Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக கோவில்களில் தமிழில் குடமுழுக்கு: சுகிசிவம், ஆன்மிக தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் சலசலப்பு - என்ன நடந்தது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக கோவில்களில் தமிழில் குடமுழுக்கு: சுகிசிவம், ஆன்மிக தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் சலசலப்பு - என்ன நடந்தது?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,முருகேஷ் மாடக்கண்ணு
  • பதவி,பிபிசி தமிழ்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்
தமிழில் குடமுழக்கு

பட மூலாதாரம்,SOCIAL MEDIA

கோவில்களில் குடமுழுக்கை தமிழில் நடத்தலாமா என்பது தொடர்பாக திருநெல்வேலியில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் சலசலப்பு, கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் பாதியிலேயே அக்கூட்டம் முடிந்தது.

கோவில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்தலாமா என்பது தொடர்பான கருத்துகளை அறிவதற்காக முதல் கட்டமாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கான கருத்து கேட்புக் கூட்டம் திருநெல்வேலியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சிரவை குமரகுரு சுவாமிகள், பேரூர் மருதாச்சலம் அடிகள், ஆன்மிக பேச்சாளர் சுகிசிவம், அறநிலையத்துறை இணை கமிஷனர் அன்புமணி, அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்து தெரிவிப்பதற்காக, பாஜக, நாம் தமிழர் கட்சியினர், இந்து அமைப்பினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

 

கூட்டம் தொடங்கியபோது, ‘இந்து அறநிலையத்துறை சார்பாக நடைபெறும் இந்த கூட்டத்தில் மேடையில் சாமி படம் கூட இல்லை’ என்று சிலர் தங்களது அதிருப்தியைத் தெரிவித்தனர்.

மேலும், தமிழிலும் குடமுழுக்கு நடத்தலாமா என்பது தொடர்பாக கருத்து கேட்பதற்கு பதிலாக, தமிழில் குடமுழுக்கு நடத்துதல் தொடர்பாக கருத்துக் கோருதல் என்ற பெயரில் இக்கூட்டம் நடத்தப்படுவதாக கூறி இந்து அமைப்பினர் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

சுகிசிவம் பேசத் தொடங்கியபோது, பலரும் மேடை அருகே வந்து அவருக்கு எதிராக கோஷமிட்டனர். மேலும், கருத்தை தெரிவிப்பதற்காக கொடுக்கப்பட்ட துண்டு காகிதத்தையும் அவர்கள் கிழித்தெறிந்தனர். இதனால், கருத்து கேட்புக் கூட்டம் பாதியிலேயே முடிந்தது.

கருத்து கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற திருநெல்வேலி சிவநெறிக்கழகத்தின் தலைவர் வி. கணபதி சுப்ரமணியன் பிபிசி தமிழிடம் பேசுகையில், ‘குடமுழுக்கை தமிழில் நடத்தலாமா வேண்டாமா என்பது தொடர்பான கருத்து கூட்டமாக இது இருக்கும் என்ற எண்ணத்தில் தான் பலரும் கலந்து கொண்டனர். ஆனால், தமிழில் எவ்வாறு நடத்துவது என்ற நோக்கில் கருத்துக் கூட்டம் நடைபெறுவது அங்கே சென்ற போதுதான் தெரியவந்தது. இதுவே பலருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

மேலும், சுகி சிவம் பேசும்போது முன்வரிசைகளில் அமர்ந்திருந்த சிலர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பிற மதத்தினருக்கு ஆதரவாக பேசும் அவர் வெளியேற வேண்டும் என்றும் குரல் எழுப்பினர்.

இதற்கு தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. பின்னர், அங்கிருந்தவர்கள் தலையிட்டு சமாதானம் ஏற்படுத்த முயன்றனர். இதற்கிடையே, கருத்துகளை தெரிவிப்பதற்காக தரப்பட்ட சீட்டிலும் தமிழில் எப்படி நடத்தலாம்? என்பது குறித்தே கேட்கப்பட்டிருந்ததால் அதை சிலர் கிழித்தெறிந்தனர்.

இந்த அமளியைத் தொடர்ந்து ஒரு மணி நேரத்திலேயே கூட்டம் முடிந்தது’ என்றார்.

ஆகமமுறைப்படிதான் வழிபாடு நடத்த வேண்டும் என்று கூட்டத்தில் தங்களது கருத்தை பதிவு செய்ததாகக் கூறிய வி.கணபதி சுப்ரமணியன், ‘வழிபாட்டில் கிரியை, தோத்திரம் என இரண்டு பகுதிகள் உள்ளன. கிரியை எந்த மொழியில் வகுக்கப்பட்டுள்ளதோ, அந்த மொழியில்தான் செய்ய வேண்டும். மந்திரத்தை மொழி பெயர்க்க முடியாது. கிரியைகள் வடமொழி ஆகமங்களில்தான் உள்ளன. பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த முறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதுமே ஒரே கிரியைதான் உள்ளது. தோத்திரம் என்பது இறைவனை போற்றி பாடுவது. ஆனால், இவர்கள் தோத்திர முறையை எடுத்து புதிய கிரியை செய்கின்றனர். மொழி துவேஷத்தை நுழைத்து இவ்வாறு செய்யக்கூடாது என்பதே எங்களின் கோரிக்கை’ என்கிறார்.

தமிழில் குடமுழக்கு

பட மூலாதாரம்,GANAPATHY SUBRAMANIYAN

 
படக்குறிப்பு,

வி கணபதி சுப்ரமணியன்

இந்த நிகழ்வு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய சுகி சிவம், ‘நீதிமன்ற தீர்ப்பையொட்டி கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த வந்தோம். கூட்டத்தை நடத்த விடக் கூடாது என்று திட்டமிட்டு சிலர் இந்த நிகழ்வில் ஈடுபட்டுள்ளனர். 200 பேர் கலந்து கொண்ட கூட்டத்தில் 30-40 பேர்தான் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டனர். சமஸ்கிருதத்தில் குடமுழுக்கை நடத்த முறை உள்ளது. எனவே தமிழில் நடத்தவதாக இருந்தால் எப்படி நடத்தலாம் என்று நீதிமன்றமே கேட்டுள்ளது. சமஸ்கிருதத்தில் நடத்த வேண்டாம் என்று யாருமே கூறவில்லையே. தமிழில் எப்படி நடத்தலாம் என்று நாங்கள் கருத்து கேட்டோம். உடனே கூச்சல் போடத் தொடங்கிவிட்டனர்," என்றார்.

"முழுக்க முழுக்க திட்டமிட்டே இச்செயலில் ஈடுபட்டனர். இவர்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டதும் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்பதற்கு ஆதரவாக இருந்தவர்கள் எங்களுக்கு ஆதரவாக எழுந்தனர். எனினும் எங்களின் பேச்சை கேட்டு அமைதியாக இருந்தனர். அவர்கள் சமய மரபில் வந்ததால் எங்களின் பேச்சை மதித்து அமைதியாக இருந்தனர். எதிர் தரப்பினரோ சமய அரசியலில் ஈடுபடுவர்கள் அதனால்தான் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர்," என்கிறார் சுகி சிவம்.

கருத்துக் கேட்பு கூட்டத்தில் கடவுள் புகைப்படம் வைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், "கடவுள் இல்லாத இடம் உண்டா? கூட்டத்தில் தேவாரம் இசைக்கப்பட்டது. அதில் கடவுள் இல்லையா? எதாவது வம்பு செய்ய வேண்டும் என்பதற்காக இதைவைத்து கூச்சலில் ஈடுபட தொடங்கிவிட்டனர். கருத்துக் கேட்பு கூட்டத்தில் ஏதாவது கருத்தை தெரிவிக்க வேண்டும். அதைவிட்டு கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டால் என்ன செய்வது," என்று தெரிவித்தார்.

தமிழில் குடமுழக்கு

பட மூலாதாரம்,NELLAI CHOKKAR/ FACEBOOK

 
படக்குறிப்பு,

சுகி சிவம்

வழக்கின் பின்னணி

கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதீஸ்வரர் கோவில் குடமுழுக்கை தமிழ் சைவ ஆகம விதிப்படி நடத்த உத்தரவிடக்கோரி பொன்னுசாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என். கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 19.08.2021ல் அளித்த தீர்ப்பில், ’தமிழ் உலகில் உள்ள தொன்மையான மொழி மட்டுமல்ல கடவுளின் மொழியும் கூட. சிவன் நடனமாடும்போது உடுக்கையில் இருந்து உதிர்த்தது தமிழ் மொழி என்றும், கடவுள் முருகன் தமிழ் மொழியை உருவாக்கினார் என்றும் இரு வேறு நம்பிக்கைகள் உள்ளன.

மனுதாரரின் கோரிக்கை பசுபதீஸ்வரர் கோவில் மட்டுமின்றி தமிழ்நாட்டின் அனைத்து கோவில்களுக்கும் பொருந்தும். அனைத்து கோவில்களிலும் தமிழில் குடமுழு நடத்த ஏதுவாக நாயன்மார்கள், ஆழ்வார்கள், அருணகிரிநாதர், சித்தர்கள் ஆகியோர் இயற்றிய பழமையான துதிப்பாடல்களைக் கண்டறிந்து தொழுதிடும் வகையில், தமிழ் அறிஞர்கள், ஆன்மிக ஆர்வலர்களைக் கொண்ட குழுவைத் தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும்’ என்றும் உத்தரவிட்டிருந்தது.

மேலும், குடமுழுக்கை தமிழில் நடத்தலாமா அல்லது சமஸ்கிருதத்தையுடன் தமிழுக்கும் சம முக்கியத்துவம் அளித்து குடமுழுக்கை நடத்தலாமா என்பது குறித்து மாநில அரசு முடிவு எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்தது.

https://www.bbc.com/tamil/articles/c510nn42p2vo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.