Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழத்தமிழருக்கு உணவுப்பொருள் அனுப்ப இந்திய மத்திய அரசுக்கு 24 மணிநேர காலக்கெடு

Featured Replies

[09 - September - 2007]

*திருச்சிக் கூட்டத்தில் வைகோ எச்சரிக்கை

இந்திய மத்திய அரசுக்கு இன்னும் 24 மணிநேரம் கெடு கொடுக்கிறேன். அதற்குள் இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம் மூலம் உணவு மற்றும் மருந்து வழங்க அனுமதி வழங்க வேண்டும் . இல்லாவிட்டால் எதிர்கால விளைவுகளும் விபரீதமாக இருக்கும் என்று மத்திய அரசை எச்சரிக்கிறேன் என்று வெள்ளிக்கிழமை திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேசினார்.

இலங்கைப் படையினரால் நடத்தப்படும் தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்களைப் படகு மூலம் அனுப்பும் தொடக்க நிகழ்வு திருச்சியில் நடந்தது. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ , தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வைகோ பேசியதாவது;

இலங்கை தமிழர்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம் மூலம் உணவு மற்றும் மருந்துப் பொருட்களைக் கொண்டு செல்ல இந்திய அரசு அனுமதி மறுக்க என்ன காரணம்? எத்தியோப்பியா, ருவாண்டா, வியட்நாம் நாடுகளில் மக்கள் பாதிக்கப்பட்ட போது இந்திய அரசு உணவு மற்றும் மருந்து கொடுத்து உதவியது. ஆனால், இலங்கையில் தமிழர்களுக்கு மட்டும் கொடுக்க மறுக்கிறது. இலங்கைக்கு மருந்து மற்றும் உணவுப் பொருட்கள் கொண்டு செல்லத் தடையாக இருப்பது எது? இலங்கை தமிழர்களுக்கு உதவுவதில் தமிழர் தேசிய இயக்கத்தின் தூய நோக்கங்களுக்கும், எடுக்கிற முயற்சிகளுக்கும் ம.தி.மு.க. துணை நிற்கும்.

மத்திய அரசு மட்டும் இலங்கை அரசுக்கு ஆயுதம், ராடார் கொடுக்கிறது. அந்த வகையில் போராளிகளுக்கு ஆயுதங்கள் கொடுத்தால் தவறில்லை. கொடுக்கலாம். இலங்கை தமிழர்களுக்கு உணவு மற்றும் மருந்துகளைச் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் கொடுக்க இந்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்துக் கேட்டேன் அவரும் நடவடிக்கை எடுக்கிறேன் என்றார். ஆனால், இதுவரை எவ்வித பதிலும் இல்லை. இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழக முதல்வர் பச்சைத் துரோகம் செய்கிறார் என்பதைப் பதிவு செய்கிறேன். இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம் மூலம் உதவி வழங்க அனுமதி அளிக்காத இந்திய அரசுக்கு ஐ.நா. சபையில் பேச என்ன யோக்கியதை இருக்கிறது?

இலங்கையில் பெரும் யுத்தம் நடக்கும். சிங்களவர் கூட்டம் , கூட்டமாக அழிக்கப்படுவர். புலிகள் வெல்வர். இது எப்போது நடக்கும் என்று மட்டும் சொல்ல முடியாது. ஆனால் நடக்கும். வான்புலிகள் தாக்குதல் போன்று உலக வரலாற்றில் எந்தப் புரட்சி இயக்கமும் நடத்தியது கிடையாது. புலிகள் அவர்களாகவே ஆயுதம் தயாரித்துக் கொள்கின்றனர். விடுதலைப் புலிகளின் இதுபோன்ற செயல்களால் உலக அரங்கில் தமிழர்களுக்கு மரியாதை கிடைத்துள்ளது. இலங்கையில் தமிழர் இனத்தை கருவறுக்கும் வேலை நடக்கிறது. இலங்கைத் தமிழர் பிரச்சினையில் எரிமலையாக தமிழக இளைஞர் உள்ளம் இருக்கிறது. அது உணர்ச்சி வசப்பட ஆரம்பித்தால் யாராலும் கட்டுப்படுத்த முடியாது. ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்யும் விதமாக திட்டமிடப்பட்ட இந்திய- இலங்கை கூட்டு ரோந்து திட்டத்தை தமிழக முதல்வர் முதலில் ஆதரித்தார். பின்னர் மழுப்பினார். இலங்கையில் கொல்லப்படும் தமிழர் மரணங்களுக்கு இலங்கை அரசோடு இந்திய அரசும் பதில் சொல்ல வேண்டும். மத்திய அரசுக்கு இன்னும் 24 மணி நேரம் கொடுக்கிறேன். அதற்குள் இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம் மூலம் உணவு மற்றும் மருந்து வழங்க அனுமதி வழங்க வேண்டும். இல்லாவிட்டால் எதிர்கால விளைவுகளும் விபரீதமாக இருக்கும் என்றும் மத்திய அரசை எச்சரிக்கிறேன். இவ்வாறு வைகோ பேசினார்.

வேறு வழியின்றியே போராட்டம்

கூட்டத்தில் பயணக் குழுவுக்குத் தலைமை வகிக்கும் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் பேசியதாவது;

கடந்த டிசம்பர், ஜனவரியில் மாநிலம் முழுவதும் திரட்டப்பட்ட பொருட்களே இவை. இவற்றை செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்ப பெப்ரவரியில் அனுமதி கேட்டோம். மார்ச்சில் பிரதமரைச் சந்தித்தார் வைகோ. ஜூன் மாதம் ஜெனீவா சென்றபோது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் முறையிட்டோம். திரட்டப்பட்ட உணவுப் பொருட்கள் கெட்டுப்போயின. மருந்துகள் காலம் கடந்தன. வேறுவழியின்றியே இப்போராட்டம் நடத்த வேண்டி வந்தது. சட்ட விரோதம் தான். சட்டபூர்வமான வழிகளில் தீர்வு கிடைக்கவில்லை? இலங்கைத் தமிழர்கள் பட்டினியால் துடிக்கும்போது சும்மா இருக்க முடியவில்லை. தமிழக முதல்வர் வாய்மூடி மௌனியாக இருக்கிறார். நியாயமாக இப்பணியை முதல்வர் செய்து கொடுத்திருக்க வேண்டும். சரியான தீர்வு வராவிட்டால் ஆட்சிக்கே ஆபத்து வரலாம் என்றார் பழ. நெடுமாறன்.

நன்றி-தினக்குரல்

இந்த தமிழகமக்களின் உணர்வான ஆதரவு நிலை தொடர வேண்டும். ஏனெனில் புலிகள் சேனை களம் இறங்கி எதிரியை துவம்சம் செய்து வெற்றி வாகை சூடி போய் கொண்டு இருக்கும் போது இந்திய மத்திய அரசால் எந்த வித இடையூறும் , இரராணுவத்தலையீடும் இல்லாமல் இருக்க தமிழகம் பாதுகாப்பு அரனாக இருக்க வேண்டும்.

மிகுதியை ஈழத்தமிழரே முடித்துக் கொள்வார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.