Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சற்று ஆறுதல் அடைய ஒரு ஆய்வுக்கட்டுரை

Featured Replies

திங்கள் 03-09-2007 01:42 மணி தமிழீழம் [பதிவு நிருபர்]

"புலிகளின் பொறுமைக்குப் பின்னால்..!"

வழமை போலவே அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயும் அதனை மீளுரைத்துள்ளார். கிழக்கிற்கு செல்வதற்கு முன்னர் விடுதலைப் புலிகளின் அனுமதி தேவைப்பட்டது. இப்போது அது தேவையற்றதாகி விட்டது.

அதுபோல் வடக்கில் வன்னியையும் விரைவில் கைப்பற்றி அங்கும் நாம் அங்கு சுதந்திரமாக சென்று வருவோம் என பெர்ணான்டோபுள்ளே கூறியிருக்கிறார்.

கோத்தபாய அநுராதபுரத்தில் உரை நிகழ்த்துகையில் தெரிவித்த இன்னொரு விடயத்தை நாம் அவதானிக்க வேண்டும். படையினரின் கவனத்தை திசைதிருப்பி நிலையற்ற தன்மையை எற்படுத்த விடுதலைப் புலிகள் முயற்சிப்பதாகவும், கிழக்கை மீண்டும் விடுதலைப் புலிகள் கைப்பற்ற இடமளிக்கப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதிலிருந்து தெரியவருவது என்னவெனில், கிழக்கில் படையினர் தாங்கள் பிடித்த இடத்தை தக்கவைப்பதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளார்கள் என்பதும், விடுதலைப் புலிகள் கிழக்கில் திடீரென கரந்தடித் தாக்குதல்களை நடத்தலாம் என்கிற அச்சம் படையினர் மத்தியில் தோன்றியுள்ளது என்பதும் தான்.

அதேவேளை ஆளும்தரப்பு அரசியல்வாதிகள் சிங்கள மக்களையும் படையினரையும் தொடர்ச்சியாக வெற்றிக்களிப்பிலும், நம்பிக்கையுணர்விலும் வைத்திருக்கமுடியாத நிலையும் தோன்றியுள்ளது.

கிழக்கில் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளும், அதனூடாக சிங்கள மக்களுக்கு காட்டிய நில ஆக்கரமிப்பு வெற்றிகளும் தற்போது ஒரு கலங்கல் நிலையை அடைந்து விட்டது.

இராணுவ வெற்றிகளைக் காட்டி அரசியல் நடத்தும் மகிந்த குழுவினரின் நடவடிக்கைகள் ஒரு தேக்கநிலைக்கு வந்துவிட்டன. எனவேதான் கோத்தாபய, பெர்னாண்டோபுள்ளே போன்றவர்கள் சிங்கள மக்கள் மத்தியில் வீரவசனங்களைப் பேச வேண்டியுள்ளது.

தென்னிலங்கையில் விலைவாசி உயர்வு, நிர்வாகச் சீர்கேடுகள், அரச திணைக்களங்களில் நிலவும் ஊழல் மோசடிகள் காரணமாக சாதாரண பொதுமக்கள் அதிகம் பாதிப்பிற்குள்ளாகி வருகிறார்கள்.

மாயையான யுத்த வெற்றிப்பரப்புரை மயக்கங்களிலிருந்து அவர்கள் வெளியே வந்து கொண்டிருக்கிறார்கள். யதார்த்த வாழ்வில் அவர்களைச் சூழ்ந்து வரும் வாழ்வியல் நெருக்கடிகளுக்கு எவ்வாறு முகம் கொள்வதென்பதே அவர்களுக்கு தற்போதுள்ள பிரச்சினை.

யுத்தத்தையும் அபிவிருத்தியையும் ஒரே சமயத்தில் முன்னெடுத்துச் செல்வதாக மகிந்த ராஜபக்ச கூறிவருவதை தற்போது அவர்கள் நம்பமறுக்கிறார்கள்.

சாதாரண பொதுமக்கள், விவசாயிகள் மட்டுமின்றி, ஆசிரியர்கள், அரச திணைக்களங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள், பணியாளர்கள் என எல்லோருமே ஏதோ ஒரு வகையில் இந்த அரசாங்கத்திற்கெதிரான போராட்டங்களில் ஈடுபடத்தொடங்கியுள்ளனர்.

பாதிப்படைந்து வரும் மக்களைத் திரட்டியே இப்போது ஐக்கிய தேசியக்கட்சி, ஜே.வி.பி போன்றவை அரசாங்கத்திற்கெதிரான போராட்டங்களை நடத்திவருகின்றன.

கொதி நிலையிலுள்ள மக்கள் தொடர்ந்து சிறீலங்கா அரசாங்கத்தின் பரப்புரைகளை செவிமடுக்கும் நிலையில் இல்லை என்பது இப்போது மகிந்த ராஜபக்சவிற்கு தெரியாமலில்லை.

இப்போது ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடிகளிலிருந்து சற்று மீள்வதெனின் வெளிநாட்டு நிதியுதவி மிக அவசியமானதாகவுள்ளது. அதற்கு நிதியுதவி செய்யும் நாடுகளின் நிகழ்ச்சி நிரலை மகிந்த ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டமொன்றை மகிந்த முன்வைக்க வேண்டும். ஆனால் மகிந்தவின் பேரினவாத சிந்தனையும் நோக்கும் அதற்கு இடமளிப்பதாக இல்லை. சர்வதேச நாடுகளை ஏமாற்ற அல்லது இழுத்தடிக்க மகிந்தவினால் அமைக்கப்பட்ட சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு என்ற நாடகமேடை தற்போது முடிவுறும் கட்டத்திற்கு வந்துவிட்டது.

புத்திஜீவி, பேராசிரியர் என்ற நிலையிலிருந்த அமைச்சர் திஸ்ஸ விதாரணவின் பாத்திரம் அகற்றப்பட்டு கடும் இனவாதியான சிறீலங்காவின் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைமைப்பொறுப்பை ஏற்றுள்ளார்.

இது சர்வகட்சி பிரதிநிகள் குழுவின் மீதிருந்த சர்வதேசத்தின் கொஞ்சநஞ்ச எதிர்பார்ப்பையும் சாகடித்துள்ளது.

யுத்ததையும் முன்னெடுத்து அபிவிருத்தியையும் மேற்கொள்வதென்பதான மகிந்தவின் எண்ணமானது, சர்வதேச சமூகம் சிறீலங்காவிடம் எதனையும் கேட்காது, இங்கு நடைபெறும் மனிதவுரிமை பிரச்சினைகளை கண்கொண்டும் பார்க்காது நிதிகளை வாரிவாரிக் கொடுத்துக்கொண்டிருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.

அது அப்படி நடக்கப்போவதில்லை.

இன்று பல முனைகளிலும் சிறீலங்கா அரசாங்கம் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. நாட்டின் பெருமளவில் சீர்குலைந்து வரும் பொருளாதாரம், சர்வதேச நாடுகளுடனான உறவுகளில் சிறீலங்காவிற்கு எற்பட்டுவரும் பின்னடைவுகள், அவப்பெயர்கள். உள்நாட்டில் மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் நம்பிக்கையின்மை போன்ற மேலும் பல பிரச்சினைகள்.

வெளிநாடுகளின் நிகழ்ச்சி நிரல்களுக்குள் உட்படாமல் தன்னுடைய நிகழ்ச்சிநிரலுக்குள் வெளிநாடுகளை உள்வாங்குகின்ற தந்திரோபாயத்தில் மகிந்த வெற்றிபெற்று வருவது போன்ற ஒரு தோற்றப்பாடு ஆரம்பத்தில் ஏற்பட்டு வந்தமை உண்மை தான்.

ஆனால் தற்போது அந்நிலை இல்லை. வெளிநாடுகள் சில விடயங்களில் விட்டுக்கொடுத்து வந்தபோதும், அவை தமது நிகழ்ச்சி நிரலைப் பேணுவதில் நீண்டகால நோக்கில் கவனமாகவே இருப்பதை அவதானிக்க முடிகிறது.

இலங்கைக்கு உதவும் இணைத்தலைமை நாடுகள் இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டமொன்றை முன்வைக்கும்படி தொடர்ந்து சிறீலங்கா அரசாங்கத்தை வற்புறுத்தி வருகின்றது. இத்தீர்வுத்திட்டம் முன்வைக்கப்படுமாயின் சிலசமயம் சர்வதேச நாடுகளின் அடுத்தக்கட்ட நகர்வவை நாம் உடனடியாக தெரிந்து கொள்ள முடியும்.

ஆனால் அதற்கு சிறீலங்கா அரசாங்கம் தயாராக இல்லை. எனவே சர்வதேச நாடுகளின் அசைவற்ற நிலை எவ்வளவு நாட்களுக்குத் தொடரும் என்கிற கேள்வி எழுகின்றது. தீர்வுத்திட்டமொன்றை முன்வைக்கும் வரை தாம் விலகி நின்று நிலமைகளை அவதானிக்கப் போவதாக இணைத்தலைமை நாடுகள் கூறியமைக்கு உள்நோக்கங்கள் உள்ளன.

வெளிநாட்டு நிதியுதவிகள் கிடைக்காமல் எவ்வளவு நாட்களுக்கு மகிந்த அரசாங்கம் இயங்கும். அதாவது போரையும் முன்னெடுத்து நாட்டுமக்களின் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு நீண்டநாட்களுக்கு காத்திருக்க மகிந்த அரசினால் முடியாது.

மிகவும் பலவீனமான, மோசமான தீர்வுத்திட்டமொன்றை முன்வைத்து தாங்கள் ஏமாற்றப்படுவதையும் சர்வதேசம் ஏற்றுக்கொள்ளாது. தீர்வுத்திட்டத்தை எற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தமுடியாவிட்டாலும், அதனைப் பரிசீலிக்குமாறு அல்லது, அதனை அடிப்படையாக வைத்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுமாறு விடுதலைப் புலிகளுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய அம்சங்களடங்கிய ஒரு தீர்வுத்திட்டத்தினையே சர்வதேச சமூகம் குறிப்பாக இணைத்தலைமை நாடுகள் எதிர்பார்க்கின்றன.

அதனை மகிந்த அரசாங்கம் செய்யாவிட்டால் சகல நிதியுதவிகளும் முடக்கப்பட்டு ரணில் தலைமையிலான அரசாங்கம் சிறீலங்காவைப் பொறுப்பேற்கும் வகையில் இணைத்தலைமை நாடுகளின் எதிர்கால நடவடிக்கைகள் அமையலாம்.

ரணில் முழுக்க முழுக்க மேற்குலகின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப நகரக்கூடியவர். இப்போது மகிந்த அரசாங்கத்தைக் கவிழ்க்க உள்நாட்டு மக்களின் பங்களிப்பை விட சர்வதேச நாடுகளின் உதவிகளையே ரணில் அதிகம் எதிர்பார்க்கிறார்.

வெளிநாட்டு வங்கிகள் மகிந்த அரசாங்கத்திற்கு கடன்களை வழங்கக்கூடாது எனவும், அவ்வாறு வழங்கினால் தாம் பொறுப்பெற்கும் அரசாங்கம் அதனை மீளத்தராது எனவும் ரணில் வெளிநாட்டு வங்கிகளுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

ரணில் நாட்டின் பிரதான எதிர்க்கட்சியின் தலைவராக இருந்துகொண்டு இவ்வாறு நடந்து கொள்வது மரபு அல்ல. சரியானது அல்ல, என்றெல்லாம் விமாசனங்கள் எழுந்தாலும் ரணிலின் இச் செயற்பாடுகளுக்குப் பின்னால் வெளிநாடுகளின் செல்வாக்கிருப்பதாகவே சொல்லப்படுகிறது.

இலங்கையின் இனப்பிரச்சனையில் அக்கறை காட்டும் மேற்குலக நாடுகளிடம், சிறீலங்காவில் போரிடும் இருதரப்பிற்கும் அழுத்தம் கொடுத்து பிரச்சினையை முடிவிற்கு கொண்டு வரவேண்டும் என்கிற முனைப்பே அதிகமுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு முதற்கட்ட அழுத்தங்களை கொடுத்து விட்டதாகவே அவை கருதுகின்றன. அதாவது கிழக்கில் சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்ட படைநடவடிக்கைகளின் போது பின்கதவினுாடாக உதவிகளை வழங்கிக்கொண்டு மௌனமாகவிருந்தமையே இவ்வழுத்தமாகும்.

இப்போது காட்சிகள் மாறுகின்றன. மகிந்த அரசாங்கம் மீது அழுத்தங்கள் போடப்படுகின்றன. ஒரு நாடு என்கிற வகையிலும், ஒரு போராடும் அமைப்பு என்கிற வகையிலும் அழுத்தங்களின் உபாயங்கள் மாற்றமுறுகின்றன.

இந்நிலையில், கிழக்கில் நடத்தியது போல வடக்கில் வன்னியில் வலிந்த போரை முன்னெடுக்க சிறீலங்கா அரசாங்கத்திற்கு முன்னைய பின்கதவு உதவிகளைக்கூட இனிமேல் மேற்கு நாடுகள் செய்யாது.

புலிகள் வலிந்த ஒரு போரை அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி முன்னெடுப்பார்களாயிருந்தால

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.