Jump to content

வரி சலுகையின் பயனை நாட்டு மக்கள் பெறவில்லை : இறக்குமதியாளர்கள் மாத்திரம் திருப்தி - ரோஹினி கவிரத்ன


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வரி சலுகையின் பயனை நாட்டு மக்கள் பெறவில்லை : இறக்குமதியாளர்கள் மாத்திரம்  திருப்தி -  ரோஹினி கவிரத்ன

By DIGITAL DESK 2

07 DEC, 2022 | 03:44 PM
image

(இராஜதுரை ஹஷான்)

குறுகிய காலத்தில் அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்ள நடுத்தர மக்களை நெருக்கடிக்குள்ளாக்காமல்,  தவறான தீர்மானங்களினால் இழக்கப்பட்ட வரி வருமானத்தை மீள பெற்றுக்கொள்ள அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும்.

25 சதமாக காணப்படும் சீனிக்கான விசேட வரியை நீக்கி, வரி தொகை 50 ரூபாவாக அதிகரிக்க வேண்டும்.

வரி சலுகையின்பயனை நாட்டு மக்கள்பெறவில்லை, ஒருசில இறக்குமதியாளர்கள்மாத்திரம் திருப்தியடைந்துள்ளார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் புதன்கிழைம (டிச.07) இடம்பெற்ற 'சர்வஜன நீதி'ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் தவறான பொருளாதார முகாமைத்துத்தினால் நாட்டு மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

பல்வேறு வழிமுறைகளில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கம் அரசாங்கத்திடம் கிடையாது.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மென்மேலும்நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம்சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்களை இலக்காக கொண்ட நேரடி வரி விதிப்பை தவிர்த்து அரச வருமானத்தை அதிகரித்துக்கொள்ள அரசாங்கத்திடம் எவ்வித திட்டமும் கிடையாது.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் ஊடாக 3415 பில்லியன் ரூபா அரச வருமானத்தை திரட்டிக் கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் அரச செலவினம் 5819 பில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அரச வருமானத்திற்கும், அரச செலவிற்கும் இடையிலான பற்றாக்குறை 2404 பில்லியன் ரூபாவாக காணப்படுகிறது.

வருடாந்த அரசமுறை கடன்செலுத்தலுக்கு 2025 பில்லியன்ரூபா ஒதுக்கப்பட்டுள்ள நிலையில்அரச கடனையும்,வரவு -செலவுத் திட்ட பற்றாக்குறையையும் நிவர்த்தி செய்ய 4979 பில்லியன் ரூபா தேவைப்படும்.இந்த நிதியை திரட்டிக் கொள்ள அரசாங்கத்திடம் நடைமுறைக்கு சாத்தியமான எந்த திட்டமும் கிடையாது.

பொதுஜன பெரமுன அரசாங்கம் 2019ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன் தமது சகாக்களை திருப்திப்படுத்துவதற்காக ஒருகிலோகிராம் இறக்குமதி சீனிக்கு 50 ரூபாவாக காணப்பட்ட வரியை 25 சதமாக குறைத்தது.

இந்த வரி குறைப்பினால்ஒருகிலோகிராம் சீனி இறக்குமதியின்போது 49.75ரூபாவை அரசாங்கம்இழக்க நேரிட்டது.

சீனி வரிகுறைப்பினால்அரசாங்கம்முதல்மூன்று மாதகாலப்பகுதியில் மாத்திரம் 16 பில்லியன்ரூபா வரி வருமானத்தை இழந்துள்ளது. 2020 ஆம்ஆண்டு ஒருகிலோகிராம் சீனி 110 ரூபாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு 125 ரூபாவிற்கும், 2021ஆம்ஆண்டு ஒரு கிலோகிராம் சீனி 103 ரூபாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு 128 ரூபாவிற்கும், 2022 ஆம் ஆண்டு 175 ரூபாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு 241 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சீனி வரி குறைப்பின் பயனை நாட்டு மக்களும் அரசாங்கமு பெற்றுக்கொள்ளவில்லை ஒருசில இறக்குமதி விநியோகஸ்தர்கள் மாத்திரம் இந்த நிவாரண சலுகையை முழுமையாக பெற்றுக்கொண்டுள்ளார்கள்.

2020 ஆம்ஆண்டு செப்டெம்பர் மாதம்முதல்2022 ஆம்ஆண்டு வரையான காலப்பகுதியில் மாத்திரம் அரசாங்கம் 49 பில்லியன் ரூபா வரி வருமானத்தை இழந்துள்ளது.

நாட்டில் நிதி நிலைமை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு தரப்பினரின் நலனுக்காக மாத்திரம் வரி விலக்கு வழங்குவது எந்த விதத்தில் நியாயமாகும். சீனி வரிகுறைப்பினால் இழக்கப்பட்டுள்ள வரி வருமானத்தை மீள பெற்றுக்கொள்ள அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும். தற்போது 25 சதமாக காணப்படும்வரி வீதத்தை 50 ரூபாவாக அதிகரிக்க வேண்டும்.

2023 ஆம் ஆண்டுக்காதன வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு 410 பில்லியன்ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. படையினரது உணவு மற்றும் சீறுடைக்காக 53பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் இராணுவத்தினருக்கு தரமான மற்றும் போசனையான உணவு வழங்கப்படுகிறதா என்பது குறித்து ஆராய வேண்டும். இராணுவத்தினரது உணவு வேளையில் சோறு,அன்னாசி பழத்துண்டு, முட்டை மற்றும் உருளை கிழங்கு மாத்திரமே உள்ளடக்கப்பட்டுள்ளது.

சீனி வரிக்குறைப்பின் ஊடாக ஒரு சில இறக்குமதியாளர்கள் நன்மையடைந்ததை போன்று, இராணுவத்தினருக்கு தரமற்ற உணவை வழங்கி பிறிதொரு தரப்பினர் நன்மையடைகிறார்களா என்ற சந்தேகம் காணப்படுகிறது என்றார்.

https://www.virakesari.lk/article/142439

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நஸ்ரல்லாவை சாய்த்த இஸ்ரேல்: நிலை தடுமாறி அமைதியாய் நிற்கும் ஈரான் ஈரான் (Iran) ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா (Nasrallah)படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் (Israel) அறிவித்தும், ஈரான் அமைதி காத்து வருவது அந்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேலின் அறிவிப்பிற்கு ஹிஸ்புல்லா, லெபனான் தரப்பிலிருந்தும் எவ்வித உறுதிபடுத்தப்பட்ட தகவல்களும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், லெபனானில் இஸ்ரேலின் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர், இதற்கு எதிராக ஈரான் மற்றும் ஏமன் நாடுகளில் பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஈரானின் செயற்பாடு எவ்வாறானெதொரு பின்னணியில், இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு எதிராக ஈரான் அமைதியாக இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக, இத்தகைய சூழலில் ஈரான் கடுமையான பதிலடிகளை வழங்கும், ஆனால் இப்போது மிதவாதம் காட்டுவதாக உள்ளதாக ஈரானின் செயற்பாடுகள் அமைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், இது ஈரானில் உள்ள பழமைவாதிகள் மத்தியில் பாரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், எதிர்காலத்தில் இது அரசியல் மாற்றங்களுக்கு காரணமாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இறுதி இலக்கு லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்றிரவு நடத்தப்பட்ட தொடர் வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் மொத்தம் 18 பேர் முக்கிய தளபதிகள் இருந்த நிலையில்,17 பேரை இஸ்ரேல் ஏற்கனவே படுகொலை செய்தது. இறுதியாக நஸ்ரல்லா மட்டுமே உயிருடன் இருந்த நிலையில் தற்போது அவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.  https://ibctamil.com/article/death-of-hassan-nasrallah-pressure-on-iran-1727524484#google_vignette
    • இஸ்ரேலின் தாக்குதலில் ஹசன் நஸ்ரல்லா பலி- உறுதி செய்தது ஹெஸ்புல்லா அமைப்பு 28 SEP, 2024 | 07:08 PM ஹெஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலின் வான்தாக்குதலில் தனது தலைவர் கொல்லப்பட்டதை உறுதி செய்துள்ளது. லெபனான் தலைநகரின் தென்புறநகர் பகுதியில் சியோனிஸ்ட்கள் மேற்கொண்ட துரோகத்தனமான நடவடிக்கையில் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார் என ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேலிற்கு எதிராக தொடர்ந்தும் போராடப்போவதாக உறுதியளித்துள்ள ஹெஸ்புல்லா அமைப்பு காசாவிற்கும் பாலஸ்தீனத்திற்கும் தொடர்ந்தும் ஆதரவளிக்கப்போவதாக தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/195018
    • அனுரவின்... தேசிய மக்கள் சக்தி கட்சி, நாளை 29.09.2024 அன்று புலம் பெயர் தமிழர்களுடன் இணையவழி (Zoom meeting)  சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக அறிய முடிகின்றது.  கேள்வி பதில் அரங்கு. பங்கு கொள்வோர்... # இராமலிங்கம் சந்திர சேகர். (நிறைவேற்றுக் குழு உறுப்பினர்) # சிவா சிவப்பிரகாசம். (மலையக தேசியக்குழு உறுப்பினர்) # எம்.ஜே.எம். பைசல்.  (நிறைவேற்றுக் குழு உறுப்பினர்) # ஜனகா செல்வராஜ்.  (நிறைவேற்றுக் குழு உறுப்பினர்) வழிப்படுத்தல்: எம். பெளசர். காலை 10:00 மணி - கனடா. மதியம் 2:00 மணி ஐரோப்பா. மதியம் 3:00 இங்கிலாந்து. மாலை 7:30 இலங்கை நேரப்படி இந்த சந்திப்பு நிகழும். Meeting ID : 831 9644 1969 Pass Code: 660804 Contact - Fauzer 0776613739 (Mob.) 0044 7817262980 (WhatsApp)
    • இது நான் இருக்கும் இடத்தில் இருந்து 150 மைல் தொலைவில்.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.