Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீள கூட்டுவது மக்களின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் - தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
29 JUN, 2023 | 08:09 PM
image
 

(எம்.எம்.சில்வெஸ்டர்)

கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீள கூட்டுகின்ற அதிகாரமானது, மக்களின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களை மீள கூட்டும் அதிகாரத்தை விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு வழங்கும் சட்டமூலம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு மாத்திரமே அதிகாரம் வழங்கப்படுவதாகவும்,  தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். 

குறிப்பிட்ட பதவிகளின் கால அளவை தாண்டி அந்தந்த பதவிகளில் செயற்பட மக்கள் பிரதிநிதிகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டியது அமைச்சர் அல்ல, மக்களே ஆவர். அதற்கான அதிகாரத்தை வழங்க வேண்டியது மக்களே ஆவர்  என அவர் இத்னபோது தெரிவித்தார். 

இது நாட்டின் ஜனநாயகத்தில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தும் எனவும்  கலைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களை மீண்டும் ஸ்தாபிப்பதற்கான அதிகாரத்தை விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு வழங்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவின் தனிப்பட்ட பிரேரணை, சட்டமூலமாக  வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநகர சபைகள் கட்டளைச் சட்டம், மாநகர சபைகள் திருத்தச் சட்டம் மற்றும் பிரதேச சபை சட்டம் ஆகிய சட்டங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள சில சரத்துகளை திருத்துவதற்காக இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அந்த சரத்துகள்  திருத்தப்பட்டால் தற்போது கலைக்கப்பட்டுள்ள மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகளை  விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நிர்ணயிக்கும் கால எல்லை வரை மீண்டும் ஸ்தாபிப்பதற்கான வாய்ப்பு  கிடைக்கும் என  தெரிவிக்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/158849

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பதவிக் காலம் நிறைவடைந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு மீண்டும் அதிகாரத்தை வழங்க முடியாது; ஜயந்த கெட்டகொடவின் பிரேரணைக்கு எதிராக நீதிமன்றம் செல்வோம் - தயாசிறி

09 JUL, 2023 | 02:43 PM
image
 

(எம்.மனோசித்ரா)

பதவிக் காலம் நிறைவடைந்துள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கு மீண்டும் அதிகாரத்தை வழங்கி பழைய தலைவர்களையும், உறுப்பினர்களையும் நியமிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. பொதுஜன பெரமுனவின் தோல்வியை மறைப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள இந்த பிரேரணைக்கு எதிராக நீதிமன்ற்ததை நாடவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பிரதேச சபை, மாநகர சபை மற்றும் நகர சபை தொடர்பில் தனிநபர் பிரேரணையொன்று பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வினவிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இந்த பிரேரணைக்கு எதிராக வழக்கு தொடர எதிர்பார்த்துள்ளோம். தற்போது நடைமுறையிலுள்ள சட்டத்துக்கு அப்பால் உள்ளுராட்சி மன்றங்களின் பதவி காலத்தை நீடிக்க முடியாது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உரிய காரணங்களை முன்வைத்து விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரால் இரண்டு ஆண்டுகளுக்கு உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக் காலத்தை பாராளுமன்றத்தின் அனுமதியுடன் நீடிக்க முடியும். அவ்வாறில்லை எனில் அவசரகால நிலைமையில் ஜனாதிபதியால் பதவி காலத்தை நீடிக்க முடியும். ஆனால் நாட்டில் தற்போது அவசரகால நிலைமை இல்லை என்பதால் ஜனாதிபதிக்கு எந்தவொரு நடவடிக்கைகளையும் முன்னெடுத்துச் செல்ல முடியாது.

அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளால் சகல கட்சிகளையும் சேர்ந்தவர்கள் மீண்டும் உள்ளுராட்சி சபைகள் ஸ்தாபிக்கப்படுவதால் தமக்கும் நன்மை என எண்ணக்கூடும். உண்மையில் அவ்வாறு செய்வதற்கு எந்தவொரு சட்ட ஏற்பாடுகளும் இல்லை. கிராம மட்டத்திலிருந்து பொதுஜன பெரமுன வாக்குகளை இழந்துள்ளதால், அக்கட்சியின் தோல்வியை மறைப்பதற்காகவே இவ்வாறானதொரு பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது என்றார்.

https://www.virakesari.lk/article/159579

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.