Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வங்காள விரிகுடாவில் ஒரு படை ஒத்திகை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வங்காள விரிகுடாவில் ஒரு படை ஒத்திகை

இலங்கைத்தீவின் எதிர்காலம்

-புரட்சி (தாயகம்)-

வருகின்ற செப்ரெம்பர் மாதம் முதல் வாரத்தில் இந்தியாவானது பாரிய கடற்படை ஒத்திகை ஒன்றினை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வங்களா விரிகுடாவில் மேற்கொள்ளவுள்ளது. ஐந்து நாட்கள் இடம்பெறவுள்ள இந்த போர் ஒத்திகையில் இந்தியா தவிர அமெரிக்கா, யப்பான், சிங்கப்ப+ர் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் பங்குபற்றவுள்ளன.

அமெரிக்காவின் இரண்டு அணு ஆயுத விமானம் தாங்கிக் கப்பல்களான ருளுளு நிமிட்ஸ், ருளுளு கிற்றி ஹோக் மற்றும் இந்தியாவின் ஐNளு விராட் உட்பட இருபது வரையிலான கடற்படைக் கப்பல்கள் பங்கேற்கவுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் இதேபோன்ற ஒத்திகையொன்று யப்பானிய கடற்பரப்;பில் மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவின் ஏவுகணை பொருத்தப்பட்ட நாசகாரி கப்பலான மைசூர், அமெரிக்காவின் இரண்டு நாசகாரிக் கப்பல்கள் மற்றும் யப்பானின் மூன்று வழித்துணைக் கப்பல்கள் என்பன யப்பானின் சிபா கிழக்கு கடல் பகுதியில் இந்த ஒத்திகை நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தன. யப்பானின் கடற்பிராந்தியத்தில் கடற்படை ஒத்திகையினை இந்தியா முதன்முறையாக நடத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

கடந்த ஒரு தசாப்த காலமாக அமெரிக்கா, யப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிடையேயான உறவுகளானது படிப்படியாக மேம்பாடு அடைந்து வருகின்றது. மேற்கு, கிழக்கு மற்றும் தென் ஆசியா போன்ற பிராந்திய மூலோபாய மனநிலைகளின் சிந்தனைப் போக்குகளில் தற்போது மாற்றங்கள் ஏற்படத்தொடங்கியுள்ளன என்று வோசிங்டனில் தலைமைச் செயலகத்தினைக் கொண்ட மூலோபாய மற்றும் பன்னாட்டு கற்கை நெறிக்கான மையம் தெரிவித்துள்ளது.

கடந்த யூன் மாதம் 28-29 நாள் இடம்பெற்ற ~மூலோபாய ஆசியாவிற்கான பாலம் அமைத்தல்- அமெரிக்கா, யப்பான் மற்றும் இந்தியா| என்ற கலந்துரையாடலில் இந்நாடுகளின் உலகளாவிய ரீதியில் மூலோபாய எதிர்பார்ப்பு, சீனா தொடர்பான எண்ணப்பாடுகள் மற்றும் எரிபொருள் சக்தி, பாதுகாப்பு போன்ற விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன. இந்த மகாநாட்டில் அமெரிக்காவின் தென்னாசியா மற்றும் மத்திய ஆசியாவிற்கான வெளிவிவகாரச் செயலாளர் ரிச்சாட் பௌச்சர், யப்பானுக்கான ஊளுஐளு பணிப்பாளர் மூத்த ஆலோசகர் மைக்கல் கிறீன், அமெரிக்காவிற்கான இந்திய தூதுவர் ரொனென் சென், இந்திய பிரதம மந்திரியின் பேச்சாளர் சஞ்சே பாரு, அமெரிக்காவிற்கான யப்பானிய தூதுவர் ரோசோ காற்டோ போன்றவர்கள் பங்குபற்றியிருந்தார்கள்.

எதிர்கால உலக ஒழுங்கானது அமெரிக்கா, யப்பான், இந்தியா என்பன ஒரு அணியில் சேர்ந்து செயற்படக்கூடிய ஏதுநிலைகள் உருவாகி வருகின்றது என்பதையே மேலே குறிப்பிடப்பட்ட விடயங்கள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.

சீனா, ஈரான், ரஸ்யா மற்றும் பாகிஸ்தான்; என்பனவற்றினைச் சர்வதேச ரீதியில் பல்வேறு முனைகளில் பல்வேறு விடயங்களிற்காக எதிர்கொள்ள வேண்டி தேவைகள் ஏற்படும்போது இத்தகைய கூட்டணி மிகவும் உதவிகரமாக விளங்கும் என்று வோஷிங்டனின் நம்புகின்றது.

பாரசீக வளைகுடாவில் மீண்டும் போர் மேகங்கள் திரளத்தொடங்கியுள்ளன

ஈரானின் ஆணு ஆயுத உற்பத்தி தொடர்பாகவும் ஈராக்கில் சியா இன முஸ்லீம் மக்களுக்கு ஆயுத உதவிகள் உட்பட பல்வேறு உதவிகளை வழங்கி பிராந்தியத்தின் அமைதியை சீர்குலைப்பது தொடர்பாகவும் தனது கரிசனைகளை மிகவும் கடுமையான வார்த்தை பிரயோகங்கள் மூலம் வெளிப்படுத்திய அமெரிக்க அதிபர் புஷ் ஈரான் தொடர்பாக இராஜதந்திர ரீதியிலான அணுகுமுறைகளை கைவிட்டு படை நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபடப்போவதாகவும் அமெரிக்காவில் உள்ள நெவடா என்ற இடத்தில் இடம்பெற்ற படைவீரர்களுக்கான கலந்துரையாடலில் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்திலே ஈரான் அணு ஆயுத தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்துவதும் ஈராக்கில் அமெரிக்க படையினரின் அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சியா முஸ்லீம் மக்களுக்கு பல்வேறு வகையான உதவிகளை வழங்குவதும் ஏற்கனவே பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை என்பன சீர்குலைந்துள்ள இப்பிராந்தியத்தினை மேலும் மோசமான சூழ்நிலைக்குள்ளே தள்ளிவிடும் என்று எச்சரித்த புஷ் மேலும் காலதாமதம் ஏற்படுவதற்கு முன்னரே நாம் சண்டையில் குதிக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஈராக்கிலே நாளுக்கு நாள் நிலைமைகள் சீரழிந்துகொண்டு செல்கின்றது. ஈராக்கின் சுனி, சியா மற்றும் பல்வேறு இனக்குழுமங்களுக்கு இடையிலான மோதல்கள் வேற்று நாட்டு தலையீடுகள் என எல்லாம் சேர்ந்து நரக வாழ்க்கையையே ஈராக்கிய மக்களுக்கு பரிசாக அளித்துள்ளன. 170,000 வரையிலான அமெரிக்க படையினரும் 30,000 வரையிலான ஏனைய வெளிநாட்டு படையினரும் ஈராக்கில் தற்போது நிலைகொண்டுள்ளனர். இதன் விளைவு அமைதியோ மக்களாட்சியோ அல்ல.

மாறாக ஒரு நாளைக்கு 100 என்ற வீதப்படி மக்கள் கொல்லப்படுவதே அமெரிக்கா தலைமையிலான வெளிநாடுகளின் தலையீடுகளின் விளைவாகும்.

ஈராக்கிற்கு தெற்கு திசையில் அமைந்துள்ள ஆப்கானிஸ்தானிலோ இஸ்லாமிய தலிபான் அமைப்பிற்கு எதிரான போரில் தாம் வெற்றிபெற்று விட்டதாக அமெரிக்கா தலைமையிலான நேற்றோ நாடுகளின் பன்னாட்டு படைகள் 2001 மாரிகாலப் பகுதியில் அறிவித்த போதிலும் தற்போது பல்வேறு இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்கள் 50,000 வரையிலான பன்னாட்டு படையினரின் மூக்கில் விரலைவிட்டு ஆட்டிக்கொண்டிருக்கின்றார்க

  • கருத்துக்கள உறவுகள்

வங்காள விரிகுடாவில் இராணுவ ஒத்திகைக்கு இலங்கை வரவேற்பு

[01 - September - 2007]

வங்காள விரிகுடாவில் நடைபெறவுள்ள இராணுவ ஒத்திகையை இலங்கை அரசு வரவேற்றுள்ளது.

மலபார் யுத்த நடவடிக்கையென அழைக்கப்படும் இந்த இராணுவ ஒத்திகை எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை நடை பெறவுள்ளது.

இந்த ஒத்திகையில் இந்திய, அமெரிக்க, ஜப்பான், அவுஸ்திரேலிய மற்றும் சிங்கப்பூர் கடற்படைகள் ஈடுபடவுள்ளன.

இந்த பிராந்தியத்தில் நடைபெறும் நடவடிக்கைகள் இக் கடற்பிராந்தி யத்தில் நடைபெறும் இவ்வாறான கடற்படை கூட்டு நடவடிக்கைகள் இக் கடற்பிராந்தியத்தில் வியாபார மற்றும் வர்த்தக நடவடிக்கைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமென இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் சி.ஆர்.ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

வியாபார மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு இந்தக் கடற்பிராந்தியத்தில் பாதுகாப்பு தேவையென்ற நிலையில், இந்தக் கடல் நடவடிக்கைகளில் ஈடுபடும் எல்லா நாடுகளும் மிகப்பெரிய வர்த்தக நடவடிக்கைகளில் அக்கறை செலுத்துவனவென்றும் அவர் தெரிவித்தார்.

உலகளாவிய ரீதியில் நடைபெறும் வர்த்தக நடவடிக்கைகளில் இலங்கையும் தங்கியுள்ளது.

இதனால் ஆழ் கடலூடாக நடைபெறும் சர்வதேச வர்த்தக மற்றும் வியாபார நடவடிக்கைகளைப் பலப்படுத்தும் விதத்தில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கையையும் இலங்கை நன்கு வரவேற்குமெனவும் தெரிவித்துள்ளார்.

இந்தப் பாரிய கடல் ஒத்திகையில் அணுவாயுதக் கப்பல்களும் நீர் மூழ்கிகளும் போர்க்கப்பல்களும் பங்குபற்றவுள்ளன.

தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.