Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பிற்காகவா 30 திகதி விசேட விடுமுறை – வர்த்தக சமூகத்தினர் மத்தியில் குழப்பம்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளகக் கடன்மறுசீரமைப்பு செயற்திட்டத்தின் முன்மொழிவுகள் சர்வதேச கடன்மறுசீரமைப்பில் எதிர்மறைத்தாக்கத்தை ஏற்படுத்தாது - மத்திய வங்கி ஆளுநர்

Published By: DIGITAL DESK 3

05 JUL, 2023 | 05:18 PM
image
 

(நா.தனுஜா)

சர்வதேச கடன் மறுசீரமைப்பு செயன்முறையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தாத வகையிலேயே உள்ளகக் கடன் மறுசீரமைப்பு செயற்திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் கடந்த வாரம் முன்மொழியப்பட்டுள்ள உள்ளகக் கடன் மறுசீரமைப்பு செயற்திட்டம் தொடர்பில் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையிலேயே மத்திய வங்கி ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

உள்ளகப் பொதுக்கடன்களின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதே உள்ளகக் கடன் மறுசீரமைப்பு செயற்திட்டத்தின் பிரதான நோக்கமென சுட்டிக்காட்டியுள்ள ஆளுநர் நந்தலால் வீரசிங்க, இம்முன்மொழிவுகள் சர்வதேச நாணய நிதியத்தின் அனுசரணையுடன் பெரும்பாகப் பொருளாதாரக் குறிகாட்டிகளை மேம்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டிருப்பதாகவும், அதன்மூலம் எதிர்வருங்காலங்களில் முன்நோக்கிப் பயணிக்கும்போது ஏற்படத்தக்க அச்சுறுத்தல்களைக் குறைத்துக்கொள்ளமுடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அதேவேளை சர்வதேச கடன்வழங்குனர்களுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் சர்வதேச கடன் மறுசீரமைப்பு செயன்முறையில் எந்தவொரு எதிர்மறைத்தாக்கத்தையும் ஏற்படுத்தாத வகையிலேயே உள்ளகக் கடன் மறுசீரமைப்பு செயற்திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அது மாத்திரமன்றி அச்செயற்திட்டம் வெளிப்படையானதும் ஒப்பீட்டு ரீதியானதுமான கருத்தியல்களின் அடிப்படையிலேயே தயாரிக்கப்பட்டிருப்பதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெளிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/159289

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு - வங்கிகளில் வைப்பில் உள்ள பணத்திற்கு என்ன நடக்கும் என்ற மக்களின் அச்சத்தை போக்கவேண்டும்- பொருளாதார நிபுணர்.

Published By: RAJEEBAN

06 JUL, 2023 | 11:09 AM
image
 

உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ள பணத்திற்கு என்ன நடக்கும் என பொதுமக்கள் மத்தியில் காணப்படும் அச்சங்களை போக்குவதற்கான நடவடிக்கைகள் அவசியம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ள பணத்திற்கு என்ன நடக்குமோ என்ற அச்சம் தேவையற்றது என சிரேஸ்ட பொருளாதாரநிபுணரும் வெரிட்டே ஆராய்ச்சி நிறுவகத்தின் நிறைவேற்று இயக்குநருமான கலாநிதி நிசான் டி மெல் தெரிவித்துள்ளார்.

வங்கியில் உள்ளவைப்புகளிற்கு பாதிப்பு என்ற அச்சத்திற்கு தீர்வை காணவேண்டும் என தெரிவித்துள்ள அவர் வங்கியின்வாடிக்கையாளர்கள் மத்தியில் பதற்றநிலை ஏற்பட்டு மக்கள் தங்கள் பணத்தை மீளபெற்றுக்கொள்ள முயலும் சூழ்நிலை உருவாக அனுமதிக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான பதற்றநிலையேற்பட்டால்  அது வங்கிகளை பாதிக்கும் அவ்வேளையே வங்கிகள் வீழ்ச்சியடையும் என குறிப்பிட்டுள்ள அவர் அவ்வாறான அதிர்ச்சி சூழ்நிலை உருவாகும்போது வங்கிகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை எவராலும் தடுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை உடனடியாக பெற்றுக்கொள்ள முயல்வார்கள் அந்த நிலைமையை கையாள்வது கடினம்,என தெரிவித்துள்ள நிசான்டிமெல் அவ்வாறான சூழ்நிலையை நாங்கள் உருவாக்கமலிருப்பது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ள பணம் பாதுகாப்பானது இல்லை என்ற கரிசனை அர்த்தமற்றது எனவும் குறிப்பிட்டுள்ள அவர் வைப்புகள் எப்போதும் பாதுகாப்பானவை அரசாங்கம் ஒழுங்குபடுத்தும் செயற்பாடுகளை மீறினால் மாத்திரமே அவற்றிற்கு ஆபத்துஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/159329

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொதுக்கடன்களின் ஸ்திரத்தன்மைக்கு உள்ளகக் கடன் மறுசீரமைப்பு அவசியம் - மத்திய வங்கி ஆளுநர் விளக்கம்

Published By: DIGITAL DESK 3

07 JUL, 2023 | 03:58 PM
image
 

(நா.தனுஜா)

பொதுக்கடன்களின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு உள்ளகக் கடன் மறுசீரமைப்பு அவசியம் என்ற உண்மை நிரூபணமானதாலேயே அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் கடந்த வாரம் முன்மொழியப்பட்டுள்ள உள்ளகக் கடன் மறுசீரமைப்பு செயற்திட்டம் தொடர்பில் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையிலேயே மத்திய வங்கியின் ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

உள்ளகக் கடன்மறுசீரமைப்பு செயற்திட்டத்தைப் பொறுத்தமட்டில், தாம் உள்ளகக் கடன் வழங்குனர்களையும், சர்வதேச கடன் வழங்குனர்களையும் சமத்துவமான முறையில் கையாள்வதற்கு முயற்சித்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள ஆளுநர் நந்தலால் வீரசிங்க, அதனை முன்னிறுத்தியே வங்கித்துறை உள்ளிட்ட நிதியியல் துறையினருக்கு 30 - 36 சதவீதம் எனும் உயர்வான வரி வீதம் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். 

அதேவேளை, ஊழியர் சேமலாப நிதியம் போன்ற நிதியங்களைப் பொறுத்தமட்டில், அவற்றின் அங்கத்தவர்களின் எதிர்கால நன்மைகளைக் குறுகிய காலத்துக்கு மட்டுப்படுத்தக்கூடியவகையிலும், கடன் மறுசீரமைப்பின் சுமை அந்நிதிய அங்கத்தவர்களிடையே சமமான முறையில் பகிரப்படக்கூடியவகையிலுமான உள்ளகக் கடன்மறுசீரமைப்பு செயற்திட்டத்தைத் தாம் முன்மொழிந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று நாடு பொருளாதார நெருக்கடிக்கும், உயர் பணவீக்க நிலைமைக்கும் முகங்கொடுத்திருக்கும் வேளையில் வங்கிகள் மற்றும் நிதியியல் நிறுவனங்களில் உள்ள பணவைப்பு, நிதியங்களில் உள்ள சேமிப்பு போன்ற நிதிச்சொத்துக்களின் உண்மையான பெறுமதியில் ஏற்படும் வீழ்ச்சியினால் மக்கள் பாதிக்கப்படக்கூடும் என்று சுட்டிக்காட்டியுள்ள ஆளுநர், இருப்பினும் இது குறித்தவொரு சொத்துக்கோ அல்லது நிதியத்துக்கோ மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல என்றும் விளக்கமளித்துள்ளார்.

மேலும், தொடக்கத்தில் உள்ளகக் கடன்மறுசீரமைப்பை மேற்கொள்ளாமல், சர்வதேச கடன்மறுசீரமைப்பின் ஊடாக மாத்திரமே பொதுக்கடன்களின் உறுதிப்பாட்டை அடைந்துகொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இருப்பினும் பொதுக்கடன் உறுதிப்பாட்டுக்கு உள்ளகக் கடன்மறுசீரமைப்பு அவசியம் என்ற உண்மை நிரூபணமானதால் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/159459

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேசிய கடன் மறுசீரமைப்பில் செல்வந்தர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது - சம்பிக்க குற்றச்சாட்டு

08 JUL, 2023 | 05:09 PM
image
 

(இராஜதுரை ஹஷான்)

தேசிய கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் பிரதான நிலை செல்வந்தர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு உழைக்கும் மக்களின் ஊழியர் சேமலாப நிதியத்தில் கை வைக்கப்பட்டுள்ளது. 

பொருளாதார மீட்சிக்கு சிறந்த திட்டங்கள் ஏதும் அமுல்படுத்தப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

மஹரக பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, 

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தற்போது அவதானம் செலுத்தப்படுகிறது. நாட்டின் கடன் நிலை மறுசீரமைக்கப்பட வேண்டும், கடன் நிலை நிலைபேறான தன்மையில் இல்லை என்பதை 2016 ஆம் ஆண்டு அமைச்சரவைக்கு அறிவித்தேன்.இருப்பினும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அப்போது அவதானம் செலுத்தப்படவில்லை.

2019 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ராஜபக்ஷர்களின் தூரநோக்கமற்ற பொருளாதார முகாமைத்துவ பொருளாதாரப் பாதிப்பு தீவிரமடைந்தது என்பது அனைவரும் அறிந்த உண்மை.பொருளாதார பாதிப்புக்கு ராஜபக்ஷர்கள் நிச்சயம் பொறுப்புக் கூற வேண்டும்.

2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த எமது அரசாங்கம் அதிக வட்டி வீதத்துக்கு சர்வதேச பிணைமுறியாளர்களிடமிருந்துக் பெற்றுக்கொண்ட அரசமுறை கடன்கள் பொருளாதார பாதிப்பை தீவிரப்படுத்தியது. இருப்பினும் வங்குரோத்து நிலைக்கு தள்ளவில்லை.

கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் தேசிய கடன் மறுசீரமைப்பை தவிர்க்க முடியாது.தேசிய கடன்களை மறுசீரமைக்க அரசாங்கம் எடுத்த திட்டங்கள் தவறானதாக உள்ளது. 2027 ஆம் ஆண்டு முதல் 2032 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மத்திய வங்கி விநியோகித்துள்ள திறைசேரி உண்டியல்களை பிணமுறிகளாக மாற்றியமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

திறைசேரி உண்டியல்களை பிணைமுறிகளாக மாற்றியமைக்கும் போது மத்திய வங்கி ரூபா பெறுமதி அலகு நெருக்கடியை எதிர்கொள்ளும்.

இந்த நிலையை முகாமைத்துவம் செய்ய ஒன்று நேரடி வரி அறவீட்டை அதிகரிக்க வேண்டும் அல்லது நாணயம் அச்சிட வேண்டும். 

இந்த இரு தீர்மானங்களையும் அல்லது ஒன்றையேனும் நடைமுறைப்படுத்தினால் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.ஆகவே திறைசேரி உண்டியல்களை பிணைமுறிகளாக மாற்றியமைக்கும் தீர்மானத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும்.

தேசிய கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் பிரதான நிலை செல்வந்தர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு உழைக்கும் மக்களின் ஊழியர் சேமலாப நிதியத்தில் கை வைக்கப்பட்டுள்ளது.

பொருளாதார மீட்சிக்கு சிறந்த திட்டங்கள் ஏதும் அமுல்படுத்தப்படவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய பரிந்துரைகளை அரசாங்கம் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துக்குள் நிறைவுப்படுத்த வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/159534

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு : நாணய மதிப்பீட்டை அதிகரிக்க வாய்ப்பு !

Fitch-Ratings.jpg

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்ட பின்னர் இலங்கையின் இறையாண்மையுடனான நாணய மதிப்பீட்டை அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளதாக ஃபிட்ச் மதிப்பீடுகள் தெரிவித்துள்ளன.

இதனிடையே, இலங்கை மின்சார சபையின் எதிர்கால நோக்கு நிலையாக இருந்து நேர்மறையாக உயர்ந்துள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/262958

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.