Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பியன் கிண்ணம் கொழும்புக்கா? யாழ்ப்பாணத்திற்கா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ThePapare சம்பியன் கிண்ணம் கொழும்புக்கா? யாழ்ப்பாணத்திற்கா?

By
 Arshad Anwardeen
 -
13/12/2022
216
dome1-5-7-696x464.jpg
lpl.gif
  

இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com மூன்றாவது முறையாக ஏற்பாடு செய்து நடத்தும் ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் மோதுவதற்கு கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணிகள் முழுமையாகத் தயார் நிலையில் உள்ளன.

இலங்கையில் உள்ள முன்னணி 20 பாடசாலைகளின் 20 வயதின்கீழ் அணிகள் பங்கேற்ற இம்முறை தொடரில், குழுநிலைப் போட்டிகள், காலிறுதி மற்றும் அரையிறுதி என அனைத்து சுற்றுப் போட்டிகளிலும் தோல்வி காணாத அணியாகவே இந்த இரண்டு அணிகளும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளன.

எனவே, செவ்வாய்க்கிழமை (13) கொழும்பு சுகததாச அரங்கில் இடம்பெறவுள்ள இந்த மாபெரும் இறுதிப் போட்டியானது ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி

மிகவும் விறுவிறுப்பாக சென்ற குழு A இற்கான போட்டிகளின் முடிவில் தமது நான்கு போட்டிகளில் இரண்டு வெற்றிகள், இரண்டு சமநிலை முடிவுகள் என்பவற்றுடன் தோல்வி காணாத அணியாக யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியினர் முதலிடம் பெற்று காலிறுதிக்கு முன்னேற்றம் கண்டனர்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தமது காலிறுதிப் போட்டியில் யாழ் மத்திய கல்லூரி வீரர்கள், கொழும்பு கேட்வே கல்லூரியை 3-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி முதல் அணியாக தொடரின் அரையிறுதிக்கு தெரிவாகினர்.

Central.jpgகொழும்பில் இடம்பெற்ற அரையிறுதிப் போட்டியில் யாழ் மத்திய கல்லூரி வீரர்கள் 5-1 என்ற கோல்கள் கணக்கில் கிண்ணியா அல் அக்ஸா கல்லூரியை வீழ்த்தி முதல் முறையாக கிண்ணத்தின் இறுதி எதிர்பார்ப்பான இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

தொடர் முழுவதும் எதிரணிகளுக்கு வெறும் மூன்று கோல்களை மாத்திரம் விட்டுக்கொடுத்த யாழ் வீரர்கள், தமக்காக 13 கோல்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

குழுநிலை

பதுரியா கல்லூரி 1 – 3 யாழ். மத்திய கல்லூரி

யாழ். மத்திய கல்லூரி 2 – 1 களுத்தறை முஸ்லிம் மத்திய கல்லூரி

யாழ். மத்திய கல்லூரி 0 – 0 புனித செபஸ்டியன் கல்லூரி

கொழும்பு ஸாஹிரா கல்லூரி 0 – 0 யாழ். மத்திய கல்லூரி

காலிறுதி – யாழ். மத்திய கல்லூரி 3 – 0 கேட்வே கல்லூரி

அரையிறுதி – யாழ். மத்திய கல்லூரி 5 – 1 அல் அக்ஸா கல்லூரி

சென் ஜோசப் கல்லூரி

முதல் சுற்றில் குழு Cயில் இடம்பெற்ற புனித ஜோசப் கல்லூரி அணியினர் தமது 4 போட்டிளிலும் வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

காலிறுதிச் சுற்றில் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியை 2-0 எனவும், அரையிறுதியில் பலம் மிக்க யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி அணியை 1-0 எனவும் வெற்றி கொண்ட சென் ஜோசப் அணியினர் இந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று, ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரில் இரண்டாவது முறை சம்பியனாவதற்கு எதிர்பார்த்துள்ளனர்.

Joseph-1.jpgசிறந்த பலம் கொண்ட அணியாக உள்ள சென் ஜோசப் வீரர்கள் தொடரில் இதுவரை 18 கோல்களை தமது அணிக்காக பெற்றுள்ளதுடன், எதிரணிகளுக்கு வெறும் 4 கோல்களையே விட்டுக் கொடுத்துள்ளனர்.

அணியின் பலத்தைப் பற்றி குறிப்பிடும்பொழுது அனுபவ வீரர் பெதும் கிம்ஹான் மற்றும் தேஷான் துஷ்மிக்க ஆகியோர் அணியின் முக்கிய வீரர்களாக உள்ளனர். எனினும், தேஷானுடன் மத்திய களத்தில் ஆடும் டேவிட் கருனாரத்ன கடந்த போட்டியில் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டமையினால் இறுதிப் போட்டியில் ஆடும் வாய்ப்பை தவறவிட்டுள்ளார். எனவே, அது அவ்வணிக்கு பெரும் பாதிப்பாக அமையவுள்ளது.

குழுநிலை

சென் ஜோசப் கல்லூரி 4 – 2 கிங்ஸ்வூட் கல்லூரி

டி மெசனொட் கல்லூரி 0 – 5 சென் ஜோசப் கல்லூரி

சென் ஜோசப் கல்லூரி 2 – 1 ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரி

றோயல் கல்லூரி 0 – 4 சென் ஜோசப் கல்லூரி

காலிறுதி – சென் ஜோசப் கல்லூரி 2 – 0 மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி

அரையிறுதி – சென் ஜோசப் கல்லூரி 1 – 0 புனித பத்திரிசியார் கல்லூரி

இறுதியாக,

எவ்வாறிருப்பினும், தேசிய மட்டத்தில் உள்ள முன்னணி பாடசாலை அணிகள் பலவற்றை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் கண்டுள்ள இந்த இரண்டு அணி வீரர்களும் கிண்ணத்திற்கான தமது போராட்டத்தை இறுதி நொடி வரை கைவிட மாட்டார்கள் என்பது உறுதி.

ஏற்கனவே, ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் முதல் பருவத்தில் சம்பியனாகியுள்ள சென் ஜோசப் வீரர்கள் இரண்டாவது முறை கிண்ணத்தை வெற்றி கொள்வார்களா? அல்லது தொடரின் இறுதிப் போட்டிக்கு முதல் முறை தெரிவாகியுள்ள யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வீரர்கள் முதல் முறை வட மாகாண அணியாக கிண்ணத்தை வெற்றி கொள்வார்களா? என்பதை பார்ப்போம்.

https://www.thepapare.com/thepapare-football-championship-2022-final-jaffna-central-st-joseph-preview-tamil/

  • கருத்துக்கள உறவுகள்

திபப்பரே.கொம் கிண்ணத்தை புனித சூசையப்பர் சுவீகரித்தது; யாழ். பத்திரிசியார் வீரர்களுக்கு தங்கப் பாதணி,  தங்கக் கையுறை

By DIGITAL DESK 2

14 DEC, 2022 | 07:02 PM
image

(நெவில் அன்தனி)

அகில இலங்கை பாடசாகைளுக்கு இடையில் நடத்தப்பட்ட திபப்பரே.கொம் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் கொழும்பு புனித சூசையப்பர் கல்லூரி சம்பியனானதுடன் யாழ். மத்திய கல்லூரி இரண்டாம் இடத்தையும் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி 3ஆம் இடத்தையும் பெற்றன.

20 பாடசாலைகள் 5 குழுக்களில் பங்குபற்றிய இந்த சுற்றுப் போட்டியில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி வீரர்கள் இருவர் தங்கப் பாதணியையும் தங்கக் கையுறையையும் வென்றெடுத்து யாழ். மண்ணுக்குப் பெருமை சேர்த்துக்கொடுத்தனர்.

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (13) பிற்பகல் நடைபெற்ற இறுதிப் போட்டியில் யாழ். மத்திய கல்லூரியிடம் ஆட்டத்தின் முதலாவது பகுதியில் கடும் சவாலை எதிர்கொண்ட புனித சூசையப்பர் கல்லூரி கடைசிக் கட்டத்தில் திறமையாக விளையாடி 5 - 2 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்று திபப்பரே.கொம் வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது.

7_player_of_the_tournament_pethum_gimhan

இறுதிப் போட்டி ஆரம்பித்து 4 நிமிடங்கள் மாத்திரமே ஆன நிலையில் மத்திய கல்லூரி வீரர் செபஸ்தி அருள் மிக அற்புதமாக செயற்பட்டு எதிரணியின் பின்கள வீரர்களைக் கடந்து அலாதியான கோல் ஒன்றைப் புகுத்தி தனது அணியை முன்னிலையில் இட்டார்.

அதனைத் தொடர்ந்து கோல் எண்ணிக்கையை அதிகரிக்க பல தடவைகள் யாழ். மத்திய கல்லூரி வீரர்கள் முயற்சித்த போதிலும் அவர்களது குறிகள் தவறிப் போயின.

இதனிடையே அவ்வப்போது கோல் போடுவதற்கு கிடைத்த வாய்ப்புகளை புனித சூசையப்பர் வீரர்கள் தவறவிட்டனர்.

எவ்வாறாயினும் போட்டியின் 39ஆவது நிமிடத்தில் புனித சூசையப்பர் வீரர் பெத்தும் கிம்ஹான, த்ரோ இன் பந்தை தனது தலையால் முட்டி கோல் நிலையை 1 - 1 என சமப்படுத்தினார்.

6_special_award_winners.jpg

அடுத்த 6ஆவது நிமிடத்தில் மத்திய களத்திலிருந்து பெற்றுக்கொண்ட பந்தை மிகவும் இலாவகமாக நகர்த்திச் சென்ற கிம்ஹான தனது 2ஆவது கோலைப் போட்டு புனித சூசையப்பர் அணியை முன்னிலையில் இட்டார்.

இடைவேளையைத் தொடர்ந்து ஆட்டம் தொடர்ந்தபோது இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்டன. போட்டியின் 67ஆவது நிமிடத்தில் யாழ். மத்திய வீரர் நிஷாந்த் பந்தை கோலினுள் புகுத்தி கோல் நிலையை 2 - 2 என சமப்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து இரண்டு அணியினராலும் எதிரணிகளின் மத்திய களத்திற்கு அப்பால் பந்தை நகர்த்திச் செல்ல முடியாமல் இருந்தது.

எவ்வாறாயினும் போட்டியின் 81ஆவது நிமிடத்தில் யாழ். மத்திய கல்லூரி கோல் காப்பாளர் அவரது நிலையிலிருந்து முன்னோக்கி நகர்ந்திருந்ததை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட புனித சூசையப்பர் வீரர் மார்க் அண்ட்றூ பந்தை உயர்த்தி உதைத்து தனது அணியின் 3ஆவது கோலை போட்டார்.

4_most_goals_golden_boot_winner_anton_je

போட்டி முழுநேரத்தைத் தொட்டபோது ஏய்டன் பெரேரா மிக சாமர்த்தியமாக தனி ஒருவராக பந்தை நகர்த்தி பெனல்டி விளிம்பிலிருந்து அலாதியான கோல் போட்டு புனித சூசையப்பர் கல்லூரியை 4 - 2 என முன்னிலையில் இட்டார்.

உபாதையீடு நேரத்தின் 4ஆவது நிமிடத்தில் த்ரோ இன் பந்தை தலையால் முட்டி மார்க் அண்ட்று தனது 2ஆவது கோலைப் போட புனித சூசைப்பர் 5 - 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை சூடியது.

புனித பத்திரிசியார் மூன்றாம் இடம்

சுகததாச  விளையாட்டரங்கில் காலையில் நடைபெற்ற போட்டியில் கிண்ணியா அல் அக்சா  கல்லூரியை 5 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்ட புனித பத்திரிசியார் கல்லூரி மூன்றாம் இடத்தைப் பெற்றது.

புனித பத்திரிசியார் கல்லூரி சார்பாக ஏ. அன்ரன் ஜெரோம் 2 கோல்களையும் ஏ. லியோ, எஸ். சைனுஜன், தேசிய பாடசாலைகள் விளையாட்டு விழா கால்பந்தாட்டத்தில் அதிசிறந்த வீரராகத் தெரிவான வீ. ரோஹித் ஆகியோர் தலா ஒரு கோலை புகுத்தினர்.

2_runner_up_jaffna_central_college.jpg

இந்த சுற்றுப் போட்டியில் கோல்காப்புகளுக்கு இடையில் மிகச் சிறப்பாக செயற்பட்ட புனித பத்திரிசியார் கல்லூரியின் ஏ. ஆர்னல்ட் அதி சிறந்த கோல்காப்பாளருக்கான தங்க கையுறை விருதை வென்றெடுத்தார்.

அத்துடன் சுற்றுப் போட்டியில் 12 கோல்களை மொத்தமாகப் போட்ட இதே கல்லூரியைச் சேர்ந்த அன்டன் ஜெரோம் அதிக கோல்கள் போட்டதற்கான தங்கப் பாதணி விருதை வென்றெடுத்தார்.

இறுதிப் போட்டி நாயகனாக புனித சூசையப்பர் வீரர் தேஷான் துஷ்மிக்கவும் தொடர்நாயகனாக அதே கல்லூரி வீரர் பெத்தும் கிம்ஹானவும் தெரிவாகினர்.

3_third_place_st_patrick_s__1_.jpg

https://www.virakesari.lk/article/143114

  • நியானி changed the title to சம்பியன் கிண்ணம் கொழும்புக்கா? யாழ்ப்பாணத்திற்கா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.