Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

றோயல் கல்லூரி தமிழ் மாணவனின் சடலம் அடிகாயங்ளுடன் மீட்பு!

Featured Replies

கொழும்பு றோயல் கல்லூரி தமிழ் மாணவனொருவர் கடந்த வியாழக்கிழமை இரவு அடித்தக் கொல்லப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது.

பம்பலப்பிட்டி சென்.பீற்றஸ் ஒழுங்கையில் வசித்த க.பொ.த (சதாரண) வகுப்பு மாணவனான வைத்தியநாதன் கௌதமன் (16 வயது) என்பவரே கொலை செய்யப்பட்டவரெனத் தெரிவிக்கப்படுகிறது.

வியாழக்கிழமை மாலை 4மணியளவில் அப்பகுதியிலுள்ள தனியார் கல்வி நிலையத்திற்கு இவர் சென்றுள்ளார்.

வழமையக இந்த தனியார் வகுப்பு இரவு 8 மணிக்கு முடிந்ததும் இவர் வீடு திரும்பிவிடுவார். ஆனால் வியாழக்கிழமை இவர் வீடு திரும்பவில்லை.வீட்டார் பல பகுதிகளிலும் தேடியதுடன் இவரது சக மாணவர்களிடமும் விசாரித்த போதும் எதுவும் தெரியவரவில்லை.

இந்த நிலையில் இவரது சடலம் சென்.பீட்டஸ் லேனின் முடிவில் கடற்கரை பகுதியில் கிடப்பதாக றோயல் கல்லூரியிலிருந்து இவரது வீட்டிற்கு மறுநாள் மாலை 3:30 மணியளவில் தொலைபேசி மூலமாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அவ்விடத்திற்கு சென்று பார்த்த போது இவரது சடலம் கிடப்பதை உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

உடலில் பலத்த அடிகாயங்களிருப்பதால் இவர் அடித்தக் கொல்லப்பட்டிருக்கலாமெனக் கருதப்படுகிறது.

நன்றி : தினக்குரல்

இவரது மரண அறிவித்தலில்; இருந்து இவர் திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியிலும் பயின்ற மாணவர் என அறியக் கிடைத்துள்ளது.

இவரது மரணச்சடங்கு இன்று 4:00 மணிக்கு கனத்தை இந்து மயானத்தில் நடைபெறும் என உறவினர் அறிவித்தள்ளனர்.

இன்று இலங்கையில் ஒரு அப்பாவியின் உயிர் போகிறது என்றால் அது தமிழனாக தான் இருக்கும்...........

அது சரி கண்காணிப்பு குழுவின் அறிக்கை இந்த மாசம் வரவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலையில் இவரது சடலம் சென்.பீட்டஸ் லேனின் முடிவில் கடற்கரை பகுதியில் கிடப்பதாக றோயல் கல்லூரியிலிருந்து இவரது வீட்டிற்கு மறுநாள் மாலை 3:30 மணியளவில் தொலைபேசி மூலமாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சென்பீற்றஸ் லேன் கடற்கரையில் வீதியின் நேராக சிறிலங்காப் பொலிசின் வாடி ஒன்று இருக்கின்றது. அக்கடற்கரையில் கொல்லப்பட்ட உடலை காண்பதில் அவர்களுக்கு முடியாமல் போய்விட்டதோ? அதில் பல பொலிசார் குடும்பத்தோடு பொழுதைப் போக்கும் இடமட்டுமல்ல, அவர்களின் நடமாட்டம் அதிகம் உள்ள பிரதேசமாகும்.

சென்பீற்றஸ் லேன் கடற்கரையில் வீதியின் நேராக சிறிலங்காப் பொலிசின் வாடி ஒன்று இருக்கின்றது. அக்கடற்கரையில் கொல்லப்பட்ட உடலை காண்பதில் அவர்களுக்கு முடியாமல் போய்விட்டதோ? அதில் பல பொலிசார் குடும்பத்தோடு பொழுதைப் போக்கும் இடமட்டுமல்ல, அவர்களின் நடமாட்டம் அதிகம் உள்ள பிரதேசமாகும்.

குற்றவாளியை கண்டு பிடித்து விட்டிர்கள் சில வேளை உங்களிடம் கண்காணிப்பு குழு விசாரனை செய்ய வருவார்கள்.. :P

இந்தக் சம்பத்திற்கு பிறிதொரு பதிப்பும் உள்ளது.

மாலை 5.30மணியளவில் வெள்ளவத்தை ஹம்டன் லேனில் உள்ள கே.எப்.சி உணவகத்தில் சில நண்பர்களுடன் இவர் உணவருந்திவிட்டு 6.30 மணியளவில் நண்பர்கள் சிலரின் கையடக்கத் தொலைபேசிக்கு "நான் அனைவரிடமிருந்தும் விடைபெறுகிறேன்" என்று குறுந்தகவல் அனுப்பியுள்ளார். இதன் பின் நண்பர்கள் பெற்றோர் என அனைவரும் தேடியுள்ளனர். இதேவேளை மறுநாள் இவரது சடலத்துடன் கிடந்த றோயல் கல்லூரியின் அடையாள அட்டை மூலம் பொலிசார் றோயல் கல்லூரிக்கு தொடர்பு கொண்டு அங்கிருந்து பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இவர் இரயில் பாய்ந்து தற்கொலை செய்ததாக சந்தேகிக்கப்படுகின்றது. அத்துடன் இவரது சடலம் இரயில் சாரதி தெகிவளை பொலிசில் சென்று ஒப்பமிடும் வரை கையளிக்கப்படவில்லை. ஆகவே சம்பவம் தெகிவளை பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. மேலும் சில நண்பர்களின் கூற்றுப்படி நன்கு கற்கக்கூடிய இம்மாணவன் காதல் விவகாரங்களில் ஈடுபடக் கூடியவரல்ல எனவும் தெரியவருகின்றது.

தெரிவிப்பது நான் தீர்மாணிப்பது நீங்கள்!

[Wednesday September 12 2007 07:55:17 AM GMT]

பிஸ்கட் முடிந்துவிட்டது அம்மா, வாங்கி வையுங்கள் என்று கூறிச் சென்ற மகனை அடுத்த நாள் சடலமாகவே கண்டேன். எனது கரங்களாலேயே அவனுக்கு உணவும் ஊட்டி விட்டேன். எனது செல்லமகனுக்கு என்ன நடந்தது என்பது தெரியாது என்று கடந்த வெள்ளிக்கிழமை வெள்ளவத்தை கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட வைத்தியநாதன் கௌதமன் என்ற மாணவனின் தாயார் உருக்கமாக கூறினார்.

வெள்ளவத்தையில் மாலைநேர வகுப்புக்குச் செல்வதற்கு கடந்த வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் வீட்டைவிட்டு வெளியேறிய எனது மகன், இரவு 12 மணியாகியும் வீடு திரும்பவில்லை. அவனது நண்பர்களிடம் கேட்டபோது, வகுப்பு முடிந்து தனியாக வீடு திரும்பினார் என்று கூறினர். ஆனால், அவனின் வருகை தாமத மாவதால் அச்சமடைந்த நான் தெரிந்தவர்களின் உதவியுடன் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தேன் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை வெள்ளவத்தை கடற்கரை பகுதியில் தெஹிவளை பொலிஸாரினால் சடலமாக மீட்கப்பட்ட கொழும்பு றோயல் கல்லூரியில் க.பொ.த. (சா/த) கல்வி பயிலும் மாணவன் வி.கௌதமன் (வயது 16) மரணம் தொடர்பில் கேட்டபோதே அம்மாணவனின் தாயார் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது:காலி நோக்கி பயணித்த கடுகதி ரயிலில் மோதியே எனது மகன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எம்மால் அவரின் மரணம் தொடர்பில் உறுதியான தகவல் எதனையும் கூறமுடியாதுள்ளது. தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு மனதளவில் அவர் எவ்வித பாதிப்புக்கும் உட்பட்டிருக்கவில்லை. சிறந்த மாணவனாகவும் மகனாகவும் அவர் விளங்கினார். மாலைநேர வகுப்புக்கு செல்லும்போது எனது கரங்களாலேயே பகல் உணவை ஊட்டிவிட்டேன். நானே வீட்டுவாசல் வரையும் கொண்டுவந்துவிட்டேன். அன்று நான் மட்டுமே வீட்டில் இருந்தேன். பிஸ்கட் முடிந்துவிட்டது, வாங்கி வையுங்கள் என்று கூறிச்சென்ற எனது மகனை அடுத்த நாள் மாலை சடலமாக களுபோவில வைத்தியசாலையில் இருப்பதாகவே தகவலறிந்தேன். அதிர்ந்தும் போனேன். எனது மகனின் உடலில் எந்தவொரு அடிகாயங்களும் இருக்கவில்லை. கழுத்துப் பகுதியில் மட்டுமே காயம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அவனின் சகோதரன் புருஷோத், களுபோவில வைத்தியசாலைக்கு சென்று சடலத்தை அடையாளம் காட்டினார். மகனின் அப்பியாசப் புத்தகங்களை தெஹிவளை பொலிஸார் எம்மிடம் ஒப்படைத்தனர். வெள்ளவத்தைப் பகுதியில் சடலம் ஒன்றும் மீட்கப்பட்டதாகவும் அடையாளம் காண உதவுமாறும் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகியிருந்ததாக அறிந்தேன். ஆனால், நாம் இருந்த கவலையில் பத்திரிகைகளை பார்க்க நேரம் இருக்கவில்லை.

யாழ். கரவெட்டியில் பிறந்த எனது மகன், திருகோணமலை இந்துக்கல்லூரியில் ஆரம்ப கல்வியை கற்றார். 5ஆம் தரம் புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்று சித்தியடைந்தார். இதன் பயனாக அவருக்கு கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. ஒவ்வொரு பாடத்திலும் எனது மகனே முதல் புள்ளிகளை பெறுவார். திறமையாக கற்ற எனது மகன் இன்று எம்முடன் இல்லை. இச்சம்பவம் தொடர்பில் தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, மாணவன் மீது மோதிய ரயிலின் சாரதி நாளை மறுதினம் நீதிமன்றில் வந்து வாக்குமூலம் அளிக்கவுள்ளõர். இவரது வாக்குமூலம் இச்சம்பவம் குறித்த மேலதிக தகவல்களை அறிய உதவும் என நம்பப்படுகிறது.

நன்றி-தமிழ்வின்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.