Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 'சிறைச்சாலை நூலகம்' ; நாளை அங்குரார்ப்பணம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 'சிறைச்சாலை நூலகம்' ; நாளை அங்குரார்ப்பணம்!

Published By: Nanthini

07 Apr, 2023 | 12:08 PM
image

“ஒரு நூலகம் திறக்கப்படும் பொழுது நூறு சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன” எனும் கூற்றுக்கமைய யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதிகளின் பாவனைக்கென நூலகமொன்று அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த நூலகம் நாளை (8) சனிக்கிழமை  யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தரால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தனது கற்றல், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி செயற்பாடுகளுக்கப்பால், தான் சார்ந்த சமூகத்தின் மேம்பாட்டுக்காக சமூகப் பொறுப்பாண்மை மற்றும் சமூக வலுவூட்டல் செயற்பாடுகளிலும் அண்மைக் காலமாக ஈடுபட்டு வருகிறது.  

பல்கலைக்கழகத்தின் பால் நிலை சமத்துவம் மற்றும் ஒப்புரவுக்கான நிலையமானது யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் உள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக பல செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இச்செயற்றிட்டங்களினால் நூற்றுக்கணக்கான குடும்பங்களின் ஜீவனோபாய தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன. 

அதேபோல, பல்கலைக்கழகத்தின் சமூகப் பொறுப்பாண்மையின் ஓர் அம்சமான யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகம், தனது சமூக வலுவூட்டல் செயற்றிட்டத்தின் கீழ் யாழ்ப்பாண சிறைச்சாலையில் நூலக நியமங்களுக்கு ஏற்றவாறான நூலகமொன்றை ஒழுங்கமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 

இந்த முயற்சியின் முதல் படியாக ஏறத்தாழ 2500 புத்தகங்களை கொண்ட நூலகம்  அமைக்கப்பட்டு, நாளை திறந்து வைக்கப்படவுள்ளது.  

மனிதன் தவறு செய்வது இயற்கை. அவன் திருந்தி வாழ்வதற்காக, வாழ்க்கையை கற்றுக் கொடுக்கும் ஒரு கல்விக்கூடம் தான் சிறைச்சாலை. 

தவறு செய்யும் ஒருவன் சிறை வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்துவிட்டால், அவன் மறுபடியும் சமுதாயத்தில் இணைந்து வாழ்வதற்கான சந்தர்ப்பத்தை சமூகம் அவனுக்கு வழங்க வேண்டும். 

இதன் அடிப்படையில் சிறைச்சாலையில் வாழும் கைதியொருவர் தனக்கு தேவையான தகவல் வளங்களை அணுகுவதற்கான சந்தர்ப்பமொன்றை வழங்க வேண்டியது சமூகத்தின் பொறுப்பாகும். 

அதுமட்டுமன்றி, ஒரு மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்றாக தகவல் அறியும் உரிமையும் அமைகிறது. இந்த நோக்குகையே நூலகமொன்றின் தேவையை சிறைச்சாலைக்குள் உருவாக்கியுள்ளது.

கைதிகளின் தண்டனைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதற்கு பதிலாக அவர்களின் கல்வி, புனர்வாழ்வு மற்றும் தண்டனைக் காலத்தை பயனுள்ள முறையில் செலவிடுதல் தொடர்பாக கவனம் செலுத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் வலியுறுத்துகிறது. 

இச்சூழலமைவு சிறைச்சாலையின் சட்டதிட்டங்களுக்குட்பட்ட சிறைச்சாலை நூலக உருவாக்கத்துக்கு வழிசமைக்கிறது.

சிறைச்சாலையில் ஒரு நூலகத்தை உருவாக்கும் போது கல்வி, பொழுதுபோக்கு மற்றும் புனர்வாழ்வு செயற்றிட்டங்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்படுதல் வேண்டும். 

1f.jpg

சிறை வாழ்க்கையில் பொருத்தமான தீர்மானங்களை தாமே எடுப்பதற்கும், தமக்கு தேவையான தகவல்களை தாமாகவே தேடிச் சென்று பெற்றுக்கொள்வதற்கும் உதவும் வகையில் சிறைச்சாலை நூலகங்களின் சேவைகள் வடிவமைக்கப்பட வேண்டும். 

அத்துடன் பல்லின சமுதாயமொன்றின் தகவல் தேவையையும், இரசனைகளையும் கவனத்தில் கொண்டு நூல்களின் சேர்க்கை அமைய வேண்டும். 

சிறைச்சாலை நூலகத்தில் 'நூற்சேர்க்கை' என்பது அவர்களின் தகவல் தேவையை நிறைவு செய்யும் வளச்சேர்க்கை என்பதற்கு மேலாக, அவை சிறைச்சாலையில் வாழும் கைதிகளை வெளிச் சமூகத்துடன் இணைப்பதற்கான 'இணைவு பாலம்' என்பதனையும் கருத்திற்கொள்ள வேண்டும்.

சிறைச்சாலையில் ஒழுங்கமைக்கப்பட்ட நூலகம் செயற்படும்போது, அது பல காத்திரமான விளைவுகளை சிறைச்சாலை சமூகத்தில் உருவாக்கும். 

கைதிகளின் வாசிப்பின் மீதான ஈடுபாடு குற்றச் செயல்கள் மீதான அவர்களின் ஈடுபாட்டை குறைக்கிறது என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. 

சிறைச்சாலையில் உள்ள கைதிகள் தமது நேரத்தை பொருத்தமான வகையில் முகாமை செய்வதற்கும், தமது உள ஆரோக்கியத்தை சிறந்த முறையில் பேணுவதற்கும் வாசிப்பின் மீதான ஈடுபாடு உதவுகிறது.

இலங்கையில் சிறைச்சாலை நூலகங்கள் மட்டுப்படுத்தப்பட்ட வசதிகளுடனேயே இயங்குகின்றன. அவை பெரும்பாலும் நூலக நியமங்களுக்கேற்ப ஒழுங்கமைக்கப்படுவதில்லை. 

நன்கொடை மூலம் கிடைக்கும் நூல்கள் மற்றும் தளபாடங்களை கொண்டவையாகவே அவை காணப்படுகின்றன. 

இந்நிலையில் இலங்கையின் சிறைச்சாலை வரலாற்றில் முதல் முதலாக ஒழுங்கமைக்கப்பட்ட நூலகம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சியில் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் நூலகர் ஸ்ரீகாந்தலக்ஷ்மி அருளானந்தம் சிவநேசன் குடும்பம், ஐ.பி.சி தமிழ் மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்புடன் யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தினர் இந்த சிறைச்சாலை நூலகத்தை உருவாக்கியுள்ளனர்.  

இந்த நூலகம் தொடர்ச்சியாக இயங்குவதற்கான முழுமையான பங்களிப்பையும், பராமரிப்பு ஆலோசனைகளையும் யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகம் வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

https://www.virakesari.lk/article/152342

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 'சிறைச்சாலை நூலகம்' திறப்பு

Published By: NANTHINI

08 APR, 2023 | 04:43 PM
image

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதிகளின் பாவனைக்கென நூலகமொன்று அமைக்கப்பட்டு, அந்நூலகம் இன்று சனிக்கிழமை (8) காலை 9.30 மணியளவில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சிறீசற்குணராஜாவால் இந்நூலகத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நடந்தேறியது. 

யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் நூலகர் ஸ்ரீகாந்தலக்ஷ்மி அருளானந்தம் சிவநேசன் குடும்பத்தினரால் சம்பிரதாயபூர்வமாக  யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகரிடம் நூல்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் சிறைச்சாலை அத்தியட்சகர் கே.பி.ஏ.உதயகுமார, பிரதான ஜெயிலர் எச்.எம்.டி.ஹேரத், யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் சா.சுதர்சன் உள்ளிட்ட சிறை அதிகாரிகள் மற்றும் சிறைக்கைதிகள் கலந்துகொண்டனர்.

யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் நூலகர் ஸ்ரீகாந்தலக்ஷ்மி அருளானந்தம் சிவநேசன் குடும்பம் மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்புடன் யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தினர் இச்சிறைச்சாலை நூலகத்தை உருவாக்கியுள்ளனர். 

இந்நூலகம் தொடர்ச்சியாக இயங்குவதற்கான முழுமையான பங்களிப்பையும், பராமரிப்பு ஆலோசனைகளையும் யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகம் வழங்கி வருகிறது. 

01__7_.jpg

01__9_.jpg

01__6_.jpg

01__5_.jpg

01__4_.jpg

01__3_.jpg

01__1_.jpg

01__2_.jpg

https://www.virakesari.lk/article/152441

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பு  நல்லது நடந்தால் மகிழ்ச்சி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.