Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளின் பீரங்கி வலுவால் வடக்கில் படைக்கு நெருக்கடி! வெகுதூர வீச்செல்லை ஆட்லறிகளும் இருக்கலாம் என அச்சம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் பீரங்கி வலுவால் வடக்கில் படைக்கு நெருக்கடி! வெகுதூர வீச்செல்லை ஆட்லறிகளும் இருக்கலாம் என அச்சம்

கொழும்பு,ஓகஸ்ட்27

சுமார் ஒரு வருட கால அமைதிக்குப் பின்னர் வடக்கில் படையி னரின் முக்கிய நிலைகளை இலக்கு வைத்து, குடாநாட்டின் தென் முனைக்கு அப்பால் பூநகரி கல்முனை முனைப் பகுதி போன்றவற்றிலிருந்து கடந்த வாரம் விடுதலைப் புலிகள் நடத்திய பீரங்கித் தாக்குதல்கள் படைத் தரப்பை பெரும் நெருக்கடியில் ஆழ்த்தியிருக்கின்றன எனத் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது பயன்படுத்தியவற்றை விடவும் தூர வீச்சு எல்லை விரிவுபடுத்தப்பட்ட பிற பீரங்கி ஷெல்களையும் விடுதலைப் புலிகள் சுவீகரித்திருப்பார்களாயின் அது வடமுனையில் படைத்தரப்புக்கு பெருஞ் சவாலாக அமையும் என்று இராணுவ ஆய்வா ளர்கள் கொழும்பில் அச்சம் வெளியிட்டிருக்கின்றனர்.

அண்மைய காலங்களில் வடமுனையில் புலிகள் திடீர், திடீரென நடத்தும் ஆட் லறித் தாக்குதல்கள் பாதுகாப்புத் தரப்புக்கு இரண்டு வகைகளில் சிக்கல்களை ஏற் படுத்தியிருக்கின்றன.

ஒன்று அவர்கள் பயன்படுத்தும் பீரங்கி களின் வகைகள்.

அடுத்தது அந்தப் பீரங்கிகள் மூலம் தாக்குதல்களை நடத்த அவர்கள் பயன்படுத்தும் சந்தர்ப்பங்கள்.

தற்போது புலிகளின் வசம் 130 எம்.எம். பீரங்கிகள் குறைந்தது நான்கும், 120 எம். எம்.மோட்டார்கள் எண்பதும், 122 எம்.எம். பீரங்கிகள் இருபதும் உள்ளன என்று படைத் தரப்பு மதிப்பிடுகின்றது.

இவற்றில் 130 எம். எம். பீரங்கிகள் பொது வாக 27 கிலோமீற்றர் தூரம் சென்று தாக்கும் வீச்சு எல்லை வலுவைக் கொண்டன.

ஆனாலும் இதிலும் விட விரிவுபடுத்தப் பட்ட வீச்சு எல்லை கொண்ட அதாவது சுமார் 35 கிலோ மீற்றர் தூரம் சென்று தாக் கும் விசேட ஷெல்களும் இந்தப் பீரங்கி களுக்குப் பயன்படுத்தப்படலாம். ஆனால் அவற்றைப் புலிகள் சுவீகரித்துள்ளனரா என்பது படைத்தரப்புக்கு இன்னும் தெரிய வில்லை.

இன்றைய நிலையில் தம்மிடம் உள்ள 27 கிலோமீற்றர் வீச்சு எல்லை கொண்ட பீரங்கிகள் மூலம் பலாலிப் படைத் தளத்தை இலக்கு வைக்க வேண்டுமானால் பூநகரிக்கு வடக்கே கல்முனை முனைப் பகுதிவரை புலிகள் தங்களது பீரங்கிகளை நகர்த்தி வரவேண்டும். அங்கிருந்தபடி இந்தப் பீரங்கிகளினால் தாக்கினால்தான் பலாலிப் படைத்தளம் புலிகளின் தாக்கு தல் வீச்சுக்குள் வரும்.

புலிகளுக்கு உள்ள கஷ்டம்

ஆனால் அப்படித் தாக்குதல் நடத்து வதில் புலிகளுக்கு சிக்கல்கள் உள்ளன. ஏனெனில் கல்முனைப் பிரதேசம் அகன்ற பகுதியல்ல. குடாக்கடலை ஒட்டிய சிறிய பிரதேசமே அது. அங்கிருந்து பீரங்கித் தாக்குதல் நடத்திவிட்டு, படைத்தரப்பின் பீரங்கிகளும் பல்குழல் ஏவுகணைகளும் பதில் தாக்குதல் நடத்த முன்னர் புலிகள் தங்களது தாக்குதல் பீரங்கிகளைப் பாது காப்பான இடத்துக்கு நகர்த்துவது கஷ்டம் என சுட்டிக்காட்டப்படுகின்றது.

இதன் காரணமாகவே புலிகள் பலாலி படைத்தளம் மீது திடீர் திடீர்ரென டசின் அளவு எண்ணிக்கைப் பீரங்கி ஷெல்களை ஏவி விட்டுவிட்டு அடங்கிவிடுகின்றனர். தொடர்ந்து தாக்குதலை நடத்துவதில்லை.

ஆனால், சுமார் 35 கிலோ மீற்றர் வீச் செல்லை கொண்ட விரிவுபடுத்தப்பட்ட வீச்சுப் பீரங்கிகளைப் புலிகள் கொண்டி ருப்பார்களேயானால் அவர்கள் கல்முனை முனைக்கு மேலும் தெற்கேயுள்ள பரந்த பூநகரி பிரதேசத்திலிருந்தபடியே பலாலிப் படைத்தளத்தை இலக்கு வைக்க முடியும்.

அத்தகைய சந்தர்ப்பத்தில் பீரங்கித் தாக்குதல்களைத் தொடர்ந்து தாக்கியபடி பரந்த பூநகரி பிரதேசத்திற்குள் தங்களின் தாக்குதல் பீரங்கிகளை அவ்வப்போது வேகமாக பாதுகாப்பான இடங்களுக்கு அவர்கள் மாற்றிக்கொள்ளவும் முடியும் என் றும் இராணுவ ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டு கின்றனர்.

விநியோகப் பாதையை முடக்கும் திட்டம்

இதேநேரம், வடக்கு படைத் தளத் துக்கு விநியோகப் பாதைகளாக இருக்கும் பலாலி விமானத்தளம், காங்கேசன்துறை, மயிலிட்டி இறங்குதுறைகள் ஆகியனவே புலிகளின் பீரங்கிகளின் இலக்குகளாக இருக்கின்றன என்றும் கூறப்படுகின்றது.

இந்த விநியோகத் தடங்களைத் தடுப்ப தன் மூலம் படைத்தரப்புக்கான விநியோ கப் பாதையை முடக்குவதே புலிகளின் திட்டம் எனக் கூறப்படுகின்றது.

வடக்கில் மூத்த படையதிகாரிகள் பங்கு கொள்ளவிருக்கும் நிகழ்வு நேரங்களை யொட்டி அந்தத் நேரங்களில் புலிகள் ஆட் லறித் தாக்குதல்களை நடத்துவதும் பாது காப்பு உயர் பீடத்தின் முக்கிய கவனத் துக்கு உள்ளாகியிருக்கின்றது.

இவை குறித்து புலனாய்வு விசார ணைக்கும் விசேட கவனிப்புக்கும் பாது காப்புத் தலைமை உத்தரவிட்டிருப்பதா கவும் அறியப்படுகிறது.

-உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.