ஒன்றில் வெல்லப்பட்ட மிகக் கூடுதலான ஜக்பொட் பரிசு இதுவாகும்.

பவர்போல் எனும் லொத்தர் சீட்டிழுப்பிலேயே இப்பாரிய பரிசுத்தொகை வெல்லப்பட்டுள்ளது. 

தனி ஒரு சீட்டுக்கு இந்த பரிசு கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த சனிக்கிழமை பவர்போல் ஜக்பொட் பரிசுத்தொகை 160 கோடி டொலர்களாக அதிகரித்து சாதனை படைத்தது. ஆனால் அன்றைய தினமும் இப்பரிசு வெல்லப்படவில்லை. 

அதையடுத்து கடந்த 7 ஆம் திகதி திங்கட்கிழமை சீட்ழுடிப்புக்கான ஜக்பொட் பரிசுத் தொகை 2.04 பில்லியன் டொலர்களாக  அதிகரித்தது.

Joseph-Chahayed-powerball---bonus-581200

ஜக்பொட் லொத்தர்சீட்டை விற்பனை செய்த ஜோசப் சஹாயாத் 

இச்சீட்‍டிழுப்பு திங்கட்கிழமை இரவு நடைபெறவிருந்தது. ஆனால், அதிக ‍‍டிக்கெட் விற்பனை காரணமாக தரவுகளை பரிசீலிப்பதற்காக செவ்வாய்க்கிழமை காலை நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது,

இச்சீட்டிழுப்பில், கலிபோர்னியா மாநிலத்தில் விற்பனை செய்யப்பட்ட தனியான ஒரு லொத்தர் சீட்டுக்கு இப்பரிசு கிடைத்துள்ளதாக பவர்போல் லொத்தர் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.  

வெற்றியாளர் ஒரே தடவையில் சுமார் 140 கோடி டொலர்களை பெற முடியும். அல்லது மொத்தத் தொகையான 204 கோடி டொலர்களை 30 வருடங்களில் தவணை முறையில் பெற முடியும். 

இந்த ஜக்பொட் பரிசை வென்றவரின் பெயர் இதுவரை அறிவிக்கப்படவில்லை. 

லொத்தர் சீட்டு விற்பனை செய்தவருக்கு 10 லட்சம் அமெரிக்க டொலர்

இதேவேளை. பரிசுக்குரிய லொத்தர் சீட்டை விற்பனை செய்த கடையின் உரிமையாளருக்கு 10 லட்சம் அமெரிக்க டொலர்கள் (சுமார் 36 கோடி இலங்கை ரூபா, 8 கோடி இந்திய ரூபா) போனஸாக பவர்போல் லொத்தர் நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

ஜோசப் சஹாயாத் என்பவரே இவ்வாறு 10 லட்சம் டொலர் போனஸ் தொகையை பெற்றுள்ளார். இவர் சிரியாவிலிருந்து அமெரிக்காவில் குடியேறியவர். 

லொத்தர் சீட்டுகளை விற்பனை செய்வதை தான் விரும்புவதாக கூறும் ஜோசப் சஹாயெத், இவ்வளவு பெருந்தொகை பரிசு தனக்கு கிடைத்த போதிலும் வேலைசெய்வதை நிறுத்த மாட்டேன். வழக்கம் போல் காலை 6.00 மணிக்கு கடையில் பணியாற்றச் செல்வேன் எனத் தெரிவித்துள்ளார். 

Joseph-Chahayed-powerball---bonus-1200.j

ஜக்பொட் லொத்தர்சீட்டை விற்பனை செய்த ஜோசப் சஹாயாத்  (மத்தியில்)

கடந்த ஆகஸ்ட் 3 ஆம்  திகதியின் பின் பவர்போல் லொத்தர் ஜக்பொட் பரிசு வெல்லப்பட்டமை இதுவே முதல் தடiவாயகும்.

2 டொலர் விலையுள்ள பவர்போல் லொத்தர் சீட்டுகள் அமெரிக்காவின் 45 மாநிலங்கள், டிஸ்ட்ரிக் ஒவ் கொலம்பியா, புவர்ட்டோ ரிக்கோ, வேர்ஜின் தீவுகள் ஆகியவற்றில் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த டிக்கெட்டுகளை வாங்குபவர்கள் 1 முதல் 59 வரையான 5 வெள்வேறு இலக்கங்களை தெரிவு செய்வதுடன், பவர்போல் இலக்கமாக 1 முதல் 25 வரையான ஒரு இலக்கத்தை தெரிவு செய்ய வேண்டும்.

https://www.virakesari.lk/article/139643

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க லொத்தர் சீட்டிழுப்பில் 27,605 கோடி  ரூபா ஜக்பொட் பரிசு வெல்லப்பட்டது

By SETHU

07 FEB, 2023 | 04:08 PM
image

அமெரிக்காவின் பவர்போல் லொத்தர் சீட்டிழுப்பில் 757 மில்லியன் டொலர் (27,605 கோடி இலங்கை ரூபா, 6238 கோடி இந்திய ரூபா) பரிசை வென்றுள்ளார்.

வொஷிங்டன் மாநிலத்தைச்  சேர்ந்த ஒருவரே இப்பரிசை வென்றுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று திங்கட்கிழமை இரவு நடைபெற்ற சீட்டிழுப்பில் ஜக்பொட் பரிசுக்கான 05,11,22,23,69 மற்றும் 07 ஆகிய வெற்றி இலக்கங்கள் மேற்படி நபரின் லொத்தர் சீட்டுடன் பொருந்தியுள்ளன.

இபபரிசை வென்றவர் ஒரே தடவையில் 407.2 மில்லியன் டொலர்களைப் பெறலாம். அல்லது 29 வருடகாலத்தில்  தவணை முறையில் 754 மில்லியன் டொலர்களைப் பெறலாம்.

ஆமெரிக்காவின் பவர்போல் லொத்தர் வரலாற்றில் வெல்லப்பட்ட 5 ஆவது அதிகூடிய ஜக்பொட் பரிசுத் தொகை இதுவாகும். 

நேற்று இரவுக்கு முன்னர் இறுதியாக 2022 நவம்பர் 19 ஆம் திகதி பவர்போல் ஜக்பொட் பரிசு வெல்லப்பட்டது. 

அப்போது கான்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் 92.9 மில்லியன் டொலர்களை வென்றிருந்தார்.

அதன்பின் பல வாரங்களாக ஜக்பொட் பரிசு வெல்லப்படாததால் அதன் பெறுமதி அதிகரித்து வந்தது.

நேற்றிரவு ஜக்பொட் பரிசு வெல்லப்பட்டதால், நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள பவர்போல் ஜக்பொட் பரிசுத்தொகை 20 மில்லியன் டொலர்களாக  (732 கோடி இலங்கை ரூபா, 166 கோடி இந்திய ரூபா) குறைவடைந்துள்ளது. 

https://www.virakesari.lk/article/147640

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்வியறிவுள்ள, பல்வேறு தொடர்புகளுள், ஆழுமையுள்ளசுமந்திரனும் சாணக்கியனும் TNA க்குத் தலைமை தாங்கி  வழிநடாத்த வேண்டும்,...👍 ஏனப்பா,.. ஒரு குசும்புக்கு எழுதினாலும் விசுகர் தடியோடதான் நிக்கிறார் கண்டியளோ,..🤣
    • புதிய ஜனாதிபதி அநுரவின் கட்சிக்கு கணிசமான அளவு வாக்குகள் வடக்கு/கிழக்கில் வரும் பொதுதேர்தலில் கிடைக்கலாம். ஆனால் அவை ஆசனத்தை பெறுவதற்கு போதுமானதாக அமையுமா என்பது சந்தேகமே.
    • நாங்கள் சிறுவயதில் காலைக்காட்சி, மாலைக்காட்சி, கடற்கரைக்காட்சி என்று சோதனையில் வந்த கேள்விகளுக்கு ஏற்றமாதிரி கட்டுரை எழுதுவது போலத் தான் இருக்கின்றது இந்த பகிரங்கக் கடிதம்.  இதை எழுதியவர் ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்கச் சொன்னவராக இருக்கலாம், இல்லாவிட்டால் இலங்கைச் சிங்கள ஒற்றை ஆட்சிப் பாராளுமன்றம் தேவையில்லை, எங்களின் ஒற்றுமை மட்டுமே முக்கியம், அதை சர்வதேசத்திற்கு காட்டினால் போதும் என்று சொன்னவராக இருக்கலாம். ஒரு அணுக்கமான அரசியல் செய்வோம் என்று சொன்னவராக இருக்கலாம். இன்னும் சில வகைகளும் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் நியாயங்கள் இருக்கிறது தானே........... நாங்கள் எழுதிய காலை, மாலை, கடற்கரை காட்சிக் கட்டுரைகள் போலவே. சொன்னவர் யார் என்று தெரிந்தால் தான், இதில் இருக்கும் சொற்களையும், வசனங்களையும் கடந்து, அதில் மறைந்திருக்கும் உட்பொருளை விளங்கிக்கொள்ள முடியும். நித்தியின், ஜக்கியின் மற்றும் பல குருக்களின் பக்தர்களும் இதையே தான் சொல்கின்றனர். குருவின் தனிப்பட்ட வாழ்க்கையை விட்டு விட்டு, குரு சொல்வதை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள் என்று....... உங்கள் குருக்களே தங்கள் சுகபோக வாழ்க்கைகளுக்காக மட்டுமே பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இறுதியில் உங்களையும், உங்கள் குடும்பங்களையும் நடுத்தெருவில் நிற்பாட்டுவார்கள் என்று தானே நாங்கள் அவர்களுக்கு எதிர்க் கருத்துகள் சொல்லுகின்றோம். இதை எழுதியவர் கூட அப்படியான ஒருவராக இருக்கலாம். இப்பொழுது பாராளுமன்றம் முக்கியம், அங்கு போவது முக்கியம், அதிகாரம் முக்கியம்............. என்கின்றனர். உண்மையே, இவை எல்லாம் முக்கியம். இவை எப்போதும் முக்கியமானவையாக இருந்தன. அத்துடன், இதைச் சொல்பவர் முன்னர் என்ன சொல்லியிருந்தார் என்று அறிதலும் முக்கியம் தானே............    
    • 👆 Thank God, I have not been so ruthless as the guy above in dealing with relatives. I seem to be fair enough 👇    
    • கொழும்பில் போட்டியிடும் தமிழரசு கட்சி..! பங்காளி கட்சிகளுக்கு கால அவகாசம் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டமானது பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.  இதற்கமைய, ரெலோ மற்றும் ப்ளொட் ஆகிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து மூன்று நாட்களுக்குள் தமது முடிவு எட்டப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி போட்டியிடுவதாகவும் இதற்கான வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கு ஒரு குழுவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  அடுத்த கூட்டம்  அதேவேளை, குறித்த விடயங்கள் தொடர்பில் எதிர்வரும் 03ஆம் திகதி மீண்டும் கூட்டம் நடத்தப்பட்டு தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு வழங்கியவர்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் கடிதம் ஒன்றை முன்வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இதன்போது, கிட்டத்தட்ட 2018ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை இடம்பெற்றிருக்க கூடிய அனைத்து விடயங்கள் தொடர்பிலும் விளக்கம் கோர வேண்டுமே தவிர தற்போது நடந்த விடயங்கள் தொர்பில் மாத்திரம் விளக்கம் கோரப்பட கூடாது எனவும் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், மத்தியக்குழு கூட்டமானது, பல்வேறுபட்ட வாத பிரதிவாதங்களுக்கு மத்தியில் முடிவுக்கு வந்துள்ளது.  அதேவேளை, கூட்டத்திற்கு பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், "தமழிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் காலை முதல் மாலை வரை நடைபெற்றது. இதன்போது ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான விடயங்கள் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் கூடி ஆராய்ந்தோம். ஜனாதிபதி தேர்தலில் கட்சி எடுத்த 3 தீர்மானங்களுக்கு மாறாக செயற்பட்டவர்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. அதிலே அப்படியாக கட்சியின் முடிவை மீறி செயற்பட்டவர்களிடம் விளக்கம் கோருவது என முடிவு எடுக்கப்பட்டது. அரியநேத்திரனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என பலமான கருத்துக்கள் சொல்லப்பட்டிருந்தாலும், முதலாம் திகதி எடுத்த தீர்மானத்தில் தேர்தலில் இருந்து விலக வேண்டும் என்று கோரியிருந்தோம். அதற்கு அவருடைய விளக்க கடிதத்தில் பதில் சொல்லப்பட்டிருக்கவில்லை. அது காலம் கடந்து கிடைத்தாலும் வாசித்து காட்டப்பட்டது. ஆகவே அது சம்மந்தமாக கேட்டு விட்டு தீர்மானங்களை எடுக்கவுள்ளோம். முக்கிய விடயமாக ஆராயப்பட்டது நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆகும். நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக நாங்கள் விசேட அறிவிப்பை மனவுவந்து விடுவதற்கு தீர்மானித்துள்ளோம். அதாவது தமிழ் தேசிய பரப்பில் இருக்கிற கட்சிகள் விசேடமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெவ்வேறு காலகட்டங்களில் விலகிப் போன கட்சிகள் திரும்பவும் எங்களுடன் சேர்ந்து தேர்தலை முகங்கொடுங்க விரும்பினால் வரமுடியும். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிச் சென்றவர்கள் வருகிற தேர்தல் சவால் மிக்க தேர்தலாக இருப்பதால் இணங்கி வந்து இந்த தேர்தலில் போட்டியிட முடியும். தமிழரசுக் கட்சியின் பெயரிலும், அதன் சின்னத்திலும் தான் கடந்த காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக போட்டியிட்டோம். அந்த விதமாக இந்த தேர்தலில் போட்டியிட நாங்கள் தீர்மானித்துள்ளோம். அப்படியாக அந்த அழைப்பை ஏற்று வந்தால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வேட்ப்பாளர்களை நிறுத்துவது தொடர்பில் கலந்துரையாடி முடிவு எடுப்போம். அப்படி அவர்கள் வராவிட்டால் இலங்கை தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடும். திருகோணமலை, அம்பாறை மாவட்டங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். அங்கே ஒரு தமிழ் உறுப்பினர் மட்டும் தான் தெரிவு செய்யப்படும் நிலை இருப்பதால் அந்த விடயங்களை அந்த மாவட்ட கிளைகளுடன் பேசி முடிவுக்கு கொண்டு வரலாம் என தீர்மானித்துள்ளோம். அதற்கு மேலதிகமாக இம்முறை வடக்கு - கிழக்குக்கு வெளியே உள்ள கொழும்பு உட்பட தமிழர்கள் வாழும் ஏனைய மாவட்டங்களிலும் போட்டியிட பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. விடுக்கப்பட்டுள்ள அழைப்பு  எதிர்வரும் 4 ஆம் திகதி வேட்புமனுத் தாக்கல செய்தல் ஆரம்பிக்கவுள்ளதால் பிரிந்து சென்றவர்கள் மீள வருவது தொடர்பாக மிக விரைவாக அவர்களது பதிலை எதிர்பார்க்கின்றோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கட்சிகள் வந்து இணைவதற்கு அழைப்பு விடுத்துள்ளோம். அதற்கு வெளியே வேறு கட்சிகள் வந்தால் அதனை பரிசீலிக்கலாம். ஏனெனில் எங்களது கட்சியில் இருந்து பிரிந்து போனவர்களது கட்சியும் மேலும் பிரிந்து இருக்கின்றது. அவர்களை உள்வாங்கும் போது சில ஆட்சேபனைகள் இருக்கும். அது பற்றி பேசியே முடிவு எடுப்போம். ஆனால் தீர்மானமாக அழைப்பு விடுப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்களை வாருங்கள் சேர்ந்து பயணிப்போம் என்று புன்முறுவலோடு அவர்களை அழைக்கின்றோம். புதியவர்களை தேர்தலில் உள்வாங்குவது, இளைஞர்களை உள்வாங்குவது தொடர்பிலும் நீண்ட நேரம் பேசினோம். அதனை சரியாக நாம் அணுகுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. மக்களிடத்தில் இது தொடர்பான பாரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. விசேடமாக தேசிய மக்கள் சக்தி பெற்ற வெற்றிக்கு பிற்பாடு அத்தகைய எண்ணப்பாடு எங்களது பிரதேசங்களிலும் உயர்ந்துள்ளது. அது நல்ல விடயம். இளைஞர்கள், ஆளுமையுள்ளவர்கள், படித்தவர்கள், பெண்கள் என அவர்களுக்கான பிரதிநித்துவத்தை உறுதி செய்யும் வகையில் தான் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். அதற்கான நியமனக்குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு இறுதி முடிவுகளை எடுக்கும். ஆனால் மாவட்ட ரீதியாக கலந்து ஆலோசித்து தான் அந்த முடிவுகள் எடுக்கபடும். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் சிலர் எம்முடன் பேசியுள்ளார்கள். தம்முடன் இணையுமாறு அவர்கள் அழைப்பு எதனையும் விடவில்லை. நாங்கள் பிரதானமான தமிழ் கட்சி. இது வரைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக வேறு கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட்ட போது தேர்தலுக்கு முகம் கொடுத்தது இலங்கை தமிழரசுக் கட்சியின் பெயரிலும், அதன் சின்னத்திலுமே தான். அதே முறையில் நாங்கள் இந்த தேர்தலையும் சந்திப்பதற்கு பிரதான கட்சி என்ற வகையில் நாங்கள் அவர்களுக்கும் அழைப்பு விடுகின்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.  https://tamilwin.com/article/ilankai-tamil-arasu-katchi-meeting-in-colombo-1727533785?itm_source=parsely-detail
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.