Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தற்போதைய அரசாங்கம் தென்பகுதி மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறது : இ;.இளந்திரையன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய அரசாங்கம் தென்பகுதி மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறது : இ;.இளந்திரையன் Written by Ravanan - Sep 05, 2007 at 04:56 PM

ilanthiraiyanuy1.jpg

வன்னியில் விடுதலைப் புலிகளின் பகுதிகளைக் கைப்பற்றிவிட்டோம் எனத் தென்பகுதி மக்களிடம் கூறி அவர்களை முட்டாளாக்கும் அரசியல் நோக்கத்துக்காகவே சிலாவத்துறையை அரசாங்கம் கைப்பற்றியதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

மனிதநேயப் பணிகள் முன்னெடுக்கப்படும் இடங்களே தற்பொழுது இராணுவத்தினரால் மீட்கப்பட்டிருப்பதாகவும், மனிதநேயப் பணிகளைத் தவிர ஆயுதம் தாங்கிய போராளிகள் அங்கு இருக்கவில்லையெனவும் கருத்துத் தெரிவித்திருந்தார்.

முக்கியமான விடயங்களைக் கருத்தில்கொள்ளாமல் அரசாங்கம் வெறுமனே கருத்துக்களைக் கூறுகிறது. இது எப்பவும் எமது முக்கிய இடமாக இருந்தது இல்லை. வெறும் கண்துடைப்பே என்றார் அவர்.

சிலாவத்துறைப் பகுதியில் மோதல்கள் இடம்பெறவில்லை. அது விடுதலைப் புலிகளின் மனிதநேயப் பணிகள் முன்னெடுக்கப்படும் இடம். இது அரசாங்கத்தின் அரசியல் சதி என இளந்திரையன் அந்த ஊடகத்திடம் கூறியுள்ளார். மதவாச்சி-மன்னார் வீதியின் தென்பகுதியில் சிலாவத்துறை காணப்படுகிறது.

இது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசம் என்பதால் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் அங்கு இல்லை. அரசியல் ரீதியான இலாபத்தை ஈட்டிக்கொள்வதற்காக அரசாங்கம் பொதுமக்களைப் பிழையாக வழிநடத்துகிறது என்றார் அவர்.

கடந்த காலங்களிலும் வன்னியைக் கைப்பற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து தோல்வி கண்டமையை நினைவுகூர்ந்திருக்கும் இளந்திரையன், அவர்கள் எம்மீது தாக்குதல் நடத்த பல தடவைகள் முயற்சித்தார்கள் எது பயனளிக்கவில்லை. அரசாங்கம் வில்பத்து, சிங்கராஜ மற்றும் அதனை அண்டிய பகுதிகளைக் கைப்பற்றிவிட்டு அங்கு தேசியக் கொடியை ஏற்றி விடுதலைப் புலிகளின் பகுதிகளைக் கைப்பற்றிவிட்டதாக மக்களை அரசாங்கம் ஏமாற்றப் போகிறது எனக் கூறினார்.

இராணுவத்தினரின் எறிகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்தே உயிலங்குளம் சோதனைச்சாவடியிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் விலகியது என விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரயன் மேலும் தெரிவித்தார்.

நன்றி - சங்கதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிலாவத்துறை- ஒரு அரசியல் நாடகம்: இளந்திரையன் சாடல்

[புதன்கிழமை, 5 செப்ரெம்பர் 2007, 17:09 ஈழம்] [செ.விசுவநாதன்]

மன்னார் சிலாவத்துறையை மீட்டதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருப்பது ஒரு அரசியல் நாடகம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் சாடியுள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறப்பட்டுள்ளதாவது:

சிலாவத்துறைப் பிரதேசத்தில் ஆயுதமேந்திய தமிழீழ விடுதலைப் புலிகள் இயங்கவில்லை. எமது மனிதாபிமானப் பணியாளர்களே அங்கிருந்தனர்.

சிலாவத்துறையானது மதவாச்சி-மன்னார் வீதிக்கு தெற்காக உள்ள இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசம். அரசியல் லாபத்துக்காகவும் மக்களை தவறாக வழிநடத்தவும் சிறிலங்கா அரசாங்கம் எதனையும் செய்யும் என்பதை இது வெளிப்படுத்துகிறது.

வன்னிப் பெருநிலப்பரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது தாக்குதல் நடத்த சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்விடையந்து விட்டன. வில்பத்து அல்லது வேறு ஒரு காட்டுப்பகுதியில் கூட சிறிலங்கா அரசாங்கம் அந்நாட்டுத் தேசியக் கொடியை ஏற்றிவிட்டு விடுதலைப் புலிகளின் முக்கிய பகுதிகளை மீட்டுவிட்டோம் என்று

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

புதியவன் யால, வில்பத்து, சிங்கராஜ வனமெல்லாம் ஒண்டெண்டு எண்ணிற்றார் போல கிடக்குது. எல்லாத்தையும் போட்டுக் குழப்பியடிச்சிருக்கிறார். யால பொத்துவிலிலிருந்து கதிர்காமம் வரை நீண்டுள்ள தெற்கீழப் பிரதேசம். சிங்கராஜவனம் ஹப்புத்தளை வெல்லவாயாப் பக்கத்தில் மத்திய மலைநாட்டின் தென்கிழக்குச் சரிவிலுள்ளது. வில்பத்து அனுராதபுரம் மதவாச்சி மன்னார்ப் பிரதேசங்களை இணைக்கின்றது. விசயம் புரியாமல் எல்லாத்தையும் குழப்பியடிச்சால் தெரியாதவர்கள் நம்பி விடுவார்கள் ஆகவே அவதானம் அவசியம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.