Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அச்சத்துடன் வாழும் மக்கள்

Featured Replies

அச்சத்துடன் வாழும் மக்கள்

[16 - September - 2007] [Font Size - A - A - A]

-அஜாதசத்ரு-

தொடரும் போரின் கொடுமைகளினாலும் அடிக்கடி எதிர்கொள்ளப்படும் இயற்கை அழிவுகளினாலும் பாரிய மனித அவலங்களையும் இடப்பெயர்வுகளையும் அகதி வாழ்க்கையையும் எதிர்கொண்டு வரும் மட்டக்களப்பு மாவட்ட மக்களை மேலும் மேலும் நசுக்குவதற்கான அரசியல் இராணுவ செயற்திட்டங்களையே அரச தரப்பினர் முன்னெடுத்து வருவதை காணக்கூடியதாகவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்பாலான நிலப்பரப்புகளை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்துள்ளதாக அறிவித்துள்ள அரசாங்கம் அது தொடர்பான மிகப்பிரமாண்டமான விழாவொன்றினை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நடத்தியதுடன் கிழக்கின் உதயம் அபிவிருத்தி வேலைத்திட்டம் என்று பிரகடனப்படுத்திய போதிலும், அங்குள்ள மக்கள் மீளமுடியாத பெருந்துயரொன்றுக்குள் தள்ளி வீழ்த்தப்பட்டுள்ள சம்பவங்களே மேலோங்கிக் காணப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எங்காவது ஒரு மூலையில் தினமும் ஆட்கடத்தல்கள், படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்ற வண்ணமேயுள்ளன. இதனால், அங்குள்ள மக்கள் அச்சம் பயபீதி என்பவற்றுடனேயே தமது வாழ்நாட்களை கடத்திக் கொண்டிருக்கின்றனர்.

மாலை ஆறு மணிக்கு பின்னர் போக்குவரத்துச் சேவைகள் இடைநிறுத்தப்பட்டு வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்ற துயரமான நிலைமையே இன்னமும் அங்கு காணப்படுகின்றன.

இதனைவிட கடந்த மார்ச் மாதம் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கிய படுவான்கரைப் பிரதேசம் மீது மேற்கொள்ளப்பட்ட பாரிய இராணுவ நடவடிக்கைகளையடுத்து அப்பகுதிகளிலிருந்து வெளியேறி இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசங்களில் சுமார் இரண்டு மாதகாலம் பெரும் இன்னல்களை அனுபவித்த சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள் மீள்குடியேற்றப்பட்ட போதிலும் அழிந்துபோன தமது இருப்பிடங்களை புனரமைத்துக்கொள்ள முடியாத நிலையிலும் அடிப்படை வசதிகள், உரிய நிவாரண உதவிகள் எதுவுமற்ற நிலையிலேயே தமது வாழ் நாட்களை கடத்திக் கொண்டிருக்கின்றனர்.

ேபார் நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்த மக்களை படுவான்கரைப் பிரதேசத்தில் மீளக்குடியேற்றும் நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்த போது, அந்நிகழ்வுகளில் கலந்துகொண்ட அமைச்சர்கள், அரச உயரதிகாரிகள் ஆகியோர் மாதத்திற்கு இரு தடவை ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான உலருணவு வசதிகள் வழங்கப்படுமென்று உறுதியளித்ததுடன் நஷ்டஈட்டு உதவிகளும் துரித கதியில் வழங்கப்படுமென்று உறுதியளிக்கப்பட்டு அதனை அரச ஊடகங்கள் ஊடாக மிகப் பெரியளவில் பிரசாரமும் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எனினும், மீள்குடியேற்றப்பட்ட படுவான்கரைப் பிரதேச மக்களுக்கு இதுவரை ஐந்து தடவைகள் மாத்திரமே உலருணவு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதுவும் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் வழங்கப்படும் அரிசி, பருப்பு, சீனி, மா போன்ற குறிப்பிட்டளவு பொருட்களை மாத்திரம் வைத்துக்கொண்டு தொழில்வாய்ப்பு எதுவுமற்ற நிலையிலுள்ள நம்மால் எப்படி வாழ்க்கை நடத்த முடியுமென்று இப்பகுதி மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

விவசாயம், மீன்பிடித்தொழில், கால்நடை வளர்ப்பு, சேனைப் பயிர்ச்செய்கை என்பவற்றையே பிரதான தொழிலாகக் கொண்ட இப்பகுதி மக்களின் அனைத்து மூலதனங்களும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக அழித்தொழிக்கப்பட்டுள்ளன.

பலரின் வீடுகளிலிருந்த உடைமைகள் சூறையாடப்பட்டுள்ளதுடன் வீடுகளில் வளர்க்கப்பட்ட ஆடு, கோழி என்பன காணாமல் போயுள்ளதுடன் பண்ணைகளில் காணப்பட்ட மாடுகள் ஆயிரக்கணக்கில் காட்டுப் பகுதிகளுக்குள் சென்றுள்ளன.

காட்டுப்பகுதிகளில் படையினர் முகாமிட்டுள்ளதால் அப்பகுதிக்கு சென்று அவற்றை மீட்டுவர முடியாத நிலையில் பாற் பண்ணையாளர்கள் உள்ளனர்.

போர் நடவடிக்கைகளுக்கு முன்னர் படுவான்கரைப் பிரதேசத்திலுள்ள பண்ணைகளில் சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் இருந்ததாக கால்நடை வளர்ப்போர் சங்க உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி - பதுளை வீதி இன்னமும் பொதுமக்களின் பாவனைக்கு திறந்துவிடப்படாத நிலையிலும் அப்பகுதி மக்கள் மீளக்குடியேற்றப்படாத நிலையிலும் அப்பகுதியில் காணப்படும் 20 ஆயிரம் மாடுகளை பொலநறுவை மாவட்டத்திலுள்ள கந்தாக்காடு பண்ணைக்கு எடுத்துச் செல்ல அரச உயர்மட்டத்தினரால் இரகசியமாக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் வெளிக்கொண்டுவரப்பட்டதையடுத

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.