Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"நடந்தாய் வாழி வழுக்கை ஆறு" : குளங்களை பார்வையிடுவதற்கான நடைபயணம் யாழில் ஆரம்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
09 SEP, 2023 | 04:41 PM
image
 

(பு.கஜிந்தன்)

"நடந்தாய் வாழி வழுக்கை ஆறு" எனும் தொனிப்பொருளில் வழுக்கியாற்றின் வழிதோறும் உள்ள குளங்களை காணும் ஒரு நடைபயணம் இன்று சனிக்கிழமை (09) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இன்று காலை 8 மணிக்கு யாழ். தெல்லிப்பழையில் இருந்து ஆரம்பமான இந்த பயணம் அராலி நோக்கி சென்றது. 

இந்த பயணத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி பேராசிரியர் சுரேந்திரகுமார், சுவீடன் விவசாய பல்கலைக்கழக தகைநிலை பேராசிரியர் ஸ்ரீஸ்கந்தராசா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

pp.jpg

lll.jpg

rrr.jpg

https://www.virakesari.lk/article/164180

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் நிலத்தடி நீரை பாதுகாக்க தவறினால் எதிர்காலம் கேள்விக்குறி: விடுக்கப்படும் எச்சரிக்கை

நிலத்தடி நீரை பாதுகாக்க தவறினால் உலகத்தில் அல்லல் படுகின்ற வேறு சமூகங்களைப் போன்று நாங்களும் அல்லல் படுபவர்களாக இருப்போம் என சுவீடன் விவசாய பல்கலைக்கழக தகைநிலை பேராசிரியர் சிறிஸ்கந்தராசா தெரிவித்துள்ளார்.

வழுக்கியாற்றின் வழிதோறும் உள்ள குளங்கள் காணும் ஒரு பயணப் நேற்றைய தினம் (09.09.2023) யாழ்.தெல்லிப்பழையில் இருந்து அராலி நோக்கி இடம்பெற்றது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பேராசிரியர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வடக்கில் நிலத்தடி நீர்

அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாணம் மற்றய மாகாணங்களை விட வித்தியாசமானது, முற்றுமுழுதாக மழையில் இருந்து பெறப்படுகின்ற நிலத்தடி நீரை எங்களுடைய தேவைக்காக பயன்படுத்திய வரலாற்றை கொண்டவர்கள் நாங்கள்.

வடக்கில் நிலத்தடி நீரை பாதுகாக்க தவறினால் எதிர்காலம் கேள்விக்குறி: விடுக்கப்படும் எச்சரிக்கை | Conserve Ground Water For Future Generation

நிலத்துக்கு மேல் உள்ள நீர்த் தேக்கங்கள் வன்னி பிரதேசங்களில் விவசாயத்துக்காக ஏற்படுத்தப்பட்டதாக இருந்தாலும், காலம் காலமாக கோவில்களை அண்டிய பகுதிகளிலும், பொது இடங்களிலும் அமைக்கப்பட்ட குளங்கள் எங்களுடைய நீர்த் தேவைகளை காலநிலைக்கு ஏற்ப கொடுத்து வந்தவையாக இருந்தாலும், கடந்த 30 ஆண்டுகளில் இந்த நீர் தேக்கங்கள், நீர் நிலைகள், கேணிகள் மற்றும் குளங்கள் உரிய அக்கரை செலுத்தி பேணப்படாத  காரணத்தினால் மண்ணின் உள்ளே செல்லுகின்ற மழைவீழ்ச்சியினுடைய அளவு மிக குன்றிய நிலையில் பெருமளவு நீர் கடலுக்கு சென்று விரயமாகின்றது என சொல்லலாம்.

நகர மயமாக்குதல்

இதை விட நாங்கள் யுத்தத்திற்கு பின்னான இன்றைய காலத்தில் முன்னேற்றம் அடைய வேண்டிய தேவை உடையவர்களாக விரைவாக பெரிய பகுதிகளில் நகர மயமாக்குதல் நடைபெறுகிறது கண்கூடாக தெரிகிறது.

இந்த நகரமயமாகுதல் உடைய ஒரு பக்க விளைவு மண் மூடப்படுகிறது, மழைநீர் செல்ல வேண்டிய பாதைகள் சீல் பண்ணப்படுகின்றன, இதை அவதானத்தில் எடுக்க வேண்டும் என்பதற்காக அண்மையில் சில உரையாடல்களை நடத்தி இருந்தோம்.

இங்கு இரண்டு கருத்து நிலைகள் உள்ளன. ஒன்று பெய்கின்ற மழை போதுமானது, அதை உரிய வழியில் பாதுகாத்தால் நிலத்தடி நீர் பேணப்படும்.

வடக்கில் நிலத்தடி நீரை பாதுகாக்க தவறினால் எதிர்காலம் கேள்விக்குறி: விடுக்கப்படும் எச்சரிக்கை | Conserve Ground Water For Future Generation

இதன் மூலம் எங்களுடைய குடிநீர் தேவையும் விவசாயத் தேவையும் இப்போது இருப்பதை விட இன்னும் திறமையான இடத்திற்கு போகலாம் என்பது எங்களுடைய நிலை, இன்னும் ஒரு நிலை இங்கு இருக்கின்ற நீர் அளவு குன்றி இருக்கின்றது, உவர் அடையப் போகின்றது, அசுத்தப்படுத்தப்பட்டிருக்கின்றது.

எனவே இந்த நீர் பாதுகாப்பற்ற நீர் இதனை நாங்கள் குடிபாவனைக்கு பாவிக்க முடியாது, ஆனபடியால் நாங்கள் இதனை வடித்தெடுக்க வேண்டும். அல்லது வடித்தடுத்த நீருக்கு விலை கொடுத்து வாங்க வேண்டும் என்பது இன்னும் ஒரு நிலை.

நீருக்கு விலை

இந்த நிலையில் இருந்து இரண்டாவதாக சொன்ன நிலையை நோக்கி நாங்கள் திடமாக போவோமாக இருந்தால் உலகத்தில் அல்ல படுகின்ற வேறு சமூகங்களைப் போல நாங்கள் அல்லல் படுபவர்களாக இருப்போம்.

வடக்கில் நிலத்தடி நீரை பாதுகாக்க தவறினால் எதிர்காலம் கேள்விக்குறி: விடுக்கப்படும் எச்சரிக்கை | Conserve Ground Water For Future Generation

என்னுடைய பார்வையில் இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு தளத்தில் அக்கறை கொண்ட சமூகமாக அறிவை சரியாகப் பயன்படுத்துபவர்களாக இருந்தால் அந்த நீரை தூய்மையானதாகவும், அசுத்தமடையாமல் இருப்பதற்காகவும், எங்களுடைய விவசாய வழிமுறைகள் சிலவற்றை கேள்விக்குள்ளாக்கி மாற்றி அமைப்போமானால் நச்சுப் பொருட்கள் கலப்பதை தவிர்க்கலாம்.

இந்த உலகளாவிய மாற்றம் ஒரு பக்கம் இருக்க முழு பூமியையும் பாதிக்கின்ற காலநிலை உச்சங்களும் பெய்கின்ற மழையின் அளவை இயல்பில் இருந்து மாற்றிக் கொண்டிருக்கின்ற ஒரு நிலையில் எங்களுக்கு தெரியாத பல கேள்விகளும் இங்கே இருக்கின்றது, இப்போதைக்கு தெரிந்த அறிவை பயன்படுத்தி எங்களால் இயன்ற முயற்சிகளை செய்வதன் மூலம் இருப்பதைப் பேணலாம், இன்னும் வளப்படுத்தலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட நம்பிக்கையாக இருக்கின்றது என தெரிவித்துள்ளார்.

https://tamilwin.com/article/conserve-ground-water-for-future-generation-1694312916?itm_source=parsely-api

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.