Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொழும்பு துறைமுகத்தில் இந்திய யுத்த கப்பல் : மாணவர்கள் பார்வையிட சந்தர்ப்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

news-02.jpg

இந்திய கடற்படைக்கு சொந்தமான INS Delhi எனும் யுத்த கப்பல் இன்று (01) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்த கப்பல் 163 மீற்றர் நீளமுடையது. கப்பலில் வருகை தந்த கடற்படை வீரர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா செல்லவுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

அத்துடன், INS Delhi கப்பலை பார்வையிடுவதற்கு பாடசாலை மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த கப்பல் எதிர்வரும் 3 ஆம் திகதி வரையில் நாட்டில் நங்கூரமிடப்பட்டிருக்கும்.

இதன்போது, மேற்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படை கப்பலுடன் பயிற்சி நடவடிக்கைகளிலும் குறித்த கப்பல் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/271398

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பிலிருந்து புறப்பட்டது இந்திய கடற்படையின் 'ஐ.என்.எஸ். டெல்லி' கப்பல்

04 SEP, 2023 | 08:42 PM
image

இந்தியாவின் சுதேசிய தயாரிப்பான முதலாவது நாசகாரி கப்பலான 'ஐ.என்.எஸ். டெல்லி' தனது வெற்றிகரமான நல்லெண்ண விஜயத்தினை நிறைவு செய்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (3) கொழும்பிலிருந்து புறப்பட்டது என்கிற தகவலை இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. 

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே  கடந்த சனிக்கிழமை (2) ஐ.என்.எஸ். டெல்லி கப்பலில் விருந்துபசாரம் ஒன்றை நடத்தி இருந்தார். 

3.jpeg

இந்த விருந்துபசாரத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்த அதேவேளை அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கை ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் ஏனைய பல்வேறு துறைகளை சேர்ந்தோரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன்போது இலங்கை அரசின் பயன்பாட்டுக்காக தயார் நிலையில் உள்ள HADR மருத்துவ (ஆரோக்கிய மைத்ரி) தொகுதி ஒன்றும் உயர்ஸ்தானிகரால் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் உரை நிகழ்த்திய சபாநாயகர், குறித்த விசேட மருத்துவ தொகுதிக்காக இந்திய அரசாங்கத்துக்கு நன்றியினை தெரிவித்திருந்தார். 

அத்துடன் 2022ஆம் ஆண்டில் இந்தியாவால் முன்னொருபோதும் இல்லாத வகையில் வழங்கப்பட்ட பாரிய ஆதரவையும் அவர் இச்சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்தியிருந்தார்.

5.jpeg

இந்த நிகழ்வில் தனது கருத்துக்களை முன்வைத்திருந்த உயர்ஸ்தானிகர் கடல் மார்க்கமாக மிகவும் கிட்டிய அயல்நாடுகளாக இருக்கும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவின் வலுவான பிணைப்பின் குறியீடாகவே 'ஐ.என்.எஸ். டெல்லி' கப்பலின் இலங்கை விஜயம் அமைந்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக ஐ.என்.எஸ் டெல்லி கப்பலின் கட்டளை அதிகாரி கெப்டன் அபிஷேக் குமார் மேற்கு கடல் பிராந்திய தளபதியை சந்தித்திருந்தார். அத்துடன் உயிர் தியாகம் செய்த இந்திய அமைதி காக்கும் படையினரின் நினைவுத்தூபியிலும் அவர் அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 

2.jpeg

அது மட்டுமல்லாமல் கப்பலின் சிப்பந்திகள், யோகா மற்றும் கரையோரத்தை சுத்தமாக்கும் பணிகள் போன்றவை உள்ளிட்ட பல்வேறு பணிகளை இலங்கை கடற்படையினருடன் இணைந்து மேற்கொண்டிருந்தனர். அதற்கு மேலதிகமாக நேற்று (3) கப்பல் புறப்பட்டதன் பின்னர் கொழும்புக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் கடல் மார்க்க ஒத்துழைப்பு பயிற்சிகளும் இடம்பெற்றிருந்தன.

மேலும், இக்கப்பலானது கடந்த வெள்ளிக்கிழமை (01) பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பார்வையிடுவதற்காக திறந்து வைக்கப்பட்டிருந்தது. இலங்கை கடற்படையினருக்கான பல்வேறு சந்திப்புகள், நிபுணத்துவ உரையாடல்கள், கப்பலுக்கான விஜயங்கள் ஆகியவையும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூலை 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரையில் இந்திய கடற்படை கப்பலான கஞ்சார் தனது செயற்பாடுகளின் ஒரு பகுதியாக திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தது. அயலுறவுக்கு முதலிடம் கொள்கை மற்றும் பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பும் வளர்ச்சியும் என்ற சாகர் கோட்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் இரு அயல்நாடுகளையும் சேர்ந்த நட்புமிக்க கடற்படையினரிடையில் தோழமை மற்றும் இயங்குதிறன் ஆகியவற்றினை மேலும் ஒன்றிணைக்கும் நோக்குடனேயே இந்திய கடற்படை கப்பல்கள் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டு வருகின்றன.

1.jpeg

https://www.virakesari.lk/article/163834

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.