Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெண் ஊடகவியலாளரின் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு - விசாரணைக்கு ஐடிஎன் தலைவர் உத்தரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

25 APR, 2023 | 09:51 AM
image

ஐடிஎன்னின் முன்னாள் பெண் ஊடகவியலாளர் பாலியல் துன்புறுத்தல்களிற்குள்ளானமை குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு பொதுமுகாமையாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக ஐடிஎன்னின் தலைவர் சுதர்சன குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இது குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கான  அதிகாரியை நியமிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசதொலைக்காட்சியொன்றின் பெண் ஊடகவியலாளர் பாலியல்துன்புறுத்தல்கள் குறித்து  தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என ஊடக ஊழியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்;துள்ளது.

அரசதொலைக்காட்சியொன்றில் முன்னர் பணிபுரிந்த பெண் ஊடகவியலாளர் ஒருவர் தான் மேலதிகாரியிடமிருந்து பாலியல் தொந்தரவுகளை எதிர்கொண்டதாக தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ச்சியாக தான் இவ்வாறான துன்புறுத்தல்களை எதிர்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெண் ஊடகவியலாளர் தான் எதிர்கொண்ட துன்புறுத்தல்களை பகிரங்கமாக தெரிவித்திருப்பதை வரவேற்றுள்ள ஊடக அமைப்பு காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளை அச்சமின்றி வெளிப்படுத்துவதற்கு அவர் முன்வந்துள்ளதையும் பாராட்டியுள்ளது.

அரசதொலைக்காட்சியில் பணியாற்றிய வேளை தான் எதிர்கொண்ட தொந்தரவுகள் அதற்கு காரணமானவர்கள் குறித்து அதன் தலைவருக்கு தெரியப்படுத்தியதாகவும் ஆதாரங்களை சமர்ப்பித்ததாகவும் ஆனால் பொறுப்பான எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பெண் ஊடகவியலாளர் தனது முகநூலில் தெரிவித்துள்ளார்என்பதை ஊடக அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ஆகவே அவர் தனது நன்மதிப்பை கௌரவத்தை காப்பாற்ற அங்கிருந்து விலக தீர்மானித்தார் எனவும் தெரிவித்துள்ள ஊடக அமைப்பு குறிப்பிட்ட நிறுவனத்தில் பெண்கள் தொந்தரவுகளை தொடர்ச்சியாக  எதிர்கொள்ளும் சூழல் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளது.

பெண்கள் தொடர்ச்சியாக வன்முறைகளிற்கு உட்படுத்தப்படுகின்ற போதிலும் இவ்வாறான குற்றங்களில் ஈடுபடுபவர்கள்  அரசியல் பாதுகாப்பை பெறுகின்றார்கள் ஆகவே நாட்டின் அரசியல் தலைமை இது குறித்து உத்தியோகபூர்வ விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் ஊடக அமைப்பு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/153671

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுயாதீன தொலைக்காட்சி பெண் ஊடகவியலாளர் மீது நிறுவன அதிகாரி பாலியல் தொந்தரவு : விசாரணைக்கு குழு நியமிப்பு ! 

Published By: NANTHINI

26 APR, 2023 | 01:29 PM
image

சுயாதீன தொலைக்காட்சி ஊடகவியலாளரான பெண் ஒருவரை அதே தொலைக்காட்சி நிறுவனத்தின் அதிகாரியொருவர் பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் தொடர்பில் அண்மையில் சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களை மையமாகக் கொண்டு விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சட்டத்தரணியின் தலைமையில் சுயாதீன குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக துறைசார் அமைச்சர் பந்துல குணவர்தன செவ்வாய்க்கிழமை (25) தெரிவித்துள்ளார்.

சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவரான சட்டத்தரணி சுதர்சன குணவர்தன இந்த விவகாரம் தொடர்பில் தமக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். 

ஊடக அமைச்சின் செயலாளரிடம் சம்பந்தப்பட்ட ஊடகவியலாளரை முறைப்பாடு செய்யுமாறு கூறியிருந்தபோதிலும், அவர் இதுவரையில் அவ்வாறு முறைப்பாடு செய்யவில்லை எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

342139504_703754081754103_78073300158186

https://www.virakesari.lk/article/153795

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ஏராளன் said:

ஊடக அமைச்சின் செயலாளரிடம் சம்பந்தப்பட்ட ஊடகவியலாளரை முறைப்பாடு செய்யுமாறு கூறியிருந்தபோதிலும், அவர் இதுவரையில் அவ்வாறு முறைப்பாடு செய்யவில்லை எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

 

அவரும் பாலியல் லஞ்சம் கேட்ப்பாரோ எனப்பயந்து முறைப்பாடளிக்காமல் விட்டிருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.