Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மதுரை: ரயிலில் தீ விபத்து; 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன – விபத்து எப்படி நடந்தது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மதுரை ரயிலில் தீ விபத்து: ஏழு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன – என்ன நடக்கிறது?
 
படக்குறிப்பு,

அதிகாலை 5:30 மணியளவில் இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது.

26 ஆகஸ்ட் 2023, 02:28 GMT
புதுப்பிக்கப்பட்டது 17 நிமிடங்களுக்கு முன்னர்

மதுரை ரயில் நிலையத்திற்கு அருகே சாமி தரிசனத்திற்காக வந்திருந்தோர் இருந்த ஒரு ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டு 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 8 பேர் இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர். அவர்களில் இரண்டு பெண்கள், 4 ஆண்கள் ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு ஆண்கள் அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக ரயிலில் கொண்டு வரப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததே இந்த விபத்துக்குக் காரணம் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

லக்னோ ரயில் நிலையத்தில் பரிசோதனைக்கு பிறகே பக்தர்கள் ரயிலில் ஏற்றப்பட்டதாகக் கூறிய தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என் சிங், சட்டவிரோதமாக ரயில் பெட்டியில் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் சமைப்பதற்கான உபகரணங்களை எடுத்த வந்துள்ளதாகக் கூறினார்.

 

அதிகாலை 5:30 மணியளவில் இந்த விபத்து நடந்ததாகக் கூறிய ரயிலில் இருந்த பெண் பயணி ஒருவர், சில பயணிகள் சிலிண்டரை பற்ற வைத்து தேநீர் போட முயன்றபோது இந்த விபத்து நடந்ததாக தெரிவித்தார்.

 

சிலிண்டர் வெடித்து ரயிலில் தீ பற்றியதா?

மதுரை ரயிலில் தீ விபத்து: ஏழு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன – என்ன நடக்கிறது?
 
படக்குறிப்பு,

ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் ரேணுகா தனது கணவரை இழந்துவிட்டதாகக் கூறுகிறார்.

உத்தர பிரதேசம் லக்னௌவில் இருந்து தென்னிந்தியாவில் சாமி தரிசனம் செய்வதற்காக 60க்கும் மேற்பட்டோர் ஆகஸ்ட் 17ஆம் தேதியன்று தங்கள் பயணத்தைத் தொடங்கினர்.

பல்வேறு கோயில்களுக்குப் பயணித்த அவர்கள், நேற்று நாகர்கோவில் பத்மநாப சுவாமி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு இன்று அதிகாலையில் மதுரை வந்தடைந்தனர்.

இவர்களின் ரயில் பெட்டி மதுரை ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் ரயில் பெட்டியில் இருந்த பக்தர்கள், சிலிண்டர் மூலம் சமைக்க முற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூன்று மண்ணெண்ணெய் அடுப்புகள், இரண்டு சிலிண்டர்கள், விறகுக்கட்டை போன்றவை தீ விபத்துக்குள்ளான ரயிலில் கிடைத்துள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மதுரை ரயிலில் தீ விபத்து: ஏழு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன – என்ன நடக்கிறது?
 
படக்குறிப்பு,

படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தனது கணவரை இழந்த ரேணு குப்தா பிபிசியிடம் பேசியபோது, “எங்களுடன் யாத்திரை வந்திருந்த மக்களில் யாரோ சிலர் சிலிண்டரை பற்ற வைத்து தேநீர் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

சிலிண்டர் வெடித்து புகை வரத் தொடங்கியதும் அனைவரும் அலறியடித்து வெளியேற முற்பட்டோம். அப்போது சிலர் உள்ளே மாட்டிக் கொண்டார்கள். அதில் என் கணவரும் ஒருவர்,” என்று தெரிவித்தார்.

'மதுரை மீனாட்சி அம்மனை இன்று தரிசிக்க இருந்தோம்'

மதுரை ரயிலில் தீ விபத்து: ஏழு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன – என்ன நடக்கிறது?
 
படக்குறிப்பு,

"இன்று மதுரை மீனாட்சி அம்மனை தரிசிக்க இருந்தோம். அதற்குள் இப்படி ஆகிவிட்டது."

மற்றொரு பயணி இந்த விபத்து குறித்துப் பேசியபோது, “கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதியன்று தென்மாநிலங்களில் இருக்கும் கோவில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக லக்னௌவில் இருந்து கிளம்பி வந்தோம். நேற்று நாகர்கோவிலில் இருக்கும் பத்மநாப சாமி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு நேற்று இரவு கன்னியாகுமரி ரயில் மூலமாக மதுரை வந்தோம்.

இன்று மதுரை மீனாட்சி அம்மனை தரிசித்துவிட்டு, நாளை ராமேஸ்வரம் செல்வதாக இருந்தோம். அப்படியிருந்த சூழலில் இன்று அதிகாலையில் இந்த விபத்து ஏற்பட்டது. இது எப்படி நிகழ்ந்தது என்றே தெரியவில்லை,” என வேதனையுடன் தெரிவித்தார்.

டம் என்று சத்தம் கேட்டு அதிகாலை 5 மணியளவில் எழுந்தோம். ஓடி வந்து பார்த்தபோது ரயில் பெட்டி தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது,” என்று சம்பவத்தை நேரில் பார்த்த ஓ.பாண்டி கூறுகிறார்.

 

ரயிலுக்குள் சிலிண்டர் கொண்டு வரப்பட்டது எப்படி ? அதிகாரிகள் விசாரணை

மதுரை ரயிலில் தீ விபத்து: ஏழு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன – என்ன நடக்கிறது?
 
படக்குறிப்பு,

மதுரை மாநகர காவல் ஆணையர் அ. பிரதீப் பிபிசியிடம் பேசியபோது இதுவரை 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து யாத்திரை பயணிகள் அலறியடித்துக்கொண்டு கீழே இறங்கியுள்ளனர். அப்படி இறங்கிய பயணிகளில் சிலரைக் காணவில்லை என்று உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

ரயிலுக்குள் சிலிண்டர் கொண்டு வரப்பட்டது எப்படி என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மதுரை மாநகர காவல் ஆணையர் பிரதீப் பிபிசியிடம் பேசியபோது இதுவரை 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அவர்களில் 5 ஆண்கள், 3 பெண்கள் என்று தெரிய வந்துள்ளது. மற்றுமோர் உடல் இன்னும் அடையாளம் காணப்படாமல் உள்ளது.

இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில், “பயணிகள் சட்டவிரோதமாக சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தியதால், மதுரை ரயில் நிலையத்திற்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த ரயில் பெட்டி தனியார் தரப்பில் முன்பதிவு ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்யப்பட்டது.

 

சட்டவிரோதமாக கொண்டு வந்த சமையல் சிலிண்டரே காரணம் - தென்னக ரயில்வே

மதுரை ரயிலில் தீ விபத்து: ஏழு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன – என்ன நடக்கிறது?
 
படக்குறிப்பு,

ரயிலுக்குள் சிலிண்டர் எப்படி கொண்டுவரப்பட்டது என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை ரயில் நிலையத்திற்கு அருகே இந்த ரயில் பெட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை 5:15 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு 5:45 மணிக்கு தீயணைப்புப் பணிகள் தொடங்கப்பட்டன. அதையடுத்து 7 மணியளவில் தீ அணைக்கப்பட்டது.

வேறு ரயில் பெட்டிகளுக்கும் சேதம் ஏற்படவில்லை.

விபத்துக்குள்ளான இந்த ரயில், லக்னௌவில் இருந்து 65 பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று அதிகாலை 3:47 மணிக்கு மதுரையை வந்தடைந்தது. பின், யாத்திரைக்காக தனியார் சார்பில் பதிவி செய்யப்பட்டிருந்த ரயில் பெட்டி பிரிக்கப்பட்டு ரயில் நிலையத்திற்கு அருகே நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், தனியார் ரயில் பெட்டியில் இருந்த சிலர், சட்டவிரோதமாக கொண்டு வந்த சமையல் எரிவாயு சிலிண்டரை சிற்றுண்டி தயார் செய்யப் பயன்படுத்தியதால், பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது,” என்று தெரிவித்துள்ளது.

லக்னோ ரயில் நிலையத்தில் பரிசோதனைக்கு பிறகே பக்தர்கள் ரயிலில் ஏற்றப்பட்டதாகக் கூறிய தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என் சிங், சட்டவிரோதமாக ரயில் பெட்டியில் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் சமைப்பதற்கான உபகரணங்களை எடுத்த வந்துள்ளதாகக் கூறினார்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறிய ஆர்.என்.சிங், சட்டவிரோதமாக எரிவாயு சிலிண்டர்கள் கொண்டு வந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

உடற்கூறு ஆய்வுக்கு ஐந்து மருத்துவர்கள் கொண்ட குழு அமைப்பு: மா. சுப்பிரமணியன்

மதுரை ரயிலில் தீ விபத்து: ஏழு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன – என்ன நடக்கிறது?

ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும் என்றும் உயிரிழந்தவர்கள் உடலை பிரேத பரிசோதனை செய்ய 5 மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நலம் விசாரித்துவிட்டுப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், “இந்த ரயில் பெட்டியில் மொத்தம் 64 பேர் பயணம் செய்திருக்கிறார்கள். அதில் 39 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். ஐந்து ஆண்கள், 4 பெண்கள் உட்பட 9 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

மேலும், இறந்தவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள 5 மருத்துவர் கொண்ட மருத்துவக் குழு அமைக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன,” என்று தெரிவித்தார்.

மேலும், 39 பேர் மதுரை ரயில் நிலையத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணமாக அறிவித்துள்ளது ரயில்வேத் துறை.

அதேபாேல, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களுக்கு ரூ. 3 லட்சம் நிவாரணமும் அறிவித்துள்ளார்.

ரயிலில் என்ன பொருட்கள் கொண்டு செல்லக் கூடாது ?

எடுத்துச் செல்லக்கூடாத பொருட்கள்

பட மூலாதாரம்,INDIAN RAILWAYS

 
படக்குறிப்பு,

ரயிலில் தீப்பற்றக்கூடிய மற்றும் வெடிக்கும் பொருட்களை எடுத்துச் செல்வது ரயில்வே சட்டம் 1989 பிரிவு 164 மற்றும் 165ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.

ரயிலில் மிகவும் எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும் வெடிக்கும் பொருட்களைக் கொண்டு செல்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.

பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், பட்டாசு, கேஸ் சிலிண்டர், கன் பவுடர் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துக்கொண்டு ரயிலில் பயணம் செய்யக்கூடாது.

ரயிலுக்குள் அடுப்பு, கேஸ், ஓவன் போன்றவற்றை பற்றவைக்கக் கூடாது. அதே நேரத்தில், ரயில் பெட்டியிலோ அல்லது ரயில் நிலையத்திலோ சிகரெட்டைப் பற்ற வைக்கக்கூடாது.

ரயிலில் தீப்பற்றக்கூடிய மற்றும் வெடிக்கும் பொருட்களை எடுத்துச் செல்வது ரயில்வே சட்டம் 1989 பிரிவு 164 மற்றும் 165ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். மீறினால், ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

https://www.bbc.com/tamil/articles/cjjz2ylge23o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.