Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த தாயும் 2 மகன்களும் அவுஸ்திரேலியாவில் சடலங்களாக மீட்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த தாயும் 2 மகன்களும் அவுஸ்திரேலியாவில் சடலங்களாக மீட்பு

07 NOV, 2022 | 07:59 AM
image

அவுஸ்திரேலியாவின் கன்பராவில் அமைந்துள்ள குளம் ஒன்றிலிருந்து தமிழ் குடும்பத்தை சேர்ந்த தாயும் இரு மகன்மாரும் சலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

aus1.jpg

இந்நிலையில் சனிக்கிழமை (5) காலையில் தாயினதும் ஒரு மகனினதும் சடலங்கள் குளத்தில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், மற்றைய மகனான  பிரணவ் விவேகானந்தன் என்பவர் காணாமல் போன நிலையில் அவுஸ்திரேலிய பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

aus2.jpg

பின்னர் காணாமல் போயிருந்த மற்றைய மகனினது சடலமும் குளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இறப்புக்கான காரணம் மற்றும் எவ்வாறு அவர்கள் இறந்தனர் என இதுவரை அறியப்படாத நிலையில், அவுஸ்திரேலிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

aus3.jpg

aus4.jpg

இதேவேளை, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விசாரணைகளை மேற்கொண்டு  வருகிறோம். இந்த நேரத்தில் விசாரணைகளுக்காக அவர்கள் எங்களுக்கு உதவுகிறார்கள் என அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்தனர்.

https://www.virakesari.lk/article/139308

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறுவன் பிரணவ் விவேகானந்தனின் உடல் மீட்கப்பட்ட பின்னர் மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தும் மக்கள்

By RAJEEBAN

07 NOV, 2022 | 12:09 PM
image

 

அவுஸ்திரேலியாவின்  கான்பெராவின் யெராபி குளத்தில்  பிரணவ் விவேகானந்தனின் உடல் மீட்;கப்பட்டதை குங்கலின் சமூகத்தினர் தமிழ் குடும்பத்திற்கு அஞ்சலி செலுத்தி வருகி;ன்றனர்.

பிரணவ் விவேகானந்தனின் உடல் மீட்கப்பட்டதை தொடர்ந்து காவல்துறையினர் தேடுதலை கைவிட்டதை தொடர்ந்து யெராபி குளப்பகுதியிலமுதலாவது மலர்க்கொத்து வைக்கப்பட்டது.

சனிக்கிழமை பெண்ணொருவரினதும் இளைஞனினதும் உடல் மீட்கப்பட்டதை தொடர்ந்து  பிரணவை காணவில்லை என பொலிஸார் அறிவித்தனர்.

pond_tragedi.jpg

யெராபி குளப்பகுதியில்  8 வயது சிறுவனின் உடல் மீட்கப்பட்டுள்ளது என காவல்துறையினர் அறிவித்தனர்.

அவரது தாயார் சகோதரனின் மரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்கின்றன என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வழமையான உற்சாகமாக மகிழ்ச்சியாக காணப்படும் யெராபி குளப்பகுதி களையிழந்து சோகத்துடன் காணப்பட்டது.பொதுமக்கள் விசாரணை நடக்கும் பகுதியிலிருந்து விலகி சென்றனர்.

பிரவீனின் உடலை மீட்ட பின்னர் மதியமளவில் காவல்துறையினர் அங்கிருந்து சென்றனர்.

காவல்துறையினரின் தேடுதல் நடவடிக்கைக்கான அடையாளமாக செடிகொடிகள் மாத்திரம் விடப்பட்டன.

அந்த பகுதியில் சிறுவன் ஒருவனி;ன் பிறந்தநாள் கொண்;டாட்டம் அமைதியாக காணப்பட்டது.

பொதுமக்களில் பலர் மரங்களின் கீழ் அமர்ந்திருந்தனர்,ஒரு குடும்பம் தனது நான்கு வயது மகளுடன்  கரைக்கு சென்று தங்கள் சமூகத்தில் நடந்ததை நம்பமுடியாத நிலையில் முணுமுணுத்தனர்.

r0_0_3840_2159_w1200_h678_fmax.jpg

பீட்டர் டொஸ்கொமின் உடல்  வீடு யெராபிகுளத்தை  பார்த்தபடி உள்ளது அவர் இந்த துயரம் இடம்பெற்ற பகுதியில் முதலாவது மலரை வைத்தார் தன்னை போல பலர் அஞ்சலி செலுத்துவார்கள் என நம்பிக்கை வெளியிட்டார்.

என்ன ஒரு துயரமான சம்பவம் நான் இந்த சம்பவத்தினால் கடும் மன அழுத்தத்திற்குள்ளாகியுள்ளேன் நான் ஏதாவது செய்யவேண்டும் என நினைத்தேன் என அவர் குறிப்பிட்டார்.

தாயும் இரண்டுபிள்ளைகளும் உயிரிழந்ததை பெரும் துயரமான விடயம் பெரும் துயரமான விடயம் எனவும் அவர் தெரிவித்தார்.

சனிக்கிழமை முதல் உடல்களை தேடிய சுழியோடிகள் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஆரம்பித்து 10.45 மணியளவில் பிரணவின் உடலை மீட்டனர்.

காலை 8 மணியளவில் பொதுமக்கள் பிரணவ் குடும்பத்தினரின் உடல்களை பார்த்ததை தொடர்ந்து காவல்துறையினர் அவற்றை மீட்டனர்.

குறிப்பிட்ட பகுதியில் பின்னர் வெள்ளை நிற வாகனமொன்றும் மீட்கப்பட்டது.

காரில் குழந்தைக்கான ஆசனமும் காணப்பட்டது தடாகத்தின் நுனியில் அது காணப்பட்டது என உள்ளுர் மக்கள் தெரிவித்தனர்.

r0_267_5000_3078_w1200_h678_fmax__1_.jpg

டிரக்கொன்று செல்வதை தடுத்தவாறு கார் காணப்பட்டது நான் அதன் கதவை திறந்தேன் அது மூடப்படவில்லை குழந்தைக்கான ஆசனமும் காணப்பட்டது காரின் சாவிகளையும் காணமுடியவில்லை என ரொட் வீட்லி முகநூலில் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவங்களுடன் இன்னொரு தரப்பு  ஈடுபட்டிருக்கவில்லை என கருதுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/139332

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவில் குளத்திலிருந்து தமிழ்குடும்பத்தை சேர்ந்தவர்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் - கொலை தற்கொலை என விசாரணை

By RAJEEBAN

11 NOV, 2022 | 11:37 AM
image

கான்பெராவின் வடபகுதியில் உள்ள குளத்திலிருந்து தமிழ் குடும்பமொன்றை சேர்ந்த மூவர் சடலமாக மீட்;கப்பட்ட சம்பவத்தை கொலை தற்கொலை என்ற அடிப்படையில் விசாரணை செய்து வருவதாக அவுஸ்திரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் யெராபி குளத்திலிருந்து தாயினதும் இரண்டு சிறுவர்களினதும் உடல்களை காவல்துறையினர் மீட்டிருந்தனர்.

இது குறித்த விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது,இதனை கொலை தற்கொலை என கருதுகின்றோம் இதில் உயிரிழந்த மூவருக்குமே தொடர்புள்ளதாக கருதுகின்றோம் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விசாரணைகள் குழப்பமானவையாக காணப்படுவதாலும் இன்னமும் பூர்த்தியடையாததாலும் உயிரிழப்புகளிற்கான  காரணங்கள் குறித்த தெளிவான அறிக்கையை மரணவிசாரணை அதிகாரியிடம் சமர்ப்பிக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

aus_tamil_family.jpg

யெராபி குளத்தில் உடல்கள் காணப்படுவதை பார்த்த ஒருவர் வழங்கிய தகவலை தொடர்ந்து காவல்துறையினர் குளத்திலிருந்து தாயினதும் இரு மகன்களினதும் உடல்களை மீட்டிருந்தனர்.

குளத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டடிருந்த வாகனமொன்றையும் காவல்துறையினர் மீட்டிருந்தனர்.

https://www.virakesari.lk/article/139714

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.