Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் உயர்மட்டக்குழுவினர் இந்தியா பயணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் உயர்மட்டக்குழுவினர் இந்தியா பயணம்

வீரகேசரி நாளேடு

பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தலைமையிலான உயர் மட்டக்குழுவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்தியாவின் புதுடில்லிக்கு அவசர விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

பாதுகாப்பு செயலாளருடன் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ ஆகியோரும் இந்தியா சென்றுள்ளனர். இந்த தூதுக் குழுவினர் இந்திய விஜயத்தின்போது இலங்கையின் பொருளாதாரம், அரசியல் மற்றும் தேசிய பாதுகாப்பு நிலைவரங்கள் தொடர்பாக இந்திய தலைவர்களுடன் விரிவாக கலந்துரையாடவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய வெளிவிவகார, பாதுகாப்பு அதிகாரிகளுடன் கோத்தபாய, பசில் முக்கிய பேச்சுவார்த்தை பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்வு

வீரகேசரி நாளேடு

புதுடில்லிக்கு நேற்று முன்தினம் விஜயம் செய்த இலங்கையின் உயர்மட்டக்குழு நேற்று இந்திய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ

ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழுவினரே இந்திய தலைநகர் புதுடில்லிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். இக்குழுவினர் நேற்று இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி, அமைச்சின் செயலாளர் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இச்சந்திப்பானது இரு நாடுகளுக்கும் இடையிலான வழக்கமான தகவல் பரிமாற்றம் செய்யும் பேச்சுவார்த்தை என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் இந்த சந்திப்பின்போது இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலைமைகள், விடுதலைப்புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து இலங்கை உயர் அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். மேலும் இந்திய கடல் எல்லை வழியாக ஆயுதங்கள் கடத்தப்படுவதை சுட்டிக்காட்டிய இலங்கை அதிகாரிகள், இவற்றை தடுக்க இந்திய கடல் எல்லையில் பாதுகாப்பை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை, இலங்கையின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் குந்தகம் விளைவிக்காமல் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும் என இந்திய தரப்பில் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது

கோட்டாபய-பஸில் குழுவிடம் புதுடில்லி வற்புறுத்தல்

வடபகுதியை முற்றாகக் கைப்பற்றும் பாரிய இராணுவ நடவடிக்கை அடங்கிய தாக்குதல் திட்டத்தை முன்னெடுக்காமல், அமைதித் தீர்வுக்கான தென்னிலங்கையின் அரசியல் திட்டத்தை முன்வையுங்கள்.

இப்படி புதுடில்லிக்கு விஜயம் செய்திருக்கும் இலங்கை அரசின் உயர்மட்டக் குழுவிடம் இந்திய அரசுத் தலைமை வற்புறுத்தித் தெரிவித்திருப்பதாக புது டில்லி வட்டாரங்கள் மூலம் அறிய வருகின்றது.

ஜனாதிபதியின் இரண்டு சகோதரர்களான பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபய ராஜபக்ஸ, ஜனாதிபதியின் ஆலோசகர் பஸில் மற்றும ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் அடங்கிய அரசின் உயர்மட்டக் குழு கடந்த ஞாயிறன்று புதுடில்லி சென்றது.

அக்குழு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் பாதுகாப்பு ஆலேசகர் எம்.கே.நாராயணன் உட்பட இந்திய அரசின் மூத்த அதிகாரிகளோடு பல சுற்றுப் பேச்சுகளில் ஈடுபட்டது எனத் தெரிவிக்கப்டடுகின்றது. கொழும்பிலிருந்து புதுடில்லி சென்றிறருக்கும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அலேக் பிரசாத்தும் இந்தச் சந்திப்புகளில் கலந்த கொண்டார்.

இந்தச் சந்திப்புகளின் போதே இந்தியத் தரப்பின் நிலைப்பாடு கொழும்பு அரசின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டதாகத் தெரிகிறது.

வடக்கின மீது பெரும் இராணுவத் தாக்குதல் நடவடிக்கையை முன்னெடுக்கும் திட்டம் ஒன்று கொழும்பிடம் இருப்பது பற்றிய தகவல் இந்தச் சந்திப்புக்களின் போது இந்தியத் தரப்புக்குக் கோடி காட்டிப்பட்டதாகவும் அந்த யோசனையை புதுடில்லி கடுமையாக ஆட்சேபித்ததாகவும் விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இலங்கையில் பெரும் இராணுவத் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டால் மீண்டும் தமிழகத்துக்கு பெருமளவில் தமிழ் அகதிகள் வந்து குவிவர். அத்துடன் தமிழக அரசியலில் பெரும் குழப்ப நிலையையும் அத்தகைய தாக்குதல் திடட்டம் ஏற்படுத்தும். ஆகவே, தாக்குல் திட்டத்தை விடுத்து, தீர்வு யோசனைத் திட்டத்தை உடன் முன்வைத்து, அதன் அடிப்படையில் அமைதி முயற்சிகளை விரைந்து ஆரம்பிக்கக் கொழும்பு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புதுடில்லி வலியுறுத்தியது எனக் கூறப்படுகிறது.

தீர்வு யோசனை, வடக்கு கிழக்கு இணைப்பு ஆகியன சம்பந்தமாக புது டில்லித் தலைமைக்கு கொழும்பு அரசு முன்னர் வழங்கியவை எனக் கூறப்படும் உறுதி மொழிகளும் இந்தச் சந்திப்பின் போது நினைவூட்டப்பட்டன என்றும், இவ்விடயங்களில் கொழும்பு அரசின் காத்திரமான நடவடிக்கைக்கு புதுடில்லி காதிருக்கின்றது என்பது கொழும்புக்கு இச்சந்திபுகளின் போது தெரியாப்படுத்தபட்டது என்றும் மேலும் கூறப்பட்டது.

மொத்தத்தில் இலங்கை அரசின் உத்தேச தாக்குதல் திட்டம் தனக்கு இசைவற்றது என்பதை அந்தச் சந்திப்புகளின் போது இந்தியா கொழும்புக்குத் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தி விட்டது எனவும் தெரியவருகிறது.

இதேசமயம், ஈழத்தமிர்களுக்கான உணவு மற்றும் நிவாரணப் பொருட்கைள ஏற்றிக் கொண்டு படகில் தமிழகத்தில் இருந்து இலங்கையின் வடபுலத்துக்கு இம்மாத நடுப்பகுதியில் தாம் புறப்பட்டுச் செல்லப் போகிறார் என தமிழ்த் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூறிவருகின்ற விடயமும் இலங்கை உயர்மட்டடக் குழுவின் புது டில்லி விஜயத்தின் போது விரிவாக ஆராயப்பட்டதாகத் தெரிகின்றது.

இந்த விவகாரத்தில் சர்ச்சைகள் ஏற்படாமல் தவிர்க்கும் நோக்கில் நெடுமாறனின் முயற்சியைத் தடுக்கும் திட்த்தில் பிரதமர் மன்மோகன் சிங்கின் பாதுகாப்பு ஆலேசகர் எம். கே. நாராயணன் இவ்வார இறுதியில் தமிழகம் விரைகிறார் என்றும், அவர் இவ்விடம் குறித்து தமிழக முதல்வர் கருணாநிதியுடன் பேசி, அவர் மூலமாக நெடுமாறனின் முயற்சியைத் திசை திருப்ப நடவடிக்கை எடுப்பார் என்றும் சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

நன்றி : சுடர் ஒளி

(இன்று காலையிலிருந்து ஊர்ப்புதினம் பகுதிக்கு செய்திகளை இட முடியாதுள்ள படியினால் இப்பகுதியில் இதனை இட்டுள்ளேன். காரணம் தெரியவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் இதனை ஊர் புதினம் பகுதியில் இணைக்க ஆவணை செய்யுங்கள். - நன்றி)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வியாழன் 06-09-2007 21:31 மணி தமிழீழம் [தாயகன்]

இந்திய - சிறீலங்கா பாதுகாப்புக் கூட்டுக்குழு நியமனம்

சிறீலங்கா பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, சிறீலங்கா அதிபரின் ஆலோசகர் பசில் ராஜபக்ஸ, சிறீலங்கா அதிபரின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியாவிற்குச் சென்று 3-4 ஆம் திகதிவரை உயர்மட்ட சந்திப்புக்களில் ஈடுபட்டிருந்தனர்.

இந்தியத் தரப்புடனான உயர்மட்டச் சந்திப்பில், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம். கே. நாராயணன், பாதுகாப்புச் செயலாளர் சிறீ விஜய் சிங், வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு விடயங்கள், பயங்கரவாதத்தை ஒழித்து இனப்பிரச்சினைக்கு முடிவு கட்டுதல், தற்கால அரசியல் நிலமை, கிழக்கின் அபிவிருத்தி, வடக்கின் மனிதாபிமானப் பணிகள் பற்றிப் பேசப்பட்டதாக சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு உத்தியோகபூர்வமாக இன்று அறிவித்திருந்தது.

இந்தச் சந்திப்புக்களின்போது சிறீலங்காவின் தேசிய ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் பாதிக்காத வகையில் அதிகாரப் பகிர்வின் மூலம் இனப் பிரச்சினைக்கான தீர்வு விரைவில் காணப்பட வேண்டும் என இந்தியத் தரப்பினர் விருப்பம் வெளியிட்டதாகவும் சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு தனது அறிக்கையில் கூறியிருந்தது.

ஆனால் சிறீலங்கா சமாதான செயலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இரு நாடுகளின் பாதுகாப்பு உயர் அதிகாரிகளை உள்ளடக்கிய "உயர்மட்ட பாதுகாப்புக் கூட்டுக்குழு" ஒள்று நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம். கே. நாராயணன், பாதுகாப்புச் செயலாளர் சிறீ விஜய் சிங், வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனன், சிறீலங்கா பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, சிறீலங்கா அதிபரின் ஆலோசகர் பசில் ராஜபக்ஸ, சிறீலங்கா அதிபரின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் இந்த உயர் மட்டக் குழுவில் அங்கம் வகிப்பதாகவும் இந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் திடீரென இந்த "உயர்மட்ட பாதுகாப்புக் கூட்டுக்குழு" அமைக்கப்பட்டுள்ளதால் பல்வேறு சந்தேகங்களை அது தோற்றுவித்துள்ளது.

pathivu

ஆயுதத்தை கொடுக்காம நல்ல அறிவுறுத்தலை கொடுக்கலாமே? :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.