Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமைச்சரவையைக் கூட்டி உடனடியாக அவசர நிலையை பிரகடனப்படுத்த வேண்டும் – GMOA கோரிக்கை !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Dr. Bellana elected Vice President of CMASL – The Island

வைத்தியசாலைக் கட்டமைப்பில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையைக் கருத்திற்கொண்டு அமைச்சரவையைக் கூட்டி  உடனடியாக அவசர நிலையை பிரகடனப்படுத்த வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் ஒன்றியம் அரசாங்கத்திடம் யோசனை முன்வைத்துள்ளது.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அந்த ஒன்றியத்தின் தலைவரான வைத்தியர் ருக்ஷான் பெல்லன இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.

கெனியுலா(Cannula) எனப்படும் ஊசி மருந்துகளை ஏற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணம் ஒன்றின் பாகம் விஷமானதால் ஏற்பட்ட தாக்கநிலையால் பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்ற மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையின் முகாமைத்துவ உதவியாளர் (வயது 31) ஒருவர் மரணித்த சம்பவம் பதிவாகியுள்ளது.

கடந்த சில தினங்களாக  மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்குரிய நிலையால், நாட்டின் சில வைத்தியசாலைகளில், சில மரணங்கள் பதிவாகின.

குறித்த நபர் சில தினங்களுக்கு முன்னர் கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் டெங்கு நோய்க்கு சிகிச்சைப் பெறுவதற்காக அனுமதிக்கப்பட்டார். இதன்போது, அவருக்கு சிகிச்சையளிப்பதற்காக ஒரு கையில் கெனியுலா எனப்படும் ஊசி மருந்துகளை ஏற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணம் ஒன்றின் பாகம் ஏற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த இடத்தில் அவருக்கு தொற்று ஏற்பட்டதுடன் அதன் பின்னர் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. டெங்கு நோயிலிருந்து குணமடைந்த குறித்த நபர் பின்னர் மாரடைப்புக்கு சிகிச்சைப் பெறுவதற்காக பாணந்துறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு நோய் நிலைமை தீவிரமடைந்தமையால் பல தினங்களாக தீவிர சிகிச்சைகளை வழங்குவதில் சிரமம் ஏற்பட்ட நிலையில் அவர் உயிரிழந்ததாக குறிப்பிடப்படுகிறது.

இதேநேரம், களுபோவில போதனா வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 72 வயதான பெண் ஒருவர் சத்திரசிகிச்சைக்கு முன்னரான சிகிச்சைகளின்போது சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்ததாக  உறவினர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இதற்கு முன்னர், பேராதனை போதனா வைத்தியசாலையில் வயிற்றுவலிக்கு சிகிச்சைப் பெறுவதற்காக அனுமதிக்கப்பட்ட 21 வயதான யுவதி ஒருவர் உயிரிழந்தார். வைத்தியசாலையில் வழங்கப்பட்ட தடுப்பூசி காரணமாகவே அவர் மரணித்ததாக குறித்த யுவதியின் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அதேநேரம், தேசிய கண் வைத்தியசாலையில் வெண்படலத்தை நீக்குவதற்கான சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நோயாளருக்கு மருந்து வழங்கப்பட்டதை அடுத்து அவருக்க பார்வைக் குறைப்பாடு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

இந்தச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு சுகாதார அமைச்சால் பிரத்தியேகமான பிரிவு ஒன்று நிறுவப்பட வேண்டும் என வைத்திய மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவரான வைத்தியர் சமல் சஞ்ஜீவ தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/263160

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுகாதார நெருக்கடி – அரசாங்கம் அவசரநிலையை பிரகடனம் செய்யவேண்டும் - மருத்துவ தொழில்துறை அமைப்பு வேண்டுகோள்

Published By: RAJEEBAN

15 JUL, 2023 | 06:34 AM
image
 

சுகாதார நெருக்கடி தொடர்பில் அவசரநிலையை பிரகடனம் செய்யுமாறு மருத்துவ தொழில்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மருந்துகள் தொடர்பிலான பாதிப்புகளால் அதிகளவானவர்கள் உயிரிழப்பதன் காரணமாக தேசிய அவசரநிலையை அறிவிக்கவேண்டும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் மன்றத்தின் தலைவர் வைத்தியர் ருக்சான் பெலான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவின் கடனுதவியுடன் இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகள் தொடர்பில் சந்தேகம் காணப்படுகின்றது என தெரிவித்துள்ள வைத்தியர் ருக்சான் பெலான இந்த விவகாரத்தை எவ்வாறு கையாளவேண்டும் என அமைச்சரவை ஆராயவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுகாதாரதுறையை சேர்ந்த ஏனைய அமைப்புகளுடன் இணைந்து இந்திய தூதரகத்தின் ஊடாக இந்தியாவிற்கு கடிதமொன்றை அனுப்ப எண்ணியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் பணத்தில் மீள செலுத்தப்படவேண்டிய கடனை வீணடித்துள்ளனர். இது குற்றம் எனவும் தெரிவித்துள்ள அரசாங்க மருத்துவ அதிகாரிகள் மன்றத்தின் தலைவர் வைத்தியர் ருக்சான் பெலான சில அதிகாரிகள் கடனுதவியை துஸ்பிரயோகம் செய்யலாம் என நினைத்துள்ளனர். தாங்கள் ஆடம்பரவாழ்க்கை வாழ்ந்துகொண்டு தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்வதே அவர்களின் நோக்கம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டுபோர் காலத்தில் விடுதலைப்புலிகளின் தாக்குதலால் நிலவிய  சூழல் போன்ற சுகாதார  சூழல் தற்போது காணப்படுகின்றது இது ஒரு அவசரநிலை நாடு முழுவதும் புதைக்கப்பட்டுள்ள குண்டுகள் எந்நேரமும் வெடிக்கலாம் என்பது போன்ற நிலை தற்போது காணப்படுகின்றது என மேலும் தெரிவித்துள்ள அவர் இந்த விடயத்தை அரசாங்கம் மிகவும் சாதாரணமாக கருதுகின்றது எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

https://www.virakesari.lk/article/160045

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.