Jump to content

300 கிலோ கிராம் நிறையுடைய ஹெரோயின் அம்பாந்தோட்டை கடலில் மீட்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

300 கிலோ கிராம் நிறையுடைய ஹெரோயின் அம்பாந்தோட்டை கடலில் மீட்பு

By DIGITAL DESK 2

07 NOV, 2022 | 09:55 AM
image

அம்பாந்தோட்டை கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 300 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த சோதனை நடவடிக்கை இன்று திங்கட்கிழமை (நவ.06) அதிகாலை முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்ளிட்ட அறுவர் கைது - Newsfirst

போதைப்பொருள் தடுப்பு பிரிவு, கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து இந்த சோதனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரு மீன்பிடி படகுகளும் சிறிய ரக படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் அம்பாந்தோட்டை பொலிஸாரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/139319

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென்கடலில் சிக்கிய 600 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் : இதுவரை 10 பேர் கைது

07 NOV, 2022 | 07:35 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

சர்வதேச கடலுக்கு சென்று, கடத்தல்காரர்களிடம் இருந்து  சுமார் 300 கிலோ ஹெரோயின் போதைப்பொருளினைப் பெற்று நாட்டுக்குள் நுழையும் நோக்குடன்  வந்துகொண்டிருந்த  ' கவிந்து புதா' எனும் மீன் பிடிப்படகை, கடற்படை, அதிரடிப் படை, போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் உள்ளடங்கிய குழு  ஒன்றிணைந்த நடவடிக்கை மூலம் கைப்பற்றி சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளது. 

கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் தெரு பெறுமதி 600 கோடி ரூபா ஆகும்.

அதன்படி  குறித்த மீன் பிடி படகில் இருந்த 6 சந்தேக நபர்கள்,  அப்படகுக்காக உளவு பார்த்து வந்த சிறிய ரக படகு மற்றும்  அதிலிருந்த பெண் ஒருவர் உட்பட இருவர், கரையில் போதைப் பொருளை கையேற்க தயாராக இருந்த இருவர் என 10 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் அம்பாந்தோட்டை, கோட்டேகொட, திக்வெல்ல மற்றும் மஹமடல ஆகிய பிரதேசங்களில் வசிப்பவர்கள் எனவும், அவர்கள் 31 வயது முதல் 62 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

அவர்களிடம், குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவுகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா,  பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு பொறுப்பான  பிரதிப் பொலிஸ் மா அதிபர்  ஜே.ஏ.யு.பி. ஜயசூரிய ஆகியோரின்  மேற்பார்வையின் கீழ் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சாமந்த  விஜேசேகரவின் ஆலோசனையின் கீழ் சிறப்புக் குழுவொன்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

கிடைக்கப்பெற்ற உளவுத் தகவல் ஒன்றுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகளில் இந்த போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்படைக்கு சொந்தமான விக்ரம 2 எனும் கடற்படைக் கண்கானிப்பு கப்பல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் கடற்படையினர், பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் என ஒன்றிணைந்த நடவடிக்கைகளினை முன்னெடுக்கும் குழுவினர் இருந்துள்ளனர்.

அதன்படி, மஹா இராவணன் வெளிச்ச வீட்டிலிருந்து 10 கடல் மைல் தொலைவில் ( 18 கிலோ மீற்றர்) சந்தேகத்துக்கு இடமான மீன் பிடி படகு அவதானிக்கப்ப்ட்டு, அது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. 

இதன்போது படகை சோதனை செய்துள்ள ஒன்றிணைந்த நடவடிக்கை குழுவினர், படகிலிருந்து 12 உரப்பைகளில் இருந்த 300 பெக்கட்டுக்களில் பொதி செய்யப்பட்டிருந்த இந்த ஹெரோயின் தொகையினை கைப்பற்றி சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர். 

அதன் போது குறித்த மீன் பிடி படகுக்காக உளவு பார்த்து வந்த சிறிய படகினைக் கைப்பற்றியிருந்த நடவடிக்கை குழுவினர், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் வழி நடத்தலில், நில்வெல்ல  தீவுப் பகுதியை ஒட்டிய  மலைப்பாங்கான பகுதியில் வைத்து போதைப் பொருளை கையேற்க வந்த இருவரையும் கைது செய்துள்ளனர்.

கடந்த 5 ஆம் திகதியும் 6 ஆம் திகதியும்  இந்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்ற நிலையில், இன்று திங்கட்கிழமை ( 7)  சந்தேக நபர்களும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளும் காலி துறைமுகத்துக்கு எடுத்து வரப்பட்டது.

 இந் நிலையில் சந்தேக நபர்களை, தடுப்புக் காவலில் எடுத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் திட்டமிட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/139382

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.