Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முல்லைத்தீவில் பௌத்த சின்னங்களை தரிசிக்கும் நிலையை உருவாக்குவது கடமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவில் பௌத்த சின்னங்களை தரிசிக்கும் நிலையை உருவாக்குவது கடமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

வீரகேசரி நாளேடு

வரலாற்று ரீதியாக முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் பௌத்த புராதனச் சின்னங்களை எமது மக்கள் தரிசிக்கும் நிலைமை உருவாக்க வேண்டியது எமது கடப்பாடாகும். எந்த நிலையிலிருந்து முட்டுக்கட்டைகள் வந்தாலும் நாட்டையும் மதத்தையும் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவேன் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை அலரிமாளிகையில் இடம் பெற்ற பல்லன் தரசுமன தேரருக்கு தென்பகுதிக்கான சங்க நாயகர் பதவியை கையளிக்கும் நிகழ்ச்சியின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி கூறியதாவது: அண்மையில் வீடியோ ஒளிப்பதிவு நாடாவொன்றை பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. அதில் நான் கண்ட காட்சி என்ன தெரியுமா? பௌத்த புராதன சின்னங்கள் அதிகம் காணப்படும் பிரதேசமான முல்லைத்தீவு பிரதேசத்தை புலிகள் கைப்பற்றும் காட்சியாகும்.

இது போன்று பல இடங்களுக்கு எம்மால் சென்று மத வழிபாடுகளை நடத்த முடியாதுள்ளது. பௌத்தர்களுக்கு மட்டுமல்ல இந்நிலையேற்றப்பட்டுள்ளது ஏனைய மதத்தினரும் தமது புராதனச் சின்னங்களை பார்வையிட வணக்கம் செலுத்த முடியாதுள்ளது.

எனவே இது போன்ற இடங்களுக்கு எமது மக்கள் சென்று வழிபாடுகளை செய்வதற்கும், யாத்தீரிகள் வந்து செல்வதற்குமான வழிவகைகளை செய்வது எமது கடப்பாடாகும். எந்த முட்டுக்கட்டை போடப்பட்டாலும் இதனை நிறைவேற்றுவோம்.

தாய்நாட்டையும் மதத்தையும் பாதுகாப்பது எமது கடப்பாடாகும். அதனை நிறைவேற்றியே தீருவேன்.

நாம் எமது நாட்டைப் பற்றி, எதிர்காலத்தை பற்றி, பூமியின் சுயாதிபத்தியத்தை பற்றி எதிர் காலத்தை எண்ணி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அதற்காக எமது முரண்பாடான கருத்துக்களை கைவிட்டு ஒரு நோக்கத்திற்காக இணைய வேண்டும்.

செய்திகள் இங்கே......

http://www.virakesari.lk/html/head_view.asp?key=6940

அதே போல எமக்கும் எமது நாட்டினையும் எமது பூர்வீகத்தையும் காக்கும் உரிமையும் கடமையும் இருகின்றது.மகிந்த புஸ்வாண வெற்றியில் துள்ளுகிறார் காற்று புடுங்கப்படும் போது அண்ணாச்சிக்கு தெரியும் சிங்களம் வாங்காத தோல்வி மகிந்ததான் பெறுவார் வெகுவிரைவில்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முல்லைத்தீவில் அவர் பௌத்த சிங்கள புராதன சின்னங்களை தரிசிக்கு முன்னர்இ கோணமாமலை ஈழக்கொடியேறலாம்...!

இதை ஏற்றுவதும் தமிழீழத்தை அமைப்பதும் தமிழர்கள் எமது கடமையாயினும் அதை மறந்து நாம் எமக்கான குறிகிய இலட்சியத்துக்குள் நிற்க்கும் வரை மகிந்தவின் கதையே சபையேறும்..!

Edited by Nitharsan

விரைவில் முல்லைத்தீவு மீது ஒரு பாரிய இராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதற்கு இந்த உரைமூலம் ராஜபக்ஷ்ச அவர்கள் தன்கீழ் இயங்கும் அதிகாரபீடத்திற்கு பச்சைக்கொடி காட்டி இருக்கக்கூடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.