Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழில் இருளில் மூழ்கிய ஈ.பி.டி.பி. தலைமை அலுவலகம்! அதிர்ச்சி கொடுத்த மின்சார சபை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மின் கட்டணம் செலுத்தப்படாமையினால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் ஸ்ரீதர் தியேட்டர் கட்டிடத்தில் இயங்கி வருகின்ற ஈ.பி.டி.பி. தலைமை அலுவலகம் இருளில் மூழ்கியுள்ளது.

இது தொடர்பான தகவல்களை வெளியிட்ட பெயர் குறிப்பிட விரும்பாத இலங்கை மினசார சபை ஊழியர் ஒருவர், 2014 ஆண்டுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான கட்டணம் செலுத்தப்படாமல் நிலுவையில் இருந்த நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், அரசாங்கத்தில் மிக முக்கியமான சிரேஸ்ட அமைச்சராகவும், தற்போதைய அரசாங்கத்தினை அமைப்பதில் முக்கிய பங்காற்றியவராக விளங்கி வருகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது அதிகாரம், அரசியல் செல்வாக்கு ஆகியவற்றை இதுவரை பயன்படுத்தாமல் இருப்பது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக குறித்த மின்சார சபை ஊழியர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் சுன்னாகத்தில் இயங்கும் தேசியக்கட்சியை சேர்ந்த எம்.பி ஒருவருக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தின் மின் இணைப்பை மின்சார சபை ஊழியர்கள் துண்டித்த போது, தமது அரசியல் செல்வாக்கை பயன்படுத்திய குறித்த பிரமுகர், ஒரு மணி நேர இடைவெளியில் மின் இணைப்பை மீண்டும் பெற்றுக்கொண்டமை, தொடர்பில் பத்திரிகைகளில் கூட செய்திகள் வெளியாகியிருந்தன.

யாழில் இருளில் மூழ்கிய ஈ.பி.டி.பி. தலைமை அலுவலகம்! அதிர்ச்சி கொடுத்த மின்சார சபை | Epdp Party Office Cut Off Electricity Jaffna

மின்மானி வாசிப்பில் பிரச்சினை 

 

இவ்வாறான நிலையில் தற்பொழுது செல்வாக்கு மிகுந்த தலைவராகவுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் யாழ். அலுவலக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக ஈ.பி.டி.பி. வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் தெரியவருவதாவது, 1990 ல் இருந்து 1995 ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணம் இராணுவத்தினரால் விடுவிக்கும் வரை ஶ்ரீதர் அரங்கு விடுதலை புலிகள் திரையரங்காக செயல்பட்டிருந்ததுடன்,  பாவனையில் இருந்துள்ளது.

பின்னர் படையினரின் பாவனையில் இருந்த நிலையிலேயே ஈபிடிபியினரினால் பொறுபேற்கப்பட்டு அலுவலகம் அமைக்கப்பட்டது.

யாழில் இருளில் மூழ்கிய ஈ.பி.டி.பி. தலைமை அலுவலகம்! அதிர்ச்சி கொடுத்த மின்சார சபை | Epdp Party Office Cut Off Electricity Jaffna

 

அப்போதைய யுத்த சூழ்நிலை காரணமாக பாதுகாப்பின் நிமிர்த்தம் சுற்றிவர மின்சாரம் வழங்கப்பட்டு நாகவிகாரை உட்பட அயலில் உள்ளவர்களுக்கும் இங்கிருந்தே மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

யுத்தத்திற்கு பின்னர் மின்சாரப் பாவனை மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலும், மின்மானி வாசிப்பு அதிகமாக இருப்பது அவதானிக்கப்பட்ட நிலையில், 2014 ஆண்டு புதிய மின் மானிபொருத்தப்பட்டிருக்கிறது.

https://tamilwin.com/article/epdp-party-office-cut-off-electricity-jaffna-1668355452

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

மேலும், அரசாங்கத்தில் மிக முக்கியமான சிரேஸ்ட அமைச்சராகவும், தற்போதைய அரசாங்கத்தினை அமைப்பதில் முக்கிய பங்காற்றியவராக விளங்கி வருகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது அதிகாரம், அரசியல் செல்வாக்கு ஆகியவற்றை இதுவரை பயன்படுத்தாமல் இருப்பது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக குறித்த மின்சார சபை ஊழியர் தெரிவித்துள்ளார்.

தன்னை விளம்பரப்படுத்தும் வழிகளில் இதுவும் ஒன்று. இப்போ இளைஞர்களை கடத்தி, கொலை செய்து கப்பம் பெற முடியாமையும் மின்சார சபையின் நிலுவையை அடைக்க முடியாமைக்கு காரணமாக இருக்கலாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, satan said:

தன்னை விளம்பரப்படுத்தும் வழிகளில் இதுவும் ஒன்று. இப்போ இளைஞர்களை கடத்தி, கொலை செய்து கப்பம் பெற முடியாமையும் மின்சார சபையின் நிலுவையை அடைக்க முடியாமைக்கு காரணமாக இருக்கலாம்

மின்சார கட்டணம் கட்டாதவர்கள் யாரென்று தேடினால் முழுவதும் மந்திரிமாரும் அரசியல்வாதிகளுமே.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

மின்சார கட்டணம் கட்டாதவர்கள் யாரென்று தேடினால் முழுவதும் மந்திரிமாரும் அரசியல்வாதிகளுமே.

அதில்லை ..... தங்களது மின்சாரக்கட்டணம் செலுத்த  வக்கில்லை, அதற்குள் ஜனாதிபதி ரேஞ்சில் அறிக்கைகளும், வெற்று வாக்குறுதிகளும் வேறு. சிரிப்புத்தான் வருகுது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.