Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாய்லாந்தில் காட்டு பயணத்தின் போது, மனைவியை மறந்துவிட்டுச் சென்ற கணவர்...நடுகாட்டில் தவித்த மனைவி..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனைவி காரில் இருக்கிறாளா? இல்லை என்பதை கூட பார்க்காமல் சென்று விட்டார். தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் பூண்டோம் சாய்மூன் (55) - அம்னுவாய் சாய்மூன் (49) தம்பதி. இவர்கள் இருவரும் விடுமுறையை கழிக்க மஹா சரகம் மாகாணத்திலுள்ள தங்களது சொந்த ஊருக்குப் சென்றுள்ளனர். இருவரும் சந்தோஷமாக சென்றதாகக் கூறுகின்றனர். இந்த நிலையில், அதிகாலை 3 மணியளவில் வாகனத்தை ஓட்டிவந்த கணவர் பூண்டோம் இயற்கை உபாதையை கழிக்க வாகனத்தை ஓராமாக நிறுத்தி உள்ளார். அதே நேரம் மனைவி அம்னுவாயும் இயற்கை உபாதையை கழிக்க காரிலிருந்து இறங்கி உள்ளார். அந்தப் பகுதியில் கழிவறை இல்லை என்பதால் அருகில் இருந்த புதர் பகுதிக்குச் சென்று இருக்கிறார். அவர் திரும்பி வருவதற்குள் இயற்கை உபாதையை கழித்துவிட்டு வந்த பூண்டோம், மறதியாக வாகனத்தை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார். மனைவி காரில் இருக்கிறாளா? இல்லை என்பதை கூட பார்க்காமல் சென்று விட்டார். பின்னர் அவர் மனைவி, காரை நிறுத்திய இடத்துக்கு வந்து பார்த்த போது காரோடு கணவர் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். என்ன செய்வதும் என்றும் கையில் வைத்திருந்த செல்போனும் காரிலேயே வைத்திருந்ததால் அவரால் யாரையும் கணவரை உடனடியாக தொடர்புகொள்ள முடியாமல் தவித்து போனார். அதிகாலை நேரம் என்பதால் இருட்டில் பயந்து, யாரிடமும் உதவி கேட்க முடியாமல் கதறி அழுதிருக்கிறார். பின்னர் வேறுவழியின்றி, அவர் நடந்து செல்ல தீர்மானித்திருக்கிறார். அதன்படி காட்டு விலங்குகளின் பயம் ஒரு பக்கம் மற்றும் மர்மநபர்கள் நடமாட்டம் உள்ளிட்டவை நினைத்து பதற்றத்துடன் வேகமாக நடந்து, அதிகாலை 5 மணியளவில் கபின் புரி மாவட்டத்தை சுமார் 20 கி.மீ (தோராயமாக 12.4 மைல்) நடந்து வந்துள்ளார். அதிர்ஷ்டவசமாக, ஊர் எல்லையில் இருந்த காவல்துறை அதிகாரியின் செல்போனிலிருந்து தன்னுடைய கணவரை அழைத்திருக்கிறார். ஆனால் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. காலை 8 மணியளவில்தான், மீண்டும் போலீசாரின் உதவியுடன் அவர் தன் கணவரை தொடர்பு கொள்ள முடிந்தது. அவர் அப்போது 159.6 கிமீ (100 மைல்) தொலைவில் உள்ள கோரட் மாகாணத்துக்கே சென்றுவிட்டார். இதைத் தொடர்ந்து, மனைவியை அழைத்துச் செல்ல வந்த கணவனிடம் காவல்துறை விசாரித்ததில், ``இவ்வளவு நேரம், காரில் மனைவி இல்லை என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை. அவள் பின்சீட்டில் அயர்ந்து தூங்குகிறாள் என்ற நினைத்து நான் சென்று கொண்டிருந்தேன்" எனக் கூறி தனது செயலுக்கு மிகவும் வருந்துவதாகவும், மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். இந்தச் சம்பவத்துக்குப் பிறகும் மனைவி கணவனின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டு அவரோடு சண்டையிடாமல் அமைதியாக புறப்பட்டு சென்று இருக்கிறார். இது தொடர்பாக அந்தப் பெண், "எனக்கும் அவருக்கும் கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 26 வயதில் ஒரு மகன் இருக்கிறார். அவரைப் பற்றிய புரிதல் எனக்கு இருக்கிறது" என கூறி உள்ளார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் இந்த தம்பதியைப் பாராட்டி வருகின்றனர்.

https://www.dailythanthi.com/News/World/thailand-man-forgets-wife-after-toilet-break-during-road-trip-forces-her-to-walk-20-km-867882?fbclid=IwAR2Xu7R9O301i_lV1NeQQmRW0fyvqA2j43lMgXvKuP2ddNz0cSD2S3uU4b4

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.