Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனேடிய எதிர்ப்புணர்வும் பின்னணியும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

23 JUL, 2023 | 06:07 PM
image
 

கார்­வண்ணன்

கன­டா­வுக்கு எதி­ராக அண்­மையில் கொழும்பு, வவு­னியா, மட்­டக்­க­ளப்பில் நடத்­தப்­பட்ட போராட்­டங்­க­ளுக்குப் பின்னர், கனே­டிய உயர் ஸ்தானிகர் எரிக் வோல்ஷ், இந்த வாரம் வடக்­கிற்குப் பயணம் மேற்­கொண்­டி­ருந்தார்.

Candada_1.jpg

கனே­டிய உயர் ஸ்தானிகர் கொழும்பில் பணியைப் பொறுப்­பேற்றுக் கொண்ட பின்னர், அவர் வடக்­கிற்கு மேற்­கொண்ட முதல் பயணம் இது.

இந்தப் பய­ணத்தின் போது அவர் அர­சி­யல்­வா­தி­களைச் சந்­திப்­பதை விட, பாதிக்­கப்­பட்ட, பாதிக்­கப்­படும் நிலையில் உள்ள சமூ­கத்­தி­னரைச் சந்­திப்­ப­திலும், அவர்­களின் நிலையை அறிந்து கொள்­வ­திலும் கவனம் செலுத்­தி­யி­ருந்தார்.

முக்­கி­ய­மாக, காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வு­க­ளையும், சமூக மட்ட அமைப்­பு­களின் பிர­தி­நி­தி­க­ளையும் கனே­டியத் தூதுவர் எரிக் வோல்ஷ் சந்­தித்துப் பேசி­யி­ருந்தார்.

அவர் அர­சி­யல்­வா­திகள் என்று சந்­தித்­தது இரண்டு பேரைத் தான். யாழ்ப்­பா­ணத்தில் நாடா­ளு­மன்ற உறுப்­பினர் சிறி­தரன், முல்­லைத்­தீவில் ரவி­கரன் ஆகியோர் தான் அவர்கள்.

எரிக் வோல்ஷ் உட­னான சந்­திப்பின் போது, நாடா­ளு­மன்ற உறுப்­பினர் சிறி­தரன், வடக்கு, கிழக்கு பௌத்­த­ம­ய­மாக்­கப்­ப­டு­வது, வடக்கு கிழக்கில், போர் முடி­வுக்கு வந்த பின்னர், புதி­தாக அமைக்­கப்­பட்ட, அமைக்­கப்­ப­டு­கின்ற 71 பௌத்த விகா­ரைகள் தொடர்­பான விப­ரங்கள் அடங்­கிய அறிக்­கையை சமர்ப்­பித்­தி­ருந்தார்.

முன்னாள் மாகா­ண­சபை உறுப்­பினர் ரவி­க­ர­னு­ட­னான சந்­திப்பில், குறிப்­பாக குருந்­தூர்­ம­லையில் அடாத்­தாக அமைக்­கப்­பட்­டுள்ள விகாரை, மற்றும் அதனை ஒட்­டி­யுள்ள சர்ச்­சைகள், சிங்­கள பௌத்­த­ம­ய­மாக்கல் தொடர்­பான விட­யங்கள் குறித்து கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.

இது தொடர்­பான அறிக்கை ஒன்­றையும் கனே­டிய உயர் ஸ்தானிகரிடம் கைய­ளித்­தி­ருந்தார் ரவி­கரன்.

வடக்குப் பய­ணத்தை முடித்துக் கொண்டு, கனே­டிய உயர் ஸ்தானிகர்  எரிக் வோல்ஷ் கொழும்பு திரும்­பி­யதும், குருந்­தூர்­ம­லையில் அடாத்­த­தாக அமைக்­கப்­பட்­டுள்ள குருந்து விகா­ரையின் சங்­க­நா­யக்கர் என்று அழைத்துக் கொள்ளும் பௌத்த பிக்கு, கனே­டியத் தூது­வரைச் சந்­தித்து, முல்­லைத்­தீ­வுக்குச் சென்று இன­வா­தி­களைச் சந்­தித்­த­மைக்கு (ரவி­கரன்) எதிர்ப்பு வெளி­யிட்­ட­துடன், அறிக்கை ஒன்­றையும் வழங்­கி­யி­ருந்தார்.

குருந்­தூர்­மலை ஆக்­கி­ர­மிப்­புக்கு எதி­ராக போராட்டம் நடத்­து­ப­வர்­களில் ரவி­கரன் முக்­கி­ய­மா­னவர் என்­பதால், அவரை இன­வா­தி­யாக பௌத்த பிக்­குகள் மாத்­தி­ர­மன்றி, சரத் வீர­சே­கர போன்ற சிங்­களப் பேரி­ன­வா­தி­களும் அடை­யா­ளப்­ப­டுத்­து­கின்­றனர்.

அதனால் தான், வடக்­கிற்குச் சென்று தமிழ் இன­வா­தி­களை, பிரி­வி­னை­வா­தி­களைச் சந்­தித்த கனே­டிய உயர் ஸ்தானிக‍ரை வேண்­டப்­ப­டா­த­வ­ராக அறி­வித்து, நாட்டை விட்டு வெளி­யேற்ற வேண்டும் என்று கொந்­த­ளித்­தி­ருக்­கிறார் சரத் வீர­சே­கர.

குருந்­தூர்­மலை ஆக்­கி­ர­மிப்பு, தனியே சிங்­கள பௌத்த மத­கு­ரு­மா­ரினால் மாத்­திரம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. அதற்குப் பின்னால் இலங்­கையின் இரா­ணுவ இயந்­தி­ரமும் இருக்­கி­றது.

முன்னாள் படைத் தள­ப­தி­க­ளான பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சரத் வீர­சே­கர, சரத் பொன்­சேகா போன்­ற­வர்கள் குருந்­தூர்­மலை விவ­கா­ரத்தில் வெளிப்­ப­டுத்தும் கருத்­துக்கள் மிக மோச­மா­னவை.

இப்­போது இவர்­க­ளுடன் மேலும் மூன்று முன்னாள் படை அதி­கா­ரிகள் இணைந்து கொண்­டி­ருக்­கின்­றனர். லெப்.ஜெனரல் ஜகத் டயஸ், பிரி­கே­டியர் அதுல ஹேமச்­சந்­திர, லெப்.கேணல் அனில் சுமேத அம­ர­சே­கர ஆகிய மூவ­ருமே அவர்கள்.

லெப்.ஜெனரல் ஜகத் டயஸ், இறு­திக்­கட்டப் போரில், 57 ஆவது டிவி­சனின் கட்­டளை அதி­கா­ரி­யாக பணி­யாற்­றி­யவர். போர்க்­குற்­றச்­சாட்­டு­க­ளையும் எதிர்­கொள்­பவர்.

போர் முடிந்த பின்னர், பெர்­லினில் இரா­ஜ­தந்­திரப் பத­வி­யையும் வகித்­தவர்.

இரா­ணுவத் தலைமை அதி­கா­ரி­யாக இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அதிகம் வெளியில் தலை­காட்­டா­தவர்.

அவர் திடீ­ரென ஏனைய இரு முன்னாள் படை அதி­கா­ரி­க­ளுடன் இணைந்து குருந்­தூர்­ம­லையில் அகழ்­வுப்­ப­ணி­களை செய்­ய­வென தொல்­பொருள் திணைக்­க­ளத்­தினால், நாட்­டப்­பட்ட எல்லைக் கற்­களை அர­சாங்கம் அகற்­று­வ­தற்கு எதி­ராக மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில் அடிப்­படை உரிமை மனுவை தாக்கல் செய்­தி­ருக்­கிறார்.

நீதி­மன்ற கட்­ட­ளையை மீறி குருந்­தூர்­ம­லையில் விகாரை கட்­டப்­பட்­டது. அந்த விகா­ரையைக் கட்­டி­யது இரா­ணு­வத்­தினர் தான் என்று கல்­வெட்டும் வைக்­கப்­பட்­டது.

குருந்­தூர்­மலை ஆக்­கி­ர­மிப்பை உறுதி செய்­வ­தற்­காக, சரத் வீர­சே­கர, சரத் பொன்­சேகா போன்­ற­வர்கள் கடு­மை­யான முயற்­சி­களை முன்­னெ­டுக்­கின்ற நிலையில், மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தின் ஊடாக அந்த ஆக்­கி­ர­மிப்பை பாது­காக்க முனைந்­தி­ருக்­கி­றார்கள் இவர்கள்.

இவ்­வா­றான ஒரு நிறு­வ­ன­ம­யப்­ப­டுத்­தப்­பட்ட பௌத்­த­ம­ய­மாக்­கலும், சிங்­க­ள­ம­ய­மாக்­கலும் வடக்கு, கிழக்கில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வதை கனே­டியத் தூது­வ­ரிடம் சிறி­த­ரனும், ரவி­க­ரனும் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தார்கள்.

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்­க­ளுக்கு எதி­ரான இனப்­ப­டு­கொலை இடம்­பெற்­றது என்­பதை ஏற்றுக் கொண்ட நாடு கனடா.

இனப்­ப­டு­கொலை நாள் தீர்­மா­னத்தை கன­டாவின் ஒன்­டா­ரியோ மாகாண அரசும், நாடா­ளு­மன்­றமும் அங்­கீ­க­ரித்­தி­ருக்­கின்­றன. இந்த அங்­கீ­காரம் இலங்கை அர­சாங்­கத்­துக்­கான ஒரு பெரும் பின்­ன­டை­வாக பார்க்­கப்­ப­டு­கி­றது.

இலங்­கையின் இரண்டு முன்னாள் ஜனா­தி­ப­தி­களை- மஹிந்த ராஜபக்ஷ  மற்றும் கோட்­டா­பய ராஜபக்ஷ - தனது நாட்­டுக்குள் நுழை­வ­தற்குத் தடை­வி­தித்­துள்ள ஒரே நாடும் கனடா தான்.

இவை­யெல்லாம், சிங்­கள பௌத்த பேரி­ன­வா­தி­க­ளுக்கு எரிச்­சலைக் கொடுத்­தி­ருக்­கின்ற விட­யங்கள்.

அதனால் தான், தமிழ் இனப்­ப­டு­கொலை நாள் தீர்­மா­னத்தை நிறை­வேற்­றிய கனே­டியப் பிர­தமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவ­ரது அர­சாங்­கத்­துக்கு எதி­ரான போராட்­டங்கள் அண்­மையில் இடம்­பெற்­றி­ருந்­தன.

குருந்­தூர்­மலை ஆக்­கி­ர­மிப்­புக்கு எவ்­வாறு அர­சாங்க ஆத­ரவுப் பின்­ன­ணி­யுடன் கூடிய திட்­ட­மிட்டு கட்­ட­மைக்­கப்­பட்ட ஆத­ரவுத் தளம் உள்­ளதோ, அதே­போன்­ற­தொரு ஆத­ரவுத் தளம், கன­டா­வுக்கு எதி­ரான போராட்­டங்கள், செயற்­பா­டு­க­ளுக்கும் இருந்து கொண்­டி­ருக்­கி­றது.

கன­டா­வுடன் அர­சாங்கம் நேர­டி­யாக முரண்­பட விரும்­பாத அதே­வேளை, கன­டாவின் தீர்­மா­னங்­க­ளையும், செயற்­பா­டு­க­ளையும் ஏனைய அமைப்­பு­களைக் கொண்டு கண்­டிக்­கின்ற, எதிர்க்­கின்ற வேலைத்­திட்­டங்கள் இலங்­கையில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

கன­டாவில் இரண்டு முக்­கி­ய­மான பாதிக்­கப்­பட்ட புலம்­பெயர் சமூ­கங்கள் உள்­ளன. ஒன்று, இலங்கைத் தமி­ழர்கள். மற்­றது சீக்­கி­யர்கள்.

பஞ்­சாபில் காலிஸ்தான் தனி­நாடு கோரிப் போராட்டம் நடத்­திய சீக்­கி­யர்கள் இந்­திய அர­சாங்­கத்­தினால் ஈவி­ரக்­க­மின்றி நசுக்­கப்­பட்­டனர்.

அங்­கி­ருந்து தப்பிச் சென்று கன­டாவில் குடி­யே­றிய சீக்­கி­யர்கள் இப்­போது- 8 இலட்சம் பேரைக் கொண்ட வலு­வான சமூ­க­மாக மாறி­யுள்­ளனர். அவர்­களில் ஒரு பகு­தி­யினர் இன்­னமும் காலிஸ்தான் தனி­நாடு கோரிய போராட்­டங்­களை தீவி­ர­மாக ஆத­ரிக்­கின்­றனர். அவர்கள் கன­டாவில் பல பேர­ணிகள், நிகழ்­வு­க­ளையும் நடத்­து­கின்­றனர்.

அண்­மையில் காலிஸ்தான் ஆத­ரவு அமைப்­பினர் நடத்­திய பேர­ணியில் இந்­தி­ரா ­காந்தி படு­கொ­லையை சித்­தி­ரிக்கும் ஊர்தி ஒன்று இடம்­பெற்­றி­ருந்­தது. அதற்கு கன­டா­விடம், இந்­தியா கடும் எதிர்ப்பு தெரி­வித்­தது.

இந்­தி­யாவில் இருந்து எழுந்த எதிர்ப்­புக்கு வெளி­வி­வ­கார அமைச்சர் அலி சப்­ரியும் ஆத­ரவு அளித்­தி­ருந்தார். அவர் விடு­தலைப் புலி­களை காலிஸ்தான் ஆத­ரவு அமைப்­புடன் ஒப்­பிட்டு சமூக வலைத்­தளப் பதி­வு­க­ளையும் இட்­டி­ருக்­கிறார்.

அது­போல, இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடிக்கு இரா.சம்­பந்தன் அனுப்­பிய கடிதம், காலிஸ்தான் பிரி­வி­னை­வா­தி­களின் மொழி­ந­டையை தழு­வி­ய­தாக இருக்­கி­றது என்று, புதிய மக்கள் முன்­னணி எனும் கட்சி, இந்­திய உயர் ஸ்தானிகருக்கு கடிதம் அனுப்­பி­யி­ருக்­கி­றது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் கருத்­துக்­களை இந்­தியப் பிர­தமர் கருத்தில் கொள்ளக் கூடாது என்றும் அந்தக் கட்சி வலி­யு­றுத்­தி­யி­ருக்­கி­றது.

கனடா மற்றும் அவுஸ்­ரே­லி­யா­வுடன், இந்­தியா நெருங்­கிய உற­வு­களைக் கொண்­டி­ருந்­தாலும்,  காலிஸ்தான் ஆத­ரவு போராட்­டங்கள் இந்த நாடு­களில் தீவிரம் பெறு­வதை இந்­தியா விரும்­ப­வி­லலை.

அதனைக் கடு­மை­யாக எதிர்த்து வரு­கி­றது. எதிர்­வி­னை­யாற்றி வரு­கி­றது. அவ்­வா­றான எதிர்­வி­னை­க­ளுடன் இலங்­கையும் கைகோர்த்துச் செயற்­பட முனை­கி­றது. அதற்குக் காரணம் உள்­ளது.

புலம்­பெயர் சீக்­கி­யர்கள் கனே­டிய அர­சி­யலில் செலுத்தும் செல்­வாக்கைப் போலவே புலம்­பெயர் தமி­ழர்­களும் செல்­வாக்கு செலுத்­து­ப­வர்­க­ளாக மாறி­யுள்­ளனர்.

கன­டாவின் பிர­தான கட்­சி­களில் ஒன்­றான புதிய ஜன­நா­யக கட்­சியின் தலைவர் ஜக்மீட் சிங் என்ற சீக்­கியர் தான். கனே­டிய பாரா­ளு­மன்­றத்­துக்கு 2019 இல் 18 சீக்­கி­யர்கள் தெரி­வா­கினர். 2021 நாடா­ளு­மன்றத் தேர்­தலில் 16 பேர் வெற்றி பெற்­றனர்.

ஆனால், இந்­திய பாரா­ளு­மன்­றத்தின் லோக்­ச­பாவில் 13 சீக்­கி­யர்கள் தான் இருக்­கி­றார்கள். அந்தளவுக்கு கனேடிய அரசியலில் சீக்கியர்களின் செல்வாக்கும் ஆர்வமும் உள்ளது.

இதனை இந்தியா ஆரோக்கியமான ஒன்றாக பார்க்கவில்லை. அது காலிஸ்தான் பிரிவினைக்கு வித்திடுமோ என்று அஞ்சுகிறது. இலங்கையும் அவ்வாறு தான் புலம்பெயர் தமிழர்களை நோக்குகிறது.

இனப்படுகொலைத் தீர்மானத்தை முன்னின்று நிறைவேற்றிய, கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி, இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டு, தடை விதிக்கப் பட்டுள்ளதும் இவ்வாறான ஒரு எதிர் வினை தான்.

கனடா சீக்கிய புலம்பெயர் சமூகத் தையும், தமிழ்ச் சமூகத்தையும் சமமாக நடத்துவது போல இந்தியாவோ இலங்கையோ இந்தச் சமூகங்களை நடத்தவில்லை.

இவ்வாறான நிலையில் கனடாவை தனியாக எதிர்ப்பதை விட, இந்தியாவுடன் சேர்ந்து எதிர்ப்பது தான் புத்திசாலித்தனமானதெனக் கருதுகிறது இலங்கை அரசாங்கம்.

அதற்காகத் தான் காலிஸ்தான் அமைப்புக்கு எதிரான கருத்துக்களை வெளியிடுகிறது. அவர்களுடன் தமிழர்களின் போராட்டங்கள் மற்றும் அரசியல் முயற்சிகளை முடிச்சுப் போட்டு, தமிழர்களின் போராட்டத்தை நசுக்க முற்படுகிறது அரசாங்கம்.

https://www.virakesari.lk/article/160722

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.