Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மஹிந்த சிந்தனை மீது நம்பிக்கைவைத்த மக்கள் தற்போது ஆட்சி மாற்றத்திற்காக காத்திருக்கின்றனர் ஐ.தே.க. தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்த சிந்தனை மீது நம்பிக்கைவைத்த மக்கள் தற்போது ஆட்சி மாற்றத்திற்காக காத்திருக்கின்றனர் ஐ.தே.க. தெரிவிப்பு

வீரகேசரி நாளேடு

மஹிந்த சிந்தனை மீது நம்பிக்கை வைத்து கடந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தவர்கள் தற்போது புதிய தேர்தலான்றுக்காகவும் ஆட்சி மாற்றத்துக்காகவும் காத்துக்கொண்டிருக்கின்றனர். தற்போதைய அரசாங்கத்தில் ஊழல், வீண்விரயம் மற்றும் மோசடி அதிகரித்துவிட்டது. திட்டங்கள் மற்றும் குறிக்கோள்கள் இன்றி அரசாங்கம் செயற்படுகின்றது. பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியில் நாடு திண்டாடுகின்றது. தோல்வியடைந்த மற்றும் அராஜகமான நிருவாகமே தற்போது நாட்டில் இடம்பெறுகின்றது என்று ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகப்பேச்சாளரும் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

வன்னி மீது தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளிடமிருந்து அப்பகுதி‘யனை மீட்போம் என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆனால் வடக்கில் பாரிய இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திட்டம் இல்லை என்று வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். அரசாங்க மட்டத்திலான முரண்பாடுகள் அதிகரித்து வருகின்றமையையே இது எடுத்துக்காட்டுகின்றது என்றும் அவர் மேலும் கூறினார்.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது :

அமைச்சர் பந்துல குணவர்த்தன ஐக்கிய தேசிய கட்சியின் பக்கம் இருக்கும்போது நாட்டின் பொருளாதாரத்தை பற்றி கூறிய விடயங்கள் தற்போது இடம்பெற்றுவருகின்றன. வரலாற்றில் அதிகமானளவு ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருகின்றது. எமது ஆடசிக்காலத்தில் 94 ரூபாவாக இருந்த டொலரின் இலங்கை பெறுமதி தற்போது 113 ரூபாவாக உயர்ந்துள்ளது. மேலும் சில வாரங்களில் டொலருக்கான ரூபாவின் பெறுமதி 125 ரூபாவாக உயரும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அவ்வாறு உயருமிடத்து மக்கள் பாரியளவில் பாதிக்கப்படுவார்கள். பணவீக்கம் உயர்வடையும். தற்போது பணவீக்கம் 17 வீதமாக உள்ளது என்று மத்திய வங்கி கூறுகின்றது. ஆனால் உண்மையான நிலைவரப்படி பணவீக்கம் 25 வீதமாக உள்ளது. ஆனால் உண்மை மறைக்கப்படுகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.