Jump to content

பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீடு: காங்கிரஸிற்குள் முரண்பாடு ஏன்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீடு: காங்கிரஸிற்குள் முரண்பாடு ஏன்?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 9 நவம்பர் 2022
 

தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி

 

படக்குறிப்பு,

தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி

பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீடு விவகாரத்தில் தேசிய அளவில் காங்கிரஸ் அதனை ஆதரிக்கும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் அதனை எதிர்க்கிறார்கள். இந்த முரண்பாடு ஏன்? பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீடு வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது செல்லும் என தீர்ப்பளித்திருக்கும் நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி அதனை வரவேற்றிருக்கிறது. இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட காங்கிரஸின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், "பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருப்பதை காங்கிரஸ் வரவேற்கிறது. இந்தப் பயணத்தில் காங்கிரஸ் ஒரு முக்கியப் பங்கை வகித்திருக்கிறது" என்று குறிப்பிட்டார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் பிரமுகர்களிடமிருந்து வந்த எதிர்வினை வேறு மாதிரியாக இருந்தது. இந்தத் தீர்ப்பு குறித்து பதிவிட்ட தமிழக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, இந்தத் தீர்ப்பு ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என பதிவிட்டார். "உச்சநீதிமன்ற தீர்ப்பு நூற்றாண்டுகால சமூக நீதி போராட்டத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பின்னடைவு. இடஒதுக்கீடு சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக, சம வாய்ப்புகளை உருவாக்கவும், ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை அதிகாரப்படுத்தவும் உருவாக்கப்பட்டது. சமூக ஒடுக்குமுறையைக் கருத்தில் கொள்ளாமல், பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீட்டை நியாயப்படுத்துவது அரசியல் சாசனத்திற்கு முரணானது. ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு அநீதி இழைப்பது. இடஒதுக்கீட்டுக் கொள்கையை நீர்த்துப் போகச்செய்வது" என்றார் அவர்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

அதேபோல சிவகங்கை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக கார்த்தி பி சிதம்பரமும் இந்தத் தீர்ப்பை எதிர்த்துப் பதிவிட்டார். "உச்ச நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு பெறுவதிலிருந்து பலரை விலக்கி வைக்கிறது. 3:2 விகிதத்தில் தீர்ப்பு வந்திருப்பது, எதிர்கொள்ளவேண்டிய முரண்பாடான கேள்விகளை முன்வைக்கிறது. பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீட்டிற்கான வரையறையும் சரியானதாக இல்லை. இந்தத் தீர்ப்பு உண்மையான பொருளாதார, சமூக மேம்பாட்டிற்கு உதவவில்லை" என்று அவர் பதிவிட்டார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 3
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 3

 

கார்த்தி சிதம்பரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைமை இந்தத் தீர்ப்பை ஆதரித்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனை எதிர்த்திருப்பது பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது. ட்விட்டரில் இது குறித்து பலரும் கேள்வியெழுப்பிவருகின்றனர். இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரியிடம் கேட்டபோது, "கட்சித் தலைமை தெரிவிப்பதுதான் அதிகாரபூர்மான நிலைப்பாடு" என்றார். அதன்படி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இந்தத் தீர்ப்பை வரவேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. "பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை 50 சதவிகித இடஒதுக்கீட்டு வரம்பை மீற வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அனைத்து பிரிவினருக்குமான நீதியை அது வழங்கும் என்றால் அதனை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. 2005-2006 இல் இதற்கான முயற்சி டாக்டர் மன்மோகன்சிங் அரசால் எடுக்கப்பட்டது. 2014இல் நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதா தயாரிக்கப்பட்டது. ஆனால், பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய 5 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு எதிர்ப்பது என்பதும் சமூக நீதியாகாது. ஏனெனில், ஐந்தாயிரம் ஆண்டுகாலமாக பெரும்பகுதி சமுதாயம் சிரமப்பட்டது, சமூகநீதி வழங்கப்படவில்லை, இப்பொழுது எங்களுக்கு வழங்குங்கள் என்று கேட்பது சரியானதாக இருக்கும். ஆனால், எங்களைப் போலவே பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினரும் சங்கடப்பட வேண்டும் என்று கூறுவது சமூகநீதியாகாது. சமூகநீதி என்பது மனிதகுலத்திற்கே பொதுவானதேயொழிய எந்தவொரு தரப்பிற்கும் அது உரியதல்ல" என்று கூறியிருக்கிறது.

 

காங்கிரஸ் கட்சி நீண்ட காலமாகவே பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ஆதரித்துவந்திருக்கிறது. 1991ல் நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது அந்த ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதியன்று பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தினார். ஆனால், 1992ல் வழங்கப்பட்ட இந்திரா சஹானி வழக்கின் தீர்ப்பில், இந்த ஒதுக்கீடு ரத்துசெய்யப்பட்டது. வெறும் பொருளாதார அளவுகோலை வைத்துமட்டும் ஒருவரை பிற்படுத்தப்பட்டவராக அடையாளம் காணமுடியாது என்றது நீதிமன்றம். இதற்குப் பிறகு 2004ல் மன்மோகன் சிங் பிரதமரான பிறகு, பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான ஆணையம் ஒன்று அதே ஆண்டு ஜூலை 6ஆம் தேதி அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் 2006 ஜூலையில் மறுபடியும் திருத்தியமைக்கப்பட்டது. இதற்கு ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் எஸ்.ஆர். சின்ஹோ தலைவராக நியமிக்கப்பட்டார்.

ஆனால், பொதுமான புள்ளிவிவரங்கள் இந்த ஆணையத்திற்குக் கிடைக்கவில்லை, தமிழ்நாடு, பிஹார் மாநிலங்கள் இந்த முயற்சியைக் கடுமையாக எதிர்த்தன. இந்த ஆணையம் தனது பரிந்துரைகளை 2010 ஜூலை மாதம் அப்போதைய சமூக நீதித் துறை அமைச்சர் முகுல் வாஸ்நிக்கிடம் அளித்தது. ஆனால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் அதன் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. அதன் பரிந்துரைகள் பொதுவெளியிலும் விவாதிக்கப்படவில்லை. இந்த நிலையில்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு 2019ல், அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 103வது திருத்தத்தின் மூலம் இதனை முறைப்படி அமல்படுத்தியது. தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பிக்கள் மட்டுமல்லாமல் தில்லியைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவரும் அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் காங்கிரசின் தலைவருமான உதித் ராஜும் இந்த இட ஒதுக்கீட்டு தொடர்பான தீர்ப்பில் உள்ள முரண்பாட்டை கடுமையாக எதிர்த்திருக்கிறார். 50 சதவீதத்தையும் தாண்டி இட ஒதுக்கீடு தரலாம் என்று நீதிமன்றம் கூறியிருப்பதைக் கடுமையாக கண்டிக்கிறார் அவர். "நான் பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை ஆனால், உச்ச நீதிமன்றத்தின் மேல் ஜாதி மனநிலையை வலியோடு கவனிக்கிறேன். இந்திரா சஹானி தீர்ப்பிலிருந்து தான் உயர்த்திப் பிடித்த நிலைப்பாட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றம் எடுத்திருக்கிறது. SC/ST/OBC இட ஒதுக்கீடு தொடர்பான விவகாரங்களில் மட்டும் உச்ச நீதிமன்றம் இடஒதுக்கீடு 50%க்குள் இருக்க வேண்டுமெனக் கூறுகிறது" என்று அவர் கூறியிருக்கிறார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 4
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 4

பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு என்பது தமிழ்நாட்டில் மிக உணர்வுகரமான பிரச்னையாக இருந்து வருகிறது. திராவிடக் கட்சிகள் பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை கடுமையாக எதிர்க்கின்றன. தி.மு.க., தி.க. ஆகிய கட்சிகள் இந்த தீர்ப்புக்கு எதிராக வெளிப்படையாகக் கருத்துத் தெரிவித்திருக்கின்றன.

அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை வரும் சனிக்கிழமையன்று நடத்த தமிழ்நாடு அரசு முடிவுசெய்திருக்கிறது. அ.தி.மு.கவைப் பொருத்தவரையில் இதுவரை எடப்பாடி கே. பழனிச்சாமி எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஓ பன்னீர்செல்வத்தைப் பொறுத்தவரை, இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்ய வேண்டுமெனக் கூறியிருக்கிறார். வி.கே. சசிகலாவும் அதே கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்தத் தீர்ப்பை கடுமையாக எதிர்த்திருப்பதோடு, சீராய்வு மனு தாக்கல்செய்யப் போவதாகவும் அறிவித்துள்ளது. இந்த நிலையில்தான் காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வமாக இந்தத் தீர்ப்பை ஆதரித்துள்ளது.

https://www.bbc.com/tamil/articles/c90ge3n8j72o

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்வியறிவுள்ள, பல்வேறு தொடர்புகளுள், ஆழுமையுள்ளசுமந்திரனும் சாணக்கியனும் TNA க்குத் தலைமை தாங்கி  வழிநடாத்த வேண்டும்,...👍 ஏனப்பா,.. ஒரு குசும்புக்கு எழுதினாலும் விசுகர் தடியோடதான் நிக்கிறார் கண்டியளோ,..🤣
    • புதிய ஜனாதிபதி அநுரவின் கட்சிக்கு கணிசமான அளவு வாக்குகள் வடக்கு/கிழக்கில் வரும் பொதுதேர்தலில் கிடைக்கலாம். ஆனால் அவை ஆசனத்தை பெறுவதற்கு போதுமானதாக அமையுமா என்பது சந்தேகமே.
    • நாங்கள் சிறுவயதில் காலைக்காட்சி, மாலைக்காட்சி, கடற்கரைக்காட்சி என்று சோதனையில் வந்த கேள்விகளுக்கு ஏற்றமாதிரி கட்டுரை எழுதுவது போலத் தான் இருக்கின்றது இந்த பகிரங்கக் கடிதம்.  இதை எழுதியவர் ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்கச் சொன்னவராக இருக்கலாம், இல்லாவிட்டால் இலங்கைச் சிங்கள ஒற்றை ஆட்சிப் பாராளுமன்றம் தேவையில்லை, எங்களின் ஒற்றுமை மட்டுமே முக்கியம், அதை சர்வதேசத்திற்கு காட்டினால் போதும் என்று சொன்னவராக இருக்கலாம். ஒரு அணுக்கமான அரசியல் செய்வோம் என்று சொன்னவராக இருக்கலாம். இன்னும் சில வகைகளும் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் நியாயங்கள் இருக்கிறது தானே........... நாங்கள் எழுதிய காலை, மாலை, கடற்கரை காட்சிக் கட்டுரைகள் போலவே. சொன்னவர் யார் என்று தெரிந்தால் தான், இதில் இருக்கும் சொற்களையும், வசனங்களையும் கடந்து, அதில் மறைந்திருக்கும் உட்பொருளை விளங்கிக்கொள்ள முடியும். நித்தியின், ஜக்கியின் மற்றும் பல குருக்களின் பக்தர்களும் இதையே தான் சொல்கின்றனர். குருவின் தனிப்பட்ட வாழ்க்கையை விட்டு விட்டு, குரு சொல்வதை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள் என்று....... உங்கள் குருக்களே தங்கள் சுகபோக வாழ்க்கைகளுக்காக மட்டுமே பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இறுதியில் உங்களையும், உங்கள் குடும்பங்களையும் நடுத்தெருவில் நிற்பாட்டுவார்கள் என்று தானே நாங்கள் அவர்களுக்கு எதிர்க் கருத்துகள் சொல்லுகின்றோம். இதை எழுதியவர் கூட அப்படியான ஒருவராக இருக்கலாம். இப்பொழுது பாராளுமன்றம் முக்கியம், அங்கு போவது முக்கியம், அதிகாரம் முக்கியம்............. என்கின்றனர். உண்மையே, இவை எல்லாம் முக்கியம். இவை எப்போதும் முக்கியமானவையாக இருந்தன. அத்துடன், இதைச் சொல்பவர் முன்னர் என்ன சொல்லியிருந்தார் என்று அறிதலும் முக்கியம் தானே............    
    • 👆 Thank God ! I have not been so ruthless as the guy above in dealing with relatives. I seem to be fair enough 👇    
    • கொழும்பில் போட்டியிடும் தமிழரசு கட்சி..! பங்காளி கட்சிகளுக்கு கால அவகாசம் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டமானது பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.  இதற்கமைய, ரெலோ மற்றும் ப்ளொட் ஆகிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து மூன்று நாட்களுக்குள் தமது முடிவு எட்டப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி போட்டியிடுவதாகவும் இதற்கான வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கு ஒரு குழுவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  அடுத்த கூட்டம்  அதேவேளை, குறித்த விடயங்கள் தொடர்பில் எதிர்வரும் 03ஆம் திகதி மீண்டும் கூட்டம் நடத்தப்பட்டு தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு வழங்கியவர்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் கடிதம் ஒன்றை முன்வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இதன்போது, கிட்டத்தட்ட 2018ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை இடம்பெற்றிருக்க கூடிய அனைத்து விடயங்கள் தொடர்பிலும் விளக்கம் கோர வேண்டுமே தவிர தற்போது நடந்த விடயங்கள் தொர்பில் மாத்திரம் விளக்கம் கோரப்பட கூடாது எனவும் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், மத்தியக்குழு கூட்டமானது, பல்வேறுபட்ட வாத பிரதிவாதங்களுக்கு மத்தியில் முடிவுக்கு வந்துள்ளது.  அதேவேளை, கூட்டத்திற்கு பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், "தமழிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் காலை முதல் மாலை வரை நடைபெற்றது. இதன்போது ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான விடயங்கள் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் கூடி ஆராய்ந்தோம். ஜனாதிபதி தேர்தலில் கட்சி எடுத்த 3 தீர்மானங்களுக்கு மாறாக செயற்பட்டவர்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. அதிலே அப்படியாக கட்சியின் முடிவை மீறி செயற்பட்டவர்களிடம் விளக்கம் கோருவது என முடிவு எடுக்கப்பட்டது. அரியநேத்திரனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என பலமான கருத்துக்கள் சொல்லப்பட்டிருந்தாலும், முதலாம் திகதி எடுத்த தீர்மானத்தில் தேர்தலில் இருந்து விலக வேண்டும் என்று கோரியிருந்தோம். அதற்கு அவருடைய விளக்க கடிதத்தில் பதில் சொல்லப்பட்டிருக்கவில்லை. அது காலம் கடந்து கிடைத்தாலும் வாசித்து காட்டப்பட்டது. ஆகவே அது சம்மந்தமாக கேட்டு விட்டு தீர்மானங்களை எடுக்கவுள்ளோம். முக்கிய விடயமாக ஆராயப்பட்டது நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆகும். நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக நாங்கள் விசேட அறிவிப்பை மனவுவந்து விடுவதற்கு தீர்மானித்துள்ளோம். அதாவது தமிழ் தேசிய பரப்பில் இருக்கிற கட்சிகள் விசேடமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெவ்வேறு காலகட்டங்களில் விலகிப் போன கட்சிகள் திரும்பவும் எங்களுடன் சேர்ந்து தேர்தலை முகங்கொடுங்க விரும்பினால் வரமுடியும். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிச் சென்றவர்கள் வருகிற தேர்தல் சவால் மிக்க தேர்தலாக இருப்பதால் இணங்கி வந்து இந்த தேர்தலில் போட்டியிட முடியும். தமிழரசுக் கட்சியின் பெயரிலும், அதன் சின்னத்திலும் தான் கடந்த காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக போட்டியிட்டோம். அந்த விதமாக இந்த தேர்தலில் போட்டியிட நாங்கள் தீர்மானித்துள்ளோம். அப்படியாக அந்த அழைப்பை ஏற்று வந்தால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வேட்ப்பாளர்களை நிறுத்துவது தொடர்பில் கலந்துரையாடி முடிவு எடுப்போம். அப்படி அவர்கள் வராவிட்டால் இலங்கை தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடும். திருகோணமலை, அம்பாறை மாவட்டங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். அங்கே ஒரு தமிழ் உறுப்பினர் மட்டும் தான் தெரிவு செய்யப்படும் நிலை இருப்பதால் அந்த விடயங்களை அந்த மாவட்ட கிளைகளுடன் பேசி முடிவுக்கு கொண்டு வரலாம் என தீர்மானித்துள்ளோம். அதற்கு மேலதிகமாக இம்முறை வடக்கு - கிழக்குக்கு வெளியே உள்ள கொழும்பு உட்பட தமிழர்கள் வாழும் ஏனைய மாவட்டங்களிலும் போட்டியிட பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. விடுக்கப்பட்டுள்ள அழைப்பு  எதிர்வரும் 4 ஆம் திகதி வேட்புமனுத் தாக்கல செய்தல் ஆரம்பிக்கவுள்ளதால் பிரிந்து சென்றவர்கள் மீள வருவது தொடர்பாக மிக விரைவாக அவர்களது பதிலை எதிர்பார்க்கின்றோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கட்சிகள் வந்து இணைவதற்கு அழைப்பு விடுத்துள்ளோம். அதற்கு வெளியே வேறு கட்சிகள் வந்தால் அதனை பரிசீலிக்கலாம். ஏனெனில் எங்களது கட்சியில் இருந்து பிரிந்து போனவர்களது கட்சியும் மேலும் பிரிந்து இருக்கின்றது. அவர்களை உள்வாங்கும் போது சில ஆட்சேபனைகள் இருக்கும். அது பற்றி பேசியே முடிவு எடுப்போம். ஆனால் தீர்மானமாக அழைப்பு விடுப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்களை வாருங்கள் சேர்ந்து பயணிப்போம் என்று புன்முறுவலோடு அவர்களை அழைக்கின்றோம். புதியவர்களை தேர்தலில் உள்வாங்குவது, இளைஞர்களை உள்வாங்குவது தொடர்பிலும் நீண்ட நேரம் பேசினோம். அதனை சரியாக நாம் அணுகுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. மக்களிடத்தில் இது தொடர்பான பாரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. விசேடமாக தேசிய மக்கள் சக்தி பெற்ற வெற்றிக்கு பிற்பாடு அத்தகைய எண்ணப்பாடு எங்களது பிரதேசங்களிலும் உயர்ந்துள்ளது. அது நல்ல விடயம். இளைஞர்கள், ஆளுமையுள்ளவர்கள், படித்தவர்கள், பெண்கள் என அவர்களுக்கான பிரதிநித்துவத்தை உறுதி செய்யும் வகையில் தான் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். அதற்கான நியமனக்குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு இறுதி முடிவுகளை எடுக்கும். ஆனால் மாவட்ட ரீதியாக கலந்து ஆலோசித்து தான் அந்த முடிவுகள் எடுக்கபடும். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் சிலர் எம்முடன் பேசியுள்ளார்கள். தம்முடன் இணையுமாறு அவர்கள் அழைப்பு எதனையும் விடவில்லை. நாங்கள் பிரதானமான தமிழ் கட்சி. இது வரைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக வேறு கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட்ட போது தேர்தலுக்கு முகம் கொடுத்தது இலங்கை தமிழரசுக் கட்சியின் பெயரிலும், அதன் சின்னத்திலுமே தான். அதே முறையில் நாங்கள் இந்த தேர்தலையும் சந்திப்பதற்கு பிரதான கட்சி என்ற வகையில் நாங்கள் அவர்களுக்கும் அழைப்பு விடுகின்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.  https://tamilwin.com/article/ilankai-tamil-arasu-katchi-meeting-in-colombo-1727533785?itm_source=parsely-detail
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.