Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

`கெற்றபோல்' கொண்டு பிரபாகரனை தாக்க முடிந்தால் ஆயுதக் கொள்வனவு அவசியமில்லை - பாராளுமன்ற விவாதத்தில் அமைச்சர் பந்துல குணவர்தன

Featured Replies

கெற்றபோல்' கொண்டு பிரபாகரனை தாக்க முடிந்தால் ஆயுதக் கொள்வனவு அவசியமில்லை

[20 - September - 2007] [Font Size - A - A - A]

*அமைச்சர் பந்துல குணவர்தன கூறுகிறார்

-டிட்டோகுகன், ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்-

எதிர்க்கட்சியினர் அரசாங்கத்துடன் வைராக்கியத்துடன் செயற்படுவதினால் நாட்டுக்கோ மக்களுக்கோ அதில் எந்தப் பலனும் கிட்டப்போவதில்லையென சுட்டிக்காட்டிய வர்த்தக, நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன பிரபாகரனை "கெற்றபோல்" மூலம் தாக்க முடியுமெனில் ஆயுதங்களை கொள்வனவு செய்ய வேண்டிய அவசியமும் இருக்காது, அரசாங்கத்துக்கு நிதி நெருக்கடிகளும் ஏற்படாது எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்), பெறுமதிசேர் வரி, பொருளாதார சேவை விதிப்பனவு, உள்நாட்டு இறைவரி ஆகிய சட்டங்களின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்துப் பேசும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறு கூறினார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்;

"இந்த ஒழுங்கு விதிகளால் எந்தப் புதிய அறவீடுகளோ அல்லது வரி அதிகரிப்புகளோ அமுல்படுத்தப்படாது. இவற்றின் மூலம் வரிச் சலுகைகளுக்கே ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. எனவே, ஒழுங்கு விதிகளின் தன்மை என்னவென்பதை கூட ஆராயாது ஒழுங்கு விதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்த சம்பவங்கள் கடந்த காலங்களில் இந்தச் சபையில் இடம்பெற்றுள்ளன.

உலகில் அபிவிருத்தி கண்ட நாடுகளில் அதிகமான வருமானங்கள் நேரடி வரி அறவீடுகள் மூலமே ஈட்டப்படுகின்றன. எனினும், மூன்றாம் உலக நாடுகளில் நிலவும் சிக்கல்கள் காரணமாக பெரும்பான்மையான வருமானங்கள் (75%) மக்களிடமிருந்தும் பாவனைப் பொருட்களிலிருந்தும் அறவிடப்படும் மறைமுக வரிகளின் மூலமே ஈட்டப்படுகின்றன. இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும்.

2003 ஆம் ஆண்டில் 29 அமெரிக்க டொலர்களாக இருந்த மசகு எண்ணெய் பீப்பாயொன்று தற்போது 71 டொலர்களாக அதிகரித்துள்ளது. மசகு எண்ணெய் பீப்பாயொன்று 29 டொலர்களாக இருக்கும்போது 53 ரூபாவுக்கு பெற்றோல் லீற்றரொன்று விநியோகிக்கப்பட்ட நிலையில், தற்போது 141 சதவீதத்தால் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை அதிகரித்திருக்கும் இச்சந்தர்ப்பத்தில் பெற்றோல் லீற்றரொன்று 127 ரூபாவுக்கு விநியோகிக்கப்பட வேண்டும்.

அதுமட்டுமல்லாது இன்று இங்கிலாந்தில் பெற்றோல் லீற்றரொன்று 230 ரூபாவுக்கு விற்கப்படுகிறது. இந்தியாவில் 125 ரூபாவுக்கு விற்கப்படுகிறது. பெற்றோலிய உற்பத்தியில் ஈடுபடும் நாடே 125 ரூபாவுக்கு பெற்றோல் விநியோகம் செய்யும்போது எமது நாட்டில் பெற்றோலிய உற்பத்திகள் எதுவும் இல்லாத நிலையிலும் எரிபொருட்களின் விலைகளை குறைக்குமாறு கூறுகின்றனர்.

இதேநேரம், நாட்டில் இலவசக் கல்வி, இலவச சுகாதார சேவை, யுத்தத்துக்கான செலவு என பாரிய செலவுகள் இருக்கும் நிலையில் நிதி நெருக்கடிகளை சமாளித்து நிதி முகாமைத்துவத்தை மேற்கொள்வதற்காகவே அரசாங்கம் வெளிநாட்டுக் கடன்களை பெறுகிறது.

நாம் அத்தியாவசியப் பொருட்களுக்கு வரிச் சலுகைகள் வழங்கும்போதும் எதிர்க்கட்சியினர் அரசின் மீதுள்ள வைராக்கியத்தின் காரணமாக எதற்கெடுத்தாலும் எதிர்க்கின்றனர். வைராக்கியத்தை கொண்டு செயற்படுவதனால் நாட்டுக்கோ மக்களுக்கோ எந்தப் பலனும் கிட்டப்போவதில்லை.

படையினர் பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். குண்டுகள் வெடிப்பதில் மக்கள் பலியாகும் போது பொருட்களின் விலைகளை குறைப்பதில் எந்தப் பலனுமில்லை. எனவேதான், படையினர் பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

படையினரின் இந்த நடவடிக்கைகளுக்கு ஆயுதக் கொள்வனவுகள் அவசியமாகும். ஒவ்வொரு ஆயுதங்களின் விலையும் அதிகரித்து காணப்படுகின்றன. பிரபாகரனை "கெற்றபோல்" மூலம் தாக்க முடியுமெனில் ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. அப்போது அரசிற்கு நிதி நெருக்கடிகளும் வராது" என்றார்.

http://www.thinakkural.com/news/2007/9/20/...s_page36494.htm

  • தொடங்கியவர்

வங்குரோத்து நிலைக்கு முன்னுதாரணம் கூறுகிறார் ரவி கருணாநாயக்க

-டிட்டோ குகன், ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்-

நியூசிலாந்து பசுமாடுகளுடன் ஐ.தே.க செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தமே பால்மா விலை அதிகரிப்புக்கு காரணமென அரசாங்கம் கூறுமளவுக்கு நாடு வங்குரோத்து நிலையை அடைந்திருப்பதாக ரவி கருணாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற வரிச் சட்டங்கள் மீதான விவாதத்தில் ஐ.தே.க. சார்பில் விவாதத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் உரையாற்றிய அவர்;

எமது கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பொது நிதியை பயன்படுத்தி நாட்டை சீர்குலைப்பதையே எதிர்க்கிறார். அமைச்சர் பந்துல குணவர்தன பொய்களை கட்டவிழ்த்து இச் சபையை தவறாக வழிநடத்துகிறார்.

அரசாங்கம் ஐ.தே.க. மீது குற்றச்சாட்டுக்களை சுமத்துவதில் எத்தகைய ஆதாரமுமில்லை. வாழ்க்கைச் செலவை குறைக்கப்போவதாக கூறியவர்கள் இன்று பொருளாதாரத்தில் படுதோல்வியடைந்துள்ளனர். எனவே இவ்வரசாங்கத்தினால் யுத்தத்திலும் வெற்றிகாண முடியாது.

நாங்கள் இவ்விடயங்கள் பற்றி இச்சபையில் கூறினால் அவற்றை அரசியல் குரோதமென பொய்ப் பிரசாரம் மேற்கொண்டு யதார்த்த நிலையை மூடிமறைக்கின்றனர். வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை எவ்வாறு தூக்கி நிறுத்தலாமென்ற திட்டங்கள் ஐ.தே.க.விடம் உள்ளது. இதனை மக்கள் நன்கறிந்துள்ளார்கள்.

பொதுநிதி தவறாக பயன்படுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது. எனவேதான் நாம் இது தொடர்பில் கேள்வியெழுப்புகிறோம். இல்லையேல் நாம் ஆண்மையற்றவர்களென அரசாங்கம் கருதிவிடும். தவறான வழிநடத்தல்களும் பொருளாதார சீர்குலைவுக்கு காரணமாக அமைகிறது. எமது நாட்டில் இந்நிலையே காணப்படுகிறது.

பொதுநிதியை தவறாக பயன்படுத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது மாத்திரமின்றி அதற்கு உடந்தையாக செயற்பட்டவர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொண்டு அவர்களை சிறையிலடைக்க வேண்டும்.

சகல பொருட்களினதும் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் பால்மா பொருட்களுக்குமான விலைகளும் அதிகரித்துள்ள நிலையில் நியூசிலாந்து நாட்டு பசு மாடுகளுடன் ஐ.தே.க. செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தமே பால்மா அதிகரிப்புக்கான காரணமென அரசாங்கம் எம்மீது பழியைப் போடலாம். எனினும் இவற்றையெல்லாம் நம்பும் அளவுக்கு மக்கள் ஒருபோதுமே தயாரில்லை.

அமெரிக்காவும் இராணுவ உதவிகளை இலங்கைக்கு வழங்குவதை நிறுத்தியுள்ளது. எதிர்காலத்தில் நெருக்கடிகளினால் அரசாங்கம் வீட்டுக்குச் செல்லும் நிலையே உருவாகும்.

http://www.thinakkural.com/news/2007/9/20/...s_page36482.htm

ஏன் கெட்டி புல்லாலயையும் புலிகளை விரட்டலாம் எண்டு நீங்க சொன்னா சிங்களவர் நம்புவினம். நீங்க சொல்லுங்கோ . இல்லாட்டி 30 வருசமாமூச்சு விடாம வோட்டு போட்டு கொண்டு இருகினமே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.