Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அர்ஜென்டினா - பிரான்ஸ் போட்டியை மீண்டும் நடத்த முடியுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜென்டினா - பிரான்ஸ் போட்டியை மீண்டும் நடத்த முடியுமா?

கத்தார் 2022

பட மூலாதாரம்,GETTY IMAGES

உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியை மீண்டும் நடத்த வேண்டும் என்று கோரி பிரான்ஸ் கால்பந்து ரசிகர்கள் தீவிரமான கையெழுத்துவேட்டையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். 

3-3 என்ற கோல் கணக்கில் சமனில் ஆட்டம் முடிந்த பிறகு பெனால்ட்டி ஷூட் அவுட்டில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்று கோப்பையை வசமாக்கிக் கொண்டது. ஆனால் பிரான்ஸ் ரசிகர்கள் இந்த முடிவை ஏற்றுக் கொள்ளவில்லை.

போட்டி முடிந்ததில் இருந்தே இறுதிப் போட்டி சர்ச்சைகள் தொடர்பான விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் தொடங்கிவிட்டன. 

ஆன்லைன் மனுக்களை ஒருங்கிணைக்கும் மெஸ்ஓபினியன்ஸ் என்ற இணையத்தில் போட்டியை மீண்டும் நடத்துவது தொடர்பான கோரிக்கை எழுப்பப்பட்டிருக்கிறது. இதில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த ஆன்லைன் மனுவில் ஏற்கெனவே கையெழுத்திட்டிருக்கிறார்கள்.

அர்ஜென்டினா அணியின் முதல் இரண்டு கோல்களும் விதிமீறியவை என்று இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

அர்ஜென்டினா - பிரான்ஸ் இடையேயான இறுதிப் போட்டியை மீண்டும் நடத்த வேண்டும் என்று கோருவோரின் முதலாவதாகக் கூறும் காரணம், அர்ஜென்டினாவுக்கு முதல் பெனால்ட்டி வாய்ப்பை வழங்கியிருக்கக் கூடாது என்பதுதான்.

டி பாக்ஸுக்குள் பிரான்ஸ் வீரர் உஸ்மான் டெம்பாலே அர்ஜென்டினா வீரர் டி மரியா மீது மோதி பந்தைக் கடத்தவிடாமல் செய்ததாக அர்ஜென்டினாவுக்கு பெனால்ட்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. 23-ஆவது நிமிடத்தில் கிடைத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மெஸ்ஸி கோல் அடித்தார். 

இதுவே அர்ஜென்டினா முன்னிலை பெறுவதற்குக் காரணமாக அமைந்தது. அந்தத் தருணத்திலேயே அர்ஜென்டினா ரசிகர்கள் ஆராவாரம் செய்து கொண்டிருந்தாலும், பிரான்ஸ் ரசிகர்கள் அதை பெனால்ட்டியாக ஏற்கவில்லை.

இதற்காக ஆதாரமாக டி மரியாவைத் தொடும் காட்சிகளையும் பிரான்ஸ் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார்கள். டி மரியா தாமாகவே கீழே விழுந்ததாக பலர் பதிவிட்டார்கள். தமது மற்றொரு கால் தடுக்கியதாலேயே அவர் விழுந்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்கள்.

கத்தார் 2022

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த பெனால்ட்டியை வழங்குவதற்கு கள நடுவர், காணொளி உதவியை நாடவில்லை என்பதையும் பிரான்ஸ் ரசிகர்கள் விமர்சித்து வந்தார்கள். ஆனால் டெம்பாலே மெதுவாகத் தொட்டாலும், அது பெனால்ட்டிதான் என்று பதிலுக்கு விமர்சனம் செய்து வந்தார்கள். 

இந்த விவாதம்தான் இப்போது ஆன்லைன் மனுவாக உருவெடுத்திருக்கிறது.

கத்தார் 2022

பட மூலாதாரம்,GETTY IMAGES

‘இரண்டாவது கோல் செல்லாது’

இறுதிப் போட்டியின் 36-ஆவது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்கான இரண்டாவது கோலை டி மரியா அடித்தார்.  அர்ஜென்டினாவின் கோல் பகுதியில் இருந்து கடத்தி வரப்பட்ட பந்தை நெடுந் தொலைவு ஓடி வந்து கோலுக்குள் அடித்தார் மரியா. 

ஆனால் பந்தைக் கடத்திவரும்போது எம்பாப்பேவை தடுத்து ரொமேரோ ஃபவுல் செய்ததாக பிரான்ஸ் ரசிகர்கள் கூறுகிறார்கள். இதனால் டி மரியா அடித்த இரண்டாவது கோலையும் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

கத்தார் 2022

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆன்லைன் மனுக்களால் மறு போட்டி நடக்குமா?

சமூக வலைத்தள விவாதங்கள், ஆன்லைன் மனுக்கள், புகார்கள் போன்றவை வைக்கப்பட்டாலும் இறுதிப் போட்டியை மீண்டும் ஒருமுறை நடத்துவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை.

ஏனென்றால் இதற்கு முன்பு பலமுறையும் போட்டிகள் பற்றிய பல புகார்கள் வந்தாலும் அதற்காக போட்டியை மீண்டும் நடத்தும் முடிவை ஃபிபா எடுத்ததில்லை.

கத்தார் 2022

பட மூலாதாரம்,GETTY IMAGES

வேறு என்ன சர்ச்சை?

இறுதிப் போட்டியில் முதல் இரண்டு கோல்கள் மாத்திரமல்லாமல் மெஸ்ஸி அடித்த அர்ஜென்டினாவின் மூன்றாவது கோலும் செல்லாது என்ற விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் தொடருகின்றன.

எனினும், கூடுதல் நேரத்தின்போது அடிக்கப்பட்ட இந்த கோலின்போது பந்து கோல் லைனை தாண்டி விட்டதால் அது செல்லக்கூடியது என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

ஆடுகளத்துக்கு உள்ளே ஏற்பட்ட சர்ச்சைகளைத் தவிர கொண்டாட்டத்தின்போது சர்ச்சைகள் ஏற்பட்டிருக்கின்றன. 

இறுதிப் போட்டியில் சிறப்பாக ஆடிய பிரான்ஸ் கால்பந்து வீரர் கிலியன் எம்பாப்பேயை கேலி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அர்ஜென்டினா அணியின் கோல் கீப்பர் எமி மார்ட்டினஸ் மீது விசாரணை நடத்தப்பட இருக்கிறது.

 

கத்தார் 2022

பட மூலாதாரம்,GETTY IMAGES

கால்பந்து உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணி வீரர்களுக்கு பியூனோஸ் அயர்ஸ் நகரில் வரவேற்பு அளிக்கப்பட்டபோது ஒரு குழந்தை பொம்மையில் எம்பாப்பேயின் முகத்தை பொருத்தி கொண்டு வந்தார் மார்ட்டினஸ்.

இந்தப் புகைப்படமும் காணொளியும் சமூக வலைத்தளங்களில் பரவியதுடன், கடுமையான விமர்சனத்துக்கும் உள்ளானது. இதற்கு முன்பும் மார்ட்டினஸ் பல முறை எம்பாப்பேயே கேலி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்.

கத்தார் லூசாய்ல் மைதானத்தில் உலகக் கோப்பையை வென்ற சிறிது நேரத்துக்குப் பிறகு, ஓய்வு அறையில் எம்பாப்பேக்காக ஒரு நிமிடம் மௌனம் அனுசரிக்க வேண்டும் என்று கூறிய காணொளியும் இதேபோன்ற விமர்சனத்தைப் பெற்றது.

https://www.bbc.com/tamil/articles/c6p8rl13e6lo?fbclid=IwAR30VY30D6J8nxaCL16K-W9tBCZXFmXXbtLBJ-bUTPtCEAPRsL-ehCGmjAk

  • கருத்துக்கள உறவுகள்

'அழுவதை நிறுத்துங்க பிரான்ஸ்' - இறுதிப் போட்டி சர்ச்சைக்கு அர்ஜென்டினா ரசிகர்கள் பதிலடி

Mbappe, Messi, Martinez

பட மூலாதாரம்,GETTY IMAGES

2 மணி நேரங்களுக்கு முன்னர்

கத்தார் உலகக்கோப்பை இறுதிப்போட்டி முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. ஆனால் பரபரப்புக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமே இல்லை. அர்ஜெண்டினா ரசிகர்கள் 'அழுவதை நிறுத்துங்க ஃபிரான்ஸ்' என ஒரு கையெழுத்து வேட்டையை நடத்தி இருக்கிறார்கள். அதில் இதுவரை சுமார் 7 லட்சத்து 25 ஆயிரம் பேர் வரை கையெழுத்திட்டிருக்கிறார்கள்.

இந்த விவகாரத்தில் என்ன நடந்தது?

கத்தாரின் லூசைல் மைதானத்தில் கடந்த டிசம்பர் 18-ம் தேதி உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி நடந்தது. இந்த போட்டியில் மோதிய பிரான்ஸ் மற்றும் அர்ஜெண்டினா அணிகள் கூடுதல் நேரத்தின் முடிவில் தலா மூன்று கோல்கள் அடித்திருந்தன. ஆட்டம் சமநிலையில் இருந்ததால் பெனால்டி ஷூட் அவுட் நடத்தப்பட்டடது.

இதில் 4-2 என்ற கணக்கில் அர்ஜென்டினா வென்று 36 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பையைக் கைப்பற்றியது. இதனால் தொடர்ச்சியாக இரு உலகக் கோப்பையை வெல்லும் பிரான்ஸ் அணியின் கனவு நொறுங்கியது. இந்த போட்டியின் முடிவில் எம்பாப்பேவை தொடர்ச்சியாக அர்ஜென்டினா கோல்கீப்பர் மார்ட்டினெஸ் கேலி செய்வதாக சர்ச்சை எழுந்தது. இது குறித்து பிரான்ஸ் கால்பந்து சம்மேளனம் அர்ஜென்டினா கால்பந்து கூட்டமைப்பிடம் அதிகாரப்பூர்வமாக புகாரளித்தது.

France lost at penalty

பட மூலாதாரம்,GETTY IMAGES

பிரான்ஸ் தொடங்கி வைத்த கையெழுத்து வேட்டை

இந்நிலையில், MesOpinions எனும் வலைதளத்தில் FRANCE 4EVER எனும் ஒரு பயனர் ஃபிபாவுக்கு ஒரு மனு எழுதினார். இதில் நடுவர் குழு மொத்தமாக விலை போய்விட்டது . இறுதிப்போட்டி மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த மனுவில் கையெழுத்திட்டு பகிரவும் என குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவில் சுமார் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கையெழுத்திட, இந்த விவகாரம் கால்பந்து உலகில் கவனம் பெற்றது. கையெழுத்திட்ட பலரும் போட்டி நடுவர் சைமோன் மார்சினியாக்கின் முடிவுகள் மீது அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

 
Szymon Marciniak

பட மூலாதாரம்,GETTY IMAGES

பிரஞ்சு ஊடகங்கள் பலவும் மார்சினியாக் முடிவுகளை விமர்சித்திருந்தன. L’Equipe எனும் ஒரு பிரஞ்சு நாளிதழ் அர்ஜென்டினாவுக்கு ஏன் மூன்றாவது கோல் வழங்கப்பட்டிருக்கக் கூடாது என கேள்வி எழுப்பி ஒரு கட்டுரை தீட்டியிருந்தது.

இந்நிலையில் போலாந்து நாட்டைச் சேர்ந்த நடுவரான மார்சினியாக் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். இதில் ''பிரஞ்சு ஊடகங்கள், ரசிகர்கள் இந்த போட்டோவை பற்றி குறிப்பிட மறந்துவிட்டார்கள் பாருங்கள்.

எம்பாப்பே கோல் அடிக்கும்போது ஏழு பிரஞ்சு வீரர்கள் அங்கே பிட்சில் இருந்தார்கள்,'' என்று குறிப்பிட்டார். அவர் எம்பாப்பேயின் மூன்றாவது கோலை குறிப்பிட்டார். அந்த கோல் மூலமாகத் தான் மேட்ச் பெனால்டி ஷூட் அவுட் சென்றது குறிப்பிடத்தக்கது.

 

அர்ஜெண்டினா ரசிகர்களின் பதிலடி

பிரஞ்சு ரசிகர்களின் மனுவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வாலெண்டின் கோமஸ் என்ற பயனர் Change.org எனும் தளத்தில் அழுவதை நிறுத்தவும் பிரான்ஸ் என ஒரு கையெழுத்து வேட்டையை தொடங்கினார். அதில், "நாங்கள் உலகக்கோப்பையை வென்றதில் இருந்து பிரான்ஸ் ரசிகர்கள் இன்னும் அழுவதை நிறுத்தவில்லை. புகார் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

change.org

பட மூலாதாரம்,CHANGE.ORG

 
படக்குறிப்பு,

டிசம்பர் 26ஆம் தேதி மதியம் வரை 7 லட்சத்திற்கும் அதிகமானோர் அர்ஜெண்டினாவுக்கு ஆதராவக கையெழுத்திட்டு இருந்தனர்

அர்ஜெண்டினா உலக சாம்பியன் என ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். இங்கே ஒரு வேண்டுகோள் என்னவென்றால் பிரான்ஸ் அழுவதை நிறுத்தவேண்டும், மேலும் கால்பந்து வரலாற்றின் அதிசிறந்த வீரர் மெஸ்ஸி என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்," என குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவில் வெறும் மூன்று நாட்களில் சுமார் ஏழு லட்சத்து 25 ஆயிரம் வரை பேர் கையெழுத்திட்டுள்ளனர்.

ஆன்லைன் மனுக்களால் மறு போட்டி நடக்குமா?

சமூக வலைத்தள விவாதங்கள், ஆன்லைன் மனுக்கள், புகார்கள் போன்றவை வைக்கப்பட்டாலும் இறுதிப் போட்டியை மீண்டும் ஒருமுறை நடத்துவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை.

ஏனென்றால் இதற்கு முன்பு பலமுறையும் போட்டிகள் பற்றிய பல புகார்கள் வந்தாலும் அதற்காக போட்டியை மீண்டும் நடத்தும் முடிவை ஃபிஃபா எடுத்ததில்லை.

https://www.bbc.com/tamil/articles/c0wdp6zyy32o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.