Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உறுதியான இலக்குடன் யுத்தத்தை முன்னெடுக்க ஜே.வி.பி. வலியுறுத்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உறுதியான இலக்குடன் யுத்தத்தை முன்னெடுக்க ஜே.வி.பி. வலியுறுத்தல்

*`மனித உரிமைகளை பாதுகாத்து போரிடுவது சாத்தியமில்லை'

தேசியப் பிரச்சினை தீர்வுக்கு இராணுவ ரீதியான தீர்வை முன்னெடுக்க விடுதலைப்புலிகளே அரசாங்கத்தையும், படையினரையும் நிர்ப்பந்தத்துக்கு உள்ளாக்கியிருப்பதாக ஜே.வி.பி.யின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான அநுரகுமார திஸாநாயக்க கடந்த புதன்கிழமை சபையில் சுட்டிக்காட்டினார்.

தேசியப் பிரச்சினைக்கு அதிகார பகிர்வின் மூலம் ஒரு போதும் தீர்வுகாண முடியாதெனவும் அது மக்களை சென்றடைவதற்கு எந்தச்சாத்தியமுமில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன் நடைபெற்ற வடக்கு, கிழக்கின் தற்போதைய நிலைவரங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பேசும் போதே அநுர குமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்;

இந் நாட்டின் இறைமைக்கும், சுதந்திரத்துக்கும், ஜனநாயகத்துக்கும் மட்டுமல்லாது சிங்கள, தமிழ், முஸ்லிம் ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் பயங்கரவாதமொன்று இருப்பது எமக்குத் தெரியும். அத்துடன், இதுவரை இருந்த அரசாங்கங்களும் தங்களது தேவைகளுக்காக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சிங்கள இனவாதத்தின் அடைப்படையிலோ அல்லது தமிழ் இன வாத அடைப்படையிலோ செயற்பட்டுள்ளன.

அதுமட்டுமல்லாது ஜனநாயக தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அனைத்து இன மக்களிடையேயும் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதை தவிர்த்து தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் இனவாதத்தை தூண்டும் விதத்திலேயே செயற்பட்டுள்ளன. இது தான் பிற்காலத்தில் தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்துவதற்கும் அடிப்படையாக அமைந்தது.

எனவே இன்று இந்தப் பிரச்சினை இவ்வளவு பாரதூரமான நிலைமைக்கு தள்ளப்பட்டிருப்பதற்கு இதுவரை ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் போலவே தமிழ்த் தலைவர்களும் பொறுப்புக் கூறவேண்டும்.

அதுமட்டுமல்லாது விடுதலைப்புலிகள் ஒவ்வொரு பேச்சுகளின் போது நழுவிச் சென்றது மட்டுமல்லாது சகல வழிகளிலும் அவர்களுக்கு நன்மையை ஏற்படுத்திக் கொள்ளும் விதத்திலேயே செயற்பட்டுள்ளனர். யுத்த ரீதியிலான வழியை தேர்ந்தெடுக்க புலிகளே அரசாங்கத்தை நிர்ப்பந்தத்துக்குள் தள்ளியிருக்கின்றனர். ஒன்று இரண்டல்ல பல சந்தர்ப்பங்களிலும் பேச்சுகளிலிருந்து நழுவிச் சென்று யுத்தம் தான் பிரச்சினை தீர்வுக்கு வழியென புலிகளே அதை தேர்ந்தெடுக்க அரசை கட்டாயப் படுத்தியுள்ளன. அதைவிடுத்து அரசாங்கமோ, படையினரோ இதை விரும்பவில்லை. புலிகளின் செயற்பாடுகளினாலேயே அவர்களும் யுத்தம் புரிய நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளனர்.

இதேநேரம், சுதந்திரம் மனித உரிமைகள் போன்ற விடயங்களை நூற்றுக்கு நூறு வீதம் காப்பாற்றி யுத்தம் செய்வதென்பது நடைமுறை சாத்தியமற்ற விடயம்.

அரசாங்கம் செய்யும் யுத்தமானது சரியான தீர்க்கமான இலக்கை கொண்டதாக இருக்க வேண்டும். அதேநேரம், 1983 ஆம் ஆண்டு முதல் செய்யப்பட்ட போலியான அபிவிருத்திப் பணிகள் போலன்றி தமிழ் மக்கள் உண்மையில் முன்னேற்றம் காணும் வகையில் அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். அதைவிடுத்து அதிகாரப் பகிர்வால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஒன்றும் கிடைக்கப் போவதில்லை.

உதாரணமாக 1987 ஆம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை ஏற்படுத்தி அதிகாரப் பகிர்வை எற்படுத்தியதன் மூலம் அதாவது மாகாண சபைகளை ஏற்படுத்தியதன் மூலம் மலையக மக்கள் இதுவரை கண்ட முன்னேற்றங்கள் எதுவுமில்லை. மலையகத்தில் மட்டுமல்லாது தெற்கிலுள்ள சிங்கள மக்களுக்கும் கிராமிய புறங்களிலுள்ள மக்களுக்கும் இதனால் எந்தப் பலனும் கிடைக்கவில்லை.

எனவே இந்த அதிகாரப் பகிர்வு என்பதன் மூலம் அரசியல் கட்சிகள் தலைவர்களுக்கு மட்டுமே வரப்பிரசாதங்கள் கிடைக்கும் பொதுமக்களுக்கு இதில் எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை.

இதேநேரம், மத்தியில் இருப்பது சிங்களப் பெரும்பான்மை அரசாங்கம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களோ, முஸ்லிம் உறுப்பினர்களோ கூறுவார்களாயின் அது ஏற்றுக்கொள்ள முடியாத கருத்து. ஏனெனில், இருப்பது சிங்கள அரசாங்கமெனில், வரும் ஒவ்வொரு அரசாங்கத்தையும் மாற்ற வேண்டிய தேவை சிங்கள மக்களுக்கே ஏற்பட்டிருக்காது. சுதந்திரம் பெற்றது முதல் இதுவரை பல தேர்தல்களும் பல அரசாங்க மாற்றங்களும் வந்துவிட்டன.

எனவே இவ்வாறான கருத்துகள் அனைத்தும் மாலையே தங்களது இன ரீதியான அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவே இப்படிப் பேசுகின்றனர்.

இங்கு பிரச்சினை இருப்பது நாடு பிளவுபடுத்துவதிலோ, சமஷ்டி ஆட்சியிலோ அல்லது இணையாட்சியிலோ இல்லை. ஆட்சிப் பீடமேறும் ஆட்சியாளர்களும் நிர்வாகத் தரப்பினரும் அடிமட்ட சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் மக்களை இன ரீதியாக வேறுபடுத்தி வைப்பதையே நோக்கமாக கொண்டிருக்கின்றனர். இதுவே இங்கு பிரச்சினையாகவுள்ளது.

இதேநேரம், வடக்கு- கிழக்கு இணைப்பு போன்ற தற்கால யோசனைகளை முன்வைத்துக் கொண்டிருக்காது தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் நவீன யுகத்துக்கு ஏற்றவாறான யோசனைகளை தமிழ் மக்களிடத்தில் எடுத்துச் செல்ல செயற்பட வேண்டும்.

எனவே, விடுதலைப் புலிகளுக்கு எதிராக யுத்தத்தை முன்னெடுத்துச் செல்லும் அதேநேரம், வடக்கு - கிழக்கில் துரிதமான அபிவிருத்திகளையும் அரசியல் மாற்றங்களையும் அம் மக்களிடையே பயங்கரவாதத்துக்கு எதிரானதொரு நிலைப்பாட்டையும் கொண்டு வர அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இதேநேரம், அடிமட்ட சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடையே ஒற்றுமையை தோற்றுவிக்க செயற்படுவதில் ஜே.வி.பி. ஒருபோதும் பின் நிற்காது என்றார்.

-தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.