Jump to content

இந்திய வங்கிகள்: கடன் 'ரைட் ஆஃப்' என்பது பாமரர்களின் பணத்தை கொள்ளையடிப்பதா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய வங்கிகள்: கடன் 'ரைட் ஆஃப்' என்பது பாமரர்களின் பணத்தை கொள்ளையடிப்பதா?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,தினேஷ் உப்ரேதி
  • பதவி,பிபிசி செய்தியாளர்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

இந்திய நிதியமைச்சர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

*** நூறு/ஆயிரம் கோடி ரூபாய் கடன் ரைட் ஆஃப் செய்யப்பட்டது.

இது போன்ற செய்திகள், செய்தித்தாள்கள், டிவி, ஆன்லைன் போர்டல்கள் மற்றும் சமூக ஊடகங்களில் அடிக்கடி தலைப்புச் செய்திகளாக வருகின்றன.

*** என்பதை பார்த்து நீங்கள் இங்கே ஏதோ ஒரு வார்த்தை தவறிவிட்டதாக நினைக்கிறீர்களா?

அது அப்படி இல்லை.

 

இந்த மூன்று நட்சத்திரங்களின் இடத்தில் ஏதேனும் ஒரு வங்கியின் (அரசு அல்லது தனியார்) பெயரை நிரப்பி, அதை தேடினால் இதற்கான விடை கிடைக்கும்.

கடன் ரைட் ஆஃப் (கணக்கேட்டில் இருந்து நீக்குவது) விவகாரம் சமீப காலத்தில் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடந்த 11 ஆண்டுகளில் ரூ.1.29 லட்சம் கோடி கடனை ரைட் ஆஃப் செய்துள்ளதாக தகவல் அறியும் உரிமையின் கீழ் கோரப்பட்ட தகவலில் கனரா வங்கி தெரிவித்துள்ளது. (பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட வங்கிகள் தங்கள் காலாண்டு முடிவுகளை அறிவிக்கும் போது, ஒவ்வொரு மூன்றாவது மாதமும் இந்த ரைட் ஆஃப் தொகை பகிரங்கப்படுத்தப்படும்.

இந்த முடிவுகளில்,ரைட் ஆஃப் செய்யப்பட்ட கடன்களின் அளவு குறித்து வங்கிகள் தனது பங்குதாரர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். )

கனரா வங்கியின் இந்தத்தகவல் வெளி வந்ததையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் அரசைக் குறிவைக்கத் தொடங்கினர்.

வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், மார்க்சிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட பல தலைவர்கள் சமூக வலைதளங்களில் அரசை குறைகூறினர்.அரசு வங்கிகள் கடனை ரைட் ஆஃப் செய்து மக்களின் பணத்தை கொள்ளையடித்து வருகின்றன என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.

கடன் தள்ளுபடி பற்றிய எதிர்க்கட்சிகளின் கூற்றுகள் உண்மையா அல்லது அரசு வேண்டுமென்றே தொழில்நுட்ப சொற்களைப் பயன்படுத்தி இவ்வளவு பெரிய தொகையை மறைக்கிறதா?

கடன் தள்ளுபடியின் இந்த மர்மத்தைத் தீர்க்க, முதலில் வங்கி செயல்முறையை புரிந்துகொள்வோம். வங்கிகள் கடனுக்கு அளிக்கும் முக்கியத்துவம் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்வது அவசியம்.

உண்மையில் வங்கி வணிகமானது வாடிக்கையாளர்களின் பணத்தை டெபாசிட் செய்வதைக் காட்டிலும் கடன் கொடுப்பதை அடிப்படையாகக் கொண்டது. இவை இரண்டையும் வங்கி செய்வது அவசியம்.

வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களுக்கு கடன் என்பது சொத்தாக இருக்கிறது. ஏனெனில் அவை வங்கிக்கு வட்டிவருமானத்தை தருகின்றன. வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு கடனாக கொடுக்கும் தொகையை, வட்டியுடன் சேர்த்து வசூலிக்கின்றன. மறுபுறம், வாடிக்கையாளர்களின் டெபாசிட் பணம் வங்கியின் பொறுப்பு. வங்கிகள் இந்த தொகையை கடன் வழங்க பயன்படுத்துகின்றன. ஆனால் வங்கிகள் அதை வாடிக்கையாளருக்கு திருப்பிச் செலுத்த வேண்டும்.

ரைட் ஆஃப் என்றால் என்ன?

 

ரைட் ஆஃப்  செய்வது என்பது கடன் தள்ளுபடி என்று அர்த்தமில்லை.

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடன் பெற்றவர்கள், அதை திருப்பிச்செலுத்தும் நிலைமையில் இருந்தாலும், வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்தவில்லையென்றால் அவர்கள் வில்ஃபுல் டிஃபால்டர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

வேண்டுமென்றே திருப்பி செலுத்தாதவர்களிடமிருந்து கடன் தொகையை திரும்பப்பெறும் நம்பிக்கை முற்றிலும் முடிவுக்கு வந்ததும், வங்கி இவர்களுக்கு கொடுத்த கடனை வாரா கடன் என்று வகைப்படுத்தி அதை ரைட் ஆஃப் செய்கிறது.

ஆனால், ரைட் ஆஃப் செய்வது என்பது கடன் தள்ளுபடி என்று அர்த்தமில்லை. வங்கிகள் தங்கள் கணக்கேட்டை தெளிவாக வைத்திருக்க மட்டுமே இதைச் செய்கின்றன. அதற்கும் ஒரு செயல்முறை உண்டு.

ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி வங்கிகள் முதலில் இதுபோன்ற கடனை, வாரா கடனாக (NPA) அறிவிக்கிறது. அதை திரும்பப் பெறமுடியாமல் போகும்போது அது ரைட் ஆஃப் செய்யப்படுகிறது.

அதே நேரத்தில், தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளை எதிர்கொள்ள சட்டத்தையும் அரசு உருவாக்கியுள்ளது. அதன் கீழ் தப்பியோடிய தொழிலதிபர்களை நாட்டிற்கு திரும்ப அழைத்து வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும் சட்டபூர்வ நடைமுறையை கடைப்பிடித்து அவர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடன் வசூலிக்கப்படுகிறது.

NPA என்றால் என்ன?

NPA (வாரா கடன்) வை புரிந்துகொள்வதற்கு முன், வங்கிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை அறிந்து கொள்வது அவசியம். அதை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம். உதாரணமாக, வங்கியில் ரூ.100 டெபாசிட் இருந்தால், அதில் ரூ.4.5 (சிஆர்ஆர் தற்போது 4.5 சதவிகிதம்) ரிசர்வ் வங்கியிடம் வைக்கப்பட்டிருக்கும். CRR என்பது பண இருப்பு விகிதத்தைக் குறிக்கிறது.

18 ரூபாய் (தற்போது SLR 18 சதவிகிதம்) பத்திரங்கள் அல்லது தங்க வடிவில் வைத்திருக்க வேண்டும். SLR என்பது Statutory Liquidity Ratio – கட்டாய பணபுழக்க விகிதம்.

 

 

ரிசர்வ் வங்கி

பட மூலாதாரம்,GETTY IMAGES

மீதமுள்ள 77 ரூபாய் 50 பைசாவை வங்கி கடனாக தரலாம். அதிலிருந்து பெறப்படும் வட்டியில் இருந்து, அது தனது வாடிக்கையாளர்களுக்கு வைப்புத்தொகைக்கான வட்டியை அளிக்கிறது. மீதமுள்ள பகுதி வங்கியின் லாபமாகும்.

வங்கிகளுக்கு, ஏதேனும் சொத்து (கள்) அதாவது கடனில் இருந்து வட்டி வருமானம் கிடைப்பது நின்றுவிட்டால் அது NPA ஆக கருதப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவிக்கிறது.

வங்கியால் கடனாகக் கொடுக்கப்பட்ட தொகையின் அசல் அல்லது வட்டியின் தவணை 90 நாட்களுக்குத் திரும்ப வரவில்லை என்றால், வங்கிகள் அந்தக் கடனை NPA வில் வைக்க வேண்டும்.

NPA வாக இருப்பதற்கான விதிகள் என்ன

ஒரு கடன் கணக்கு வருங்காலத்தில் NPA ஆகிவிடுமா என்பதைக் கண்டறிய ரிசர்வ் வங்கி விதிகளை உருவாக்கியுள்ளது. இதன் கீழ், வங்கிகள் தங்கள் கடன் கணக்குகளை சிறப்பு குறிப்பு கணக்குகளாக (SMA) வைக்க வேண்டும்.

ஒரு கடன் கணக்கை NPA வாக அறிவித்த பிறகு, வங்கி அந்த NPA கணக்கை 'சப் ஸ்டாண்டர்ட் சொத்துகள்', 'சந்தேகத்திற்குரிய சொத்துகள்'(Doubtful asset) மற்றும் 'இழப்பு சொத்துக்கள்'(Loss asset) என மூன்று வகைகளாக பிரிக்க வேண்டும்.

கடன் கணக்கு, ஒரு வருடம் அல்லது அதற்கும் குறைவான காலத்திற்கு NPA பிரிவில் இருந்தால், அது 'சப் ஸ்டாண்டர்ட் அசெட்ஸ்' என்று அழைக்கப்படுகிறது. 'சப் ஸ்டாண்டர்ட் அசெட்ஸ்' பிரிவில் அது ஓராண்டு இருந்தால் அது 'சந்தேகத்திற்குரிய சொத்துகள்' என்று அழைக்கப்படுகிறது. கடனை இனி திரும்பப் பெற முடியாது என்று வங்கி கருதும் போது, அது 'இழப்பு சொத்துக்கள்'என வகைப்படுத்தப்படுகிறது.

"பிப்ரவரியில் ரிசர்வ் வங்கி NPA விதிகளை கடுமையாக்கி, சுமார் அரை டஜன் விதிகளை நீக்கியது. இப்போது கடனை திருப்பிச்செலுத்தாத விவகாரத்தில் 180 நாட்களுக்குள் அதற்கு தீர்வு காண்பது வங்கிகளுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இல்லை என்றால் அந்த கணக்கை, திவால் செயல்முறை மூலம் மேலே கொண்டுசெல்ல வேண்டும்,” என்று வங்கி நிபுணர் காஜல் ஜெயின் தெரிவித்தார்.

"புதிய விதியின்படி, 2,000 கோடி ரூபாய் அல்லது அதற்கு மேல் கடனை திருப்பிச் செலுத்தாத சந்தர்ப்பங்களில் வங்கி அதிகாரிகள் 180 நாட்களுக்குள் தீர்வுத் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும். இல்லையெனில், அதை திவால் செயல்முறைக்கு கொண்டு செல்ல வேண்டும்,"என்று அவர் குறிப்பிட்டார்.

 

"வங்கிகளில் கடனை திருப்பி செலுத்தாத விவகாரங்கள் அதிகரித்து வருவது ஓரளவிற்கு உண்மைதான். ஆனால் அதற்கான தீர்வுகாண வங்கிகளுக்கு ஆறு மாதங்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே வங்கிகள் இந்த என்பிஏக்களை ’நஷ்டமாக’ காட்டித்தான் ஆகவேண்டும். வங்கிகளின் இந்தக் கடன் மூழ்கிவிட்டது, இனி திரும்பப் பெறவே முடியாது என்பது இதற்கு அர்த்தமல்ல," என்று பொருளாதார வல்லுநர் சுனில் சின்ஹா கூறினார்.

கடன் தள்ளுபடி என்றால் என்ன?

 

விவசாயிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒருவர் வங்கிகளிடமிருந்து வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லையென்றால், கடனைத் திருப்பிச் செலுத்த அவருக்கு வழி இல்லையென்றால், அத்தகையவர்களின் கடன்கள் அரசால் தள்ளுபடி செய்யப்படுகிறது. ஆனால் எல்லோருமே இந்த தள்ளுபடி வரம்பிற்குள் வருவதில்லை.

இந்த வகை கடன் தள்ளுபடி பொதுவாக விவசாயிகளுக்கு செய்யப்படுகிறது. தேர்தலுக்கு முன்பாக இதுபோன்ற கடன் தள்ளுபடிகள் அறிவிக்கப்படுவதை பார்க்க முடிகிறது.

மோசமான விளைச்சல், பருவமழை அல்லது வறட்சி போன்ற இயற்கை பேரிடர்களால் ஏற்படும் பொருளாதார இழப்பை ஈடுசெய்ய விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி அறிவிக்கப்படுகிறது. இந்த கடன் தள்ளுபடி திட்டத்தில், பெரிய வணிக நிறுவனங்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதில்லை.

 

வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் கடனை ரைட் ஆஃப் செய்வதைவிட, அரசின் கடன் தள்ளுபடி திட்டத்தை விரும்புகின்றன என்று பொருளாதார விவகார நிபுணர் சுதீப் பந்தோபாத்யாய் கூறுகிறார்.

“ரைட் ஆஃப் செய்வதை விட வங்கிகளுக்கு கடன் தள்ளுபடி சிறந்தது. இதற்குக் காரணம், வங்கி தனது முழு கடன் தொகையையும் அரசிடமிருந்து திரும்பப் பெறுகிறது. கடன் வாங்கியவரும் (பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஏழை விவசாயிகள்) கடன் சுமையில் இருந்து விடுபடுகிறார்,” என்று அவர் குறிப்பிட்டார்.

“விவசாயிகளின் ஆயிரம் ரூபாய் கடனை தள்ளுபடி செய்வதாக அரசு கூறினால், இந்த 1000 ரூபாயை அரசு வங்கிக்கு வழங்கும் என்று அர்த்தம். அதேசமயம், ரைட் ஆஃப் விஷயத்தில் வங்கிகள் வாராக் கடன் என்று அதை வகைப்படுத்த வேண்டும். நிச்சயமாக இது அவர்களின் லாபத்தை பாதிக்கிறது."என்று சுதீப் தெரிவித்தார். ரைட்ஆஃப் மற்றும் வேவ்ஆஃப் கதை பெரும்பாலும் புள்ளிவிவரங்களின் வித்தைதான்.

ஒருவேளை இதனால்தான்’புள்ளிவிவரங்கள் பொய் சொல்லாது, ஆனால் அவை முழு உண்மையையும் தெரிவிப்பதில்லை’ என சொல்கிறார்கள் என்று தோன்றுகிறது.

https://www.bbc.com/tamil/articles/c10m37d9zrro

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்வியறிவுள்ள, பல்வேறு தொடர்புகளுள், ஆழுமையுள்ளசுமந்திரனும் சாணக்கியனும் TNA க்குத் தலைமை தாங்கி  வழிநடாத்த வேண்டும்,...👍 ஏனப்பா,.. ஒரு குசும்புக்கு எழுதினாலும் விசுகர் தடியோடதான் நிக்கிறார் கண்டியளோ,..🤣
    • புதிய ஜனாதிபதி அநுரவின் கட்சிக்கு கணிசமான அளவு வாக்குகள் வடக்கு/கிழக்கில் வரும் பொதுதேர்தலில் கிடைக்கலாம். ஆனால் அவை ஆசனத்தை பெறுவதற்கு போதுமானதாக அமையுமா என்பது சந்தேகமே.
    • நாங்கள் சிறுவயதில் காலைக்காட்சி, மாலைக்காட்சி, கடற்கரைக்காட்சி என்று சோதனையில் வந்த கேள்விகளுக்கு ஏற்றமாதிரி கட்டுரை எழுதுவது போலத் தான் இருக்கின்றது இந்த பகிரங்கக் கடிதம்.  இதை எழுதியவர் ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்கச் சொன்னவராக இருக்கலாம், இல்லாவிட்டால் இலங்கைச் சிங்கள ஒற்றை ஆட்சிப் பாராளுமன்றம் தேவையில்லை, எங்களின் ஒற்றுமை மட்டுமே முக்கியம், அதை சர்வதேசத்திற்கு காட்டினால் போதும் என்று சொன்னவராக இருக்கலாம். ஒரு அணுக்கமான அரசியல் செய்வோம் என்று சொன்னவராக இருக்கலாம். இன்னும் சில வகைகளும் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் நியாயங்கள் இருக்கிறது தானே........... நாங்கள் எழுதிய காலை, மாலை, கடற்கரை காட்சிக் கட்டுரைகள் போலவே. சொன்னவர் யார் என்று தெரிந்தால் தான், இதில் இருக்கும் சொற்களையும், வசனங்களையும் கடந்து, அதில் மறைந்திருக்கும் உட்பொருளை விளங்கிக்கொள்ள முடியும். நித்தியின், ஜக்கியின் மற்றும் பல குருக்களின் பக்தர்களும் இதையே தான் சொல்கின்றனர். குருவின் தனிப்பட்ட வாழ்க்கையை விட்டு விட்டு, குரு சொல்வதை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள் என்று....... உங்கள் குருக்களே தங்கள் சுகபோக வாழ்க்கைகளுக்காக மட்டுமே பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இறுதியில் உங்களையும், உங்கள் குடும்பங்களையும் நடுத்தெருவில் நிற்பாட்டுவார்கள் என்று தானே நாங்கள் அவர்களுக்கு எதிர்க் கருத்துகள் சொல்லுகின்றோம். இதை எழுதியவர் கூட அப்படியான ஒருவராக இருக்கலாம். இப்பொழுது பாராளுமன்றம் முக்கியம், அங்கு போவது முக்கியம், அதிகாரம் முக்கியம்............. என்கின்றனர். உண்மையே, இவை எல்லாம் முக்கியம். இவை எப்போதும் முக்கியமானவையாக இருந்தன. அத்துடன், இதைச் சொல்பவர் முன்னர் என்ன சொல்லியிருந்தார் என்று அறிதலும் முக்கியம் தானே............    
    • 👆 Thank God, I have not been so ruthless as the guy above in dealing with relatives. I seem to be fair enough 👇    
    • கொழும்பில் போட்டியிடும் தமிழரசு கட்சி..! பங்காளி கட்சிகளுக்கு கால அவகாசம் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டமானது பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.  இதற்கமைய, ரெலோ மற்றும் ப்ளொட் ஆகிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து மூன்று நாட்களுக்குள் தமது முடிவு எட்டப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி போட்டியிடுவதாகவும் இதற்கான வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கு ஒரு குழுவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  அடுத்த கூட்டம்  அதேவேளை, குறித்த விடயங்கள் தொடர்பில் எதிர்வரும் 03ஆம் திகதி மீண்டும் கூட்டம் நடத்தப்பட்டு தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு வழங்கியவர்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் கடிதம் ஒன்றை முன்வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இதன்போது, கிட்டத்தட்ட 2018ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை இடம்பெற்றிருக்க கூடிய அனைத்து விடயங்கள் தொடர்பிலும் விளக்கம் கோர வேண்டுமே தவிர தற்போது நடந்த விடயங்கள் தொர்பில் மாத்திரம் விளக்கம் கோரப்பட கூடாது எனவும் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், மத்தியக்குழு கூட்டமானது, பல்வேறுபட்ட வாத பிரதிவாதங்களுக்கு மத்தியில் முடிவுக்கு வந்துள்ளது.  அதேவேளை, கூட்டத்திற்கு பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், "தமழிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் காலை முதல் மாலை வரை நடைபெற்றது. இதன்போது ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான விடயங்கள் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் கூடி ஆராய்ந்தோம். ஜனாதிபதி தேர்தலில் கட்சி எடுத்த 3 தீர்மானங்களுக்கு மாறாக செயற்பட்டவர்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. அதிலே அப்படியாக கட்சியின் முடிவை மீறி செயற்பட்டவர்களிடம் விளக்கம் கோருவது என முடிவு எடுக்கப்பட்டது. அரியநேத்திரனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என பலமான கருத்துக்கள் சொல்லப்பட்டிருந்தாலும், முதலாம் திகதி எடுத்த தீர்மானத்தில் தேர்தலில் இருந்து விலக வேண்டும் என்று கோரியிருந்தோம். அதற்கு அவருடைய விளக்க கடிதத்தில் பதில் சொல்லப்பட்டிருக்கவில்லை. அது காலம் கடந்து கிடைத்தாலும் வாசித்து காட்டப்பட்டது. ஆகவே அது சம்மந்தமாக கேட்டு விட்டு தீர்மானங்களை எடுக்கவுள்ளோம். முக்கிய விடயமாக ஆராயப்பட்டது நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆகும். நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக நாங்கள் விசேட அறிவிப்பை மனவுவந்து விடுவதற்கு தீர்மானித்துள்ளோம். அதாவது தமிழ் தேசிய பரப்பில் இருக்கிற கட்சிகள் விசேடமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெவ்வேறு காலகட்டங்களில் விலகிப் போன கட்சிகள் திரும்பவும் எங்களுடன் சேர்ந்து தேர்தலை முகங்கொடுங்க விரும்பினால் வரமுடியும். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிச் சென்றவர்கள் வருகிற தேர்தல் சவால் மிக்க தேர்தலாக இருப்பதால் இணங்கி வந்து இந்த தேர்தலில் போட்டியிட முடியும். தமிழரசுக் கட்சியின் பெயரிலும், அதன் சின்னத்திலும் தான் கடந்த காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக போட்டியிட்டோம். அந்த விதமாக இந்த தேர்தலில் போட்டியிட நாங்கள் தீர்மானித்துள்ளோம். அப்படியாக அந்த அழைப்பை ஏற்று வந்தால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வேட்ப்பாளர்களை நிறுத்துவது தொடர்பில் கலந்துரையாடி முடிவு எடுப்போம். அப்படி அவர்கள் வராவிட்டால் இலங்கை தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடும். திருகோணமலை, அம்பாறை மாவட்டங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். அங்கே ஒரு தமிழ் உறுப்பினர் மட்டும் தான் தெரிவு செய்யப்படும் நிலை இருப்பதால் அந்த விடயங்களை அந்த மாவட்ட கிளைகளுடன் பேசி முடிவுக்கு கொண்டு வரலாம் என தீர்மானித்துள்ளோம். அதற்கு மேலதிகமாக இம்முறை வடக்கு - கிழக்குக்கு வெளியே உள்ள கொழும்பு உட்பட தமிழர்கள் வாழும் ஏனைய மாவட்டங்களிலும் போட்டியிட பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. விடுக்கப்பட்டுள்ள அழைப்பு  எதிர்வரும் 4 ஆம் திகதி வேட்புமனுத் தாக்கல செய்தல் ஆரம்பிக்கவுள்ளதால் பிரிந்து சென்றவர்கள் மீள வருவது தொடர்பாக மிக விரைவாக அவர்களது பதிலை எதிர்பார்க்கின்றோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கட்சிகள் வந்து இணைவதற்கு அழைப்பு விடுத்துள்ளோம். அதற்கு வெளியே வேறு கட்சிகள் வந்தால் அதனை பரிசீலிக்கலாம். ஏனெனில் எங்களது கட்சியில் இருந்து பிரிந்து போனவர்களது கட்சியும் மேலும் பிரிந்து இருக்கின்றது. அவர்களை உள்வாங்கும் போது சில ஆட்சேபனைகள் இருக்கும். அது பற்றி பேசியே முடிவு எடுப்போம். ஆனால் தீர்மானமாக அழைப்பு விடுப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்களை வாருங்கள் சேர்ந்து பயணிப்போம் என்று புன்முறுவலோடு அவர்களை அழைக்கின்றோம். புதியவர்களை தேர்தலில் உள்வாங்குவது, இளைஞர்களை உள்வாங்குவது தொடர்பிலும் நீண்ட நேரம் பேசினோம். அதனை சரியாக நாம் அணுகுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. மக்களிடத்தில் இது தொடர்பான பாரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. விசேடமாக தேசிய மக்கள் சக்தி பெற்ற வெற்றிக்கு பிற்பாடு அத்தகைய எண்ணப்பாடு எங்களது பிரதேசங்களிலும் உயர்ந்துள்ளது. அது நல்ல விடயம். இளைஞர்கள், ஆளுமையுள்ளவர்கள், படித்தவர்கள், பெண்கள் என அவர்களுக்கான பிரதிநித்துவத்தை உறுதி செய்யும் வகையில் தான் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். அதற்கான நியமனக்குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு இறுதி முடிவுகளை எடுக்கும். ஆனால் மாவட்ட ரீதியாக கலந்து ஆலோசித்து தான் அந்த முடிவுகள் எடுக்கபடும். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் சிலர் எம்முடன் பேசியுள்ளார்கள். தம்முடன் இணையுமாறு அவர்கள் அழைப்பு எதனையும் விடவில்லை. நாங்கள் பிரதானமான தமிழ் கட்சி. இது வரைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக வேறு கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட்ட போது தேர்தலுக்கு முகம் கொடுத்தது இலங்கை தமிழரசுக் கட்சியின் பெயரிலும், அதன் சின்னத்திலுமே தான். அதே முறையில் நாங்கள் இந்த தேர்தலையும் சந்திப்பதற்கு பிரதான கட்சி என்ற வகையில் நாங்கள் அவர்களுக்கும் அழைப்பு விடுகின்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.  https://tamilwin.com/article/ilankai-tamil-arasu-katchi-meeting-in-colombo-1727533785?itm_source=parsely-detail
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.