Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

21.03.2001 அன்று சிறிலங்காக் கடற்படையினருக்குத் தகுந்த பதிலடி கொடுத்த கடற்புலிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் ஆழ்கடல் விநியோக பாதுகாப்பணிகள் மீது தாக்குதல் நடாத்த வந்த சிறிலங்காக் கடற்படையினருக்குத் தகுந்த பதிலடி கொடுத்த கடற்புலிவீரர்கள்

 

 

கடற்புலிகளின் பிரதான தளமான முல்லைத்தீவு சாளைத் தளத்திலிருந்து உயர நூற்றியிருபது கடல்மைல்களுக்குச் சென்று அங்கிருந்த விடுதலைப்புலிகளின் கப்பல்களிலிருந்து தமிழீழத்திற்க்குப் பலம் சேர்க்கின்ற பணிகளில் லெப். கேணல் சாள்ஸ் படையணியும் லெப். கேணல் நளாயினி படையணியும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அதேவேளை இவர்களுக்கு லெப்.கேணல் சாள்ஸ் படையணியின் அணியொன்றும் லெப்.கேணல் நளாயினி படையணியின் அணியொன்றும் கடற்கரும்புலி மேஐர் புகழரசன் அணி, கடற்கரும்புலி கப்டன் செவ்வானம் அணி மற்றும் மேஜர் வசந்தன் படையணி ஆகியன பாதுகாப்பு வழங்கிக்கொண்டிருந்தனர்.

இவ்விநியோக நடவடிக்கை பெரும்பாலும் ஒவ்வொரு நாட்களும் நடைபெறும். இப்படியாக நடந்துகொண்டிருக்கும் போது கடற்படையினர் விநியோகப் படகுகள் மீது தாக்குதல் நடாத்த முற்பட்டால் கடற்புலிகளின் சண்டைப்படகுகள் அவ்விநியோகப் படகுகளை பாதகாப்பதற்காக பாதுகாப்புச் சமர் செய்வார்கள். அதே போல 21.03.2001 அன்றும் விநியோக நடவடிக்கைக்குப் பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருக்கும் போது சிறிலங்காக் கடற்படையினர் கடற்புலிகளின் சண்டைப்படகுகளை நோக்கி வலிந்து ஒரு தாக்குதலைத் தொடங்கினர். சண்டைப்படகுகளின் அனைத்துத் தொகுதிக் கட்டளை அதிகாரி விநியோகப் படகுகள் சாளைத் தளத்திற்க்குள் போகட்டும் எனக்கூறித் தவிர்த்தார். இந்த நிலையில் கடற்படையினரின் தொந்தரவு அதிகரித்துக்கொண்டிருக்கையில் கடற்புலிகளின் கடற்தாக்குதற் தளபதி அனைத்துக் கடற்புலிகளின் சண்டைப்படகுகளையும் ஒருங்கினைத்து தொந்தரவு செய்து கொண்டிருந்த கடற்படையின் டோறாப் பீரங்கிப் படகுகள் மீது திடீரென எதிரி நினைக்காத சந்தர்ப்பத்தில் ஒரு மூர்க்கத்தனமான தாக்குதலைத் தொடுத்தார். 

இத்தீரமிகு அதிரடித் தாக்குதலில் ஒரு டோறாப் பீரங்கிப் படகு நிலைகுலைந்து நிற்க கடற்புலிகளின் துல்லியமான சூட்டின் மூலம் அவ்டோறாவிலிருந்து வந்த கடற்படையினரின் தாக்குதலை நிறுத்தப்பட்டது. தொடர்ந்து அவ்டோறா மீது ஏறிய கடற்புலிவீரர்கள் ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் கைப்பற்றிவிட்டு அவ்டோறாவை மூழ்கடித்தனர். 

தொடர்ந்து கடற்படையினருக்கு ஆதரவாக விமானப்படையின் விமானங்கள் துணைக்கு வந்து தாக்குல்களை நடாத்தினார்கள் விமானப்படையின் தாக்குதலை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திய கடற்புலிகள் தாக்குதலை நடாத்திக்கொண்டு சிறிலங்காக் கடற்படையின் போர் வியூகத்திற்குள் உள்நுழைந்து இரண்டறக் கலந்து நின்றனர். இதனால் சிறிலங்கா விமானப்படையினர் கடற்புலிகளின் படகுகளை இனங்காணமுடியாது தனது  கடற்படையின் டோறாப் படகு மீது குண்டுகளைப் போட்டது. இதனால் இன்னொரு டோறாப் படகும் மூழ்கியது.

உண்மையில் கடற்புலி வீரர்களின் தந்திரோபாயமான நடவடிக்கையால் சிங்களம் அன்று இரண்டு டோறாப் படகுகளை இழந்தது.

இத்தீரமிகு தாக்குதலில்  கடற்புலிகளின் பன்னிரன்டு சண்டைப்படகுகள் கடற்படையின் இருபத்தைந்து டோறாப் படகுகளுக்கு எதிராக கடுமையாகச் சமரிட்டனர். சுமார் நான்கு மணித்தியாலயமாக  நீடித்த இச்சமரில் கடற்படையினர் பின்வாங்கினார்கள். 

இவ்வெற்றிச் சமரில் பங்குபற்றிய போராளிகளைச் சந்தித்த எமது தலைவர் அவர்கள் கனரக ஆயுதத்தால் தாக்கி டோறாவைத் தாக்கமுடியும் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளீர்கள். இனிவரும் காலங்களில் இப்படியான தாக்குல்களை த் தொடரவேண்டும் அதற்க்கு என்னவேண்டுமோ கேளுங்கள் நான் கொள்வனவு செய்து தருகிறேன் என்று கூறியதுடன் சிறிலங்காக் கடற்படைக்கு  உதவியாக வந்த விமானப்படையின்  குண்டுவீச்சு விமானங்களை தமக்குச் சாதகமாகப் பயண்படுத்தி  கடற்படையின் டோறாப்படகுகளுக்கு அண்மையாகச் சென்று அக்குண்டை டோறா மீது விழவைத்த கடற்புலி வீரர்களின் தந்திரோபாயத்தையும் எமது தலைவர் அவர்கள் பாராட்டினார். 

இத்தீரமிகு தாக்குதலில் செவ்வனவே பங்காற்றி வெவ்வேறு களங்களில் வீரச்சாவடைந்தோர்: 

  1. லெப்.கேணல் சேரமான் (வீரச்சாவு.21.04.2001)
  2. லெப்.கேணல் பகலவன் (வீரச்சாவு.04.02.2009)
  3. லெப்.கேணல் கண்ணியத்தம்பி (வீரச்சாவு.13.08.2007)
  4. கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபி (வீரச்சாவு.26.10.2001.).
  5. தளபதி விடுதலை (இறுதிவரை களமாடி முள்ளிவாய்க்காளில் வீரச்சாவு.)
  6. லெப்.கேணல் சீராளன் (வீரச்சாவு.24.09.2006.)
  7. லெப்.கேணல் ஜெரோமினி (வீரச்சாவு.15 11.2007)
  8. மேஐர் ஆழியன் (வீரச்சாவு.21.04.2001)
  9. மேஐர் தமிழ்நம்பி (வீரச்சாவு.11.09.2007)

இவ்வெற்றிகர தாக்குதலை தளபதி சிறிராம் (இறுதிவரை களமாடி முள்ளிவாய்க்காலில் வீரச்சாவு.) படமாக்கியிருந்தார்.

இத்தாக்குதல் கடல் நடவடிக்கைகளை கடற்புலிகளின் கடற்தாக்குதற்தளபதி கடலில் வழிநடாத்த அனைத்து நடவடிக்கைகைளையுயும் ஒருங்கினைத்து கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசை அவர்கள் செவ்வனவே வழிநாடாத்தியிருந்தார்.

இவ்வெற்றிகர பாதுகாப்புச் சமரில் வீரச்சாவடைந்தோர் விபரம்.

  1. மேஐர்.கலா.
  2. மேஐர்.தென்றல்.
  3. கப்டன். மறவன்.

ஆகிய போராளிகள் வீரச்சாவடைந்தனர்.

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி.

தொடருங்கள் நன்றி.

  • நன்னிச் சோழன் changed the title to 21.03.2001 அன்று சிறிலங்காக் கடற்படையினருக்குத் தகுந்த பதிலடி கொடுத்த கடற்புலிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.