Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

IND vs BAN: முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய வங்கதேசம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

IND vs BAN: முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய வங்கதேசம்

Bangladesh's Shakib Al Hasan

பட மூலாதாரம்,MUNIR UZ ZAMAN/AFP VIA GETTY IMAGES

 
படக்குறிப்பு,

விராட் கோலியின் விக்கெட் வீழ்ந்தபின் தமது அணியுடன் கொண்டாடும் ஷாகிப் அல் ஹசன்

4 டிசம்பர் 2022

வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியுள்ளது.

187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 46 ஓவரில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி, ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இதன் மூலம் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேசம் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. டாக்காவில் உள்ள ஷேர்-ஈ-பங்களா தேசிய மைதானத்தில் உள்ளூர் நேரப்படி மதியம் 12 மணிக்கு இந்தப் போட்டி தொடங்கியது.

பந்துவீச்சில் அசத்திய வங்கதேசம்

டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து முதலில் பேட் செய்த இந்திய அணி 41.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 186 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் நல்ல தொடக்கத்தைக் கொடுக்கவில்லை. ரோகித் சர்மா 31 பந்துகளில் 27 ரன்களும், தவான் 17 பந்துகளில் 7 எடுத்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலியும் 15 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஷாகிபின் பந்துவீச்சில் லிட்டன் தாசுக்கு கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

 

அடுத்து வந்தவர்களில் விக்கெட்-கீப்பர் கே.எல். ராகுல் தவிர வேறு யாருமே சொல்லிக்கொள்ளும்படி விளையாடவில்லை. ராகுல் 70 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தார். இந்திய பேட்ஸ்மேன்களில் இன்று இவரது ஸ்ட்ரைக் ரேட் மட்டுமே நூறைக் கடந்தது. தீபக் சாஹர் மற்றும் குல்தீப் சென் ஆகியோர் டக்-அவுட் ஆகினர்.

India's Mohammed Siraj and Virat Kohli

பட மூலாதாரம்,MUNIR UZ ZAMAN/AFP VIA GETTY IMAGES

 
படக்குறிப்பு,

முஷ்ஃபிகர் ரஹீம் அவுட் ஆனதைக் கொண்டாடும் இந்திய பந்துவீச்சாளர் முகமது சிராஜ் மற்றும் விராட் கோலி.

12 வைடு உள்பட இந்தியாவுக்கு எக்ஸ்ட்ரா ரன்கள் மூலம் மட்டுமே 12 ரன்கள் கிடைத்தன. இல்லாவிட்டால் இந்தியாவின் ஸ்கோர் இன்னும் பரிதாபமாக இருந்திருக்கும்.

முதல் இன்னிங்சில் பந்துவீச்சைப் பொறுத்தவரை வங்கதேச அணி சார்பில் ஷாகிப் அல் ஹசன் ஐந்து விக்கெட்டுகளையும், இபாதத் ஹொசைன் நாக்கு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். மெஹுதி ஹசன் மிராஜ் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார். ஷாகிப் தாம் வீசிய 10 ஓவர்களில் 36 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இரண்டு ஓவர்களில் ஒரு ரன் கூட கொடுக்கவில்லை. எனினும், இந்தியாவுக்காக ஐந்து வைடு பால்களை வீசி எஸ்ட்ரா ரன்கள் கொடுத்தார்.

India's KL Rahul

பட மூலாதாரம்,MUNIR UZ ZAMAN/AFP VIA GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கே.எல். ராகுல் இன்று இந்தியாவுக்காக அதிகபட்ச ஸ்கோர் எடுத்தார்

முதல் பந்திலேயே வங்கதேசத்துக்கு அதிர்ச்சி

எளிதான இலக்குதான் என்றாலும் வங்கதேசம் இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கியபோது, முதல் பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் நஜ்முல் ஹொசைன் சாண்டோ, இந்தியாவின் தீபக் சாஹர் பந்துவீச்சில் ரோகித் சர்மாவுக்கு கேட்ச் கொடுத்து டக்-அவுட் ஆனார்.

வங்கதேச அணியின் இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் அந்த அணிக்காக அதிகபட்சமாக 63 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். அவர் ஆட்டமிழந்த பின்னர் ரன் எடுக்கவே திணறிய வங்கதேச பேட்ஸ்மேன்கள் 35வது ஓவருக்கு பின்னர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பேட்ஸ்மேன்களே ரன் எடுக்கத் திணறிய நிலையில், பேட்டிங் செய்ய வந்த பௌலர்கள் இபாதத் ஹொசைன் மற்றும் ஹசன் மஹ்மூத் ஆகியோர் டக்-அவுட் ஆகினர்.

எனினும், 24ஆம் ஓவரில் நான்காவது விக்கெட்டை இழந்த வங்கதேசம், 35வது ஓவரில்தான் அடுத்த விக்கெட்டை இழந்தது.

35வது ஓவரின் கடைசி பந்தில் இருந்து 40வது ஓவருக்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்த வங்கதேச அணி, ஆட்டம் முடியும் வரை தனது கடைசி விக்கெட்டை இழக்காமல் இருந்தது வெற்றிக்கு வழிவகுத்தது.

இந்திய அணியின் முகமது சிராஜ் ஒரு மெய்டன் ஓவர் உள்பட 10 ஓவர்கள் வீசி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவரது எகானமி வெறும் 3.20 ஆகவே இருந்தது.

குல்தீப் சென் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், தீபக் சாஹர் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்திய பந்துவீச்சாளர்கள் வங்கதேசத்துக்கு 17 எக்ஸ்ட்ரா ரன்களைக் கொடுத்து உதவினர்.

https://www.bbc.com/tamil/articles/c2x1km4n450o

  • கருத்துக்கள உறவுகள்

பயம் காட்டிய ரோகித் - இந்திய அணியை வீழ்த்தி தொடரை வென்றது வங்கதேசம்

டாக்கா: இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது வங்கதேசம். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் அந்த அணி கைப்பற்றியுள்ளது. இந்தப் போட்டியின் இறுதி ஓவர்களில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா சிறப்பாக பேட் செய்திருந்தார். ஆனாலும் அவரால் அணியின் வெற்றிக்கு தேவையான ரன்களை பெற முடியவில்லை.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வங்கதேச நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது. இந்தத் தொடரின் முதல் போட்டியை வங்கதேசம் வென்றிருந்தது குறிப்படத்தக்கது.

ரோகித் சர்மா, காயம் அடைந்த காரணத்தால் கோலி மற்றும் தவான் இன்னிங்ஸை ஓபன் செய்தனர். இருவரும் ஒற்றை இலக்க ரன்களில் பெவிலியன் திரும்பினர். தொடர்ந்து வந்த வாஷிங்டன் சுந்தர் மற்றும் கே.எல்.ராகுல் சொற்ப ரன்களில் அவுட்டாகி இருந்தனர்.

பின்னர் களம் கண்ட அக்சர் படேல் உடன் 107 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் ஷ்ரேயஸ் ஐயர். இருவரும் இறுதி வரை விளையாடி இந்திய அணியை வெற்றி பெற செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், ஷ்ரேயஸ் 82 ரன்களிலும், அக்சர் படேல் 56 ரன்களிலும் வெளியேறினர். பின்னர் வந்த ஷர்துல் 7 ரன்களிலும், தீபக் சாஹர் 11 ரன்களிலும் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர்.

அந்தச் சூழலில் இடது கையில் ஏற்பட்டிருந்த காயத்தை பொருட்படுத்தாமல் பேட் செய்ய வந்தார் கேப்டன் ரோகித் சர்மா. அவர் வந்தது முதலே பந்தை அடித்து ஆடும் மோடில் இருந்தார். அவரது பேட்டில் படும் பந்துகள் பவுண்டரிகளாக சென்று கொண்டிருந்தன. அவர் கொடுத்த இரண்டு கேட்ச் வாய்ப்புகளை வங்கதேச வீரர்கள் டிராப் செய்திருந்தனர்.

கடைசி 6 பந்துகளில் இந்திய அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. ஸ்ட்ரைக்கில் ரோகித் சர்மா இருந்தார். அந்த ஓவரின் முதல் பந்து டாட். அடுத்த இரண்டு பந்துகள் பவுண்டரி. நான்காவது பந்து டாட். ஐந்தாவது பந்தில் சிக்ஸர் விளாசி இருந்தார். அணியின் வெற்றிக்கு கடைசி பந்தில் சிக்ஸர் தேவைப்பட்டது. ஆனால், அந்த பந்து யார்க்கராக வீசப்பட, அதில் ரோகித் ரன் ஏதும் எடுக்கவில்லை. அதனால், வங்கதேசம் வெற்றி பெற்றது. ரோகித் 28 பந்துகளில் 51 ரன்களை குவித்தார். 5 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகள் இதில் அடங்கும்.

முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 266 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் தோல்வியை தழுவியதன் மூலம் தொடரையும் இழந்துள்ளது இந்திய அணி.

முன்னதாக, இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி, பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 69 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பிறகு 7-வது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த மெஹதி ஹசன் மற்றும் மஹ்முதுல்லா, 148 ரன்களை குவித்தனர். இருவரும் நேர்த்தியாக பேட் செய்தனர். மெஹதி ஹசன் 100 ரன்களும், மஹ்முதுல்லா 77 ரன்களும் எடுத்திருந்தனர். 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 271 ரன்களை எடுத்தது.

69 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது வங்கதேச அணி. அப்போது களத்திற்கு வந்தார் மெஹதி ஹசன். இறுதி வரை அவுட்டாகாமல் பேட் செய்த அவர் இன்னிங்ஸின் கடைசி பந்தில் சதம் விளாசி அசத்தினார். 83 பந்துகளில் இந்த சதத்தை அவர் பதிவு செய்தார். இது ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது முதல் சதம் ஆகும். இதில் 8 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.

இந்திய அணி சார்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அதில் இரண்டு விக்கெட்டுகளை அடுத்தடுத்த பந்துகளில் கைப்பற்றி அசத்தினார். உம்ரான் மாலிக் மற்றும் முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர்.

IND vs BAN 2nd ODI | பயம் காட்டிய ரோகித் - இந்திய அணியை வீழ்த்தி தொடரை வென்றது வங்கதேசம் | india versus bangladesh cricket second odi rohit sharma - hindutamil.in

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.