Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"காரியம் முடிவுற்றதும் ஓரம் கட்டப்படும் ஒட்டுக்குழுக்கள்"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"காரியம் முடிவுற்றதும் ஓரம் கட்டப்படும் ஒட்டுக்குழுக்கள்"

தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்பதற்கான அங்கிகாரத்தைக் கோரிக் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்கு தமிழ் மக்கள் தங்கள் ஏகோபித்த அங்கிகாரத்தை வழங்கியிருந்தனர்.

இப்பெரும் வெற்றி காரணமாக ஆனந்தசங்கரி, சித்தார்த்தன் போன்றவாகள் தமிழ் மக்களின் அரசியல் களத்திலிருந்து முற்றாகவே புறமொதுக்கப்பட்டனர். தமிழ் மக்களின் பேரால் தமிழ் மக்களுக்கும் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கும் துரோகமிழைத்து வந்த இவர்களுக்கு தமிழ் மக்கள் உரிய பாடத்தை வழங்கியிருக்கின்றனர்.

எனினும், இவர்கள் விழுந்தும் மீசையில் மண்படவில்லை எனத்தம்பட்டம் அடித்தவாறு தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு அரசின் தமிழர் விரோத நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கி வருகின்றனர்.

தற்சமயம் இதே அரசின் ஆதரவுடன் நம்மை ஒரு அரசியல் சக்தியாக உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். சிறீலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினராலும் ஏனைய சில உளவு நிறுவனங்களாலும் இரண்டு விதமான ஒட்டுக்குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஒன்று ஒரு புறம் நாடாளுமன்ற அரசியலில் ஈடுபட்டவாறு இன்னொரு புறம் தமிழ் மக்களுக்கு எதிரான ஆயுதவன்முறைகளில் ஈடுபடும் குழு.

இக்காரியத்தை வெகு நேர்த்தியாக டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி. குழு செய்து வருகிறது. அடுத்தது தனியாக தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறையில் மட்டும் ஈடுபடும் கருணாகுழு.

இந்த நிலையில் தமிழ் மக்க

ளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஒரு அரசியல் சக்தியாக முன்றாவது அணியென்றை உருவாக்கும் முயற்சிகளே ஆனந்தசங்கரி, சித்தார்த்தன் ஆகியோரால் மேற்கொள்ளப்படுகின்றன.

இவர்களுக்குப் பின்னாலும் ஈ.என்.டி.எல்.எவ். போன்ற ஒரு ஆயுதக்குழுக்கள் இருந்தபோதும் அது நடவடிக்கைகளில் ஈடுபடுமளவுக்கு சக்தி கொண்டதாக இல்லை.

எனினும் இதுவும் கூட எதிர்காலத்தில் அரச புலனாய்வுப் பிரிவால் வலுவூட்டப் படலாம். விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்தி அவர்களின் போரிடும் வலுவைப் பலவீனப்படுத்தும் வகையில் கருணா என்ற தனி மனிதன் சிறீலங்காப் பேரினவாதிகளால் விலைக்கு வாங்கப்பட்டார்.

இதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஒரு வலுவான சக்தியை உருவாக்க முடியும் எனக் கனவு காணப்பட்டது. விடுதலைப் புலிகளின் தந்திரோபாயமான தீவிரமான நடவடிக்கை காரணமாக இந்த நோக்கம் முற்றாகவே முறியடிக்கப்பட்டு வந்தது.

இன்று மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்கள் சிறீலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் கருணா குழுவின் தேவை குறைவடைய ஆரம்பித்துள்ளது. அதேவேளையில் கருணா குழுவினரின் படுகொலைகள் மனித உரிமை மீறல்கள், ஏனைய ஆயுத நடவடிக்கைகள் என்பன அரசுக்கும் சர்வதேச அளவில் எழும் நெருக்

கடிகளை உருவாக்கி வருகின்றன.

எனவேதான் தற்சமயம கருணா குழுவை ஓரங்கட்டிப் பலவீனப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதன் முதல் நடவடிக்கையாக இராணுவப் புலனாய்வுப் பிரிவால் திட்டமிட்ட சதி மூலம் கருணா குழு, பிள்ளையான் குழு என இரண்டாக உடைக்கப்பட்டது.

இரு குழுக்களும் ஒருவரை ஒருவர் அழிக்கும் நடவடிக்கைகளிலும் அவர்கள் இறங்கினர். எனினும் அந்த நிலை ஒரு சில நாட்களில் தணிந்து விட்டது. எனினும் முறுகல் நிலை முற்றாகத் தீர்ந்து விட்டது என்று சொல்லி விட முடியாது.

இங்கு சிறீலங்கா இராணுவப் படைப்

புலனாய்வுப் பிரிவினராலும் ஒரு தந்திரோபாயம் கைக் கொள்ளப்படுகிறது. ஒன்று கருணா குழு இல்லாமல் போகவோ, செயற்பட முடியாதவாறு பலவீனப்படவோ கூடாது.

ஏனெனில் தமிழ் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கும் அவர்கள் தேவை. மற்றது ஏதாவது கோரிக்கைகளையோ, தேவைகளையோ முன்வைத்து அரசை நிர்ப்பந்திக்கக் கூடிய அளவிற்கு அவர்கள் பலம் பெறக்கூடாது.

இந்த இரட்டை அணுகுமுறையே இப்போ கருணாகுழு மீது பிரயோகிக்கப்படுகின்றன.

இவ்வகையில் மட்டக்களப்புக்கு பொறுப்பாக உள்ள சிறீலங்கா இராணுவத்தின் 23வது பிரிகேட்டின் கட்டளைத் தளபதி, கருணா குழுவின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் எனத் தெரிவிருத்திருந்தார்.

ஏனெனில் இராணுவத்தைப் பொறுத்தவரை

யில் மட்டு, அம்பாறை மாவட்டங்களில் இனி கருணா குழுவின் தேவை அற்றுப்போய் விட்டது.

எனக் கருதப்படுகிறது. அதேவேளையில் அமைச்சர் பெர்ணான்டோப் புள்ளே கருணா குழுவின் ஆயுதங்கள் களையப்படமாட்டாது எனத் தெரிவித்துள்ளார்.

ஏனெனில் கருணா குழுவிடம் ஆயுதம் இருப்பது அவர்களின் அரசியல் நோக்கங்களுக் தேவையானது. இருந்த போதிலும் கருணா குழுவைப் பலவீனப்படுத்த வேண்டும் என்பதில் இரு தரப்பினருக்கும் கருத்து வேறுபாடு கிடையாது.

இராணுவம் ஆயுதத்தைப் பறித்து பலவினப்படுத்த முயல்கிறது. அரசாங்கம் ஆயுதங்களைக் களையாமல் பலவீனப்படுத்த முனைகிறது. இரு தரப்பினரின் நோக்கங்களுக்கும் இடையேயான வித்தியாசம் அவ்வளவுதான்.

இதேவேளையில் கருணா முற்றுமுழுதாக விலை போய்விட்ட போதிலும், கீழ் மட்டத்தினரை எப்போதுமே அதிகார மட்டத்தினர் நம்புவதில்லை. அவர்கள் எந்தச் சமயமும் தமக்கெதிராகத் திரும்பக் கூடும் என்ற அச்சம் எப்போதுமே படைத்தரப்புக்கு உண்டு.

அது மட்டுமன்றி தமது கட்டுப்பாட்டுக்கு வெளியே எந்த ஒரு ஆயுதக் குழுவும் நீண்ட காலத்திற்கு இயங்குவதைப் படையினர் விடுவதில்லை.

எனவே, எப்போதும் அரச தரப்போ படைத்தரப்போ இந்த ஒட்டுக் குழுவினரை தங்கள் தேவைக்கும் பயன்படும் அளவு பலமுற்றவர்களாக மட்டுமே பேணுவதில் மிகவும் அவதானமாகச் செயற்படத் தவறுவதில்லை.

எனவே இப்போது கருணா குழுவின் தேவை குறைவடைந்த நிலையில் அவர்களை மேலும் பலவீனப்படுத்தும் கைங்காரியங்கள் இடம்பெற்று வருகின்றன.

டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பியைப் பொறுத்த வரையில் அரசுக்கோ படையினருக்கோ எவ்வித அச்சமும் கிடையாது.

ஏனெனில் அந்த அமைப்பு துரோகத்திற்கெனவே ஆரம்பத்திலிருந்து உருவாக்கப்பட்டது. அது தமிழ் மக்கள் விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபடும் என்பதிலும், எந்த அரசாங்கம் வந்தாலும் அந்த அரசாங்கத்துடன் ஒட்டிக் கொள்ளும் என்பதிலும் அவர்களுக்கு நம்பிக்கை உண்டு.

எனினும் கூட தமிழ் மக்களுக்கு எதிரான துரோக நடவடிக்கைகளுக்கு இவர்களில் மட்டுமே தங்கியிருக்க அரசாங்கம் விரும்பப் போவதில்லை. எனவே, எப்போதுமே தங்களுக்குத் தலையாட்

டிக் கொண்டிருக்கக் கூடிய ஒரு அரசியல் சக்தியை தமிழ் மக்கள் மத்தியில் உருவாக்க வேண்டிய தேவை ஒன்று அரசுக்கு எழுந்துள்ளது.

இதற்கு மிகவும் பொருத்தமானவர்களாக ஆனந்தசங்கரி, சித்தார்த்தன், சிறிதரன் போன்றவர்களை அரசாங்கம் தெரிவு செய்துள்ளது. அதனால் தான் இந்த முன்றாவது அணியை உருவாக்குவதில் மகிந்த ராஜபக்சவும் தீவிர ஈடுபாடு காட்டி வருகின்றார்.

கிழக்கு மகாணத்தில் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு அரசு முயுற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இராணுவ ஒடுக்கு முறையின் கீழ் நடைபெறக் கூடிய இப்படியான ஒரு தேர்தல் இடம்பெறும் என்பது நாம் அறிந்ததே.

இப்படியான ஒரு தேர்தலில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களோ தமிழ் தேசியக் கூட்டமைப்பினரோ பங்கு கொள்ளக் கூடிய சாத்தியம் இருக்கப்போவதில்லை.

இதன் காரணமாகக் கள்ள வாக்குகள் மிரட்டல்கள் மூலம் ஒட்டுக் குழுவினர் ஆசனங்களைப் பெறக் கூடிய வாய்ப்புக்கள் உண்டு. கிழக்கு மகாணத்தைப் பொறுத்த வரையில் கருணா குழுவுக்கு இந்த வாய்ப்பு உண்டு. இப்படி ஒரு நிலைமை எழுமானால் கருணா குழுவும் ஒரு அரசியல் சக்தியாக தன்னைத் தக்கவைத்துக் கொள்ளும்.

இதன் பலன் கருணா குழுவைப் பலவீனப்படுத்தும் அரசின் நோக்கம் தோல்வியடைய வேண்டிய நிலையையே ஏற்படுத்தும். எனவே தான் மூன்றாவது அரசியல் சக்தியை உரு

வாக்குவது அரசின் அவசரமானதும் அவசியமானதுமான தேவையாகி விட்டது.

விடுதலைப் புலிகளைக் கிழக்கில் பலவீனப்படுத்த அரசு கருணாவைப் பயன்படுத்தியது. ஆனால் அதில் வெற்றி பெறமுடியவில்லை. இப்போது கருணாவைப் பலவீனப்படுத்த ஆனந்தசங்கரி கூட்டத்தினர் பயன்படுத்தப்

படுகின்றனர்.

கருணா குழுவை ஓரங்கட்டவும், பலவீனப்படுத்தவும் இவர்கள் பயன்படுத்தப்படுவதில் வெற்றி பெறுகிறார்களோ இல்லையோ, இவர்கள் ஒரு அரசியல் சக்தியாக மீண்டும் தலையெடுப்பது சாத்தியமாகப் போவதில்லை. ஏனெனில் இவர்கள் மக்களால் முற்றாகவே ஓரம் கட்டப்பட்டவர்கள்.

- நா.யோகேந்திரநாதன்

"ஈழமுரசு"

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அறிக்கயள் வாசிக்க நல்லாயிருக்கு, கள யதாத்தமும் அதுக்கேற்றமாரி மாறாட்டிக்கு நம்ம கதி அதோகதிதான். B)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.