Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச ஊடக சுதந்திர தினம் இன்று

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
World Press Day or World Press Freedom Day 2023 Date, Theme, History,  Significance, Quotes, Wishes, Messages, and More

சர்வதேச ஊடக சுதந்திர தினம் இன்று(03) அனுஷ்டிக்கப்படுகிறது.

இற்றைக்கு 30 வருடங்களுக்கு முன்னர் இன்றைய தினத்தை(03) சர்வதேச ஊடக சுதந்திர தினமாக அனுஷ்டிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை பரிந்துரைத்தது.

”உரிமைகளுக்கான எதிர்காலத்தை வடிவமைத்தல், ஏனைய அனைத்து வகையான மனித உரிமைகளுக்கும் ஒரு இயக்கியாக கருத்து சுதந்திரம் காணப்படல் வேண்டும்” என்பதே இம்முறை ஊடக சுதந்திர தினத்திற்கான தொனிப்பொருளாக காணப்படுகிறது.

1986ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் திகதி தமது ஊடக நிறுவனத்திற்கு முன்பாக கொடூரமாக கொலை செய்யப்பட்ட கொலம்பிய ஊடகவியலாளர் Guillermo Cano-ஐ நினைவுகூரும் வகையில் இந்த நாள் ஒதுக்கப்பட்டுள்ளது.

180 நாடுகளை உள்ளடக்கிய சர்வதேச ஊடகச்சுட்டியில் கடந்த வருடம் நோர்வே முதல் இடத்தை தன்வசப்படுத்தியது.

சர்வதேச ஊடகச் சுட்டியில் 2022 ஆம் ஆண்டு இலங்கை 146 ஆவது இடத்தில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமானது, இலங்கையில் ஊடகங்களுக்கு காணப்படும் சுதந்திரம் தொடர்பில் பாரிய சிக்கல் நிலையை தோற்றுவித்துள்ளது.

https://thinakkural.lk/article/251817

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2022 இல் ஊடகவியலாளர்கள் படுகொலை 50 வீதத்தினால் அதிகரித்துள்ளது - ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம்

Published By: RAJEEBAN

03 MAY, 2023 | 03:13 PM
image

உலகின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஊடகங்கள் தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளன என தெரிவித்துள்ள ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் அனைத்து நாடுகளும் உண்மையை இலக்குவைப்பதையும் அதனை செய்தியாக தெரிவிப்பவர்களையும் இலக்குவைப்பதை நிறுத்தவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2022இல் ஊடகவியலாளர் படுகொலை 50 வீதத்தினால் அதிகரித்துள்ளது என்பது நம்பமுடியாத விடயம் என தெரிவித்துள்ள  அன்டோனியோ குட்டரஸ் பத்திரிகை சுதந்திரம் என்பதே ஜனநாயகம் நீதியின் அடிப்படை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

2022 இல் 67 ஊடகபணியாளர்கள் கொல்லப்பட்டனர்.

உண்மைக்கும் புனைகதைக்கும், அறிவியலுக்கும் சதிக்கும் இடையே உள்ள கோடுகளை மங்கலாக்க முயலும் தவறான தகவல் மற்றும் வெறுப்பு பேச்சு ஆகியவற்றால் உண்மை அச்சுறுத்தப்படுகிறதுஎனவும் ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் டிஜிட்டல் தளங்களும் சமூக ஊடகங்களும் தீவிரவாதிகள் தவறான கருத்துக்களை முன்வைப்பதையும் பத்திரிகையாளர்களை துன்புறுத்துவதையும் இலகுவாக்கியுள்ளன.எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

ஊடக தொழில்துறையின் வீழ்ச்சி காரணமாக உள்ளுர் ஊடகங்கள் மூடப்பட்ட நிலையும் ஊடகங்கள் சிலரின் கரங்களில் குவிந்துள்ள நிலையும் கருத்துச்சுதந்திரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது எனவும் ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/154401

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.