Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காணாமற்போனோர் தொடர்பாக ஆள்கொணர்வு மனுக்கள் தாக்கல் அரசு மீது சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காணாமற்போனோர் தொடர்பாக ஆள்கொணர்வு மனுக்கள் தாக்கல் அரசு மீது சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சி

நாட்டில் பலவந்தமாகக் கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பாக, அரசுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் விதத்தில் ஆள்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்படவிருக்கின்றன.

"காணாமற்போனோரைத் தேடியறியும் குழு' இது தொடர்பான முன் முயற்சிகளை எடுக் கும் என அக்குழுவின் அமைப்பாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன அறிவித்திருக் கின்றார்.

நேற்று இக்குழுவின் சார்பில் கொழும் பில் நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டி லேயே இவ்விடயத்தை கலாநிதி விக்கிரம பாகு கருணாரத்ன அறிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறியவை வரு மாறு:

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஒன்று கூறினார். இப்போது வேறொன்று செய்கிறார்.

காட்டுக்குப் போய், புலிகளின் தலைவர் பிரபாகரனைக் கண்டு பேசியாவது நாட்டுக்குச் சமாதானத்தைக் கொண்டுவருவேன் என்று அப்போது கூறினார் அவர்.

ஆனால் இப்போது இந்த நாட்டின் ஒரு பகுதி பிரஜைகள் மீது ஒரு பெரும் யுத் தத்தை அவர் கட்டவிழ்த்து விட்டிருக்கின் றார். ஒரு மக்கள் கூட்டத்தையே அவர் அழிக்கின்றார்.

கோத்தபாய ராஜபக்ஷவுக்கு மக்களை வேட்டையாடும் அதிகாரத்தை யாரும் கொடுக்கவில்லை. அவர் வெறும் சிவில் அதிகாரி மட்டுமே.

ஈராக்கில் படை நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ள அமெரிக்க இராணுவமும்

இவ்வாறு மக்களைத் துன்புறுத்தும் செயல்களில் ஈடுபட்டிருக்கின்றது, எனவே, யுத்தத்தில் இவையெல்லாம் தவிர்க்க முடியாதவை என்று தமது செயற்பாட்டுக்கு நியாயம் கற்பிக்கின்றார் கோத்தபாய

அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷûக்கு வேண்டுமானால் அவ்வாறு செயற்படுவதற்கு அவரின் செனட் சபை அவருக்கு அதிகாரம் வழங்கியிருக்கலாம்.

அப்பட்டமான பொய்கள்

ஆனால் இங்கு அப்படிச் செயற்படுவதற்கு கோத்தபாயவுக்கு யாரும் அதிகா ரம் அளிக்கவில்லை.

காணாமற்போனோர் எனக் கூறப்பட்டவர்கள் வெளிநாடு சென்று திரும்பி விட்டனர் என்று பிரதமர் கூறுகின்றார்.

காணாமற் போனோர் பலர் திரும்பி வந்து விட்டனர் என்று இது குறித்து விசாரிக்க அரசு நியமித்த தனிநபர் ஆணைக்குழுவும் கூறுகின்றது.

இவையெல்லாம் தவறான அப்பட்ட மான பொய்க்கூற்றுக்கள் என நாம் அவற்றை நிராகரித்து மறுக்கின்றோம்.

நாங்கள் காணாமற்போன 82 பேரின் பெயர் விவரம் அடங்கிய பட்டியலை அரசி டம் சமர்ப்பித்துள்ளோம். ஆள்களைக் கடத்தி கப்பம் அறவிட்டமை தொடர்பாக கப்ப அறவீட்டுத் தொகை வங்கிகளில் வைப்பிலிட்டமை சம்பந்தமான ரசீது களையும் நாம் ஒப்படைந்திருக்கின்றோம்.

இவர்களும் வெளிநாடுகளுக்குப் போய் விட்டுத் திரும்பிவந்துவிட்டார்களா? மீண்டு வந்துவிட்டார்களா? அப்படியா யின் எப்போது, எந்தக் கடவுச்சீட்டில் வந் தார்கள் என்பதை அரசால் அறிவிக்க முடி யுமா?

ஆள்கள் கடத்தப்படுகின்றமை தொடர் பாகப் பொய்ப் பிரசாரம் செய்வோர்மீது சட்ட நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட் டோம் எனப் பிரதமர் கூறியிருக்கின்றார்.

துணிவிருந்தால் எம்மீது

நடவடிக்கை எடுங்கள்

இப்போது நாம் ஆள்கடத்தல்களை அம்பலப்படுத்துகின்றோம். துணிவிருந் தால் அரசு எம்மீது நடவடிக்கை எடுத்துப் பார்க்கட்டும்.

இதுவரை காலமும் ஆட்கள் காணாமற் போதல் தொடர்பாக ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதம் போன்ற போராட்டங் களையே நாம் முன்னெடுத்தோம். ஆனால் அவற்றால் பயன் ஏற்படவில்லை.

எனவே, காணாமற்போனோர் தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் ஆட்கொணர்வு மனுக்களைத் தாக்கல் செய்வதன் மூலம் அரசின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போகின்றோம்.

பூஸாவில் மட்டும் 300 பேர் வரை தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர் என்று கூறப்படுகின்றது. இவர்கள் யார்? இவர்கள் எதற்காகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கின் றார்கள்? இவர்கள் செய்த குற்றம் என்ன? இவற்றைப் பகிரங்கப்படுத்த அரசு முன் வரவேண்டும்.

ஆள்கள் கடத்தப்பட்டு காணாமற் போன சம்பவங்கள் தொடர்பாக படை அதிகாரி கஜநாயக்காவும் மற்றும் சில முன்னாள் படையினரும் கைது செய்யப் பட்டனர் என்று முன்னர் அறிவிக்கப்பட் டது.

அவர்கள் எங்கே தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.