Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனா தனது கண்காணிப்பு பாதுகாப்பு மூலம் டிஜிட்டல் சர்வாதிகாரத்திற்கான திட்டத்தினை உருவாக்குகின்றது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீனா தனது கண்காணிப்பு பாதுகாப்பு மூலம் டிஜிட்டல் சர்வாதிகாரத்திற்கான திட்டத்தினை உருவாக்குகின்றது

By RAJEEBAN

15 NOV, 2022 | 04:28 PM
image

 

 

ஸ்மார்ட் நகரங்களிற்கான கண்காணிப்புர் பாதுகாப்பை வழங்கும் நோக்கில் சீனா டிஜிட்டல் சர்வாதிகாரத்திற்கான அடிப்படைகளை உருவாக்குகின்றது என மனிலா டைம்ஸ் தெரிவித்துள்ளது.

சீனாவின் ஸ்மார்ட் சிட்டி முயற்சி என்பது சுதந்திரத்திற்கு ஆபத்தானது என தெரிவித்துள்ள மனிலா டைம்ஸ் அரசியல்வாதிகள் அரசியல் வெற்றியை பெறுவதற்காக பெட்டிக்குள் சர்வாதிகாரத்தை எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பதற்கு இது சிறந்த உதாரணம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

2013 இல் புதிய பட்டுப்பாதை திட்டத்தை அறிவிப்பதற்கு முன்னர் சீன ஜனாதிபதி தரவுகளை யார் கட்டுப்படுத்துகின்றார்களே அவரின் கரமே மேலோங்கி காணப்படும் என குறிப்பிட்டிருந்தார்.இது தற்செயலான கருத்து இல்லை எனவும் மனிலா டைம்ஸ் தெரிவித்துள்ளது.

சிலர் டிஜிட்டல் சர்வாதிகாரத்திற்கான அடிப்படை திட்டம் என அழைக்கும் திட்டத்தை கட்டியெழுப்புவதற்கான தொழில்நுட்ப தாகத்தில் சீன ஜனாதிபதி காணப்படுகின்றார்.

china_montoring_secu.jpg

ஸ்மார்ட் நகரம் என்பது மிகைப்படுத்தப்பட்ட  விடயம்,இது சீனாவுடன் மாத்திரம் நின்றுவிடப்போகின்ற விடயம் அல்ல.

இந்த திட்டத்தில் இணைந்துகொண்டுள்ள ஏனைய நாடுகள் தங்கள் பிரஜைகளின் பெருமளவு தரவுகளை சீனா கண்காணிப்பதற்கு அனுமதியளிக்கின்றன.அத்துடன் தனிப்பட்ட வர்த்தக நோக்கங்களிற்காக பயணம் மேற்கொள்ளும் ஏனைய நாடுகளின் பிரஜைகளின் தரவுகளை சீனா கண்காணிப்பதற்கும் அனுமதிக்கின்றன.

சீனா தனது ஏதேச்சதிகார கண்காணிப்பு தொழில்நுட்பங்களை தன்னை போன்ற சிந்தனை கொண்ட ஏனைய நாடுகளிற்கு ஏற்றுமதி செய்வதில் உலகின் முன்னணி நாடாக மாறுவதற்கும் இந்த திட்டத்தில் இணைந்துள்ள நாடுகள் உதவப்போகின்றன.

 

மிகப்பெரும் தரவு செயற்கை நுண்ணறிவுடன் இணைந்து கொள்ளும்போது அது கண்காணிப்பு சாதகமாக மாறும் இதனை அரசாங்கம் பயன்படுத்தும் என மனிலா டைம்ஸ் தெரிவிக்கின்றது.

மேலும் சீனாவிடம் எந்த சாதனத்திலிருந்தும் தரவுகளை பெறுவதற்கான சட்டங்கள் காணப்படுகின்றன,சமூக நம்பிக்கை சுட்டியில் இடம்பெறுவதற்காக சீன நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்கள் குறித்த அனைத்து தரவுகளையும் அரசாங்கத்திடம் ஒப்படைக்கின்றன.

மேலும் சீன நிறுவனங்களும் அதன் பிரஜைகளும் வேவு பார்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் ஆகவே புதிய பட்டுப்பாதை திட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும்  சீன உளவாளிகளே என்கின்றது மனிலா டைம்ஸ்.

ஜான் ஸ்ட்ராண்ட் மொபைல் டெலிகாம் நெட்வொர்க்குகளின் பாதுகாப்பில் முன்னணி நிபுணர். 102 ஐரோப்பிய மொபைல் நெட்வொர்க்குகளில் Huawei, ZTE மற்றும் பிற சீன அரசாங்கத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது குறித்த அவரது அறிக்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் 5G கருவிப்பெட்டியை உருவாக்குவதில் ஒரு முக்கிய அங்கமாக இருந்தது என்று தி மணிலா டைம்ஸ் தெரிவித்துள்ளது.

நெட்வொர்க்குகளின் தொழில்நுட்ப பாதுகாப்பு கூறுகளுக்கு கூடுதலாக, ஜான் சீன அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் மற்றும் சர்வதேச தொழில்நுட்ப வளர்ச்சியில் செல்வாக்கு செலுத்துவதற்கான அவர்களின் முயற்சி ஆகியவற்றைப் படிக்கிறார்.

சீனா தனது கண்காணிப்பை மெதுவாக்குவதாகத் தெரியவில்லை, அது ஏற்றுமதி செய்யும் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளிலும் உட்பொதிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/140133

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.