Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Nithari case: இந்தியாவை உலுக்கிய 19 பெண்களின் கொலை; மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் விடுவிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2006-ல் சிறுமிகள் உட்பட 19 பெண்கள் கொடூரமாகக் கொல்லப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களை, மேல்முறையீட்டில் வழக்கிலிருந்து விடுத்திருக்கிறது அகமதாபாத் உயர் நீதிமன்றம்.

 

இந்தியா மட்டுமல்லாமல் உலகையே உலுக்கிய சம்பவங்களில் ஒன்று 2006-ம் ஆண்டு நடந்த நிதாரி கொடூரம். உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் சிறு கிராமம் நிதாரி. இந்த கிராமத்தில் இருந்த ஓர் வீட்டின் பின்புறமுள்ள சாக்கடையில், மனித உடல் பாகங்கள் கிடப்பதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள், டிசம்பர் 29, 2006 அன்று, அந்தச் சாக்கடையிலிருந்து எட்டு சிறுமிகளின் எலும்புக்கூடுகளை கண்டெடுத்தனர். இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 
 
 
உடல் பாகங்கள் மீட்கப்பட்ட சாக்கடை
 
உடல் பாகங்கள் மீட்கப்பட்ட சாக்கடை

மீட்கப்பட்ட உடல் பாகங்களை பிரேத பரிசோதனைக்கு காவல்துறை அனுப்பிவைத்தது. மேலும், அந்த வீட்டைச் சுற்றியுள்ள பகுதியில் வடிகால் பகுதிகளைத் தோண்டி, ஆய்வு நடத்தியதில் மேலும் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்தச் சோதனையின் முடிவில், அங்கிருந்த மனித எச்சங்கள் அனைத்தும் பெண்கள், சிறுமிகள் என 19 பேருடையது எனத் தெரியவந்தது. இவற்றில் பெரும்பாலானவை அந்தப் பகுதியிலிருந்து காணாமல்போன ஏழைக் குழந்தைகள், இளம்பெண்களின் எச்சங்கள் என்பதும் வெளிச்சத்துக்கு வந்தது.

 

மேலும், கொலையானவர்கள் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலும் தெரியவந்தது. இந்த விவகாரம் நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வீட்டின் உரிமையாளர் குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறைக்கு, அது தொழிலதிபர் மொனிந்தர் சிங் பந்தேர் என்பவரது வீடு எனத் தெரியவந்தது. சம்பவம் நடந்த 10 நாள்களுக்குப் பிறகு, இந்த வழக்கு சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ விசாரணையில் மொனிந்தர் சிங் வீட்டின் பணியாளர் சுரேந்திர கோலி, குழந்தைகள், இளம்பெண்களைக் கொலைசெய்ததாக வாக்குமூலம் கொடுத்து, ஒப்புக்கொண்டார். மேலும், தனது முதலாளி `பெண் பித்துப்பிடித்தவர்' என்றும் தெரிவித்தார்.

நிதாரி கொலை வழக்கு
 
நிதாரி கொலை வழக்கு

இதனையடுத்து சிறுமிகள் மற்றும் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்ததாக தொழிலபதிபர் மொனிந்தர் சிங் பந்தேர், சுரேந்திர கோலி ஆகியோருக்கு எதிராக சி.பி.ஐ வழக்கு பதிவுசெய்தது. இதில் அவரது வீட்டில் பணிபுரிந்த பெண்ணும் பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்யப்பட்டிருக்கிறார் என்பது விசாரணையில் வெளிவந்தது. அது தொடர்பாக வழக்கில் இருவரையும் குற்றவாளிகள் என அறிவித்து, தூக்கு தண்டனை விதித்தது சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம்.

 

மேலும், அவர்களின் வீட்டிலிருந்து சிறுவர் ஆபாசப் படங்கள்- வெப்கேமருடன் இணைக்கப்பட்ட லேப்டாப், ஆபாச நூல்களையும் கைப்பற்றினர். 7 வயது சிறுமியை, கோலி கொலைசெய்தது உறுதி செய்யப்பட்டு, அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

நிதாரி கொலை வழக்கு
 
நிதாரி கொலை வழக்கு

இதேபோல் மற்ற பெண்கள் கொலை தொடர்பான வழக்குகளிலும் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இப்படி 12 வழக்குகளில் சுரேந்தர் கோலியும், 2 வழக்குகளில் மொனிந்தர் சிங்கும் குற்றவாளிகள் என்பது உறுதி செய்யப்பட்டு, 2017-ம் ஆண்டே இவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அந்த நிலையில், அவர்கள் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.

 

நேற்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது 12 வழக்குகளில் குற்றவாளி எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பணியாளர் சுரேந்திர கோலி, 2 வழக்குகளில் குற்றவாளி எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தொழிலதிபர் மொனிந்தர் சிங் பந்தேர் ஆகியோரை உயர் நீதிமன்றம் விடுவித்தது.

அலகாபாத் உயர் நீதிமன்றம்
 
அலகாபாத் உயர் நீதிமன்றம்

2005-2006 நொய்டா தொடர் கொலைகள் என்றும் அழைக்கப்படும் `2006 நிதாரி' வழக்கிலிருந்து பிரதான சந்தேக நபர் சுரேந்திர கோலியை அலகாபாத் உயர் நீதிமன்றம் நேற்று விடுவித்தது. மேலும், மற்றொரு குற்றம்சாட்டப்பட்ட மொனிந்தர் சிங் பந்தேரை, நீதிமன்றம் மரண தண்டனை விதித்த இரண்டு வழக்குகளிலிருந்து விடுத்திருக்கிறது.

இந்த நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து, தங்கள் குழந்தைகளைப் பறிகொடுத்தப் பெற்றோர், ``இந்த இருவரும் குற்றவாளிகள் இல்லை என்றால், எங்கள் வீட்டுக் குழந்தைகள் எங்கே... அவர்களின் கொலைக்கு யார் காரணம்... எங்களுக்கு நீதி வேண்டும்" எனத் தெரிவித்திருக்கிறார்கள்.

Nithari case: இந்தியாவை உலுக்கிய 19 பெண்களின் கொலை; மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் விடுவிப்பு! | Nithari serial killings case: Allahabad HC acquits Surendra Koli, Moninder Singh Pandher - Vikatan

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல நீதி, இன்னும் பலருக்கு ஊக்குவிப்பு🙏

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.