Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையின் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி தனது ஆட்சேபனையை வெளியிடவேண்டும் - சர்வதேச மன்னிப்புச்சபை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி தனது ஆட்சேபனையை வெளியிடவேண்டும் - சர்வதேச மன்னிப்புச்சபை

Published By: Rajeeban

15 Apr, 2023 | 11:36 AM
image

இலங்கையின் உத்தேச பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் தனது எதிர்ப்பை வெளியிடவேண்டும் என சர்வதேச மன்னி;ப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை மக்களின் உரிமைகளை முக்கியமானவையாக  பெறுமதிமிக்கவையாக பைடன் நிர்வாகம் கருதினால்  ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க நிர்வாகத்திற்கு பைடன் நிர்வாகம் தெளிவான செய்தியை தெரிவிக்கவேண்டும் என  சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையின் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மனித உரிமையின் அனைத்து அளவுகோல்களிலும் தோல்வியடைந்துள்ளது என சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆசியாவிற்கான பரப்புரை இயக்குநர் கரொலின் நாஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களின் உரிமைகள் மிக முக்கியமானவை என பைடன் நிர்வாகம் கருதினால் இந்த சட்டம் முற்றிலும் மாற்றியமைக்கப்படவேண்டும் அல்லது முற்றாக கைவிடப்படவேண்டும் என்ற செய்தியை ஜனாதிபதி ரணில்விக்கிரமசி;ங்க அரசாங்கத்திற்கு தெரிவிக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நான்கு தசாப்தகாலமாக சிறுபான்மையினத்தவர்களையும் தன்னை விமர்சிப்பவர்களையும் தடுத்துவைத்து சித்திரவதை செய்வதற்காக இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துகின்றது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் குறித்து பைடன் நிர்வாகமும் அமெரிக்க காங்கிரசும் அமைதியாகயிருந்தால் அது மாற்றுநிலைப்பாடுடையவர்களை ஒடுக்குமுறைக்குள்ளாக்கும் இலங்கை அரசாங்கத்தின் திறனை மேலும் வலுப்படுத்தும் என தெரிவித்துள்ள நாஸ் பல தசாப்தகாலங்களாக மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக குரல்கொடுத்துவந்துள்ள இலங்கையின் சிவில் சமூகத்தை அவமதிக்கும் செயலே உத்தேச சட்டம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் நோக்குடன் அல்லது மோசமான சட்டத்தை மாற்றியமைக்கும் நோக்குடன் அதிகாரிகள் உத்தேச சட்டத்தை கொண்டுவரவில்லை மாறாக அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை இலக்குவைத்து அவர்களை மௌனமாக்கும் நோக்கத்துடனேயே இந்த உத்தேச சட்டம் கொண்டுவரப்படுகின்றது எனவும் என சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆசியாவிற்கான பரப்புரை இயக்குநர் கரொலின் நாஸ் தெரிவித்துள்ளார்.
 

https://www.virakesari.lk/article/152885

 

  • கருத்துக்கள உறவுகள்

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்- கொடுங்கோன்மையானது - ஜனநாயகவிரோதமானது - சர்வதேச பத்திரிகையாளர் சம்மேளனம்

Published By: RAJEEBAN

16 APR, 2023 | 10:41 AM
image

இலங்கையின் 1979ம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்காக இலங்கையின் நாடாளுமன்றம் முன்வைத்துள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் இலங்கையில் ஒன்றுகூடுவதற்கான உரிமையின் மீதான கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்கும் ஆபத்தை கொண்டுள்ளதாக காணப்படுகின்றது என சர்வதேச பத்திரிகையாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் பத்திரிகை சுதந்திரத்தையும் கருத்து சுதந்திரத்தையும் கடுமையாக  குறைக்கும் விதத்தில் காணப்படுகின்றது என சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

ifj-international-federation-of-journali

இலங்கையை சேர்ந்த தனது இணைஅமைப்புகளுடன் சேர்ந்து உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு  சட்டமூலத்திற்கு கடும் கண்டணத்தை வெளியிட்டுள்ள சர்வதேச பத்திரிகையாளர் சம்மேளனம் அதிகாரிகள் முன்மொழியப்பட்ட நகல்வடிவை மீளப்பெறவேண்டும் பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்யவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மார்ச் 17 ம் திகதி இலங்கையின் பயங்கரமான பயங்கரவாத தடைச்சட்டத்தை புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மூலம் மாற்றீடும் செய்யும் நோக்கத்தை இலங்கை அரசாங்கம் அறிவித்தது, என தெரிவித்துள்ள சர்வதேச பத்திரிகையாளர் சம்மேளனம் உத்தேச சட்டமூலத்தை தொழிற்சங்கங்கள் மனித உரிமை அமைப்புகள் சிவில் சமூகத்தினர் சட்டத்துறையினர் ஊடகசுதந்திரத்திற்காக குரல்கொடுப்பவர்கள் என பலதரப்பட்டவர்கள் விமர்சித்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளதுடன்  இலங்கையில் தற்போது காணப்படும் ஸ்திரமின்மைக்கு மத்தியில் இந்த உத்தேச சட்டமூலம் உடன்படமறுப்பவர்கள் சிவில் சமூகத்தினர் மீது ஒடுக்குமுறையை முன்னெடுப்பதற்கு பயன்படலாம் என தெரிவித்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பிட்ட சட்டமூலம் பயங்கரவாதத்திற்கான வரைவிலக்கணங்களை சர்வதேச வழிகாட்டுதல்களிற்கு அப்பால்  விஸ்தரிக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ள சர்வதேச பத்திரிகையாளர் சம்மேளனம் பொதுப்பயன்பாட்டிற்கான இடத்திற்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்துவது அத்தியாவசிய சேவைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்துவது அரசாங்கத்தினால் சட்டவிரோதமானது என கருதப்படும் ஒன்றுகூடலில் பங்கேற்பது போன்றவற்றையும் சட்டமூலம் பயங்கரவாதத்துடன் சேர்க்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/152913

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.