Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறப்பு மிகு ஆடி அமாவாசை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

15 AUG, 2023 | 12:19 PM
image
 

குமார் சுகுணா

ஆடி மாதம் என்றாலே அது இறைவனுக்கு உரிய மாதமாக கருதப்படுகின்றது. அது மட்டும் அல்லாது நமது முன்னோர்களான பித்ருக்களுக்கும் இம்மாதம் உரிய மாதமாக கருதப்படுகின்றது. இம் மாதத்தில் வருகின்ற அமாவாசை தினமானது பித்ருக்களுக்கு மிக முக்கியத்துவம் மிக்கதாகும்.

image.png

தை மாதம் வருகின்ற அமாவாசை ஆடி மாதம் வருகின்ற அமாவாசை புரட்டாசி மாதம் வருகின்ற அமாவாசைகள் என்பன இந்துக்களுக்கு முக்கியமானவைகளாகும். அதாவது பித்ருக்களை வழிபட கூடிய முக்கியமான அமாவாசைகளாகும். அந்த வகையில் இன்று ஆடி அமாவாசை நாளாகும்.

இந்த மாதம் தட்சிணாயினப் புண்ணியகாலத்தின் தொடக்கமாகும். மேலும் மாதந்தோறும் பித்ரு வழிபாட்டுக்குரிய தினமான அமாவாசை இருந்தாலும் இந்த மாதத்தில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில்  ஆடி அமாவாசை தினத்தன்று பித்ரு உலகத்தில் இருக்கும் ஆத்மாக்கள், அதாவது முன்னோர்கள்,  பூமிக்கு புறப்பட்டு  வருகிறார்கள் என்பது ஐதீகம். இதனால் அவர்களை வரவேற்கும் வழிபாடுகள் ஆடியில் செய்யப்படுகின்றன. இன்று புறப்படும் அவர்கள் புரட்டாசி அமாவாசையில் பூமியை வந்தடைவார்கள் என்று கூறப்படுகின்றது.

அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் வருகிறது அதாவது ஒன்றையன்று சந்தித்துக்கொள்கிறது.  இவ்வாறு ஒரு மாதத்தில் ஓர் அமாவாசை ஒரு பெளர்ணமி தான் வரும். ஆனால் இந்த மாதம் இரண்டு அமாவாசைகள் வருகின்றன.

மூன்று வருடத்திற்கு ஒரு முறை தான் இது போல ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசையோ இரண்டு பௌர்ணமியோ நிகழக்கூடிய வாய்ப்பு உண்டு. தமிழ் மாதத்தில் 31 அல்லது 32 நாட்கள் வரக்கூடிய மாதத்தில் மட்டுமே இவ்வாறு நிகழும் வாய்ப்பு உண்டு. இந்நிலையில் இம்மாதம் ஆடி அமாவாசையானது ஆடி மாதம் 1ஆம் திகதியிலும் 31-ஆம் திகதியிலும் வருகின்றது. இதனால் எதனை நாம் கடைப்பிடிப்பது என்ற குழப்பமும் வரவே செய்தது.

பொதுவாக இதுபோன்று இரண்டு அமாவாசைகள் வரும் மாதத்தை அதிக மாதம் என்பார்கள். அதிக மாதங்கள் அனைத்துமே முன்னோர்கள் வழிபாட்டுக்கானவை. இந்த மாதத்தில் செய்யும் பித்ரு வழிபாடுகள், ஏழைகளுக்கு வழங்கும் தான தர்மங்கள் ஆகியன மிகுந்த பலன்களைக் கொடுக்கும் என்கிறது சாஸ்திரம்.

இந்த சூழ்நிலையில் இரண்டு அமாவாசை தினங்களில் எது ஆடி அமாவாசை என்றால் இரண்டுமே முன்னோர் வழிபாடுகளுக்கு உரிய அமாவாசை தினங்கள்தான் என்றாலும் ஆடி அமாவாசை என்னும் சிறப்பினைப் பெறுவது இரண்டாவதாக வரும் அமாவாசை தினமே. அந்த அடிப்படையில், இன்று 15ஆம் திகதி வரும் அமாவாசையையே ஆடி அமாவாசையாகக் கருதி முன்னோர் களுக்கு சிறப்பு வழிபாடு செய்யவேண்டும் . இன்று  நமது முன்னோர்கள் புண்ணிய லோகத்தில் இருந்து பூமிக்கு புறப்படுகிறார்கள் என்பது ஐதிகம்.

இந்த நாளில் நமது முன்னோர்களுக்கு  நாம் பித்ரு தர்பணம் செய்து வழிபட்டால்  அவர்களின் ஆசி நமக்கு கிடைக்கும். இதனால் சகல வளங்களும்  செல்வங்களும் எம் இல்லங்களில் பெருகும் என்று கூறப்படுகின்றது. அத்தோடு ஆடி அமாவாசை அன்று விரதம் இருந்து, முன்னோர்கள் வழிபாடு செய்வது குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக இருந்து வந்த தடைகள் மற்றும் சாபங்கள் நீங்கும் என்பது உறுதி.

அத்தோடு ஆடி என்பது  இறைவழிபாட்டுக்கு உரிய மாதமாகும். அம்மனுக்கான சிறப்பு வழிபாடுகள் செய்யப்படும் மாதமாகும். இந்த மாதம் முழுவதுமே அம்மன் ஆலயங்களில் பல சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். ஆடி செவ்வாய் ஆடி வெள்ளி ஆகிய நாட்களில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்.

இந்த மாதம், அதாவது ஜூலை 22 - ஆம் திகதி ஆடிப்பூரம். அதேபோல ஆடி மாதமான   ஒகஸ்ட்  மாதத்தில்  1 -ஆம் திகதி ஆடித் தபசு, 3 ஆம் திகதி ஆடிப்பெருக்கு, 9 ஆம் திகதி ஆடிக்கிருத்திகை ஆகிய விசேட தினங்களும் வந்தன. இந்த மாதம் இறைவனுக்குரிய புனித மாதமாக கருதப்படுவதால் தான்  திருமணம் போன்ற சுபகாரியங்களை யாரும் ஆடியில்  செய்வதில்லை.

இறைவழிபாட்டில் மாத்திரமே ஈடுபடுவர். நாமும் இறைவழிபாடு செய்து இந்த ஆடி மாதத்தில் சகல நன்மைகளையும் பெறுவோம். அத்தோடு எம் முன்னோர்களை நினைத்து இந்த ஆடி அமாவாசையில் பூஜித்து பலன் பெறுவோம். ஆடி அமாவாசை தினம் கோடி சூரிய கிரகணத்திற்கு சமம் என்று கூறப்படுகின்றது.

எனவே நீர் நிலைகளுக்கு சென்று பித்ரு தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி, வீட்டிலோ அல்லது சிவன் கோயிலிலோ வழிபாடு செய்தால் பலன் கிடைக்கும். வருடத்தில் வரும் மற்ற அமாவாசை தினங்களில் விரதம் இருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாவிட்டாலும், ஆடி அமாவாசை அன்று முன்னோர் வழிபாடு செய்து பித்ரு தர்ப்பணம் கொடுத்தால் பித்ரு தோஷம் நீங்கி முன்னோர்களின் ஆசி நமக்கு கிடைக்கும். நம் இல்லங்களில் சகல நன்மைகளும் நடக்கும் என்பது ஐதிகம்.

https://www.virakesari.lk/article/162400

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.